POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

❄️ நிஜமான பொய்கள் ❄️

(1/1)

Empty Dappa:

"நிஜ முகத்த அவ இப்பதான் காட்டிருக்கா"
"அவன் உன்ன இவ்ளோ மோசமா திட்டிருக்கான்னா,
அப்போ இதான் அவனோட உண்மையான முகம்"
இந்த மாதிரி ஒருத்தர்
தன்னோட பொறுமைய மொத்தமா இழந்துட்டு
செய்யக் கூடிய விசயங்கள்தான்
அவங்களுடைய உண்மையான முகமா தீர்மானிக்கப்படுது.

கண்டிப்பா இதுல எனக்கு உடன்பாடு இல்ல
பத்து வருஷ திருமண வாழ்க்கைல
ஒன்னா இருந்த கணவன் மனைவிக்குள்ள
ஏதோவொரு சூழ்நிலையில சண்டையாகி கைகலப்பாகிட்டா
அதுதான் அவங்க ரெண்டு பேரோட
இத்தன வருஷ வாழ்க்கையின் உண்மையான முகம்ன்னு சொல்லீற முடியுமா.

எப்பவும் பொறுமையா இருக்குற ஒருத்தன்
சண்ட போட்டுட்டாலோ,
எப்பவுமே சிரிச்சிட்டே இருக்குற ஒருத்தன் அழுதுட்டாலோ
இதுதான் அவனோட நிஜம்ன்னு சொல்லீற முடியாது.
அதுவும் அவனுக்குள்ள இருக்குற ஒரு பார்ட். அவ்ளோதான்.

அதே மாதிரி ஒருத்தரோட குறிப்பிட்ட ரெண்டு, மூணு
எதிர்மறையான விசயங்கள திரும்ப திரும்ப சொல்லிக் காட்டிட்டே
இருக்குறதும் தப்புதான்அது அவங்கள குற்றவுணர்ச்சிலயே வச்சி
அதவிட்டு வெளியவே வர விடாம கஷ்டப்படுத்துற மாதிரி.
மன்னிப்பாலயோ, தண்டனையாலயோ தீர்வுக்கு வராத எந்தவொரு தப்பும்
பேசிட்டே இருக்குறதால சரியாகாது.

எல்லாருக்கும் எல்லாமே இருக்கு.
பால்டப்பா மாதிரி மூஞ்சி இருக்கும்.
பெரிய வில்லத்தனம் பண்ணிட்டு இருப்பான்.
ரவுடி மாதிரி இருப்பான். பச்சக் கொழந்த மாதிரி நடந்துப்பான்.
ஊருக்கே உத்தமனா இருக்குற ஒருத்தன் பெரிய அயோக்கியனா கூட இருப்பான்.
ஒருத்தரோட ஒருநாள் முகம், ஒருநேர சண்டை,
தடுமாற்றமான மனநிலையில செய்ற அல்லது சொல்ற எதையுமே
அவங்களோட நிஜமான முகமா நினைக்க கூடாது.
அத அடுத்தவங்ககிட்ட சொல்லி பதிவு பண்ணவும் கூடாது.

இங்க யாருக்கும் பொய்,
நிஜம்ன்னு மாறக்கூடிய முகமில்ல.
மனுஷன்னா எல்லா குணமும் இருக்கதான் செய்யும்.
அவ்ளோதான்!

Navigation

[0] Message Index

Go to full version