POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்
காத்திருக்கிறேன் ...
(1/1)
செம்மொழி:
இரவும் பகலும் மாறி போய்விட்டது
நீ மட்டும் மாறவில்லை என் அன்பும் மாறவில்லை
பாதம் தொட நினைத்து தோற்று போகும் கடல் அலை போல
நானும் தோற்று போகிறேன் உன் பாதம் தொட நினைத்து
கடந்து விடவே நினைக்கிறன் கடக்க முடியாத உன் நினைவுகளை
எப்படி கடக்க முடியும்
ஒவ்வொரு நொடி பொழுதும் நீ என்னை ஆண்டு கொண்டு இருந்தால்
ஒரு முறை என் கண் முன்னே வந்து விடு
உன்னுடைய ஈகோ உடையும் நொடிப்பொழுது
நம் காதல் மீண்டும் பூக்கும் நொடிப்பொழுது
அந்த நொடிப்பொழுது எப்போது வாய்க்குமோ
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
காதலோடு ? ? ?
Navigation
[0] Message Index
Go to full version