Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-022  (Read 5964 times)

April 24, 2023, 08:04:32 pm
Read 5964 times

Administrator

கவிதையும் கானமும்-022
« on: April 24, 2023, 08:04:32 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-022


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

April 25, 2023, 11:09:27 am
Reply #1

Appu kuTTy

  • Winner

  • ***

  • 78
    Posts
  • Total likes: 34

  • Gender: Male

  • 🙏🙏சத்தியத்தை காப்பாற்றுவேன்🙏🙏

    • View Profile
Re: கவிதையும் கானமும்-022
« Reply #1 on: April 25, 2023, 11:09:27 am »
மே தினக் கவிதை!!

உழைப்பினால்,
வியர்வையை தந்து,
உழைப்பின்
அயர்வினால்
உடல்நொந்து,
உலகிற்கு
உயர்வு தரும்
உந்து சக்தியான,
தொழிலாளிகளுக்கு
மே தின வாழ்த்துக்கள்!!

முதல் போட்டவன்
அல்ல முதலாளி!
தன் முதுகெலும்பை
முதலாகக் கொண்டு,
லாபத்தில்,
முதலாளியை
முதல் ஆளாக,
கொண்டு வரும்
தொழிலாளியே,
முதலாளி!!

மே தினம் தந்தது,
பணி நேரத்தை "எட்டாகவும்"
மிகை நேரத்தை "துட்டாகவும்"!!

மே தினம் தந்தது
முதலாளிகளுக்கு "கொட்டும்"
தொழிலாளிகளுக்கு "லட்டும்"!!

முதலாளி,
தொழிலாளிகளை
ஒப்பிட்டான்,
"பிணத்தோடு"!
அந்த எண்ணம்
ஒழிந்தது
மே "தினத்தோடு"!!

பலரின் தியாகத்தால்,
பணி நேரம்
பதினாறிலிருந்து
"எட்டானது"!
அன்று முதல்
தொழிலாளிகளுக்கு
இயந்திர சத்தம்
கூட "மெட்டானது"!!

நமக்கு
நலன் கிடைக்குமா
என்று
தொழிலாளிகள்
இருந்தனர்
"தாகத்தால்"!
அவர்களின்
தாகம் தீர்ந்தது
மே மாத
"மேகத்தால்"!!

மே தினம்
மா தினமாக மாற
தேவைப்பட்டது,
பலரின் "சத்தங்களும்"
பலரின் "ரத்தங்களும்"!!

இந்த உலகத்தை
ஆள நினைத்த,
முதலாளிகள் என்னும்
பாவிகளால்தான்,
இந்த உலகத்தை
விட்டு
தொழிலாளிகளின்
ஆவிகள் போனது!
ஆயினும்
அந்த "ஆவிகள்" தான்
மே தினத்தை
திறக்க
"சாவிகள்" ஆனது!!

"நெற் கதிர்களும்"
"சூரிய கதிர்களும்",
தலை நிமிர்ந்து
தலை சாயும் வரை,
தலை சாயாமல்
உழைக்கும்
உலகின் தலை
விவசாயி!!

"உளி" கொண்டு,
உளியின் "ஒலி" கொண்டு,
கை "வலி" கண்டு,
கல்லை கடவுளாக்கி
கருவறைக்குள்,
கொண்டு செல்பவரே
"சிற்பி"!
அவரை நீ "சிறப்பி"!!

நாம்,
துப்பியதையும்
துடைக்கும்
துப்புரவாளர்கள்,
"துப்புரவாளர்கள்" அல்ல!
அசுத்தத்தை கண்டு
பிடித்து அழிக்கும்
"துப்பறிவாளர்கள்"!!

பட்டு பூச்சியின்
நூல் கொண்டு,
நம்மை  ஆடை
கொண்ட
பட்டாம் பூச்சியாய்
மாற்றும்
"நெசவாளி"!
உழைப்பில்
"நிறை வாளி"!!

"வலைகளை"
கொண்டு,
"அலைகளையும்",
புயல் "மழைகளையும்"
மேற்கொண்டு,
நாம் நாவாற
சுவைக்க,
இறா
சுறா
விரா
தந்து,
தன் கரத்தால்
சாகரத்தை
ஆளும் மா வரம்
மீனவன்!!

நாம்,
காலம் ஆகாத படி
காலனும் சிறிது
கருணை காட்டுகிறான்,
மருத்துவர்களின்,
காலம் கருதா
உழைப்பை பார்த்து!
மருத்துவர்களின்,
ஞானத்தினால் தான்
இந்த ஞாலம்
உயிர் பெறுகிறது!!

"விழா" நாட்களில்
கூட ஊருக்குள்
"உலா" வந்து,
நம் குடும்ப மகிழ்ச்சிக்கு,
தன் குடும்ப
மகிழ்ச்சியை,
காவு கொடுக்கும்
"காவலாளிகள்",
நம்மை காக்க
இறைவன்
அனுப்பிய
"ஏவலாளிகள்"!!

குடும்ப வாசத்தை
விட்டு,
தேசத்தின் மீது
"பாசமும்",
"விசுவாசமும்"
கொண்டு,
உறை பனியிலும்
உறங்காமல் பணி செய்து,
நாம் நிம்மதியாக
உறங்க
பாயாக இருக்கிறார்கள்
சிப்பாய்கள்!!

உழைப்புக்கு இல்லை,
"மதமும்
மாதமும்"!!

உழைப்பை நேசித்து,

அறிவால் வாழ்வோம்
"சிங்காரவேலர்களாய்"!

அகிலத்தில் வாழ்வோம்
"சிங்கார
தொழிலாளர்களாய்"!!

வாழ்த்துக்களுடன்
சிற்பி
« Last Edit: May 01, 2023, 10:32:30 pm by Sirpi »

April 26, 2023, 03:22:41 pm
Reply #2

kathija

Re: கவிதையும் கானமும்-022
« Reply #2 on: April 26, 2023, 03:22:41 pm »
தந்தையின் உழைப்பு:

Gtc  உறவுகள் அனைவருக்கும் என்னுடைய இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்.

உழைப்பு என்றால் என் கண் முன்னே தோன்றும் தெய்வம் என் தந்தை, ஆம் என் தந்தையின் உழைப்பு பற்றிய ஒரு கவிதை.

உழைப்பின் உன்னதம் தந்தை

தன்னை வருத்தி
தன்னை வருத்தி

தன் மகளின் புன்னகைக்காக
வாழும் தெய்வம்

ஆயுள் முழுவதும் உழைத்து

தன் தேவதையை
தன் சின்ன தேவதையை

நாளும் உயர்த்தும் ஒரு கடவுள்

நாள் முழுவதும் உழைத்த களைப்பிருந்தும்
நாள் முழுவதும் உழைத்த களைப்பிருந்தும்

தன் குட்டி மகளின் புன்னகையில்
தன் குட்டி மகளின் புன்னகையில்

உலகின் மொத்த இன்பம்
பெரும் உழைப்பாளி

மொத்த குடும்ப பாரம்
தோள் மேல் இருக்க

மழலை மொழி கேட்டு
மழலை மொழி கேட்டு

சொர்க்கதின் பயனை
அடையும் உழைப்பாளி

நான் துன்ப முகம் காணமல்
நான் துன்ப முகம் காணமல்

நாளும் இன்பமுகமாய்
தன் வலியை மறைத்த

என் தந்தை

ஆம்
என் தந்தை

உழைப்பின் தெய்வம்

என்னை உயர்த்த உன்னை
வருத்திய தெய்வமே
என்னை உயர்த்த உன்னை
வருத்திய தெய்வமே

கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன் இந்த கவிதையை உன் உழைப்புக்கு.

தெய்வங்கள் எல்லாம் thotre போகும் song dedicate பண்றேன் என் தந்தைக்கு.

« Last Edit: April 26, 2023, 06:18:30 pm by kathija »

April 28, 2023, 12:27:58 am
Reply #3

Sanjana

Re: கவிதையும் கானமும்-022
« Reply #3 on: April 28, 2023, 12:27:58 am »
Gtc  நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்.

உழைப்பால் நாம் உயர்ந்திடுவோம்,
உலகையே மாற்றிடுவோம்....



 உழைக்கும் கரங்கள்...

இரண்டு வர்க்கம் இனி இல்லை
எழுந்து வா சிவந்து நிற்கும் நெஞ்சத்தோடு
நடக்க போவது புது யுகம்
நீ விதைத்த வியர்வைகள்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்தை
கர்ப்பம் தரிக்க வைத்தாய்
உழைக்கும் கரங்களால்…
 
காலம் நமதென்று கதவு திறக்கும்
உழைப்பாளிக்கு சிறந்த வழி வகுக்கும்
அவன் கரங்கள் இருக்கும் விலங்குகள்
அனைத்தையும்  உடைக்கும்
சில அதிகாரத்தை முடிக்கும்
உலகை ஆளும் கரங்களே
உழைக்கும் கரங்கள்…

கற்கள் சிலையானதும்
கற்பனை சிந்தனை இலக்கியமானதும்
விளைநிலம் செழிக்க வேளாண்மை செய்ததும்
காடுகள் திருத்தி நாடானதும்
தொழிற்சாலைகள் படைத்து ஏழ்மை ஒழித்ததும்
கற்காலத்தை நகர்த்தி கணினி யுகம் ஆனாதும்
உழைக்கும் கரங்களாலே…

இயந்திரம் இயங்க மென்பொருள் இல்லை எனில்
இளமையும் முதுமையும் மனிதனுக்கு
நரகமாய் மட்டுமே நகர்ந்திருக்கும்
உழைப்பு தான் மனிதனின் முதன்மை அடையாளம்
உழைப்பை மறப்பது சுவாசத்தை மறப்பதற்கு சமன்
உழைக்கும் கரங்களை மறப்பது உயிரை விடுவதற்கு சமன்...




« Last Edit: April 28, 2023, 01:05:29 am by Sanjana »

April 30, 2023, 11:32:02 am
Reply #4

kittY

Re: கவிதையும் கானமும்-022
« Reply #4 on: April 30, 2023, 11:32:02 am »
★உழைத்து உழைத்து
நித்தமும் உழைத்து
ஓய்ந்து விடாமல்... சோர்ந்து விடாமல் உழைத்து சிந்தும் வியர்வையில் வாழ்வை கரைத்து.... உயிர் போகும் நொடி வரை உழைக்கும் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் இதோ....~~~

உழைக்கும் கரங்காலாய் நீ இருக்க சொல்லில் சொல்ல முடியாது உழைப்பாளியின் மகிமையை.....
படிப்பு மாறலாம் ...
துறைகள் மாறலாம்...
சேவைகள் மாறலாம்....
ஆனால் உழைப்பு மட்டும் மாறதே....

விழிகளில் தூக்கம் தொலைத்து கைகள் சிவக்க, கால்கள் கடுக்க.... வீட்டிற்காய், வூறுக்காய், நாட்டிற்காய் உழைத்து மடியும் உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வறுமைபட்டு, கஷ்டப்பட்டு,காயப்பட்டு
இஷ்டப்பட்டு கஷ்டப்படும் தொழிலாளிகளே  உம்மை மறந்தவர்களுக்கு நினைவூட்டும் அந்த இனிய நாள் இன்று...

தொழிலாளிகள் இல்லாவிடின் முதலாளி ஏது... முதலாளியின் கெளரவம் தொழிலாளி கொடுத்த  வியர்வை முத்துக்கள்... வியர்வை முத்துக்களாய் சிந்தியதால் பவளமாய் மின்னுகின்றனர் முதலாளிகள்.... உமக்கு நன்றி சொல்லவே இந்த நாள்....

 இலட்சியங்கள் ஏதுமில்லை.... உழைப்பை இலட்சியமாய் கொண்டு பூமியில் எங்கும் பூக்களாய் பூத்து குலுங்கும்  உழைப்பாளிகளே உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வஞ்சனை செய்யா நெஞ்சத்தோடு....சிவந்த கரம் நீட்டி உழைக்கும் உங்கள் கரம் பற்றி பிடித்து சொல்லுகின்றேன்... உடல் அளவில் நீங்கள் காயாப்பட்டாலும் மனதளவில் நீங்கள் நிம்மதியாய் வாழ்வீர்கள்... முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை...
உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...(முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை... உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...

மீண்டும் ஒரு முறை உம் சிவந்த கரம் தொட்டு உமக்கு இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை சொல்ல கடமை பற்றியிருக்கின்றேன் நான்....

April 30, 2023, 11:51:50 am
Reply #5

Barbie Doll

Re: கவிதையும் கானமும்-022
« Reply #5 on: April 30, 2023, 11:51:50 am »
பரிசு இல்லா, பதக்கம் இல்லா,
பந்தயக் குதிரை உழைப்பாளி!
பசிக்காக, பல தடைகள் உடைப்பான், நிச்சயமாக அவன் தொழிலாளி!

ஏறிய விலைவாசியும், ஏறாத சம்பளமும், ஏட்டிக்குப் போட்டியாய் நின்றாலும்..,
இயந்திர உலகில், தொழில்கள் பல செய்யும் உழைப்போரை யாவரும் மறந்தாலும்..,

உழைப்புக்கு குறைவான ஊதியமே, உலகம் கொடுத்தாலும்..,
அவன் உயர்வுக்கு வழிகாட்ட, உலகமே கொஞ்சம் மறந்தாலும்..,

முண்டியடித்து முன்னேற முயலும், உழைக்கும் மனிதனின் ஊக்கம் தான்.!
அழகாய் சிரிக்கும், அத்தனை பொருளிலும், ஒளிந்திருக்கும் அவன் ஏக்கம் தான்.!

சுருங்கிய தோலும், சுருசுருப்பாக  நாளும் உழைப்பை   கொடுக்கிறதே.,!
காத்திருக்கும் ஓட்டுநரின், காலச்சக்கரமும் கடல்கடந்து காசை நோக்கி ஓடியதே.,!

பசியும் பட்டினியும் தன்னில் கொண்டு, விரல் வலிக்க விளைச்சலை கொடுக்க, விவசாயத்தை கையிலெடுத்தவரே.!
நெய்து நெய்து நொந்து போன, நெசவாளரும் மனதால் பட்டுடுத்த ஏங்கி தவிப்பாரே.!

துப்புரவாளரின் துயரம் தன்னை துச்சமென நினைந்து, ஊர் தூர நின்று இகழுது.!
விண்ணை தொடும் கட்டிடங்களும் அவன் உழைப்பை, தலை நிமிர்ந்து நோக்குது.!

துணிக்கடையில் துவண்டு போன கண்களில் கண்ணீரும் வற்றி கிடக்குது.!
தெருவோர கடைகளும் தொய்வின்றி உழைத்து, சில நூறுக்காக ஏங்குது!.

கை வலிக்க கணிணியில் போராடும், நவீன உழைப்பாளிகள் மனமும் வாடுது.!
உலக பொருளாதாரத்தின், ஊன்று கோலாய்  இருப்பார்கள், என்றே உலகம் நம்புது.!

 தெளிவான மனித இனமோ, தேவையற்ற இடங்களில் பணத்தை அள்ளி வீசுது.!
காவலாய், ஏவலாய் மாறி போன கவலை தான் கடைசியில் மிஞ்சுது.!

சுற்றி நிற்கும் சயநலக் கூட்டமோ தூற்றி பேச கேக்குது.!
சுருக்கென்ற வார்த்தை பேச சூழ்நிலை தான் இங்கே தடுக்குது.!

இயலாமையை மறைப்பானே,
இயன்ற வரை உழைப்பை கொடுப்பானே,!
கடின உழைப்பில் கவலைதனை மறப்பானே ,
உழைப்பே உயர்வென சமாதானம் கொள்வானே.!

 அலுப்பை மறக்க உழைப்பை கொண்டாடும் நாளும் நம்பிக்கை தாங்கி வந்ததிங்கே.!

உரிமை குரலில் உயிரை கொடுத்து உதயமானதே இந்த மே தினமே.!
போராடி பெற்ற எட்டு மணி நேரம் எட்டாக் கனியாக நேரம் கடந்து போகுது அனுதினமே.!

உணர்வற்ற சிரிப்பும் முகத்திலே முனங்கலுடன் வந்து மலருது.
ஊதியத்துடன் விடுமுறை என்று வெறுமனே மனம் கொண்டாடுது.

முதல் போட்ட முதலாளியின் முகம் மலர வைத்த தொழிலாளி..!
உழைப்பை உறிஞ்சி உயிரை குடிக்காமல் உயர்வை வழங்குமா இந்நாளில்?
 
வியர்வை சிந்தும் தொழிலாளி வர்க்கம் ..!
அமைத்து கொடுப்போம் அவன் வாழ்வில் சொர்க்கம்..!

அடிமட்ட தொழிலாளியின் அசராத உழைப்புக்கு மே தின நல்வாழ்த்துக்கள் .!

 
« Last Edit: May 02, 2023, 09:35:57 am by Barbie Doll »

May 05, 2023, 07:48:37 pm
Reply #6

Eagle 13

Re: கவிதையும் கானமும்-022
« Reply #6 on: May 05, 2023, 07:48:37 pm »

உணவு,உடை, இருப்பிடம். உழைப்பே அதன் பிறப்பிடம்... சாலைகளும் ஆலைகளும் பாலைகளையும் சோலைகளாய் மாற்றியது உழைப்பு தான்.... போராளி இட்ட பெயர் உழைப்பு... சாமானியன் வைத்த பெயர் பிழைப்பு...

சுயநலமுள்ள மனிதன் முதலாளி ஆனான்... பொதுநல மனிதன் உழைப்பாளி ஆனான்..

இருநூற்றாண்டுக்கு முன்பு பிறந்த கார்ல் மார்கி எனும் மாமனிதன் வீடுவாசல் விட்டு நாடு விட்டு நாடு சென்று.... பொது நலத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு கொடுத்த கோட்பாடுகள் ஒன்றே....உழைப்பாளர் தினம் விதையானது... இன்றும் என்றும் உலகம் போற்றும் கதையானது....
எந்த மனிதனும் மற்ற மனிதனுக்கு அடிமை இல்லை... அதை செய்தால் அதை விட கொடுமை வேறேதும் இல்லை....என்ற நிலை என்றும் தோன்ற புரட்சியே காரணம்....

உழைப்பாளியை போற்றவிட்டாலும் பரவாயில்லை... மதிக்காமல் மிதித்து விடாதே..... உழைப்பு இல்லாமல் உலகமும் இல்லை.... உழைப்பாளி இல்லாமல் முதலாளியும் இல்லை....உழைக்கும் கரங்களே! உம்மை நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கவில்லை... இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உம் நெஞ்சங்களுக்கு.....!.