POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

Sivarudran Kavithaigal

(1/2) > >>

Sivarudran:

மானே தேனே பொன்மானே !
மரகதமே மயிலிறகே!
அன்னமே எந்தன் பொன் வண்ணமே !
மன்னவன் மாமன் உனக்கு
தாலாட்டு பாடுறேனே
தலை சாய்த்து தூங்கிடுவாயோ!
கட்டி வைரமே கனியமுதே
தேன் கிண்ணமே !
தென்னவன் நான் உனக்கு தெம்மாங்கு பாடுறேனே
தேம்பாதே நீ உறங்கு !
தந்தையாய் நான் இருப்பேன்
நீ தவிக்கயிலே தாயாவும் நான் இருப்பேன்.
காலமெலாம் காவக்காரன் உன் கூட இருப்பேன்
கண் முடி நீ உறங்கிடு .

Sivarudran:
தனிமையின் காலடி சத்தமாய் அவளது கொலுசின் ஓசை.

தனிமையின் மொழியாய் ஆளற்ற அறையில் அவளின் உளறல்கள்.

தனிமையின் பிம்பமாய் திரும்பும் திசை எங்கும் அவளின் முகம்.

மொத்தத்தில் தனிமையே அவளாய்.
அது தருவதே சுகமாய்.
என் நாட்கள் கழிவதோ தனியாய்.

RiJiA:
Alagane kavithai....🙂

RiJiA:
ல்,ள் madrum ழ் ilame yelutiya thaimaaman taladu..very nice👌

Sivarudran:
என்ன கதை ?

என் கதை சொல்ல
எனக்கும் இங்கு ஆசை உண்டு.
என்னவென்று கேட்க
எனக்கு இங்கு யாரும் உண்டோ ?
என்னுள் வாழ்ந்த கதை சில உண்டு
நான் வீழ்ந்த கதை பல உண்டு .
எனக்கென எழுதி வைத்த கதை ஏதும் உண்டோ?
அதை எடுத்து சொல்ல எனக்கு ஆள் உண்டோ ?
என் எண்ணமெல்லாம்
வண்ணமாக இனியொரு கதை
எனக்கென உண்டோ ?

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version