FM Programs & Activities > சங்கீத மேகம் - SANGEETHA MEGAM
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#010
Administrator:
நிகழ்ச்சி : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:30 மணி
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.
பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.
வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும்.
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.
ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
Sanjana:
வணக்கம் அர்ஜுன் மற்றும் சங்கீத மேகம் குழுவினர்….
சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் இந்த வாரமும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.
எனக்கு பிடித்த பாடல்: தொடு வானம் சிவந்து போகும்(Ohh Shanthi)
திரைப்படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: S.P.B. Charan, Clinton Cerejo, Harris Jayaraj,
இசை: Harris Jayaraj
பாடல் வரிகள்: தாமரை
எனக்கு பிடித்த வரிகள்:
இனி உன்னை பிரியமாட்டேன்
தொலை தூரம் நகர மாட்டேன்…
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா...
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க...
இந்தப் பாடல் எனக்கு பிடித்த ஒரு உறவுக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு பிடித்த இந்த பாடலை நான் அவருக்காக கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த பாடலில் காதலன் காதலியை தேடி தூர தேசத்துக்கு செல்லுவதும் அங்கே அவளை தேடி துன்பப்படுவதும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இப்படி என்னையும் தேடி எனது காதலன் வந்தால் நன்றாகவே இருக்கும். நினைத்தாலே இனிக்குதே....உங்களுக்கு கிண்டலாக இருக்குமே நண்பர்களே... சஞ்சுக்கு இப்படி எல்லாம் ஆசையா என்று….ஆசை படுவது தப்பு இல்லையே…
நான் இந்த பாடலை என் அன்புக்கு உரியவனுக்காகவும், GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்
சஞ்சனா(Sanju).
NATURE LOVER:
Hi Arjun and all GTC users.
சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் முதல் முறையாக இந்த வாரம் பங்கு பெறுவதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
எனக்கு பிடித்த பாடல்: காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா. அன்பென்றாலே அம்மா
திரைப்படம் பெயர்: நியூ(NEW)
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் மற்றும் சாதனா சர்கம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள்: வாலி
இந்த பாடலில் தாயின் பெருமை பற்றியும் தாய்க்கு பின்பு தாரத்தின் பெருமை பற்றியும் மிக அழகான வரிகளால் இந்த பாடல் அமைந்திருக்கும்.
இந்த பாடலை இந்த பூமியிலிருந்து மறைந்து விட்டாலும் என்றுமே என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாய்க்கு மற்றும் எனக்கு இனி வருங்காலத்தில் வரக்போகும் என் மனைவிக்கும் இந்த பாடலை ஒலிப்பரப்புமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்...
மீண்டும் அர்ஜூன் மற்றும் அனைத்து GTC நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....
இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன் (NATURE LOVER)
Rudraa:
Hello naan request panra song called Enthan Amma by Michael Rao
https://www.youtube.com/watch?v=SptGLAyIVAs&ab_channel=JKWicky
I want to dedicate this song to my mother, ennaku ulagathilaye romba pudichathu yaarunu keta en amma dhaan. Naanum avangalum life le neraiya kadanthu vanthu irukom and avanga support illama naan ivalo thooram vanthu iruka mudiyathu. Chinna vayasila irunthe ennaku amma va irukratha vida ennaku oru bestfriend ah irunthirukanga, neraiya share panipom. I wish my mom a life full of happiness and hope she gets everything she wants.
Thank you,
Rudraa
LOVELY GIRL:
Hi Arjun Bro, Vanakam to EVERYONE.. SM PROGRAM மில் மீண்டும் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வாரம் நான் தேர்ந்தெடுத்த படம் "என்றென்றும் புன்னகை"
நடிகர்கள் : ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு : தமிழ்க்குமரன்
இயக்கம் : அகமது
நட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது என்பதை ரொம்ப வண்ணமயமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்றென்றும் புன்னகையில்.
இந்த படம் நான் பள்ளியில் படிக்கும்போது உள்ள என் நெருங்கிய நண்பர்களை நினைவு படுத்தியது...
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பிடிக்கும்..
1) வான் எங்கும் நீ மின்ன மின்ன
2) என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
3) ரொம்ப நேரம்
இதே போய்கிட்டு
இருக்குதுடா
4) கடல் நான்
தான் அலை ஓய்வதே
இல்லை
மேலும் இந்த படத்தில் எனக்கு 2 பாடல்கள் பிடிக்கும்..
1) ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு
அவர்கள் திருமணம் முடிந்தபின் நாங்கள் 4 வருடமாக பார்த்து கொள்ளவில்லை அப்போ
2) ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு..
இந்த பாடல்கள் நினைவுக்கு வரும்..
இப்பொழுது எனக்கு GTC யில் நிறைய நண்பர்கள் கிடைத்து உள்ளார்கள்..
அதனால் ஏலே ஏலே தோஸ்து
டா..
பாடலை என் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..
பாடகர்கள் : க்ரிஷ், நரேஷ் ஐயர், கிருஷ்ணா ஐயர்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பிடித்த வரிகள் :
குடல் வலித்திடும்
வரை தினமே சிரித்தே
கூத்தடிப்போம்
உடல் வலித்திடும்
வரை கைகளால் அடைத்தே
குதுகளிப்போம்
நீ அடித்தாலும்
நீ பிடித்தாலும் என்
நண்பன் தானடா
நான் அழுதாலும்
நான் சிரித்தாலும் என்
துணையே நீதானடா..
I MISSED MY FRIENDS AND THOSE DAYS..
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version