General Category > General Discussion

தினம் ஒரு திருக்குறள்.....

(1/17) > >>

SuNshiNe:
அனைவருக்கும் வணக்கம் !✨✨



💫நமது கற்றலின் எல்லையை விரிவு செய்யும் வகையில்  நல்ல ஒரு  தொடக்கமாக தினம் ஒரு திருக்குறள் இங்கு  பதிவு செய்யப்படும் ....



💫திருக்குறள் தொடர்பான கேள்விகளை நமது GTC  மன்றத்தில் உள்ள விளையாட்டு பிரிவில் வினாக்கள்  கேட்கப்படும் .இதில் பங்கேற்று  இதன் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


திருக்குறள் :

இயற்றியவர்: திருவள்ளுவர்
அதிகாரங்கள்: 133(௧௩௩)
குறள்: 1330(௧௩௩௦)
பால்:  3(௩)

சிறப்பு பெயர்கள்:
பொய்யாமொழி
முப்பால்
உலகப்பொதுமறை
தெய்வநூல்
வாயுறைவாழ்த்து
உத்தரவேதம்
திருவள்ளுவம்
வள்ளுவமாலை
               
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

திருவள்ளுவர் :

குறிப்பு:  (முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை)
செவி வழியாக வந்த செய்திகள் .....


ஊர் : சென்னையில் உள்ள மைலாப்பூர்
பெற்றோர் : ஆதி - பகவன்
மனைவி : வாசுகி
மரபு :  வள்ளுவ மரபு
காலம் :  கி.மு 31

சிறப்பு பெயர்கள்:

தெய்வப்புலவர்
பொய்யில் புலவர்
பெருநாவலர்
நாயனார்
தேவர்
முதற்பாவலர்
நான்முகனார்
மாதானுபங்கி
செந்நாப்போதார்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


திருக்குறள் சிறப்புகள்:



⭐தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவுள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை.

⭐திருக்குறளில் மொத்தம் 14,000 சொற்கள் உள்ளன.

⭐திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன.

⭐முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு-1812

⭐திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

⭐நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.

⭐பனை, மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.

⭐ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும்.

⭐குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.




━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

SuNshiNe:



பால் : அறத்துப்பால்
அதிகார எண்: 1
அதிகாரம் : கடவுள் வாழ்த்து


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


குறள்-01





━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



மு.வ விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா விளக்கம்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன;
(அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் விளக்கம்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை;
ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

SuNshiNe:
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


குறள்-02







━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



மு.வ விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா விளக்கம்:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் விளக்கம்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

SuNshiNe:
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


குறள்-03







━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



மு.வ விளக்கம்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

சாலமன் பாப்பையா விளக்கம்:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த
திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

கலைஞர் விளக்கம்:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு,
உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

SuNshiNe:
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━


குறள்-04







━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━



மு.வ விளக்கம்:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு
எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

சாலமன் பாப்பையா விளக்கம்:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

கலைஞர் விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு
எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version