Advanced Search

Author Topic: மரக்கறிகளின் மகத்துவம்- The greatness of vegetables  (Read 5613 times)

September 11, 2022, 10:27:33 am
Read 5613 times

Sanjana

1. பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!


தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.

மஞ்சள்காமாலை நோய்

2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் மறைந்துவிடும்.

கல்லீரல் பிரச்சனை

3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.

மூலநோய்

தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

நோயெதிர்ப்புச் சக்தி

பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.

பருக்கள்

பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் 6 மாதம் அருந்தி வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

எடை குறைதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. உலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்லசெரிமானத்தை உண்டாக்குகிறது.

இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

குறிப்பு

பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

………………………………………………………………………………………………………….

பாகல் என்றவுடன் அதன் கசப்பு சுவை தான் நினைவுக்கு வரும். எனினும் இது உணவாக மாத்திரமன்றி சிறந்த ஒரு மருந்தாகவும் இருப்பதை அதிகமானவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. தற்காலத்தில் சர்க்கரை குறைப்பாட்டால் துன்பப்படுவோர்கள் பச்சையாக அரைத்து முகம் சுளிக்க குடிக்க உதவும் பாகற்காய் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் ஒன்றாக இருக்கின்றது.

சுட்டிலைகளை கொண்ட கொடி வகையை சேர்ந்த பாகல் காயை சமையல் செய்து வற்றலாக்கி வறுத்து உணவுடன் சாப்பிடுவதும் நமது வழக்கம். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்துடனும், காய்கள் நீண்டும் உருண்டையாகவும் சொரசொரப்பாகவும் அமைந்திருக்கும். இவைகளின் காய் சிறியதாகவும் அதிக கைப்புள்ளதாகவும் இருக்கும்.

நிலப்பாகல், பொதுவாக பாகல் முக்குற்றங்களால் ஏற்படும் பெருக்கை அடக்கும். கழிச்சல் உண்டாகும் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியாக்கும். ஈரல்நோய், வாதநோய், உள்ளவர்கள் பழத்தை சமைத்து சாப்பிட தீரும். முழுப்பயனும் பெறுவதற்கு ஏனைய பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிடவேண்டும். இதனால் களைப்பு நீங்கி ஆயாசமும் தீரும்.

சிலருக்கு மாலை நேரம் சூரியன் மறைந்தவுடன் பார்வை மங்கி எதுவும் தெரியாது. மீண்டும் காலையில் சூரியன் உதயம் ஏற்பட்டவுடன் தான் பார்வை தெரியும். இதை மாலைக்கண் நோய் என்பார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றுடன் சிறிது அளவு மிளகை சேர்தரைத்துக் கண்ணைச்சுற்றி பற்றிட மாலைக்கண் குறைபாடு படிப்படியாக நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் இலைச்சாற்றை 30மில்லி லீட்டர் அளவில் குடித்துவர வயிற்றுபூச்சி கழிந்து வெளியேறும்.

பாகல் இலைச்சாறு, ஆனைபுளிச்சாறு, பழுத்த வெற்றிலைச்சாறு, நாவல்பட்டைச்சாறு ஆகியவற்றை ஒரெடையாக எடுத்து அதில் சிறிதளவு வசம்பு உரைத்து 7நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் கல்லீரல், மண்ணீரல் கட்டிகள் கரைந்து போகும். பாகல் வற்றலை வறுத்து சாப்பிட மூலம் காமாலை நீங்கும். இதை உண்ணும் காலத்தில் அசைவ உணவை முற்றிலும் விலக்க வேண்டும்.

 
« Last Edit: September 11, 2022, 10:30:11 am by Sanjana »

September 12, 2022, 11:24:57 am
Reply #1

Sanjana

2.வாழைப்பூ – தண்டின் மருத்துவ குணங்கள்


வாழையின் பூ, தண்டு, காய், பழம், இலை என அனைத்தும் மருந்தாகி பயன்தருகிறது. ஆம் தற்போது நாம் வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்களை பார்க்கலாம். வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, இ, பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ளன.

ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வாழைப்பூவுக்கு உண்டு. ரத்தசோகை வராமல் தடுக்கும் மருந்தாக விளங்குகிறது.

வாழையின் அனைத்து பகுதிகளும் துவர்ப்பு சுவையை அடிப்படையாக கொண்டது. அதிக ரத்தப்போக்கு பிரச்னைக்கு துவர்ப்பு சுவை உடைய உணவுகள் மருந்தாக விளங்குகிறது. வாழை பிஞ்சுவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் புண்கள் விரைவில் ஆறும்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களை உடைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், புண்களை சரிசெய்யும். தேவையில்லாத கொழுப்பு சத்தை குறைக்க கூடியது. உடலுக்கு நல்ல ஆரோக்கியம், ஊட்டத்தை தருகிறது.

 
« Last Edit: September 12, 2022, 11:27:36 am by Sanjana »

September 13, 2022, 01:34:28 am
Reply #2

Sanjana

3.கீரையின் மருத்துவப் பயன்கள்…


முளைக் கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடியது. இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதுதவிர, நார்ச் சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும்.
முளைக் கீரையின் மருத்துவப் பயன்கள்:
1. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. முளைக் கீரை அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
2. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்துவகையான காய்ச்சலும் குணமாகும்.
3. முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
4. முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசிpயன்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.
5. முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறைபாடு நீங்கும்.
6. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். 40 நாள்களுக்குத் குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.
7. முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.
8. சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.
9. முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு உண்டாகும்.
10. சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக் கீரைச் சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.

September 15, 2022, 03:13:31 pm
Reply #3

Sanjana

4.ஆரோக்கியம் தரும் ப்ரோக்கோலி


நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது. எனவே ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.

ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது
ப்ரோக்கோலியில் உள்ள தாதுப்பொருட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைச் சீராகவும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை பராமரிக்க உதவுகின்றன.

ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை கைகொடுக்கின்றன.

ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

September 18, 2022, 11:01:17 pm
Reply #4

Sanjana

5. புற்றுநோய்க்கு தீர்வு தரும் பச்சைப் பட்டாணி

மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருக்கின்றது. இதனைக் குனப்படுத்துவதற்கு புதிய வகை மருந்துகளைக் கண்டுபிடிக்க பலவகையான சோதனைகள் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பச்சைப் பட்டாணியில் உள்ள கவுமெஸ்டிரால் எனப்படும் பைட்டோநியூட்ரியன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை.

பச்சைப் பட்டாணியில் நிறைந்திருக்கும் ‘ஹைப்போநியூட்ரியன்ட்’கள், பல்வேறு நற்பலன்களைத் தருகின்றன. பச்சைப் பட்டாணியில் உள்ள கவுமெஸ்டிரால் எனப்படும் பைட்டோநியூட்ரியன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை. பச்சைப் பட்டாணியின் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம்.

உடலில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுப்பதே பச்சைப் பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருட்களும், சிறிதளவு அன்டிஒக்சிடன்ட்களும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

அதிக நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்துள்ள பச்சைப் பட்டாணி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பச்சைப் பட்டாணியில் உள்ள அன்டிஒக்சிடன்ட்கள் நம்மை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. இதில் உள்ள பிளேவனாய்டுகள், பைட்டோ நியூட்ரியன்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பீனாலிக் அமிலம் போன்றவை நம்மை இளமையாகவும், துடிப்போடும் திகழச் செய்கின்றன.

 

September 19, 2022, 06:56:34 pm
Reply #5

Sanjana

6.கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்!

மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர்.

நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது. நீல நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய் உடலுக்கு நல்ல வளத்தையும், சத்துக்களையும் தருகிறது.

நீர்ச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் – A,C,B1,B2 போன்ற சத்துகள் கத்தரிக்காயில் நிறைந்து காணப்படுகிறது.

மேலும் தக்காளியை போலவே எடை, புரதம் கலோரி அளவு தாது உப்புகள் போன்றவை உள்ளன.

மருத்துவ பயன்கள்

நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல்நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் மற்றும் உடல்பருமன் போன்ற நோய்களை குணமாக்குகிறது.

கண் பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பெருங்குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

குறிப்பு

கத்திரிக்காய் உடலுக்கு சூடு தரும் காய்கறி வகையை சார்ந்தது, எனவே உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது.