Advanced Search

Author Topic: Veg Recipes  (Read 48575 times)

January 31, 2020, 02:41:54 pm
Reply #30

AnJaLi

Re: செட்டிநாடு புலாவ்
« Reply #30 on: January 31, 2020, 02:41:54 pm »

December 22, 2021, 12:15:39 pm
Reply #31

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 14

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: உருளை 65
« Reply #31 on: December 22, 2021, 12:15:39 pm »
potato chips and potato 65 wow

December 27, 2021, 08:31:52 pm
Reply #32

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 14

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: Mushroom Masala
« Reply #32 on: December 27, 2021, 08:31:52 pm »
yummy

March 05, 2022, 04:38:26 pm
Reply #33

RaDha

  • Hero Member

  • *****

  • 583
    Posts
  • Total likes: 14

  • Gender: Female

  • NOT ONLY UR WORDS THE WAY U SPEAK MAY ALSO HURT

    • View Profile
Re: உருளை மசாலா
« Reply #33 on: March 05, 2022, 04:38:26 pm »
yummy

September 11, 2022, 10:34:34 am
Reply #34

Sanjana

Veg Recipes
« Reply #34 on: September 11, 2022, 10:34:34 am »
செ.தே.பொருட்கள் :-
கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
வெந்தயம் – 1 தே. கரண்டி
சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
மிளகு – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி

தாளிப்பதற்கு :-
சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
செத்தல் மிளகாய் – 3
கடுகு – 1/2 தே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டு

செய்முறை :-
* உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.
* சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.
* உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
* அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து
10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.
* புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.
* சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
* தாளிதத்தையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.
* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )

** தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.

** குறிப்பு: தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.

September 12, 2022, 11:33:25 am
Reply #35

Sanjana

Veg Recipes
« Reply #35 on: September 12, 2022, 11:33:25 am »
தேவையான பொருட்கள்

1 சுண்டு மா
1/3 சுண்டு தேங்காய்பூ (-/+)
10 சின்ன வெங்காயம் (-/+)
2 பச்சைமிளகாய் (-/+)
1/3 சுண்டு இளநீர் / நீர் (-/+)
உப்பு
செய்முறை:

வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்திரத்தில் மா, வெங்காயம், தேங்காய்பூ, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

அதில் கொஞ்சம் கொஞ்சமாக இளநீர் / நீர் சேர்த்து குழைக்கவும். மாக்கலவை மிருதுவாக மற்றும் கையில் ஒட்டாதவாறு இருக்க வேண்டும். ரொட்டி மாவை மூடி 30 நிமிடங்கள் வைக்கவும்.

ரொட்டி மாவை விரும்பிய எண்ணிக்கையில் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருட்டிய மாவை கொஞ்சம் மாவில் அல்லது எண்ணையில் உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லிய மற்றும் வட்டமாக உருட்டி எடுக்கவும்.

தோசைக்கல் அல்லது நொன்ஸ்ரிக் சட்டியை சூடாக்கி அதில் ரொட்டியை இரு பக்கமும் பொண்ணிறமாகச் சுட்டொடுக்கவும். சுடச்சுட சம்பலுடன் பரிமாறினால் நல்ல சுவையாக இருக்கும். தேங்காய்ப்பூ ரொட்டி தயார்!

குறிப்பு:
ஒன்றுக்கு ஒன்றுக்கு என்ற விகிதத்தில் ஆட்டாமா மற்றும் கோதுமைமா சேர்த்தும் செய்யலாம்.
« Last Edit: September 12, 2022, 11:35:35 am by Sanjana »

October 11, 2022, 04:44:22 pm
Reply #36

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
தேங்காய் பால் புலாவ் 😋
« Reply #36 on: October 11, 2022, 04:44:22 pm »

தேங்காய் பால் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப், தேங்காய் பால் – இரண்டே கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ரெண்டு டீஸ்பூன், முந்திரி – 10, பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – 3, நறுக்கிய இஞ்சி – அரை ஸ்பூன், கருவேப்பிலை – இரண்டு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, துருவிய தேங்காய் – அரை கப்.

தேங்காய் பால் புலாவ் செய்முறை விளக்கம்: முதலில் பாஸ்மதி அரிசி ஒன்றரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். 300 கிராம் அளவு இருக்கும். அதே கப்பில் இரண்டே கால் கப் அளவிற்கு வருமாறு தேங்காயை திருகி மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை களைந்து சுத்தம் செய்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். 10 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அரைத்து எடுத்த இந்த தேங்காய் பாலையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மூடி விட்டு ரெண்டு விசில் விட்டு எடுத்தால் உதிரி உதிரியான சூப்பரான முறையில் தேங்காய் பாலில் பாஸ்மதி அரிசி நன்கு வெந்து வந்திருக்கும்.

இப்போது தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை திருகி பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு வாய் அகன்ற வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் மற்றும் நெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலை பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் வறுபட்டதும் அதனுடன் காஞ்ச மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். துருவிய இஞ்சி, ரெண்டு கொத்து கருவேப்பிலை, தேவையான அளவிற்கு பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி விடுங்கள். அனைத்தும் நன்கு தாளிக்கப்பட்டதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை தூவி அடுப்பை அணைத்து லேசாக பிரட்டி விடவும்.

பின்னர் நீங்கள் வடித்து வைத்துள்ள உதிரி உதிரியான சாதத்தை இதனுடன் சேர்த்து கலவை சாதம் போல நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதன் மீது பொடி பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி சுட சுட பரிமாறினால் அவ்வளவு சூப்பரான தேங்காய் பால் புலாவ் ரெசிபி தயார். இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க, எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க.






« Last Edit: October 11, 2022, 04:58:50 pm by AslaN »

November 01, 2022, 04:27:36 am
Reply #37

Sanjana

Re: தேங்காய் பால் புலாவ் 😋
« Reply #37 on: November 01, 2022, 04:27:36 am »
MACHIIII....NALA BRIYANI RECEIPE PODU MACHI......

December 18, 2022, 11:48:06 am
Reply #38

Sanjana

Re: Veg Recipes
« Reply #38 on: December 18, 2022, 11:48:06 am »
புடலங்காய் கூட்டு:

வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்தநேரத்திலேயே செய்து விடலாம்


புடலங்காய் கூட்டு தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான ஒரு பொரியல் வகை. தமிழகத்தில் இவை பெரும்பாலான கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். புடலங்காய் கூட்டிற்க்கு என ஒரு கூட்டம் கல்யாண விருந்துகளில் பங்கேற்பார்கள் என்றால் அது மிகை அல்ல. கூட்டுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் காலிஃபிளவர் கூட்டு, சுரக்காய் கூட்டு, கத்திரிக்காய் கூட்டு, பூசணிக்காய் கூட்டு, வெள்ளரிக்காய் கூட்டு, மற்றும் வாழைத்தண்டு கூட்டு மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது புடலங்காய் கூட்டு.

Pudalangai Kootu / Chow Chow Kootu / புடலங்காய் கூட்டு

புடலங்காய் கூட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம். இதை வெறும் புடலங்காய், கடலை பருப்பு, பாசி பருப்பு, மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் சுலபமாக செய்து விடலாம். மேலும் புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் அதிகமாக இருப்பதனால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது.

இப்பொழுது கீழே புடலங்காய் கூட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Pudalangai Kootu


வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்தநேரத்திலேயே செய்து விடலாம்
Prep Time
15 mins
Cook Time
15 mins
Total Time
30 mins
Course: Side DishCuisine: South Indian, Tamil, Tamil NaduKeyword: chow chow, chow chow kootu, pudalangai kootu Servings: 2 people

புடலங்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்
1½ கப் புடலங்காய்
¼ கப் கடலை பருப்பு
¼ கப் துருவிய தேங்காய்
1 மேஜைக்கரண்டி அரிசி மாவு
2 மேஜைக்கரண்டி பாசி பருப்பு
2 சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
1 மேஜைக்கரண்டி சீரகம்
½ மேஜைக்கரண்டி சீரக தூள்
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
¼ மேஜைக்கரண்டி கடுகு
1 சிட்டிகை பெருங்காய தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தேஉப்பு
சிறிதளவு கருவேப்பிலை

புடலங்காய் கூட்டு செய்முறை:

1.முதலில் வெங்காயம், புடலங்காய், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி, கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
2.45 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து போடவும்.
3.பின்பு அதில் கடலை பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக விடவும். (புடலங்காயை கடைசியாகவே போடவும் அப்பொழுது தான் அது குழைந்து விடாமல் இருக்கும்.)
4. 2 விசில் வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தை போடவும்.
5.பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொற கொறப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
6. 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
7. பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் புடலங்காயை போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.
8. 6 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பில் வைத்திருக்கவும்.
9. இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
10. எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
11. உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் புடலங்காய் கூட்டில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுட சுட பரிமாறவும்.
12. இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் புடலங்காய் கூட்டு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.