General Category > Jokes - நகைச்சுவை

தினம் ஒரு நகைச்சுவை துணுக்கு

(1/9) > >>

AslaN:

அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!



AslaN:
அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.

விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?


AslaN:
அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!

விமலா : எதை வைத்து?

அமலா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

AslaN:

அமலா : அவர் கோயிலுக்கு போகும் போது பாய்ந்து பாய்ந்துதான் போவார்..

விமலா : ஏன்?

அமலா : அவர்தான் பக்திமான்-ஆச்சே..

AslaN:


விமலா : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?

அமலா : இல்லடா..

விமலா : பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version