Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-068  (Read 3038 times)

May 18, 2026, 09:43:44 am
Read 3038 times

RiJiA

கவிதையும் கானமும்-068
« on: May 18, 2026, 09:43:44 am »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-068


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: May 18, 2026, 07:32:09 pm by RiJiA »

May 18, 2026, 11:55:20 pm
Reply #1
Re: கவிதையும் கானமும்-068
« Reply #1 on: May 18, 2026, 11:55:20 pm »
பேருந்தின் ஜன்னல் ஓரத்தில்
தலை சாய்த்து தூங்கினான் அவன்.

சாலையின் சலசலப்பு
இனிய தாலாட்டாக மாறியது.

காதில் ஒலித்த பாடல்
கனவின் கதவைத் திறந்தது.

இசையின் மெல்லிசையில்
தேவதை போல வந்தாள் அவள்.

முதல் பார்வையிலே
அவன் இதயம் அவளை நேசித்தது.

திடீரென சில நிழல்கள்
அவளை கடத்திச் சென்றன.

பயந்த அவள் கண்கள்
“நீ வந்தால் போதும்” என்றன.

வெள்ளை குதிரை ஒன்று
வானத்தின் தூதனாய் நின்றது.

ஒரு நொடியும் தாமதிக்காமல்
அவன் அதில் ஏறிப் புறப்பட்டான்.

காற்றைவிட வேகமாக
அவளைத் தேடிச் சென்றான்.

இருள் சூழ்ந்த கோட்டையில்
அவள் சிறைப்பட்டிருந்தாள்.

தைரியத்தை ஆயுதமாக்கி
எதிரிகளை எல்லாம் வென்றான்.

கண்ணீரில் நின்ற அவளை
கரம் பிடித்து எழுப்பினான்.

அந்த தொடுதலில்
அவள் இதயம் பூவாய் மலர்ந்தது.

ஒரே குதிரையில்
இருவரும் புறப்பட்டனர்.

அவள் அவன் தோளில் சாய்ந்தாள்.
அவன் அருகில் அவள் உலகம் அமைதியானது.

அவனின் இதயத் துடிப்பில்
அவள் முதல் காதலை உணர்ந்தாள்.

“இவன் தான் என் வாழ்வின்
முதல் காதல்” என்று நினைத்தாள்.

அந்த நேரம்
“என் ஊர் வந்துவிட்டது”
என்ற உணர்வு அவனை எழுப்பியது.

ஜன்னல் வழியே பார்த்தான்.
கனவில் கண்ட அதே முகம்
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தது.

அவளும் அவனைப் பார்த்தாள்.
அந்த ஒரு பார்வையிலே
அவள் இதயம் மீண்டும் துடித்தது.

கனவில் தொடங்கிய காதல்,
நிஜத்தில் என்றும் நினைவாய் நின்றது. 💖

By
Peacemaker

May 19, 2026, 12:21:25 am
Reply #2

Limat

Re: கவிதையும் கானமும்-068
« Reply #2 on: May 19, 2026, 12:21:25 am »



அந்தி மழை பெய்யும் வேளையில்
நீ பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து மழியினை ரசிக்க
நானோ உன் அழகில் மயங்கி
நாணம் எனும் குடை தாங்கி உன்னை ரசிக்கையில் என்னுள்ளே பிறந்த சில வரிகள் என்றும் என் அம்முவிற்காக..!

பூக்கள் பூப்பது  வாழ்வதற்கு அன்றோ..!
வானம் இருள்வது நிலவுக்கன்றோ..!
சூரியன் உதிப்பது பூமிக்கன்றோ..!
மேகம் கருப்பது மழைக்கன்றோ..!

சகியே!
நான் இருப்பதுஉனக்கன்றோ..!
நீ இருப்பது என் மனதில் அன்றோ..!

சொல்லடி பெண்ணே!
உன் கருவிழி பார்வையில்
என்னை பார்ப்பது
மழலைப் பார்வையா.?
இல்லை
நான் தான் மழலையா.?

மலரே!
நீ தலை குனிவது
உன் இதயத்தை பறிகொடுத்த வெட்கத்திலா.?
இல்லை
என் இதயத்தை சிறை எடுத்த களிப்பிலா.?

என்னை பார்த்து
நீ வெட்கத்தில் புன்னகைக்க
என் ஜீவனே சிவக்குதடி.!
மறுமுறை நீ வீசிய
மின்னல் பார்வையில்,
என் இதயம் நொறுங்குதடி.!
உறைந்தேன் ! நின்ற இடத்திலே!

ஆகா பெண்ணே!
நீ தலைகுனிந்தது
நம் மனப்போரில் எனை வீழ்த்தவா.?
என்றெனில்
பேதையே!
உன்னை முதல்முறை பார்த்த கணமே
நான் நிராயுதபாணி ஆனேன்.!
இதை அறிந்தும்
ஏன் மனப்போர் விடுக்கிறாய்..?

உயிரே!
உன்னை பார்த்த அன்றே
நான் சரணடைந்தேன்
உன் கால் கொலுசில்.!
கோழையாய் அல்ல..!!
உன் மனம் கவர்ந்த வேந்தனாய்..!!!
இப்படிக்கு
என் மனதை இழந்து
உன் மனதை ஆளும் உன்னுடைய மாமன்..!

May 19, 2026, 01:11:15 am
Reply #3

AzhaGi

Re: கவிதையும் கானமும்-068
« Reply #3 on: May 19, 2026, 01:11:15 am »
மழையும் நீயும்!

ஜன்னல் ஓரத்து இருக்கையும்,
சாரல் வீசும் மாலையும்,
எத்தனையோ முறை கடந்திருக்கிறேன்.
ஆனால் இன்றுதான் அது கவிதையாகிறது,
உன் முகம் பார்த்த பின்பு!!😊

மழைத்துளிகள் கண்ணாடி ஜன்னலில்
கோலமிட்டு நழுவுகிறது,
என் மனதோ,
உன் நினைவுகளில் நிரந்தரமாய் விழுகிறது!
குடை பிடித்து நீ நின்றாலும்,
உன் புன்னகைத் தூறலில்,
நனையாமல் தப்பிக்கிறது
என் இதயம்!!❤️

பயணங்கள் முடிந்துவிடும் என்ற
பயத்தை தந்துவிடுகிறது,
ஜன்னலுக்கு வெளியே நீளும்
உன் ஒற்றைப் பார்வை!
பஸ் நகர மறுத்தால் நன்றாக இருக்கும்,
இந்த நொடி,
காலம் கடக்காமல் நின்றால் இன்னும் நன்றாக இருக்கும்!!🕘

வார்த்தைகள் தேவையில்லை நமக்கு,
இந்த மழைக்கால மாலையில்.
கண்ணாடி ஜன்னல் பிரித்து வைத்தாலும்,
நம்மைக் கோர்த்துக்கொள்கிறது நம் விழிகள்!
நீ வெளியே நனைகிறாய் மழையில்,
நான் உள்ளே நனைகிறேன்,
உன் அன்பெனும் சாரலில்!!👩‍❤️‍👨

பஸ்ஸின் சக்கரம் சுழல்கிறது,
என் இதயத் துடிப்போ நிற்குமாறு கெஞ்சுகிறது.
சாலையோர மரங்கள் பின்னோக்கி ஓட,
என் மனமோ உன்னை நோக்கி மட்டுமே முன்னோக்கிப் பாய்கிறது.
மழை நின்றாலும் பரவாயில்லை,
உன் குடைக்குள் இருக்கும்
அந்தப் புன்னகை மட்டும் ஓயாமல் இருக்கட்டும்!!😁

முன்பெல்லாம் மழை வந்தால்,
நனைந்து விளையாடத் தோன்றும்.
இன்றோ ஜன்னல் ஓரம் அமர்ந்து,
உன்னை ரசிக்கும் கவிஞனாகத் தோன்றுகிறது.
வானம் பொழிவது வெறும் தண்ணீர் தான்,
ஆனால் என் மேல் பொழிவதோ,
நீ தந்த காதல் வரம்.❤️❤️❤️


Hi Rijia sis💐 , inthe kavithele any tamil mistakes iruntha,pls correction panitu padinge sis. Nekku therincha tamil and google translater help le naa eluthine.Thank you sis.😘
I dedicte this poem to all my HANDSOMES (ALL BOYS) here in GTC. 😊

Unge AzhaGi
« Last Edit: May 19, 2026, 02:24:01 pm by AzhaGi »

May 19, 2026, 01:40:48 am
Reply #4

Mansi

Re: கவிதையும் கானமும்-068
« Reply #4 on: May 19, 2026, 01:40:48 am »
Rain tapping softly on the bus window,
your music filling every quiet corner of my heart…
and somehow every streetlight tonight
looks like it’s leading me to you.

I sit by the window pretending to watch the city,
but my thoughts keep travelling toward your smile.
The headphones play our kind of love
slow, warm, impossible to forget.

Outside, the rain hides the world in silver,
inside, your voice feels closer than the seat beside me.
Every lyric sounds like a secret
you left for me in the middle of the night.

Your thoughts stay with me like the scent of rain—
soft, deep, impossible to escape.
The way you speak lives inside my mind,
turning ordinary moments into something beautiful.
Even silence feels different now,
because somehow it sounds like you.

I keep imagining your eyes finding mine
through this rain-covered glass,
the way your smile would quietly steal
all the loneliness from this journey.
Maybe you don’t know it,
but your presence has become my favorite feeling.

If you were here now,
I would lean on your shoulder,
listen to your heartbeat between the songs,
and forget where this bus was even going.
Because with you beside me,
every road would feel like home.

The city moves…
the rain falls…
the song repeats…
and still, I keep falling for you
a little more with every mile.

Not just for your smile,
not just for your voice,
but for the way your thoughts
stay in my soul long after the music ends.
💫❤️🌏
By MaNsI
Tamil version soon

Mazhai methuvaga perundu jannalil tattugiradhu, 
Un isai en idhayathin ovvoru amaidhiyaana mooleyai nirappugiradhu… 
Indru iravu ovvoru theru vilakkum 
Ennai unnidam azhaithu selgiradhu pola. 

Naan jannal-aruge amarnthu nagarathai paarkum pola nadikkiren, 
Aanaal en ennangal un sirippai nokki payanikkindrana. 
Headphone-il olikkum kaadhal, 
Methuvaga, soodaga, marakka mudiyadhadhu. 

Veliyil mazhai ulagai vellini nirathil maraikkiradhu, 
Ullil, un kural arugil irukkum irukkaiyai vida neraaga thonrugiradhu. 
Ovvoru paadal variyum oru ragasiyam pola, 
Nalliravil nee enakkaaga vittup pona maadhiri. 

Un ninaivugal mazhaiyin manam pola, 
Menmaiyaga, aazhamaga, thappikka mudiyadhadhu. 
Nee pesum vidham en manadhil vaazhgiradhu, 
Sadharana tharunangalai azhagaaga maatrugiradhu. 
Ippodhu amaidhiyum verupattaaga thonrugiradhu, 
Ennavendraal adhu unnai pola osai seygiradhu. 

Indha mazhai moodiya kannadi vazhiyaga 
Un kangal ennai theduvadhai naan karpanai seygiren, 
Un sirippu amaidhiyaga 
Indha payanathin thanimaiyai thirudum. 
Nee ariyama irukkalaam, 
Aanaal un iruppu en migap piditha unarvaagi vittadhu. 

Nee ippodhu inge irundhaal, 
Un tholil saayndhu, 
Paadalukku idaiyil un idhayath thudippai ketpen, 
Indha perundu engai pogiradhu endru marandhuviduven. 
Ennavendraal nee arugil irundhaal, 
Ovvoru paadhaiyum veedu pola thonrum. 

Nagarum nagarugiradhu… 
Mazhai pozhigiradhu… 
Paadal meendum meendum olikiradhu… 
Aanaal naan thodarnthu unnai nesikkiren, 
Ovvoru mile-ilum konjam adhigamaaga. 

Un sirippukkaga mattum alla, 
Un kuralukkaga mattum alla, 
Aanaal un ennangal 
Isai mudindhapinbum en aathmavil nilaithiruppadharkaaga.
💫❤️🌏
By MaNsI

மழை மெதுவாக பேருந்து ஜன்னலில் தட்டுகிறது, 
உன் இசை என் இதயத்தின் ஒவ்வொரு அமைதியான மூலையையும் நிரப்புகிறது… 
இன்றிரவு ஒவ்வொரு தெருவிளக்கும் 
என்னை உன்னிடம் அழைத்துச் செல்கிறது போல. 

நான் ஜன்னலருகே அமர்ந்து நகரத்தைப் பார்க்கும் போல நடிக்கிறேன், 
ஆனால் என் எண்ணங்கள் உன் சிரிப்பை நோக்கி பயணிக்கின்றன. 
ஹெட்போனில் ஒலிக்கும் காதல், 
மெதுவாக, சூடாக, மறக்க முடியாதது. 

வெளியில் மழை உலகை வெள்ளி நிறத்தில் மறைக்கிறது, 
உள்ளே, உன் குரல் அருகிலிருக்கும் இருக்கையைவிட நெருக்கமாக உணரப்படுகிறது. 
ஒவ்வொரு பாடல் வரியும் ஒரு ரகசியம் போல, 
நள்ளிரவில் நீ எனக்காக விட்டுச் சென்றது போல. 

உன் நினைவுகள் மழையின் மணம் போல, 
மென்மையாக, ஆழமாக, தப்பிக்க முடியாதது. 
நீ பேசும் விதம் என் மனதில் வாழ்கிறது, 
சாதாரண தருணங்களை அழகாக மாற்றுகிறது. 
இப்போது அமைதியும் வேறுபட்டதாக உணரப்படுகிறது, 
ஏனெனில் அது உன்னைப் போல ஒலிக்கிறது. 

இந்த மழை மூடிய கண்ணாடி வழியாக 
உன் கண்கள் என்னைத் தேடுவதை நான் கற்பனை செய்கிறேன், 
உன் சிரிப்பு அமைதியாக 
இந்தப் பயணத்தின் தனிமையை திருடும். 
நீ அறியாமல் இருக்கலாம், 
ஆனால் உன் இருப்பு என் மிகப் பிடித்த உணர்வாகி விட்டது. 

நீ இப்போது இங்கே இருந்தால், 
உன் தோளில் சாய்ந்து, 
பாடல்களுக்கு இடையில் உன் இதயத் துடிப்பைக் கேட்டு, 
இந்த பேருந்து எங்கு செல்கிறது என்பதை மறந்து விடுவேன். 
ஏனெனில் நீ அருகில் இருந்தால், 
ஒவ்வொரு பாதையும் வீட்டைப் போல உணரப்படும். 

நகரம் நகர்கிறது… 
மழை பொழிகிறது… 
பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது… 
ஆனால் நான் தொடர்ந்து உன்னை நேசிக்கிறேன், 
ஒவ்வொரு மைலிலும் கொஞ்சம் அதிகமாக. 

உன் சிரிப்புக்காக மட்டும் அல்ல, 
உன் குரலுக்காக மட்டும் அல்ல, 
ஆனால் உன் எண்ணங்கள் 
இசை முடிந்த பின்பும் என் ஆன்மாவில் நிலைத்திருப்பதற்காக. 
💫❤️🌏
By MaNsI

« Last Edit: May 20, 2026, 02:54:24 pm by Mansi »

May 19, 2026, 09:57:21 am
Reply #5

Niharv

Re: கவிதையும் கானமும்-068
« Reply #5 on: May 19, 2026, 09:57:21 am »
அந்நாளின் நினைவுகளை நான் மறக்க முயன்றாலும்
மழை வந்துவிட்டால்
உன் முகம் மீண்டும் என் மனதில் பூத்துவிடுகிறது…

இன்று வரை
பேருந்தின் ஜன்னல் ஓரம் பார்த்தாலே
என் இதயம் தானாகவே
அந்த மழைநாளுக்கு திரும்பிச் செல்கிறது…

அன்று நீ அருகில் அமர்ந்திருந்த அந்த நொடியில்
நான் உணர்ந்த அமைதி
என் வாழ்க்கையில் வேறு எங்கும் கிடைக்கவில்லை…

மழை வெளியே பொழிந்துகொண்டிருந்தது,
ஆனால் என் உள்ளத்தில்
காதல் மெதுவாக மலர்ந்துகொண்டிருந்தது…

நீ சிரித்த ஒவ்வொரு முறையும்
என் இதயத்தின் இருண்ட மூலைகளில் கூட
ஒளி பரவியது…

உன் கண்களில் இருந்த அந்த மென்மையான பார்வை
என்னை வார்த்தைகள் இல்லாமல் காதலிக்க வைத்தது…
அன்று முதல்
என் கனவுகளுக்கெல்லாம்
உன் முகமே முகவரியாக மாறிவிட்டது…

பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்தையும் கடந்து சென்றபோது
நேரம் நகர்ந்தது…
ஆனால் என் மனம் மட்டும்
உன் அருகிலிருந்த அந்த நொடியிலேயே நின்றுவிட்டது…

உன் கூந்தலில் நனைந்த மழைத்துளிகள்
இப்போது கூட என் நினைவுகளில்
முத்தாக மின்னிக்கொண்டிருக்கிறது…

நீ கண்ணாடி வழியே வெளியே பார்த்தபோது
நான் அமைதியாக
உன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்…
ஏனெனில்,
அந்த ஒரு முகத்தில் தான்
என் உலகம் முழுவதும் இருந்தது…

நீ பேசாமல் இருந்த அமைதியில்கூட
என் இதயத்துக்கு புரியும்
ஒரு இனிய காதல் இருந்தது…

அந்த இரவு முடிந்த பிறகும்
உன்னோடு தொடங்கிய என் நினைவுகள் மட்டும்
இன்னும் முடிவடையவில்லை…

இப்போது வரும் ஒவ்வொரு மழை இரவிலும்
ஜன்னல் அருகே நின்று
வானத்தை பார்த்துக்கொண்டே
ஒரே ஆசையை மட்டும் நினைக்கிறேன்…

மீண்டும் ஒருநாள்
அதே மழை…
அதே பேருந்து…
அதே ஜன்னல் ஓரம்…
அதே நீ…
என் அருகில் வந்து அமர வேண்டும் என்று… ❤️
« Last Edit: May 19, 2026, 11:03:10 am by Niharv »

May 19, 2026, 11:48:41 am
Reply #6

Wings

Re: கவிதையும் கானமும்-068
« Reply #6 on: May 19, 2026, 11:48:41 am »
CLOSE YET SO FAR



Every time the rain taps gently on my window,

my heart softly whispers your name in the quiet.

Here I am, sitting by the glass...

pretending to watch the rain outside,

but the truth is, I’m only looking at you.

There you are—standing under a little umbrella,

wearing the prettiest, most effortless smile.

To you, it’s just a simple smile,

but to me, it’s the most beautiful part of this entire rainy night.

When you smile, the whole world slows down.

The only sound left is the falling rain,

and the sudden, loud racing of my heart.

Even if your eyes never happen to look my way,

my eyes will always find their way to you.

You offer a sweet little "hello" and walk on by,

but those tiny few seconds stay with me,

shining like a bright light in my heart all day long.

Somehow, I’ve fallen in love with your smile.

I’ve grown used to your quiet way of being.

And I’ve even gotten used to how my heart skips a beat the moment you are near.

You live your life, moving forward so easily,

while I have quietly turned you into the peaceful little world inside my mind.

My mornings always start with a thought of you,

and my nights always end with a wish for your happiness.

Strangely, just that is enough to keep me happy.

All my unspoken words are piling up inside,

gathering quietly like sweet little raindrops.

You are standing right here, so breathtakingly close,

yet you are a distance I can never touch.

And that is the beautiful, aching hurt of this love.

But this quiet heart still hides one secret wish...

One day, I want you to look at me and smile.

Not the polite smile you give to everyone else,

but something softer, warmer, and a little closer—

as if your eyes are telling me something that words never could.

That single second would be completely enough

to let me feel that I live somewhere, quietly, inside your heart.

Until that day comes, I will stay exactly right here—

by the edge of the window,

listening to the rain, stealing sweet little glances,

and living happily in a love that remains unsaid.


-----------------------------------------------------------
SIRAGIN SIRU THULIGAL


மழைத்துளி !!

ஜன்னலை
மெல்ல தட்டும் வேளை,

என் நெஞ்சம் மௌனமாய்
உன் பெயர் பாடுதே!!

ஜன்னல் ஓரத்தில் நான்,
மழையை ரசிப்பது போல் …
ஆனால் என் விழியும் மனமும் தேடும் முகம் உனது!!!

சின்ன குடையின் கீழே நீ,
இயல்பான அந்த சிரிப்போடு நிற்கிறாய்…
உனக்கு அது ஒரு சாதாரண சிரிப்பு தான்,
ஆனால் எனக்கு—
இந்த இரவின் அழகான கவிதை.

நீ சிரிக்கும் நொடியில்
உலகம் கொஞ்சம் மெதுவாகிறது…
மழையின் ஓசையும்,
இதய துடிப்பும் மட்டுமே கேட்கிறது!!!

உன் பார்வை என் பக்கம் வராமல் போனாலும்,
என் கண்கள் எப்போதுமே
உன்னிடம் தான் வந்து சேரும்.

நீ சொல்லும் ஒரு "hello"
சில நொடிகள் தான் நீடிக்கும்…
ஆனால் அதன் ஒளி
நாள் முழுவதும்
என் நெஞ்சில் வட்டமிடும்!!!

எப்படியோ நான்
உன் சிரிப்பை நேசிக்க தொடங்கி விட்டேன்…
உன் அமைதியை விரும்ப தொடங்கி விட்டேன்…
நீ அருகில் வரும் போது
இதயம் தவிப்பதையும் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

நீ உன் வழியில் முன் செல்கிறாய்…
ஆனால் நான் உன்னை
என் மனதின் சிறு உலகமாய்  உருவகித்து கொண்டேன்.

என் காலை உன் நினவுகளோடே விடிந்து,
இரவு உன் சந்தோஷத்துக்கான
அமைதியான வேண்டுதலோட முடிகிறது.

சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
மழைத்துளி போல
உள்ளே சேர்ந்துகொண்டே இருக்கிறது…

நீ அருகில் இருந்தாலும்,
நான் தொட முடியாத
தூரமாய் இருக்கிறாய்…

அதுதான் இந்த காதலின்
இனிமையான வலி.

ஆனால் இந்த நெஞ்சம்
இன்னும் ஒரு ஆசையை வெளிப்படுத்த தவறியது…

ஒரு நாள் நீ
என்னை பார்த்து புன்னகை சிந்த ஆசை …

எல்லாருக்கும் கொடுக்குற புன்னகை போல் இல்லாமல்,
கொஞ்சம் மென்மையாக…
கொஞ்சம் நெருக்கமாக…

உன் கண்கள் சொல்லும் பாடம் போதும்…

அந்த ஒரு நொடி போதும்—
நான் உன் இதயத்தின்
ஒரு சிறு மூலையில் வாழ்கிறேன்
என்று உணர…

அந்த நாள் வரும்வரை,
நான் இங்க தான் இருப்பேன்…

ஜன்னல் ஓரத்தில்,
மழை ஓசை இசை மீட்ட,
உன் பார்வைகளை களவாடி,
சொல்லப்படாத காதலோடு
அமைதியாக வாழ்ந்துகொண்டு…

« Last Edit: May 19, 2026, 04:41:24 pm by Wings »

May 19, 2026, 12:03:25 pm
Reply #7

Shahidm

Re: கவிதையும் கானமும்-068
« Reply #7 on: May 19, 2026, 12:03:25 pm »
மழையில் சந்திப்பு : மணமகள் நினைவு"

மழைத் துளிகள் நனைந்த பாதையில், 
குடை பிடித்துக் காத்திருந்தேன். 
உன் வருகை என் உயிரின் விழா, 
உன் சிரிப்பு என் இதயத்தின் இசை. 

  ரயில் ஜன்னலின் வழி நீ சிரித்தாய், 
கதவின் வழியே நீ இறங்கினாய். 
அந்த சிரிப்பு  என் வாழ்வின் ஒளி, 
உன் முகம் நிலவின் ஒளி போல. 
உன் கண்கள் ஆழமான குளம், 
அதில் நான் மூழ்கி, 
அன்பின் அலைகளில் திளைத்தேன். 

அந்த சந்திப்பு ஒரு நாள் முழுதும், 
உன் கையை பிடித்து நகரம் சுற்றினேன். 
சந்தைச் சாலைகளில் சிரித்தபடி நடந்தோம், 
சிறிய கடைகளில் “வணிகம்” செய்தோம். 
உன் விருப்பம் பார்த்து பொருட்கள் வாங்கினேன், 
அதில் என் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது....
உன் சிரிப்பு என் உயிரின் இனிமை, 
உன் முகம் என் வாழ்வின் ஓவியம். 
உன் கண்கள் என் கனவின் காவியம். 

அந்த நாள் மழை நின்ற பின் வானவில் போல, 
என் வாழ்வின் அழகிய நிறம். 
உன் அருகில் நான் மீண்டும் பிறந்தேன், 
உன் பாசத்தில் என் உயிர் நனைந்தது. 

ஆனால் காலம் கடமையின் மணி அடித்தது, 
என் பாதை மீண்டும் என்னை அழைத்தது. 
உன் கண்களில் கண்ணீர் மின்னினாலும், 
அதில் நான் கண்டேன் அன்பின் காவியம். 
உன் முகம்  என் நினைவின் ஓவியம், 
உன் சிரிப்பு என் உயிரின் காவலன். 

கடைசியாக உன்னை கண்டதும்
ஒரு ஜன்னல் வழியே. 
மணமகள் உடையில் நீ பிரகாசித்தாய், 
வைரம் போல மின்னினாய். 
உன் முகம் சிவந்தும்
உன் சிரிப்பு மலர்ந்து இருக்க கண்டு என் காதலும் மழையில் உப்பைப் போல கரைந்தது..

ஆனால் இன்று என் இதயம் சுமக்கும் உண்மை
நீ இனி என் காதலி அல்ல, 
மற்றொருவரின் மனைவி. 
அந்த சிரிப்பு, அந்த முகம், அந்த கண்கள்
என் நினைவில் என்றும் வாழ்ந்தாலும், 
என் கைகளில் இல்லை. 
மழை நின்ற பின் வானவில் போல, 
உன் பாசம் தொலைந்தது, 
என் உயிரில் ஏக்கம் மட்டும் நிலைத்தது.

By
Shahi
« Last Edit: May 19, 2026, 12:46:51 pm by Shahidm »