Advanced Search

Recent Posts

Pages: 1 ... 7 8 [9] 10
81



அந்தி மழை பெய்யும் வேளையில்
நீ பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து மழியினை ரசிக்க
நானோ உன் அழகில் மயங்கி
நாணம் எனும் குடை தாங்கி உன்னை ரசிக்கையில் என்னுள்ளே பிறந்த சில வரிகள் என்றும் என் அம்முவிற்காக..!

பூக்கள் பூப்பது  வாழ்வதற்கு அன்றோ..!
வானம் இருள்வது நிலவுக்கன்றோ..!
சூரியன் உதிப்பது பூமிக்கன்றோ..!
மேகம் கருப்பது மழைக்கன்றோ..!

சகியே!
நான் இருப்பதுஉனக்கன்றோ..!
நீ இருப்பது என் மனதில் அன்றோ..!

சொல்லடி பெண்ணே!
உன் கருவிழி பார்வையில்
என்னை பார்ப்பது
மழலைப் பார்வையா.?
இல்லை
நான் தான் மழலையா.?

மலரே!
நீ தலை குனிவது
உன் இதயத்தை பறிகொடுத்த வெட்கத்திலா.?
இல்லை
என் இதயத்தை சிறை எடுத்த களிப்பிலா.?

என்னை பார்த்து
நீ வெட்கத்தில் புன்னகைக்க
என் ஜீவனே சிவக்குதடி.!
மறுமுறை நீ வீசிய
மின்னல் பார்வையில்,
என் இதயம் நொறுங்குதடி.!
உறைந்தேன் ! நின்ற இடத்திலே!

ஆகா பெண்ணே!
நீ தலைகுனிந்தது
நம் மனப்போரில் எனை வீழ்த்தவா.?
என்றெனில்
பேதையே!
உன்னை முதல்முறை பார்த்த கணமே
நான் நிராயுதபாணி ஆனேன்.!
இதை அறிந்தும்
ஏன் மனப்போர் விடுக்கிறாய்..?

உயிரே!
உன்னை பார்த்த அன்றே
நான் சரணடைந்தேன்
உன் கால் கொலுசில்.!
கோழையாய் அல்ல..!!
உன் மனம் கவர்ந்த வேந்தனாய்..!!!
இப்படிக்கு
என் மனதை இழந்து
உன் மனதை ஆளும் உன்னுடைய மாமன்..!
82
பேருந்தின் ஜன்னல் ஓரத்தில்
தலை சாய்த்து தூங்கினான் அவன்.

சாலையின் சலசலப்பு
இனிய தாலாட்டாக மாறியது.

காதில் ஒலித்த பாடல்
கனவின் கதவைத் திறந்தது.

இசையின் மெல்லிசையில்
தேவதை போல வந்தாள் அவள்.

முதல் பார்வையிலே
அவன் இதயம் அவளை நேசித்தது.

திடீரென சில நிழல்கள்
அவளை கடத்திச் சென்றன.

பயந்த அவள் கண்கள்
“நீ வந்தால் போதும்” என்றன.

வெள்ளை குதிரை ஒன்று
வானத்தின் தூதனாய் நின்றது.

ஒரு நொடியும் தாமதிக்காமல்
அவன் அதில் ஏறிப் புறப்பட்டான்.

காற்றைவிட வேகமாக
அவளைத் தேடிச் சென்றான்.

இருள் சூழ்ந்த கோட்டையில்
அவள் சிறைப்பட்டிருந்தாள்.

தைரியத்தை ஆயுதமாக்கி
எதிரிகளை எல்லாம் வென்றான்.

கண்ணீரில் நின்ற அவளை
கரம் பிடித்து எழுப்பினான்.

அந்த தொடுதலில்
அவள் இதயம் பூவாய் மலர்ந்தது.

ஒரே குதிரையில்
இருவரும் புறப்பட்டனர்.

அவள் அவன் தோளில் சாய்ந்தாள்.
அவன் அருகில் அவள் உலகம் அமைதியானது.

அவனின் இதயத் துடிப்பில்
அவள் முதல் காதலை உணர்ந்தாள்.

“இவன் தான் என் வாழ்வின்
முதல் காதல்” என்று நினைத்தாள்.

அந்த நேரம்
“என் ஊர் வந்துவிட்டது”
என்ற உணர்வு அவனை எழுப்பியது.

ஜன்னல் வழியே பார்த்தான்.
கனவில் கண்ட அதே முகம்
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தது.

அவளும் அவனைப் பார்த்தாள்.
அந்த ஒரு பார்வையிலே
அவள் இதயம் மீண்டும் துடித்தது.

கனவில் தொடங்கிய காதல்,
நிஜத்தில் என்றும் நினைவாய் நின்றது. 💖

By
Peacemaker
83
Birthday Wishes / Re: Happy Birthday ISHA
« Last post by Coffee on May 18, 2026, 10:53:03 pm »
Happy Birthday Isha thozhi. Happy happy Birthday

84
HI  Sangeetha Megam Team,

thank you for playing my song last time.
Really appreciating your work.

This time my song ( this is actually fav song my Amma): நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்

Movie: Marupadiyum
Singer: S. P. Balasubrahmanyam
Music Director: Ilaiyaraaja
Lyricist: Vaali

Her fav lines:

மனிதர்கள் சில
நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர்
குணங்களும் தடம்
மாறலாம் இலக்கணம்
சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம்
தவறாகலாம்

விரல்களைத்
தாண்டி வளர்ந்ததைக்
கண்டு நகங்களை நாமும்
நறுக்குவதுண்டு இதிலென்ன
பாவம் எதற்கிந்த சோகம்
கிளியே...
( If possible sing those lines RJ)

This song is very emotional song for me. Eppo naa down a irukeno, she(my Amma) sung these lines to motivate me. It helped me a lot to overcome some problems in the past. Nowadays i hear this song every time when am little down. After that i ll be mostly ok. Hearing this lines is, like my Amma is motivating me to be strong and to move on.

Hope u all like this song too. Enjoy and take those lines in your mind.
Dedicating this song to all my frds here.

Unge AzhaGi


85
Movie name :   Udhaya
Song name   :  Udhaya Udhaya

Uyirae uyirae Ularugiren
Ulariyum kavithaigal Ezhuthugiren

White Heart🤍
86
Hi sm team

               epadi irukenga all nan nalam chat vara mudiyama pochuu konjam work ini nan vara try panuren
 Coming Satur day Enoda wedding anniversary so enoda mama ka indha song dedicate panuren

           Flim name   :  Vetri vel
           Song           : Unna pola oruthara parthathelaa
           Music          :  Imman
           Enaku piditha varigal  உன்ன எதிர்பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோ…
                                               தன்னை அறியாமலே உன்னை அது சோ்ந்ததோ…
                                                இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே…
                                                 முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே…
                                                  ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்…
                                             உன் உறவென்பது யுக யுகங்களை கடந்ததுதானே
en mama enaku kedacha varam than nan solanumm he is a great lover husband and father of my childrens   i love you mams

and rj & dj overa kalikathenga  coffe boy boss nan varlanu sanathosama irupenga athekelam vaipu ila raja bonus elam eduthu vaingaa i will be back

byee thank you alla
           
87
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-068


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
88
Birthday Wishes / Re: Happy Birthday ISHA
« Last post by Appu kuTTy on May 18, 2026, 09:26:16 am »
🎂🎉HAPPY BIRTHDAY ISHA DUDE🎉🎂
89
Birthday Wishes / Re: Happy Birthday ISHA
« Last post by AzhaGi on May 18, 2026, 04:37:10 am »
Happy Birthday Isha

90
Birthday Wishes / Re: Happy Birthday ISHA
« Last post by MDU on May 18, 2026, 03:41:53 am »
Pages: 1 ... 7 8 [9] 10