Advanced Search

Recent Posts

Pages: 1 ... 7 8 [9] 10
81
இந்தக் கவிதையை என் அம்மாவுக்கும், என் அம்மம்மாவுக்கும் (உங்களை மிகவும் நினைக்கிறேன் ❤️), மேலும் இந்த உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
உங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் தான் எங்கள் பலம், எங்கள் அன்பு, எங்கள் வாழ்க்கை. ❤️🌹


❤️ அம்மா ❤️
உயிரின் முதல் துடிப்பு நீ,
உலகின் முதல் அன்பும் நீ.
என் சிரிப்பின் காரணம் நீ,
என் கண்ணீரின் ஆறுதலும் நீ.
விழுந்த போதெல்லாம் கை கொடுத்தாய்,
தோற்ற போதெல்லாம் தைரியம் தந்தாய்.
என் கனவுகளுக்காக உன் கனவுகளை மறந்தாய்,
என் மகிழ்ச்சிக்காக உன் வாழ்க்கையை அர்ப்பணித்தாய்.
உன் அன்புக்கு எல்லை இல்லை,
உன் தியாகத்திற்கு ஈடு இல்லை.
இந்த உலகத்தை முழுவதும் தேடினாலும்,
உன்னைப் போல ஒரு அன்பு கிடைக்காது.
அம்மா...
நீ என் வாழ்க்கையின் வரம்,
என் இதயத்தின் என்றும் அணையாத தீபம்.
உன்னை என்றும் நேசிப்பேன், மதிப்பேன்,
என் மூச்சு இருக்கும் வரை.
என்றும் என் இதயத்தின் ராணி நீதான்.
"அம்மா" என்ற ஒரு வார்த்தையில்,
ஆயிரம் காதல்களும் அடங்கியிருக்கும்.
அவள் சிரிப்பில் என் சந்தோஷம்,
அவள் கண்ணீரில் என் வேதனை.
பசியில் சாப்பாடு கொடுப்பவள்,
பயத்தில் தைரியம் தருபவள்.
தோல்வியில் நம்பிக்கை விதைப்பவள்,
வெற்றியில் சிரித்து மகிழ்பவள்.
என் வலியைச் சொல்லாமல் புரிந்துகொள்வவள்,
என் மௌனத்தை வார்த்தையில்லாமல் கேட்பவள்.
நான் சிரிக்க அவள் வாழ்க்கையையே செலவிட்டவள்,
இந்த உலகத்தின் மிகப்பெரிய தெய்வம் – அம்மா.
அவள் கை பிடித்து நடந்த நாட்கள்,
என் வாழ்க்கையின் அழகான நினைவுகள்.
அவள் ஆசீர்வாதம் இருக்கும் வரை,
எந்த புயலும் என்னை சாய்க்க முடியாது.
அம்மா...
உன்னைப் பற்றி எழுத வார்த்தைகள் போதாது,
உன் அன்பை அளக்க இந்த உலகமே போதாது.
நான் பிறப்பதற்கு முன்பே என்னை நேசித்தவள் நீ,
நான் சிரிப்பதற்காக ஆயிரம் முறை அழுதவள் நீ.
அம்மா...
என் பசியை உணர்ந்து உணவளித்தவள்,
என் வலியை உணர்ந்து கண்ணீர் சிந்தியவள்.
நான் தோற்றபோது நம்பிக்கையாய் நின்றவள்,
நான் வென்றபோது என்னைவிட மகிழ்ந்தவள்.
என் வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றிக்கும்,
பின்னால் இருக்கும் அமைதியான சக்தி நீ.
என் ஒவ்வொரு அடியிலும்,
என்னை வழிநடத்தும் ஒளி நீ.
அம்மா...
உன் அன்பு கடல் போல ஆழமானது,
உன் பாசம் வானம் போல எல்லையில்லாதது.
என் உயிர் இருக்கும் வரை,
உன்னை நேசிப்பேன்... என்றும், என்றென்றும். ❤️
❤️ லவ் யூ அம்மா... ❤️
82
En Ammama 💖

“Enda pillai… etthanai dharam sonnen? Kekka maatiya?”
Nu solli kaalaila ennai ezhuppuva…

“Mudhala poi mugam kazhuvu… unakku pidicha juice ready pannirukken. Vaa da, kudichidu.”
Nu glassaaa kaiyila kuduthu, naan kudikkura varaikkum pakkathula ninnu paathuttu iruppa.

“Mudhala saapidu da… appuram phone-um velaiyum paaru.”
Nu solli, enakku pidicha saapadu samaichu kaiyala oottuva.

“Saapadu thattu la onnum micham veikkaadha da… ovvoru soru parukkum kadavuloda aasirvaadham.”

“Paathu po da… vizhundhidaadha.”
Naan veettai vittu veliya pona odane, un kannu vaasalai dhaan paathukkittu irukkum.

“Suththi suththi odadha… kai kaal odanjidum.”
Nu thittinalum, andha vaarthai ellam paasathoda dhaan.

“Road cross pannumbodhu rendu pakkamum paathu po da.”

“Kulir la veliya nikkadha… udambu kettudum.”

“Mazhai la nanaiyaadha… kaichchal vandhaa kashtapaduve.”

“Ivlo neram enga poitta? Oru phone pannalaama? Naan bayandhu poitten da!”

“Iravu neram thaniya veliya suththaadha.”

“Thanni kudichiya? Naal muzhuvadhum veliya suththittu irukka.”

“Ozhunga thoongu da… raathiri late-a irukkaadha.”

“Kurumbu pannadha… nee innum enakku chinna pillai dhaan.”

Appo indha vaarthaigal ellam enakku verum thittal maadhiri therinjadhu…

Aana ippo dhaan puriyudhu…

Ovvoru thittalukkulla oru bayam irundhadhu…

“En pillaikku onnum aaga koodaadhu.”

Ovvoru kovathukkulla oru paasam irundhadhu…

“En pillai santhoshama irukkanum.”

Enakku udambu sari illa naal…

Nee en pakkathula irundhu,
“Konjam juice-aavadhu kudida da… appuram thembu varum.”
Nu solli, naan kudikkura varaikkum nagara maatta.

Naanga sirichaa…
Nee adhigama sirippa.

Naanga azhudhaa…
Nee adhigama kavalaipaduva.

Naanga santhoshama irukkanum nu dhaan…
Nee un vaazhkai muzhuvadhum vaazhntha.

Oru naal…

Naanum en annavum serndhu un kitta kettom…

“Ammama… ungalukku enna aasai?”

Nee romba amaidhiyaga sirichuttu sonne…

“Enakku oru thadava India poga aasai da…”

Andha oru vaarthai…

Enga rendu peroda manasula nindru pochu.

Andha nimishathula dhaan…

Naanum en annavum mudivu pannittom…

Indha birthday-ku un aasaiyai nijamaakkanum.

Unakku theriyama…

Ellaa yerpaadum pannittu irukkom.

Un birthdayku…

Unnai surprisea India kootittu porom. 🇮🇳❤️

Un mugathula varum andha sirippu…

Un kannula varum santhosha kanneer…

Adha paakkuradhukkaaga dhaan…

Indha surprise.

Ammama…

Nee engalukku Ammama mattum illa…

Nee enga amma…

Nee enga appa…

Nee enga nanban…

Nee enga ulagam.

Un anbu alakka mudiyadhu…

Un thittal marakka mudiyadhu…

Un sirippu engaloda balam…

Nee eppavum ippadiye sirichitte, aarokkiyama, santhoshama irukkanum.

Naanga rendu perum unnai vaarthaigalal solla mudiyadha alavukku nesikkrom. Indha India payanam un kanavu mattum illa… enga anbin sirandha parisum.

Thank you kg team yalpanam tamil padinga if you can my dear host ….

Written by Mansi



Tamil version

💖 என் அம்மம்மா 💖

“என்டா என் பிள்ளை… எத்தனை தரம் சொன்னேன்? கேக்க மாட்டியா?”
என்று சொல்லி காலையில் என்னை எழுப்புவாய்…

“முதல்ல போய் முகம் கழுவு டா என் பிள்ளை… உனக்கு பிடிச்ச ஜூஸ் ரெடி பண்ணி வச்சிருக்கேன். வா குடிச்சிடு.”
என்று கிளாஸை கையில் கொடுத்து, நான் குடிக்கிற வரைக்கும் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பாய்.

“முதல்ல சாப்பிடு டா என் பிள்ளை… அப்புறம் போன், வேலை எல்லாம் பாரு.”
என்று சொல்லி, எனக்கு பிடிச்ச சாப்பாட்டை சமைத்து கையால் ஊட்டுவாய்.

“சாப்பாடு தட்டுல எதுவும் மிச்சம் வைக்காத டா என் பிள்ளை… ஒவ்வொரு சோறு பருக்கையும் கடவுளோட ஆசீர்வாதம்.”

“பாத்து போ டா என் பிள்ளை… விழுந்திடாத.”
நான் வீட்டை விட்டு வெளியே போன உடனே, உன் கண்கள் வாசலையே பார்த்துக்கொண்டிருக்கும்.

“சுத்தி சுத்தி ஓடாத டா என் பிள்ளை… கை கால் உடைஞ்சிடும்.”
என்று திட்டினாலும், அந்த வார்த்தைகளுக்குள்ளே முழுக்க முழுக்க பாசம் தான் இருக்கும்.

“ரோடு கிராஸ் பண்ணும்போது ரெண்டு பக்கமும் பார்த்து போ டா என் பிள்ளை.”

“குளிர்ல வெளியே நிக்காத டா என் பிள்ளை… உடம்பு கெட்டுடும்.”

“மழையில நனையாத டா என் பிள்ளை… காய்ச்சல் வந்தா கஷ்டப்படுவ.”

“இவ்வளவு நேரம் எங்க போயிருந்த டா என் பிள்ளை? ஒரு போன் பண்ணலாம்ல… நான் பயந்துட்டேன்.”

“இரவு நேரம் தனியா வெளியே சுத்தாத டா என் பிள்ளை.”

“தண்ணி குடிச்சியா டா என் பிள்ளை? நாள் முழுக்க வெளியே சுத்திட்டு இருக்க.”

“ஒழுங்கா தூங்கு டா என் பிள்ளை… ராத்திரி லேட்டா இருக்காத.”

“குறும்பு பண்ணாத டா என் பிள்ளை… நீ எவ்வளவு பெரியவனா ஆனாலும், எனக்கு நீ இன்னும் சின்ன பிள்ளை தான்.”

அப்போ இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு வெறும் திட்டல் மாதிரி தான் தெரிந்தது…

ஆனா இப்போதான் புரிகிறது…

ஒவ்வொரு திட்டலுக்குள்ளும் ஒரு பயம் இருந்தது…

“என் பிள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது.”

ஒவ்வொரு கோபத்துக்குள்ளும் ஒரு அன்பு இருந்தது…

“என் பிள்ளை எப்போதும் சந்தோஷமா இருக்கணும்.”

எனக்கு உடம்பு சரியில்லாத நாட்களில்…

நீ என் பக்கத்துல இருந்து,

“கொஞ்சமாவது ஜூஸ் குடிடா என் பிள்ளை… அப்புறம் தெம்பு வரும்.”

என்று சொல்லி, நான் குடிக்கிற வரைக்கும் நகராமல் இருப்பாய்.

நாங்க சிரிச்சா…

நீ எங்களைவிட அதிகமா சிரிப்பாய்.

நாங்க அழுதா…

எங்களைவிட அதிகமா கவலைப்படுவாய்.

“என் பிள்ளைகள் சந்தோஷமா இருக்கணும்…”

என்ற ஒரே ஆசையோட தான் நீ உன் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தாய்.

ஒரு நாள்…

நானும் என் அண்ணாவும் சேர்ந்து உன்னிடம் கேட்டோம்…

“அம்மம்மா… உங்களுக்கு என்ன ஆசை?”

நீ அமைதியாக சிரித்துக்கொண்டே சொன்னாய்…

“எனக்கு ஒரு தடவை இந்தியா போக ஆசை டா…”

அந்த ஒரு வார்த்தை…

எங்கள் இரண்டு பேரின் மனசிலும் ஆழமாக பதிந்துவிட்டது.

அந்த நிமிஷத்திலேயே…

நானும் என் அண்ணாவும் முடிவு செய்தோம்…

இந்த பிறந்தநாளுக்கு எங்கள் அம்மம்மாவின் ஆசையை நிஜமாக்கணும்.

உனக்கு தெரியாமல்…

எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

உன் பிறந்தநாளுக்கு…

உன்னை சர்ப்ரைஸா இந்தியா கூட்டிட்டு போறோம். 🇮🇳❤️

உன் முகத்தில் வரும் அந்த சிரிப்பு…

உன் கண்களில் வரும் அந்த சந்தோஷ கண்ணீர்…

அதை பார்ப்பதற்காகத்தான்…

இந்த சர்ப்ரைஸ்.

அம்மம்மா…

நீ எங்களுக்கு அம்மம்மா மட்டும் இல்லை…

நீ எங்களுக்கு அம்மா…

நீ எங்களுக்கு அப்பா…

நீ எங்களுக்கு நண்பன்…

நீ தான் எங்கள் உலகம்.

உன் அன்பை அளக்க முடியாது…

உன் திட்டலை மறக்க முடியாது…

“என் பிள்ளை…” என்று நீ கூப்பிடும் அந்த ஒரு வார்த்தை… எங்கள் வாழ்க்கையின் அழகான நினைவு.

உன் சிரிப்பு எங்களோட பலம்…

நீ எப்போதும் இப்படியே சிரித்துக்கொண்டு, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கணும்.

நாங்க ரெண்டு பேரும் உன் பிள்ளைகள் தான்… எத்தனை வயசானாலும்.

நாங்க ரெண்டு பேரும் உன்னை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நேசிக்கிறோம்.

இந்த இந்தியா பயணம் உன் கனவு மட்டும் இல்லை… உன் இரண்டு பிள்ளைகளின் இதயத்திலிருந்து வரும் அன்பின் மிகப்பெரிய பரிசு. ❤️

Hope Tamil version sound the same thank you
Mansi
83
Birthday Wishes / Re: Happy Birthday NANNA
« Last post by MDU on July 14, 2026, 12:11:21 am »
84
Birthday Wishes / Re: Happy Birthday NANNA
« Last post by RiJiA on July 14, 2026, 12:10:52 am »



85
Birthday Wishes / Happy Birthday NANNA
« Last post by RiJiA on July 13, 2026, 11:42:14 pm »
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday (14 July 2026) Wishes To Our Lovable Friend NANNA Wishes Him All The Very Best & Good Luck👍


86
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-071


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.






மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
87
<a href="https://youtu.be/Qhwafoo7Pnc?si=K7-QvrBhJJqdhLLP" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtu.be/Qhwafoo7Pnc?si=K7-QvrBhJJqdhLLP</a>
88
<a href="https://youtu.be/SUrBEQA4Myw?si=0RZBn2g8G5FcdGze" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtu.be/SUrBEQA4Myw?si=0RZBn2g8G5FcdGze</a>

90
HI... FRDS...  MY SWT HEART DEDICATE SONG... ENNAYA PATHI ELLAM SOLLIRUVINGA. INGA TYPE PANNI VAIKKA THEVA ILA...... MY SONG... MARUTHANI SONG.... MY SWT HEART KU..... MOVIE NAME=SAKARAKATTI
Pages: 1 ... 7 8 [9] 10