Advanced Search

Recent Posts

Pages: 1 ... 6 7 [8] 9 10
71



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 93இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 94இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#094


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
72
என்னவளுக்காய் நான் எடுத்து வைத்த ரோஜா இது !
என்னைப்போல் அவளுக்காய் தனியே காத்து நிற்கிறது இங்கே !
என்று வருவாள் தெரியவில்லை!
எப்போது ரோஜாவை எடுத்து செல்வாள் புரியவில்லை !
ஏங்கி தவிக்கிறோம் இந்த ராஜாவும்
அந்த ரோஜாவும் !
விடாமல் பெய்யும் மழையே !
உனக்கு விடை கொடுக்க குடை பிடிக்கிறேன் நான் !
தடைவிதிப்பது நான்
தனியே சென்று விடு நீ !
நீயோ பன்னீர் தூவுகிறாய்
நானும் கண்ணீர் சிந்துகிறேன் !
அவளுக்காய் நான் வைத்த ரோஜாவின் அங்கங்களை !
சாரலை அள்ளி தெளித்து நனைக்காதே !
அவள் இதழிலிருந்து வடியும் அமுதத்தேனே முதலில் நனைக்க வேண்டும் அந்த ரோஜாவை !
ஆதங்கம் தான் உன்மேல்
அவள் கைப்படும் ரோஜாவை நீ
கரைப்படுத்தக் கூடாது !
என் தேவதையின் தேகம் தொடும் ரோஜாவே
தேவையில்லாமல் நீ தொடர்வது ஏனோ !
ஏய் மேகத்தூரலே
உனக்கென்ன மோகம் !
என் காதலிக்காய் நான் வைத்திருக்கும் ரோஜா பூங்கொத்தின் மீது உனக்கென்ன மோகம் !
அவளை எண்ணி எனக்குத்தான் சோகம்!
அவளுக்காய் நான் வைத்திருக்கும் இந்த ரோஜாவை தொடுவதில் உனக்கென்ன இத்தனை வேகம் !
73
அவர்கள் திரும்புவார்களா?” 🌧️

மழையில் நனைந்து அமைதியாக நின்ற இருக்கை,
மலர்களின் துயரத்தை தாங்கி இருக்கும்   சாட்சி.
குடை சாய்ந்து நின்றது மென்மையாக,
மறைந்த காதலை காப்பதுபோல்  அமைதியாக.

ஒரு காலத்தில் இரண்டு ஆன்மாக்கள் சேர்ந்த
சிரிப்பால் மலர்ந்தது அந்த இரவு.
இன்று அவர்கள் விலகி சென்றாலும்,
நினைவுகள் மட்டும் மனதில் நிற்கின்றன.

ஒருநாள் பரிசாக அளித்த ரோஜா,
இன்று தரையில் சிதறிக் கிடக்கிறது.
காதலின் குரல்கள் அதில் நிறைந்தும்,
உடைந்த இதயம் போல மௌனமாகவும்.

ஒருவருக்கொருவர் பிடித்த குடை,
இன்று காத்திருக்கும் வெறுமையாக.
அந்த மென்மையான கைகளின் வெப்பம்,
மீண்டும் திரும்புமா என ஏங்குகிறது.

அந்த நாளில் ஆனந்தமாய் முத்தமிட்ட மழை,
இன்று மீண்டும் விழுகிறது நினைவாய்.
மெல்லிசை போல கேட்கிறது காற்றில்—
“மீண்டும் நீங்கள் திரும்புவீர்களா?”

தீபம் எரிகிறது மெதுவாய்,
ரகசியங்களை காக்கும் காவலனாய்.
அவர்களின் சிரிப்பையும் கண்ணீரையும் கண்டு ,
மீண்டும் சந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில் நிற்கிறது.

இருக்கை நினைவில் வைத்திருக்கிறது இரண்டு உயிர்கள்,
“நான் உன்னை காதலிக்கிறேன்” என்ற சொற்களை.
இன்று வெறுமையாய் இருந்தாலும் உள்ளத்துக்குள்,
மீண்டும் அவர்கள் சேர்வார்கள் என்று கனவுகாண்கிறது.

தெரு அமைதியாக, நேரம் நீண்டாலும்,
நம்பிக்கை மட்டும் மென்மையாய் பாடுகிறது.
ஏனெனில் மழைக்குப் பின் வானம் தெளிகிறது,
அமைதி வரும், காதல் மலர்கிறது.

ரோஜாக்கள் காத்திருக்கின்றன, தீபம் ஒளிர்கிறது,
குடை சாய்கிறது, மழை சொல்கிறது.
அனைத்தும் கேட்கின்றன இதே கேள்வி—
அந்த இரு ஆன்மாக்கள்  திரும்புமா?

அல்லது அந்த இருக்கை என்றென்றும்,
காதலின் சாட்சியாய் மழையில் நின்றுவிடுமா?
74
மழை துளிகள் பாடும் ஓர் இசை என் காதில் கேட்டது.
அந்த மழைத்துளிகலின் இசை.
என் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கும் உன் நினைவுகளின் இசை ஆனது.

மழைத்துளிகளின் நடுவினில் எரியும் அந்த விளக்கின் மென்மையான ஒளி போல.
என் உள்ளமும் உன் பெயரை மட்டுமே சொல்லுகிறது தாலாட்டும் ஓசை போல.

நாற்காலியில் இருக்கும் மலர்களை பார்க்கும் போது.
என் கண்ணீரில் நனைந்த கனவுகள் கண் முன்னே தோண்றுகிறது.

மழைத்துளிகள் வானத்தில் இருந்து விழும் போது
அந்த ரோஜா பூவை
குடை எப்படி  நனையவிடாமல் காக்குன்றதோ
அதை போல.
நான் உன்னை  என் இதயத்தில் வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்

எத்தனை முறை மழை வந்தாலும்  குடை ரோஜா மலரை காப்பது போல்.
நீ நனைந்து போகாமல் உன்னை.
என் இதயத்தில் வைத்து காத்து கொண்டு இருக்கிறேன்.

நாற்காலி காலியாக இருக்கலாம் இன்று,
ஆனால் அந்த நிமிடங்களை நான் மறக்கவில்லை .

என் நினைவுகளில் எப்போதும் நீயும் நானும்.
இருக்கையில் அருகருகே  இருந்த அந்த தருணத்தை மறக்கவும் இல்லை.

மழை மறைக்கவில்லை என் கண்ணீரை
நிழல் மறைக்கவில்லை என் நினைவுகளை,

கையில் குடை இருந்தும்
இதயம் மட்டும் நனைந்து போகின்றது.

ரோஜா மலர் அழகாய் இருந்தும் மனம் போலவே வாடிப்போனது,
உன் வருகைக்காக காத்திருந்த என் கனவும் கரைந்து போனது
 
மலர்கள் குளிர்ந்து கொண்டிருக்க இதயம் மட்டும் தீயாய் எரிகிறது,
நினைவுகளோ தெருவிளக்கைப் போல இன்னும் நம்மை ஒளி காட்டுகிறது,

ஆனால் அந்த ஒளியில் நான் மட்டும் தான்,
நீ இல்லாமல் அந்த இடத்தில் இருள் மட்டும் என்கூட.

நீ என்னை மறந்து போனாலும் நான் உன்னை நினைக்காமல் இருந்தது இல்லை.

மலர் வாடும் முன்பே நான் புன்னகைப்பேன்
என் பாதை என் நம்பிக்கை நோக்கி
மழையில் ஒளிரும் தெருவிளக்கைப் போல
உன் நினைவுடன் வாழ்க்கையைத் தேடி நடந்து போகிறேன்.


MDU
75
காடெங்கும் ஒளி கூட,
கூடி மகிழ்ந்து உரையாட

குயில் பாட்டின் குரலாட,
ஒத்திசைத்து நீ போட்டியிட

படபடக்கும் உன் இமை திறக்கவெ,
கதிரவனின் கரங்கள் கண்ட இடுக்குகள் அனைத்தையும் தகர்க்கவே

ஆடும் அசையா மரங்கள் வழி வகுக்கவே,
திரண்ட கரங்கள் யாவும் உன் பாதம் தொடும் அளவில் மண்டியிடுகின்றன

இது போன்ற உலகினில் அத்தகைய வடிவத்தில் உன்னை பேணிக்காக்கவே நான்

நான்…
சுழலும் ஒண்முகில்,
கைவீச்சடித்து உன்னை காக்க

தீண்டும் கதிரவனின் பாதுகாப்பின் அப்பால் எட்டாத உயிரத்தில் பிரகாசிக்கும் சுடரே…உன் கவனத்தை ஈர்க்க


சுற்றும் பூமியில் பின்தொடரும் நம் கற்பனை உலகை கண்டறிவோம் வா!

ஈரமற்ற பூமியில் தற்காலிக நனைதல்,
கானல் நீராய் பேயும் மழையை நம்பிவிடாதே!

வேரோடு பிடுங்க பிரியவே துயரம்,
நிலம் காய்த்த என் கைகளை பிடித்துக்கொள்,
குடை நிழலில் பரந்து செல்ல

பாட்டொன்று பாடு ரோஜாவே,
இசை மழையில் பொழிந்து மகிழவே,
இடம் சேரும் வரை உன் தாகம் தனியவே…
76
பறிக்கப்பட்டதே தூக்கி
எறிய தான் என்றால்🤨
எதற்காக பறிக்க
வேண்டும்...........🥺
சுவாசிக்க வழியில்லாமல்
யாரின் ஆசையால்
பறிபோனது அந்த ரோஜாவின்🌷
உயிர்🫀 வாடி நிற்கும்
ரோஜாவிற்கு வாழ்க்கை😔
இல்லை சாலையோரம்🛣️

ஆம் அது உண்மை என்று நாம் நினைக்கலாம்🧐 ஆனால் அது உண்மை இல்லை🚫
யாரோ ஒருவர் தூக்கி எறியப்பட்ட ரோஜாவின் மீதும் காதல் கொண்டது ரோஜாவினை தாங்கி கொண்டு இருக்கும் நாற்காலி🪑 இருட்டிலும் நீ அழகுதான் என்று உணர்த்தியது விளக்கின் வெளிச்சம்🏮 சிதைந்து போன  இதழை சுத்தம் செய்தது மழை🌧️ ரோஜாவின் பல கவலைகளை மறக்க செய்தது மழையின்🌧️ அழகிய துளிகல்
யேரேனும் நம்மை தூக்கி போட்டுவிட்டு சென்றாலும் தனக்காகவும் ஒரு உயிர் துடிக்கும் என்பதை உணர்த்தியது குடை⛱️
77
Birthday Wishes / Re: Happy Birthday Handy
« Last post by iamcvr on September 17, 2025, 10:20:37 am »
🎉🎂 Happy Birthday Handy 🎂🎉
Wishing you all the happiness in the world on your journey ahead!



Be Happy Keep Smiling Always!
78
Birthday Wishes / Re: Happy Birthday Handy
« Last post by Hazel on September 17, 2025, 09:20:36 am »
Happy birthday! May you be blessed with good health, endless joy, and all your heart's desires this year.

May the light of the Lord shine brightly on you today and always. Happy birthday. 🎊💐🎉🎂
79
காதல் ஓர் மென் உணர்வு - ஆனால் அதன்
வடுக்கள் ஏனோ ஆழமானவை.
உதிர்த்த சொற்கள் உயிரை குத்தி கிழிக்கும்,
இழைத்த பிழைகள் நெஞ்சை அழுத்தி துளைக்கும்,
இனித்த நினைவுகள் இரவை உறுத்தி விழுங்கும்,
காலம் போக காயம் மேலே ஆறினாலும்
உள்ளே வலி துருத்தியே நிற்கும்.

அதீத நீரில் பூக்கள்
அழுகிடாமல் குடை பிடிக்கும் பக்குவம் அண்மையில் தான் வந்ததடி.
அதீத காதலில் உனை தொலைத்து
அஸ்தமித்த எம் உறவின்
அர்த்தம் தொலைத்த பின்பு தானடி
அகம் உணர்ந்தது அப் பக்குவத்தை.

முன்பே உணர்ந்திருக்கலாம் - உன் இழப்பை
முழுதாய் தவிர்த்திருக்கலாம்.
என்னை நானே மாற்றி இருக்கலாம்
என் காதல் உன்னை வதம் செய்யாமல் பார்த்திருக்கலாம்.
துரத்தாமல் உனை நான்
தூரத்தில் இருந்தே ரசித்திருக்கலாம்.

நான்
உன் வாழ்வில்
வராமலே இருந்திருக்கலாம்.

வந்த காயங்கள் சீக்கிரமே ஆறிவிடும்.
உள்ளே துருத்தும் வலிகள் தான் - என்னை
காலம் முழுதும் நின்று கொல்லும்.
கொல்லட்டும்.
உன்னை தொலைத்த என்னை
என் மனம் ஒரு நாளும் மன்னிக்காது.
கொல்லட்டும்.
80
Birthday Wishes / Happy Birthday Handy
« Last post by RiJiA on September 16, 2025, 11:53:56 pm »
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday ( 17 Sep 2025) Wishes To Our Lovable Friend HANDY Wishes Him All The Very Best & Good Luck👍


Pages: 1 ... 6 7 [8] 9 10