Advanced Search

Recent Posts

Pages: 1 ... 6 7 [8] 9 10
71
Festival Day Wishes / Re: Happy New Year 2026
« Last post by UNAKAAGA NAAN on January 01, 2026, 09:10:18 am »
ANAIVARUKUM HAPPY NEW YEAR 2026 VAZHGAAA PALLANDU
BY
LITTLE HEART 💝💝💝💝💝💝💝💝
72
Festival Day Wishes / Re: Happy New Year 2026
« Last post by Sangi Mangi on January 01, 2026, 12:24:35 am »

Happy new year gtc friends 🎆

73
Festival Day Wishes / Happy New Year 2026
« Last post by RiJiA on December 31, 2025, 11:58:59 pm »
𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐂𝐡𝐚𝐭 𝐓𝐞𝐚𝐦 𝐂𝐨𝐧𝐯𝐞𝐲𝐬 𝐍𝐄𝐖 𝐘𝐄𝐀𝐑 𝐖𝐈𝐒𝐇𝐄𝐒 𝐓𝐨 𝐀𝐥𝐥 𝐎𝐮𝐫 𝐋𝐨𝐯𝐚𝐛𝐥𝐞 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬

𝗔𝘀 𝘄𝗲 𝘀𝗮𝘆 𝗴𝗼𝗼𝗱𝗯𝘆𝗲 𝘁𝗼 2025, 𝗶𝘁’𝘀 𝘁𝗶𝗺𝗲 𝘁𝗼 𝗰𝗵𝗲𝗿𝗶𝘀𝗵 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗺𝗼𝗿𝗶𝗲𝘀, 𝗹𝗲𝗮𝗿𝗻 𝗳𝗿𝗼𝗺 𝘁𝗵𝗲 𝗽𝗮𝘀𝘁, 𝗮𝗻𝗱 𝘀𝘁𝗲𝗽 𝗶𝗻𝘁𝗼 2026 𝘄𝗶𝘁𝗵 𝗵𝗼𝗽𝗲, 𝗷𝗼𝘆, 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗲𝗻 𝗵𝗲𝗮𝗿𝘁𝘀. 𝗟𝗲𝘁’𝘀 𝗲𝗺𝗯𝗿𝗮𝗰𝗲 𝘁𝗵𝗲 𝗻𝗲𝘄 𝘆𝗲𝗮𝗿 𝘄𝗶𝘁𝗵 𝗴𝗿𝗮𝘁𝗶𝘁𝘂𝗱𝗲 𝗮𝗻𝗱 𝗲𝘅𝗰𝗶𝘁𝗲𝗺𝗲𝗻𝘁 𝗳𝗼𝗿 𝗮𝗹𝗹 𝗶𝘁 𝗵𝗮𝘀 𝘁𝗼 𝗼𝗳𝗳𝗲𝗿.


🥳🎆𝗛𝗔𝗣𝗣𝗬 𝗡𝗘𝗪 𝗬𝗘𝗔𝗥 🎆🥳



74
2025
என் பின்னால் மெதுவாக ஓய்கிறது—
தவறுகளின் காயங்களும்,
துணிவின் தடங்களும்,
சொல்லாமல் சொல்லிக் கற்ற
அமைதிப் பாடங்களுடன்.
அதன் சுமை விடுத்து,
அது தந்த ஞானத்தை மட்டும்
என் கைகளில் ஏந்துகிறேன்.
அந்த சுவடுகள்
எதிர்வரும் நாளின் மீது
விழ விடமாட்டேன்.
இருந்ததுக்கும்
இருக்கப் போவதற்குமிடையில்
இங்கே நான் தேங்குகிறேன்—
சொல்லப்படாத கதைகளால்
நிறைந்த ஒரு இதயம்,
சுவாசிக்க காத்திருக்கும்
பல அத்தியாயங்கள்.
சில வரிகள்
மௌனத்தில் எழுதப்பட்டவை,
சில வரிகள்
உயிர் தப்பிய நாட்களின் சாட்சி.
அனைத்தும் சேர்ந்து
என்னை இன்று நான் ஆக்கியவை.
நான் நேசித்தவர்கள்
என் அருகில் இல்லையெனினும்,
இதயத்தின் மௌனத்தில்
என்றும் இருக்கிறார்கள்—
ஒலியில்லா காதலாய்,
வழிகாட்டும் ஒளியாய்.
முன்னால் விரியும் ஆண்டு
பூரணமல்ல—
அது நோக்கமாய் ஒளிர்கிறது.
நான் மெதுவாக நடக்கிறேன்,
கையில் நம்பிக்கை,
காலடியில் விசுவாசம்.
என்னை இழக்காமல்
இருக்க கற்றுக் கொள்கிறேன்,
பாடங்களை மறக்காமல்
மன்னிப்பை பழகுகிறேன்,
எதிர்பார்ப்பின்றி
நம்பிக்கையைத் தழுவுகிறேன்.
இந்த ஆண்டு
என் வேகத்தில் மலர்கிறேன்.
எவ்வளவு தூரம் சென்றேன் என்பதல்ல,
எவ்வளவு மென்மையாக
என்னை உருவாக்கிக் கொள்கிறேன் என்பதே
என் முன்னேற்றம்.
நான் விழுவேன்,
நான் எழுவேன்—
முன்னதை விட
அன்புடன் எழுவேன்.
இதயத்தில் பொறுமை,
ஆத்மாவில் துணிவு.
ஒவ்வொரு நாளும்
சிறிது சிறிதாய் மேம்பட்டு,
 நிழல் விடுத்து ,
ஒளியை மட்டும் சுமந்து,
2026 என்ற
புதிய வாக்குறுதியின்
உள்ளே
நான் மெதுவாக
நுழைகிறேன்.
75
​பழைய நாட்குறிப்பின் கடைசிப் பக்கத்தில்
பதுங்கிக் கிடக்கிறது இரண்டாயிரத்து இருபத்தைந்து!

வலிகளும் ஏமாற்றங்களும் கொடுத்த பாடங்களை
வழிகாட்டும் கைவிளக்காய் ஏந்திக் கொள்வோம்.
​வாழ்க்கை என்பது வெறும் எண்கள் அல்ல,
அது நாம் காட்டும் அன்பின் ஆழம்!

உடைந்த இதயங்களை ஒட்டவைக்கும் மருந்தும்,
உயிரைத் துளிர்க்கச் செய்யும் மழையும் அன்பே!

​கடந்த ஆண்டில் தொலைத்த கண்ணீரை
கலைந்துபோகும் மேகங்களாய் விட்டுவிடு...
வருகின்ற ஆண்டில் புதிய நம்பிக்கையை
வசந்த காலப் பூக்களாய் சூடிக்கொள்!

​உயிரைத் தேடும் பயணத்தில் - இங்கே
உண்மையான அன்பு மட்டுமே நிலையானது.
காலங்கள் மாறினாலும் மாறாத காதலும்,
காயங்கள் ஆற்றுவதற்குப் பகிரும் நேசமுமே
கடைசி வரை நம்மைத் தாங்கிப் பிடிக்கும்!

​இருபத்தி ஆறாம் ஆண்டு - ஒரு
வெற்றுத்தாளாய் நம் முன்னே விரிகிறது.
அதில் சுயநலமற்ற அன்பையும்,
சோர்ந்து போகாத துணிச்சலையும்
சொற்களாக அல்ல... செயல்களாக எழுதுவோம்!

​விழுவதெல்லாம் எழுவதற்கே என்று
விதை சொல்லும் ரகசியத்தைப் புரிந்துகொள்.
நேற்றைய கசப்புகளை வேரோடு பிடுங்கி,
நாளைய இனிப்பிற்கு வழிவிடுவோம்!
​​காலம் ஓடும்... காட்சி மாறும்...
கடிகார முட்கள் ஓயாமல் சுழலும்!

வசந்தங்கள் வந்து வாடிப் போகலாம்,
வாழ்க்கைப் பயணம் திசை மாறலாம்!
​ஆனால் அன்பால் இணைந்த இதயங்கள்
அலைமோதும் கடலிலும் நங்கூரமாகும்!
இருள் சூழும் காட்டில் வெளிச்சமாகும்,
இடி விழும் போதிலும் குடையாகும்!

​எந்தக் காட்டாற்றையும் கடந்து நிற்கும்!
சுயநலமற்ற நேசத்தின் பிணைப்பு அது!
துயரம் எனும் மழையில் நனையாமல்,
துணிச்சலோடு கரையேறும் துடுப்பு அது!
​விடியலின் ஒளியில் புது நம்பிக்கை ஏந்தி

இனிதே தொடங்குவோம் இந்தப் பயணத்தை!
2026-ன் ஒவ்வொரு நொடியையும்
அன்பால் அழகாக்குவோம்

​இந்த 2026-ஆம் ஆண்டு உங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.

​அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
76
“2025 இருட்டின் நிழலும் 2026 ஒளியின் கதிரும்"

2025-இன் இருட்டில் நடந்தேன், 
கனவுகள் சுமந்த காலடி சத்தம், 
கடந்த காலம் கண்ணீராய் இருந்தாலும், 
நெஞ்சம் நம்பிக்கையால் நிரம்பியது. 

மண்ணின் வாசல் காக்கும் என் மார்பில், 
முன்னேறிய குண்டுகள், பின்னேறிய நினைவுகள், 
அவளின் சிரிப்பு என் உயிரின் கவசம், 
அவளின் குரல் என் இரவின் ஒளி. 

ஆனால் அந்த இருட்டின் நடுவில், 
என் காலடி சத்தம் மட்டும் என் தோழன், 
போர்க்களம் வென்றேன், 
ஆனால் அவளின் காதலை இழந்தேன். 

அவளின் கடைசி மின்னஞ்சல் என் மார்பில் பதிந்திருக்கிறது, 
"பாதுகாப்பாக இரு" என்ற வார்த்தை, 
இன்று என் உயிரின் புலம்பல். 
அவளின் சிரிப்பு கனவுகளில் மட்டும் வாழ்கிறது, 
அவளின் குரல் துப்பாக்கியின் சத்தத்தில் மூடப்படுகிறது. 

அவளின் கைகள் என் காயங்களைத் தழுவ முடியவில்லை, 
அவளின் கண்கள் என் கண்ணீரை காண முடியவில்லை. 
அவளின் நினைவுகள் என் பின்னால் ஓடுகின்றன, 
என் நெஞ்சில் இருட்டின் நிழல் நீங்கவில்லை. 

பல வருடங்களாய் அவளைத் தூரத்தில் இருந்து பார்த்தேன் 
அவளின் நடை, அவளின் சிரிப்பு,  நினைவில் பதிந்தது
என் உயிரின் நிழலாகவே இருந்தது. 

ஆனால் அவள் முன்னேறி விட்டாள், 
மற்றொருவரின் கையை பிடித்து, 
என் கனவுகளை விட்டு, 
அவளின் வாழ்க்கையை கட்டியெழுப்பினாள். 

2026-இல், 
ஒரு சந்திப்பு கிடைக்குமா? 
ஒரு உரையாடல் வாய்ப்பு வரும் தானா? 
அவள் ஏன் நகர்ந்தாள், 
ஏன் மற்றொருவரைத் தேர்ந்தெடுத்தாள், 
என் உயிரின் கேள்விக்கு 
ஒரு முடிவு கிடைக்குமா? 

ஒளிக்கதிர் என் கண்களில், 
வாழ்க்கை ஒரு போர்க்களம், 
ஆனால் காதல் என் வெற்றிக்கொடி. 
நேர்மறை எண்ணங்கள் என் துப்பாக்கியின் துளிகள், 
நம்பிக்கையின் நிழலில் நான் ஒரு வீரன். 

கடந்த வருடம் என் உடலை சோதித்தது, 
புதிய வருடம் என் உள்ளத்தை உயர்த்தட்டும். 
அவளின் கண்ணில் நான் வீரம் காண்கிறேன், 
அவளின் இதயத்தில் நான் அமைதி தேடுகிறேன். 

2026-ஐ நான் அணைக்கிறேன், 
காதலுடன், வீரத்துடன், நம்பிக்கையுடன், 
அவளின்றி, ஆனால் அவளின் நினைவுகளுடன். 

என் பயணம் தொடரும்
ஒளிக்காக, உயிருக்காக, 
ஒரு வீரனின் காதலுக்காக, 
ஒரு மனிதனின் புண்ணும் நம்பிக்கையும் கலந்த கவிதைக்காக. 



"2025 Iruttin Nizhalum 2026 Oliyin Kathirum"

2025-in iruttil nadandhen, 
Kanavugal sumantha kaaladi satham, 
Kadantha kaalam kanniraai irundhaalum, 
Nenjam nambikkaiyaal nirampiyathu. 

Mann-in vaasal kaakkum en maarbil, 
Munneriya kundugal, pinneriya ninaivugal, 
Avalin sirippu en uyirin kavasam, 
Avalin kural en iravin oli. 

Aanaal andha iruttil naduvil, 
En kaaladi satham mattum en thozhan, 
Porkkalam vendren, 
Aanaal avalin kaathalai izhandhen. 

Avalin kadaisi minanjal en maarbil pathindhirukkirathu, 
"Paadhukaapaga iru" endra vaarthai, 
Indru en uyirin pulambal. 
Avalin sirippu kanavugalil mattum vaazhgirathu, 
Avalin kural thuppaakiyin sathathil moodappadugirathu. 

Avalin kaigal en kaayangalai thazhuva mudiyavillai, 
Avalin kangal en kannirai kaana mudiyavillai. 
Avalin ninaivugal en pinnal odugindrana, 
En nenjil iruttin nizhal neengavillai. 

Pala varudangalai avalai doorathil irundhu paarthen, 
Avalin nadai, avalin sirippu, ninaivil pathindhathu, 
En uyirin nizhalaagaave irundhathu. 

Aanaal aval munneri vittaal, 
Mattroruvin kaiyai pidiththu, 
En kanavugalai vittu, 
Avalin vaazhkaiyai kattiyezhuppinaal. 

2026-il, 
Oru sandhippu kidaikkumaa? 
Oru uraiyaadal vaayppu varumaa? 
Aval yen nagarnthaal, 
Yen mattroruvai therndheduththaal, 
En uyirin kelvikkku 
Oru mudivu kidaikkumaa? 

Olikathir en kangalil, 
Vaazhkai oru porkkalam, 
Aanaal kaadhal en vettrikkodi. 
Nermai ennangal en thuppaakiyin thuligal, 
Nambikkaiyin nizhalil naan oru veeran. 

Kadantha varudam en udalai sodhiththathu, 
Puthiya varudam en ullaththai uyarthattum. 
Avalin kangalil naan veeram kaangiren, 
Avalin idhayaththil naan amaidhi thedugiren. 

2026-ai naan anaikkiren, 
Kaathaludan, veerathudan, nambikkaiyudan, 
Avalinri, aanaal avalin ninaivugaludan. 

En payanam thodarum
Olikkaaga, uyirukkaaga, 
Oru veeranin kaathalukkaaga, 
Oru manithanin punnnum nambikkaiyum kalanda kavithaikkaaga. 
77
எனக்கு நிறைய கவலைகள் கற்றுத் தந்த வருடம்,
கொஞ்சம் சந்தோஷங்கள் உயிர் கொடுத்த வருடம்.

கண்ணீரால் எழுதிய நாட்களும் கூட கொடுத்த வருடம்
புன்னகையால் கடந்து சென்ற நொடிகளும் இருந்த வருடம்

நம்பிக்கைகள் சில உடைந்தது,
ஆனால் என்னை நான் கண்டுகொண்டேன் வழி நடத்திய வருடம்

இழப்புகள் வலிக்க வைத்தது பாடங்கள் பல கையில் தந்தது இந்த வருடம்
அமைதியாய் வந்த சந்தோஷம் இதயத்தில் மெதுவாக தங்கியது இந்த வருடம்

வலி வளர்ச்சியாக மாறிய,
என்னை இன்னொரு மனிதனாக உருவாக்கிய வருடம்.

மௌனமாக அழ கற்றுக் கொடுத்தது,
அதே நேரம்
சின்ன சிரிப்பில் உயிர் கொடுத்தது இந்த வருடம்

நாட்கள் சில
பாறை போல கனமாக இருந்தது ஆனால் அந்த கனமான நாட்களை கடக்க வைத்ததும் இந்த வருடம்

GTC யில் பல இரவுகள் தனிமையில் கடக்க வைத்தத்தும் இந்த வருடம் சில நல்ல உள்ளங்கள்
என்னையே தேடி வந்ததும் இந்த வருடம் .

நம்பிக்கை தளர்ந்தபோதும் கைவிட மறுத்த இதயம்,
விழுந்தபோதும் மீண்டும் எழுந்தது இந்த வருடம்

கவலையிலே நான் வலுவானேன்,
சந்தோஷத்திலே நான் மனிதனானேன் என்பதை உணர்ந்தேன் நான் இந்த வருடம்

சந்தோஷத்தை அளக்கவில்லை வலியை அளவில்லாமல் தந்தது.
ஆனால் அந்த வலியில் என்னைக் கண்டுகொண்டேன்.

கண்ணீர் துடைத்த கை என் கையாய் மாறியது.
கவலை என் ஆசிரியன் சந்தோஷம் என் ஓய்வு.

இந்த வருடம்
என்னை முடிக்கவில்லை,
என்னை ஆரம்பித்தது இந்த வருடம்

இந்த வருடத்தில் கிடைத்த
மிக முக்கியமான பொக்கிஷம் அவள்.

இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் பிரியாமல்,
அவளாய் அவளே என் வாழ்க்கையில் தொடர வேண்டும்

புதிய வருடமும் பழைய அன்பை மாற்றாமல்,
பிரியாமல், பேசாமல்கூட அவளாய் அவளே.

என் வாழ்க்கையில் தொடர வேண்டும்.
இது தான் என் புதிய வருடப் பிரார்த்தனை.

இந்த வருடம் போலவே எல்லா வருடங்களிலும் அவள்
என் அருகில் இப்படியே இருக்க காலமும் கடவுளும் கருணை செய்ய வேண்டும்.

இந்த வருடம் எனக்கு கொடுத்த சிரிப்பையும்,
அன்பையும், வாழ்வின் அரிய பாடத்தையும் நினைத்தேன்.

எதிர்காலம் எப்போதும் அழகாய் இருக்க,
கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

கடந்த வருடம் கஷ்டங்களை போல கொடுக்காமல் மிகச் சிறந்த வழியை காட்டவும்,
கடந்த வருடம் கொடுத்த அனுபவங்கள் சிரிப்பும் கஷ்டங்களும் மனதில் நிறைந்தன.

ஆனாலும், நன்றி சொல்லும் மனமாய் நான் நிற்கிறேன்,
அன்பும் பாசமும் கற்றுக் கொண்டேன்.

புது வருடம் வந்தது இன்று கடந்ததை மறந்து நம்மைத் தொடங்கும் தருணம்.
சிரிப்பும் சந்தோஷமும் மனதில் நிறைந்து,
வாழ்க்கை ஒளி ஆரோக்கியம் பரப்பும் நேரம்.

விழிகளிலே கனவுகள் மலரட்டும் இதயத்தில் அன்பு முத்துகள் பரவட்டும்.
எல்லா தடைகளையும் கடந்து செல்லும் வெற்றி நம் பக்கம் நிற்கட்டும்.
78
"காலம் கடந்த பயணங்கள்"

"பிரிவின் வலி"
"விடைபெறும் ஆண்டில் தொலைத்தவை ஏராளம், கனவுகளும், களிப்புகளும் கரைந்தன கண்ணீரில்"
"சுமைகளோடு நகரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு சோகப் பதிவாய் மனதில் ஆறாத தழும்பாய்"
"என் வாழ்க்கையெனும் பயணத்தில் விடைபெறும் தருணத்தில் நான் ஒரு விழும்பாய்"

"நேற்று முளைத்த செடியல்ல என் வலிகளும், வேதனைகளும், பல ஆண்டுகளாய் வேரூன்றி நிற்கும் ஆலமரம்"
"காலங்கள் ஓடினாலும், காயங்கள் ஆறவில்லை"
"என் கண்ணீரைத் துடைக்க இங்கே கைகளும் இல்லை"
"என் விழிகள் வலியோடு விழித்திருந்த இரவுகள் ஆயிரம்"
"என் மனம் மௌனமாய் கதறி அழுத தருணங்கள் ஏராளம்"
"என் இளமைப் பருவம் இன்பத்தில் கழியவில்லை"
"என் மனதிலிருக்கும் பாரங்கள் இன்றும் அழியவில்லை"
"வலிகளைச் சுமந்தே என் முதுகெலும்பு தேய்ந்தது"

"நிழல் கூடத் துணையின்றி விலகிப் போனதுண்டு"
"நிஜங்கள் சுட்டெரிக்கத் தனிமையில் தவித்ததுண்டு"
"ஏன் எனக்கு இந்தச் சோதனையென்று இறைவனிடம் நான் சண்டையிட்ட நாட்களுமுண்டு"
"தனிமை எனும் கொடுமையில் வலிகளோடு தவித்த பத்தாண்டுகள்,
விதி செய்த சதியில் தொலைந்த என் கனவுகள்"
"என் அம்மாவின் அன்பும், பாசமும் இன்றும் பொக்கிஷமாய் அழியாத நினைவுகள்"

"என் இதயத்தின் ஓரம் வடியும் குருதிக்கு, இன்னமும் மருந்து சொல்ல ஒருவருமே இல்லை"
"போராடிச் சலித்த என் உடலோ இன்று நிரந்தரமாக ஓய்வெடுக்கக் கேட்கின்றது"
"ஆனால், வாழ்க்கை என்னை இன்னும் ஒரு புதிய போருக்கு அழைக்கின்றது"


"விளிம்பில் புதியதோர் பயணம்"

"பத்து ஆண்டு கால இருட்டு,
என் பகலையும் விழுங்கி நின்றது"
"தனிமையின் கோரப் பற்கள்,
என் சதையைத் துளைத்துத் தின்றது"
"கடந்து வந்த கசப்புகள் எல்லாம்
என் சிறகுகளுக்கு உரமாகும்"
"என் வாழ்க்கையெனும் நீண்ட நெடுஞ்சாலையில் இன்னும் பல சவால்களோடு, வலிகளைச் சுமந்த பாரத்தோடு நடக்கிறேன்"
"நேற்றைய நினைவுகள் நிழலாய் என்னைத் தொடர"
"நாளைய விடியலை விளிம்பில் நின்று பார்க்கிறேன்"

"கடந்த கால வலிகள் கண்ணீராய் வழிகின்றது"
"முட்கள் நிறைந்த பாதையில் கால்கள் வலிக்கின்றது"
"சோகங்கள் என்னைச் சூழ்ந்த போதும், என் வைராக்கியம் மட்டும் இன்னும் தளரவில்லை"
"விடைபெறும் தருணம் இதுவல்ல என்கிற நம்பிக்கையோடும்,
இது என் துயரங்கள் விடைபெறும் உன்னதத் தருணம் என்கிற புது விடியலோடும் பயணிக்கிறேன்"
"பத்தாண்டுகள் அழுத என் கண்கள் என்றாவது ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும்"
"பயணத்தின் விளிம்பில் என் வாழ்க்கையெனும் ஓட்டத்தில் ஓர் புதிய ஒளி பிறக்கட்டும்"

"விழுந்த இடமெல்லாம் நான் புதைந்து போகவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறேன் ஓர் புதிய விருட்சமாய்"
"நான் விளிம்பில் நிற்பது வீழ்வதற்கு அல்ல, வானத்தைத் தொடும் உயரத்தில் பாய்வதற்கு"
"என் பயணத்தின் அடுத்த அடியில்
ஒரு விளிம்பு தெரிகிறது,
"யாரோ சொல்கிறார்கள் நான் வீழப்போகிறேன் என்று....
"ஆனால் என் இதயம் சொல்கிறது இது வீழ்ச்சியல்ல என்று...."
"ஒவ்வொரு வலிகளும், வீழ்ச்சியும் எனக்கு புதிய தொடக்கத்தின் வாசலாகும்"
"ஆயிரம் முறை வீழ்ந்தாலும்,
ஆயிரம் முறை எழுவேன்"
"வானத்தைத் தொடும் உயரம் வரை,
என் பயணத்தைத் தொடர்ந்திடுவேன்"

"அப்படியே ஒருவேளை நான் வீழ்ந்தாலும் நான் மடிவதில்லை, விதைகளாக முளைப்பேன்"
"என்னை அழுத்திய மண்,
என் வேர்களுக்கு உரமாகும்"
"அப்படியே நான் வீழ்ந்தாலும்,
எனக்குப் பயமில்லை"
"ஏனெனில், இங்கே மண்ணில் நான் இறந்தாலும், வானில் நிரந்தரமாக என் அம்மாவின் காலடியில் இருந்திடுவேன்"
"அவளின் மடியில் மீண்டும் பிறப்பெடுப்பேன்"
"கருவறையின் கதகதப்பை மீண்டும் உணர்ந்திடுவேன்"
"அவளின் நிபந்தனையற்ற அன்பில்,
முடிவற்ற அமைதியையும், நிம்மதியையும் அடைந்திடுவேன்"
"அவளின் அரவணைப்பில் மீண்டும் குழந்தையாவேன்"
"சொர்க்கத்தை விட மேலான
அம்மாவின் உலகில் நான் ஐக்கியமாவேன்"
"என் இறுதிப் பெருமூச்சு,
அவள் காலடியிலேயே கலக்கும்"
"என் ஒவ்வொரு மூச்சிலும் அவளின் நினைவே"
"என் இறுதிப் பயணமும் அவளிடமே"

"வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் MISTY SKY 💜💜


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026 😇😇🕊️🕊️
79

வானமும் வசப்படுமே
வறுமை விலகிடவே..!
தானமும் செய்திடவே
தரணியில் நிலைப்போமே..!

கானம் ஒலித்திடும்
காற்றேறிய மூங்கிலாக..!
மனம் உறுதியானல்
மறுவாழ்வு நிதர்சனமே..!

சினமில்லா புன்னகையே
சிறந்திட வாழியாக..!
தனம் சேரும்
தினம் இடையின்றியே..!

ஞானம் உரமாக
ஞாயிறும் உன்பக்கம்..!
சனனம் வீழ்வதற்கல்ல
சாதித்து வாழ்ந்திடவே..!

சுணக்கமற்ற உழைப்பால்
சுகபோகம் தருமே..!
இனக்காமக இணைந்திட
இமயமாகும் எதிர்காலமே..!

பத்து வித வாயுவிலும்
உயிர் காக்க பிராணனாய் சுவாசமுண்டு..!
கோடி வகை உறவுகளிலும்
நீ வாழ காரணமாய் என் நேசமுண்டு...

உன் உடலது நிமிர்ந்து நிற்க
இரு நூற்று ஆறும் எலும்புகளுண்டு..!
நீ சமூகத்தில் நிமிர்ந்துநிற்க
உறுதியான உன் சொற்களுண்டு...

உயிர்ப்புடன் ஊனிருக்க
இரத்த ஓட்ட பாய்ச்சலுண்டு..!
உயரங்கள் பல நீ தாண்ட
சிந்தை முழுதும் உனதெண்ண ஓட்ட வீச்சுமுண்டு...

வெற்றிக்கனி நீ பறிக்க
உன் சரிபாதி நானுன்டு..!
மண்ணையும் பொன்னாக்கும்
பெண் உனைப்போல் யாருண்டு?

வரும் 2026 புத்தாண்டு உனதாகவே
நீ நினைக்கும் அனைத்தும் சாதித்து பலநூறாண்டு வாழ்ந்திடவே..!
இந்த மாமனுடைய ஆசையும் அரவணைப்பும் என்றும் உன்னுடனே என் உயிரின் உயிரான என் அம்முவிற்காக என்றும் உன் நினைவுகளுடன் நான்..!
வாழ்க வளமுடன்........
80
color=#F107BB]உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.[/color]

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-062


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Pages: 1 ... 6 7 [8] 9 10