21
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-072
« Last post by iamcvr on August 04, 2026, 09:17:23 pm »அவனைத் தேற்றி விட வேண்டும் என்று அவளும்
அவளைத் தேற்றி விட வேண்டும் என்று அவனும்
தன்னை எப்போதும் சிரிக்க வைப்பவன்,
அவன் மனதுள்ளே சிதறுண்டு போய் நெடுங்காலம் ஆகிறது.
வெளிச்சிரிப்பை நிஜம் என்று இவள் ஏன் நினைத்தாள்?
அவன் தன் இயல்பை தொலைத்து திரிவதை இவள் கண்கள் ஏன் காண மறந்தன?
தன்னை எப்போதும் ரசித்து பார்த்தவள்,
அந்த ரசனையை தனக்கு ஏன் சொல்லித் தர மறந்தாள்?
தன்னோடே இருந்து அவள் இருப்பை ஆழப் பதிய வைத்தவள், அவள் இல்லாமல் போனால் இவன்
என்ன ஆவான் என ஏன் எண்ணாதிருந்தாள்?
மெளனத்தில் சங்கமித்து நிற்கின்றன அந்நான்கு கண்களும், கேள்விகளும்.
தலை கோதி, இதழ் சேர்த்து,
இதயங்களால் இடம் மாற வேண்டியவர்கள்,
ஒருவரில் ஒருவர் தலை சாய்த்து நிற்கின்றனர்.
பாதைகள் மாறி விட்டன,
காதலும் எங்கேயோ காணமலேயே போய்விட்டது.
காதல் சில வேளைகளில்
கருணையற்றது.
இருக்கும் போது சிலருக்கு புரிவதில்லை,
புரியும் போது மறுபுறம் காதலே இருப்பதில்லை.
அவனைத் தேற்றி விட வேண்டும் என்று அவளும்
அவளைத் தேற்றி விட வேண்டும் என்று அவனும்
கையறு நிலையில் கொண்டு வந்து இருத்தி
என்ன காணப்போகிறது இந்த காதல்?
அவளைத் தேற்றி விட வேண்டும் என்று அவனும்
தன்னை எப்போதும் சிரிக்க வைப்பவன்,
அவன் மனதுள்ளே சிதறுண்டு போய் நெடுங்காலம் ஆகிறது.
வெளிச்சிரிப்பை நிஜம் என்று இவள் ஏன் நினைத்தாள்?
அவன் தன் இயல்பை தொலைத்து திரிவதை இவள் கண்கள் ஏன் காண மறந்தன?
தன்னை எப்போதும் ரசித்து பார்த்தவள்,
அந்த ரசனையை தனக்கு ஏன் சொல்லித் தர மறந்தாள்?
தன்னோடே இருந்து அவள் இருப்பை ஆழப் பதிய வைத்தவள், அவள் இல்லாமல் போனால் இவன்
என்ன ஆவான் என ஏன் எண்ணாதிருந்தாள்?
மெளனத்தில் சங்கமித்து நிற்கின்றன அந்நான்கு கண்களும், கேள்விகளும்.
தலை கோதி, இதழ் சேர்த்து,
இதயங்களால் இடம் மாற வேண்டியவர்கள்,
ஒருவரில் ஒருவர் தலை சாய்த்து நிற்கின்றனர்.
பாதைகள் மாறி விட்டன,
காதலும் எங்கேயோ காணமலேயே போய்விட்டது.
காதல் சில வேளைகளில்
கருணையற்றது.
இருக்கும் போது சிலருக்கு புரிவதில்லை,
புரியும் போது மறுபுறம் காதலே இருப்பதில்லை.
அவனைத் தேற்றி விட வேண்டும் என்று அவளும்
அவளைத் தேற்றி விட வேண்டும் என்று அவனும்
கையறு நிலையில் கொண்டு வந்து இருத்தி
என்ன காணப்போகிறது இந்த காதல்?

Recent Posts