Advanced Search

Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 85இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 86இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#086


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
23
Birthday Wishes / Re: Happy Birthday RiYaNa Queen
« Last post by iamcvr on May 27, 2025, 05:10:01 am »
🎉🎂 Happy Birthday RiYaNa queen 🎂🎉
Wishing you all the happiness in the world on your journey ahead!



Be Happy Keep Smiling Always!
24
Birthday Wishes / Re: Happy Birthday RiYaNa Queen
« Last post by Wings on May 27, 2025, 12:57:11 am »

Happy Birthday to the one and only Riyana Queen!
Today, the crown shines a little brighter, and the world feels a little more magical – because it's YOUR day!

Grace, fire, and royalty all rolled into one and its U
Keep slaying, keep glowing, and keep ruling our hearts like only a true queen can.

Long live the QUEEN – Riyana!
Let the celebrations begin!



what time does shell gas station open
25
Birthday Wishes / Happy Birthday RiYaNa Queen
« Last post by RiJiA on May 26, 2025, 11:52:43 pm »
GLOBAL TAMIL CHAT
Team Conveys Birthday Wishes To Our Lovable Friend

🎆 RIYANA QUEEN'🎆
(27 May 2025)


🎊Happy Happy Birthday🎊


🥳Wishes Her All The Very Best & Good Luck🥳


26
You broke me in the quiet night,
With not a tear, not even a fight.
You walked away, left me to bleed,
And fed your pride on every need.

But no, I won’t return your pain,
I won’t let hate run through my vein.
Revenge is easy, bitter, cold—
But love is fire, fierce and bold.

So I will love you, still and true,
Though you don’t care what I’ve been through.
Each beat of love I give away
Will haunt your soul some distant day.

For you will know, in silent shame,
The one you hurt still spoke your name—
Not in anger, not in spite,
But in a dream of gentler light.

Your punishment is this: I feel,
I love, I break, but I still heal.
And you will watch, but never own,
The heart that once you called your own.


I have 2 translations kindly read which is good translation to the person who translate this thank you so much ungga sevai intha chat ku thevai thank you 🙏

First one
poetic translation of your English lines, preserving the emotional depth and lyrical style: --- நீ உடைத்தாய் அமைதியான இரவில், ஒரு கண்ணீர் இல்லாமல், ஒரு சண்டை கூட இல்லாமல். நீ போனாய், என் உள்ளத்தை காயத்தாய், உன் அகந்தையை என் தேவைகள

நீ உடைத்தாய் அமைதியான இரவில், ஒரு கண்ணீர் இல்லாமல், ஒரு சண்டை கூட இல்லாமல். நீ போனாய், என் உள்ளத்தை காயத்தாய், உன் அகந்தையை என் தேவைகளால் ஊட்டினாய். ஆனால் இல்லை, நான் உன் வேதனையை திருப்பி கொடுக்கமாட்டேன், வெறுப்பை என் ரத்தத்தில் ஓட விட மாட்டேன். பகை

எளிது, கடுமையானது, குளிர்ந்தது— ஆனால் காதல்...

அமைதியான இரவில் என்னை உடைத்தாய், ஒரு கண்ணீரும் இல்லாமல், சண்டையும் இல்லாமல். நீ நடந்தாய் சென்றாய், என்னை ரத்தம் சிந்தவிட்டாய், உன் பெருமைக்கு என் தேவைகளை உணவாக்கினாய்.

ஆனால் இல்லை, உன் வேதனையை நான் திருப்பி தர மாட்டேன், என் இரத்தத்தில் வெறுப்பை ஓட விட மாட்டேன். பகை என்பது எளிது, கடுமை மிக்கது, குளிர்ந்தது— ஆனால் காதல், அது தீ போல, கடுமையானது, துணிச்சலானது.

Second one

கடந்து சென்ற காதல் title

நிசப்தமான இரவில் என் நித்திரையை களைத்து சென்றாய், கண்ணுருடனுமல்ல

கலக்கம் கொள்ளும் சண்டையுமல்ல.

நீயோகடந்து சென்றாய் எனதுள்ளமோ இரத்தம் சிந்தும் வேதனையில்.

உனது தேவைகளே பெருமை கொள்ளும் உனக்கான உணவு,நான் உனக்கு பதிலாக வேதனை தரவிரும்பவில்லை.

எனது இரத்த நாளங்களில்வெறுப்பென்பதும் இல்லை, பழி தீர்பதெளிது கசப்பும் வெறுப்புமாக.

ஆனாலும் காதல் தந்து தீரம் நெருப்பினை சுமக்கவல்லது.

ஆனாலும் காதல் தந்த தீரம் நெருப்பினை சுமக்கவல்லது..

எனினும் காதலிக்கிறேன் உண்மையுடன் இப்பொழுதும், நீ அக்கறையற்ற நிலையிலும் எனது ஒவ்வொரு துடிப்பும் உன்னை சுமக்கின்றது, நீ தூரத்தில் உனது ஆன்மாவில் இன்னும் உறைகிறேன்.

அமைதியாக ஓர் நாள் தலைகுனிவாய், உன்பெயர் சொல்லிய இதயத்தை உணர்ந்து.

இது கோவத்தில் நான் உமிழ்ந்தது அல்ல உன் தண்டனை இது தானா சொல்..

நேசித்தேன் உடைந்து போனேன் , இப்பொழுதும் குணமடைகிறேன் கடந்த நினைவுகள் கொண்டு.

இனி உனது என்ற என்னிதயம் நீ பார்க்க மட்டுமே இயலும், உனதென உணரமுடியாது.

நீ கடந்து சென்ற காதலில் இவ்வுலகை எதிர்கொள்கிறேன் துணிவுடன்.

நன்றி........



Thank you, dear team, for your understanding. I hope my poems carry the weight of my heart, and that the emotions woven within them are truly felt. Thamk you guys ….


27
"உடைந்த என் இதயம் பேசுகிறேன்"
"கண்ணீரில் கரைகிறேன், கவிதையில் வாழ்கிறேன்,
உடைந்த என் இதயத்தின் வலியை
உரைக்கிறேன்"

"வானவில்லின் வர்ணங்களெல்லாம் கரைந்து போன அந்தக் கணம்,
வசந்த காலத்தின் பசுமையெல்லாம் கருகிச் சாம்பலான அந்தக் கணம்,
என் இதயமெனும் கூட்டில் நான் கட்டியிருந்த வண்ணக் கூடுகள் இடிந்து போன அந்தக் கணம்"

"என் உடைந்த இதயம்,
ஓயாத வலி,
கல்லால் எறிந்தாய்,
சின்னா பின்னமாய்,
வலியில் துடித்தேன்"
"உன் நினைவுகள் மட்டும்,
நீங்காத பொக்கிஷம்,
என் பேசாத மௌனம்,
என் கண்ணீரின் ஈரம்,
என் மனதின் பாரம்"

"நிழலாக நீயும் என் நினைவில் வாழ்கிறாய்,
மறக்க நினைத்தும் என் மனம் கேட்கவில்லை,
காலத்தின் கைகள் ஆறுதல் தரவில்லை"
"என் கண்ணீரின் சுவடுகள் காய்ந்திடவில்லை,
உன் நினைவில்லாமல் ஒரு பொழுதுமில்லை"
"உன் நினைவுகள் நிழலாய் என்னைப் பின் தொடர்கின்றன,
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் அது உன் பெயரை உச்சரிக்கின்றன"

"இரவுகள் நீள்கின்றன,
ஏனோ என் கண்கள் உன்னையே தேடி அலைகின்றன"
"தனிமையின் தாலாட்டில் என் இதயம் உறங்க மறுக்கிறது,
உன் நினைவுகளின் சுழலில் என் இதயம் சிக்கித் தவிக்கிறது"
"என் உயிர் மூச்சிலும்,
என் இதயத் துடிப்பிலும்,
உன் ஞாபகம் நிறைந்திருக்கிறது"
"கண்களில் கண்ணீர், நதியாய் பெருகி என் கன்னங்களில் வழிகிறது,
உடைந்த இதயத்தின் ஓலமாய் என் கண்ணீர் துளிகள் அது மண்ணில் விழுகிறது"

"என் ஒவ்வொரு கண்ணீரின் துளியிலும் ஆயிரமாயிரம் ஏக்கங்கள்,
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் எண்ணிலடங்கா சோகங்கள்"
"காலங்கள் கரைந்தாலும் என் இதயத்திலுள்ள உன் நினைவுகள் அழிவதில்லை,
என் விழிகளுக்குள் சிறைப்பட்ட உன் அழகிய பிம்பம் மங்குவதில்லை"
"நீ என்னை விட்டுப் பிரிந்த போதும், என் இதயம் உன்னைத் தேடும்,
ஒரு ஜென்மம் முழுவதும் இந்த ஏக்கத்தில் என் இதயம் வாடும்"
"இழந்ததை நினைத்து அழுவதில் பயனில்லை என்று என் மனம் சொல்கிறது,
ஆனால், என் இதயமோ அதை ஏற்க மறுக்கிறது"
"நீ இல்லாத வாழ்க்கை ஒரு வெறுமையான பாலைவனம்,
எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை உன் அன்பின் சோலைவனம்"
"ஒருவேளை காலம் மருந்தாகலாம், அல்லது அதுவும் பொய்யாகலாம்"
"காலம் அது ஆறாத ரணமாய் மாறலாம்,
அல்லது மறந்த நினைவாய் கரையலாம்"
"ஆனால், என் நினைவுகளின் ஆழம் மாறாது,
என் உடைந்த இதயத்தின் கதை மறையாது"


"மீண்டெழும் என் ஆன்மா"
"நம்பிக்கையின் ஒளிக்கீற்று,
மௌனத்தின் மொழியில் மனம் பேசிற்று"
"கவிழ்ந்த வானம் ஒருநாள் நிமிரலாம்,
காய்ந்த நிலம் ஒருநாள் துளிர்க்கலாம்"
"இருளின் ஆழத்திலும் ஒரு சிறு ஒளிக்கீற்று தெரிகிறது,
என் உடைந்த இதயத்திலும் ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர்கிறது"
"எரிந்த சாம்பலிலிருந்து எழுந்த பீனிக்ஸ் பறவையைப் போல்,
என் இதயமும் ஒருநாள் உயிர் பெறும்"
"என் வலிகள் நிரந்தரமில்லை,
கண்ணீர் மட்டும் என் அடையாளமில்லை"

"என் கண்ணீரின் கசப்பு காய்ந்திடலாம் மெல்ல மெல்ல"
"என் இதழில் புன்னகை துளிர்க்கலாம் மெல்ல மெல்ல"
"எனக்குள் மீண்டும் ஒரு காதல் வரலாம்,
காதல் புதிய ரூபம் எடுக்கலாம்,
என் சோகக் கண்ணீரின் நதி ஒருநாள் வறண்டு போகலாம்,
என் நெஞ்சில் புதிய சந்தோஷ நீரூற்றுகள் சுரக்கலாம்,
அல்லது நான் நானாக மலரலாம்,
என் உடைந்த இதயத்தை நானே மெல்ல மெல்லச் சீராக்கலாம்,
புதிய வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுகோலாக இருக்கலாம்"
"காலம் பதில் சொல்லும்,
உடைந்த என் இதயம் ஒருநாள் முழுமையாகலாம்"

"புது வசந்தத்தின் மெல்லிய அசைவு,
அறியாத ஒரு திசையிலிருந்து, மெல்லியதாய் ஒரு தென்றல்,
அது உன் வருகையின் முதல் அறிவிப்பாய் உணர்கிறேன்"
"வறண்ட என் வாழ்வில் பெய்த ஒரு மழைத்துளி,
அது என் நெஞ்சில் அழகிய பூவாய் மலரும்,
நம்பிக்கையின் நாற்று ஒன்று என் வாழ்வில் துளிரும்"
"நான் இழந்த நம்பிக்கைகள் மீண்டும் துளிர்விட,
உன் நம்பக வார்த்தைகள் எனக்கு உயிரூட்டிட"
"உன் பார்வை என் பழைய வலிகளைத் துடைத்தது,
உன் குரல் என் சோக ராகத்தை மாற்றியது,
உன் பாசத்தின் அரவணைப்பில் எனக்குள் காதல் மலர்ந்தது,
உன் அன்பின் ஒளியில் என் உலகம் ஒளிர்ந்தது,
உன் கரத்தின் அணைப்பில் யாவும் நிறைந்தது,
உடைந்த என் இதயம் மெல்ல மெல்ல ஒன்றானது"
"என் இதயத்தில் புதிய வசந்தத்தின் பூக்கள் பூத்தன,
நம்பிக்கையின் வழியில் என் இதயம் மீண்டும் உயிர் பெற்றன"

"நம்பிக்கை ஒருபோதும் இறப்பதில்லை நான் உனக்காக முழுமையாய் வாழ்கிறேன்,
உன் அன்பின் அணைப்பில் முழு பாதுகாப்பாய் உணர்கிறேன்"
"ஆம், மீண்டும் ஒருமுறை காதல் என் இதயத்தை வாழ்த்தியது,
உன் வடிவத்தில் எனக்கு ஒரு புதிய விடியலைத் தந்தது,
உன் அன்பு என் ஆன்மாவை முழுமையாக்கியது"
"உடைந்த நான், இப்போது ஒரு புதிய படைப்பு,
பயணம் தொடரும், உன் கையோடு கை கோர்த்து,
காதல் தீராது, காலம் கடந்து நிற்கும்"
"காயம் காய்ந்த இதயம் இப்போது பாடுகிறது,
நம் காதலின் மகிமையை, உலகறியப் பாடுகிறது"
"காதல் மிகவும் மென்மையானது"
"காதல் மிகவும் மென்மையானது"

"நம்பிக்கையோடு என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் அன்பிற்குரியவன் MISTY SKY 💜💜
28
Tittle Card ~கடவுள் அளித்த மறு உயிர்


மாலை நிழல்கள் மெதுவாக வீசும் நேரம் அது,

அந்தச் சாலையிலோ!

மனம் கனிந்த ஐந்தே வயது நிரம்பிய பொன் வண்ணச்சாரம்

பாதையில் ஏதும் கவனிக்காமல் வேகமாக ஓடிக்
ஓடிக்கொண்டிருந்தாள்

ஒரு நிமிடம், ஓரங்கால் மாறிய அந்த நொடியில்,

திடீர் உச்சத்தில் மோதி விழுந்தால் அவள்

வெடிக்கும் சத்தம்,
கண்ணீர் கலந்த கூச்சல்கள்,
அசைவில்லாத கைகளும் கால்களும்,

மருத்துவமனையின் வெறும் வெளிச்சத்தில்,
ஒரு வாழ்க்கை சிதறியதை உணர்ந்தாள் அவள்.,

அவளுடைய சிறிய மார்பு மெதுவாக உயர்த்தி இறக்கின,

வெளிச்சம் மறைந்த அறையின் மடியில்,
மருத்துவர்கள் விரல்களை வெற்றிடத்தில் சுழற்றினார்கள்

கண்கள் தேடியவை நம்பிக்கையின் ஒரு சிறு ஒளி மட்டுமே.!

ஆனால் நிமிடங்கள் ஓடி விட்டன,

சில நேரங்களில்!

விடாமுயற்சி வீழ்ந்துவிடும் மிதமான உவமை போல.

அவளின் விழிகளின் மேல் சாய்ந்தது வெற்றிடம்

அவளது கனவுகள் துளிர் விடுகிறது கனவுகளாய் மட்டுமே..,

அந்தக் கணத்தில் உலகமே சுழன்று கொண்டிருக்கும் பொழுது அவளுடைய உலகம்
மட்டும்,,! சுழலாமல்  நின்று போனது

மனம் கண்ட வெறுமையை அந்த கண்களும் கண்டது
அவளது விழிகள் மூடப்பட்டன

புகும் இருள் சூழ்ந்தது அந்த அறையை! 

இருந்தும்
.........................,,,,,,,..............................,,,,,,,........,,,,,,........,.........
சுழலும் உலகத்தின் கடிகார முட்களின் ஓசை சற்று கேட்கிறது!

ஒரு வண்ணத் தெளிவு போல,
அந்தக் கதிர் அவளுடைய உள்ளம் தீட்டியது,

கரம் ஈட்டிய அந்த கதிர் வெளிச்சம்
அந்த அறையை தத்தெடுத்துக் கொண்டன ,,

அவள் உயிர்த்தெழுந்தார் ஒரு புதிய ஜீவனின் தொடக்கம்,,

ஒரு நிகழ்வின் நிழல் கடந்து பிறந்த மறுஉயிர்!

ஐந்தே வயதை உடைய பொன் வண்ணச்சாரம் மீண்டும் மலர்ந்தது!! (God's Child)


#The_Child_Rises_Started_From_Here❤️⚡️
29
என் வலியின் அடையாளம்
இது ஒரு நிலை காணாத பதிவு…
பிறரை சிரிக்க வைத்த நாட்களில்
நான் அழுத சுவடிதான் இது.

மௌனத்தின் மொழியில் பதிந்த
மனம் கிழிந்த கவிதை…
பார்க்க ஒரு வரி போல் தெரிந்தாலும்,
படிக்க ஒரு வாழ்க்கை போதும்.

Title: காதலின் கானல் நதி

ஏழு ஆண்டுகள் எழுதப்பட்ட ஓர் நூல்,
அது முடிந்தது ஒரு கதையாய்,
ஆனால் பிறந்தது…ஒரு கவிதையாய்.

ஏங்கிய என் விழிகளில் நீர் சுமக்க,
ஏதோ ஒரு கனவில் மட்டும் நீ என் காதலியாக!!!

இங்கே எல்லாம் இருக்கிறது….
இனிமையான வீடு, உயர்ந்த வேலை,
உணவு, உரிமை.
இல்லாதது ஒன்றே ஒன்று….
இரவிலும் பகலிலும்
என் சுவாசத்தின் அரைபாதியாகிய
நீ… நானும்… நாமும்.

நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்,
தொலைவில் இருந்தும் விசாரிக்கிறாய்,
இருந்தும் நான் உனதில்லை என ஒப்புகொண்டவள் நீ…

ஆனால் ஏன்?

என் பக்கம் நிழலாய் நடக்கிறாய்?

ஏன் இன்னும் கவனிக்கிறாய்?
ஏன் நம் கையில் ஏதுமில்லை எனச் சொல்லிக்கொண்டே,
என் வாழ்க்கையின் துணையாய் நிற்கிறாய்??

நம் கடைசி பயணம்….
பேருந்தின் ஒரு பயணக் காட்சி.
நானோ நின்றேன்…
நீயோ சென்றாய்.

நான் நினைத்தது…
என்னை விட்டு சென்றது
ஒரு பேருந்து மட்டும்தான்…

ஆனால் இல்லை…
அந்த சுழற்சியில் சுழன்றது சக்கரம் மட்டும் அல்ல,
நீயே… என் காதலியான நீயும்
அதோடு சென்றுவிட்டாய்.

நான் சாலையில் நின்றேன்,
உன் திரும்ப வராமையின்
ஒவ்வொரு சத்தத்தையும்
நினைவாய்க் கேட்டுக்கொண்டே…

நீ ஒரு வலி… ஆனாலும் மருந்து.
நீ ஒரு புண்… ஆனாலும் பாசமாய்.
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்,
நிம்மதி.
அதே நேரம்,
நிம்மதியில்லா ஓர் நிலவை போல் நான்…

“நீ ஏன் இப்படி நடக்கிறாய்?”
எனக்கே தெரியவில்லை…
நிழலாக வாழ,
நேசித்தபடி விலக,
நினைத்தபடி மறக்க,
இது காதலா?

உனக்கு புரியவில்லையா இந்த வேதனை!

நீ நேசிக்கிறாய் இருந்தும் விலகுகிறாய்.
நீ நினைக்கிறாய் இருந்தும் நெருங்க மறுக்கிறாய் .
நீ வாழ்த்துகிறாய் இருந்தும் என்ன பலன்,
கடந்து செல்ல என் பக்கம் பாதை இல்லை.

இதுதானா உன் காதல்.
இருந்தும் இதுதான்,
என் நரகம்.

வெற்றி என் கையிலிருந்தும்
வெறுமையாக உணர்கிறேன்…
நீயின்றி!!

என் எல்லா துன்பங்களிலும்
நீ பின்னால் நின்றாய்…
என் எல்லா தவறுகளிலும்
நீ கண்டிப்பாய் இருந்தாய்!!!

என் எதிர்பார்ப்புகளை நீ தாண்டினாலும்,
நீ என் நிழலுக்கே ஒளியாய் இருக்கிறாய்.
இருக்கட்டும்… பரிதாபம்தான்.
தொலைவில் நீ இருப்பதை தாங்கிக்கொண்டேன்,
என்னால் முடியாதென்றும் தெரிந்தபோதும்
நீயே என் காதலியென்று நம்பிக்கையோடு இருந்தேன்.

நான் விரும்பிய அன்பில்,
நீ சுடர்விட்டு விலகினாய்…
என் உயிரின் ஓரத்தில் நீ இருந்தாலும்,
என் வசமாக இருக்காத கானல் நீர் போல் நீ…

எட்ட முடியாத நிழலாய்,
என் ஆசைகளைக் கரைத்தாய்.

நீ விட்டுப் போனது ஒரு நாள்…
ஆனால் நான்…. நீயில்லாத நாட்களைக் கடக்க
இன்று வரை முயல்கிறேன்.

Always peace ✌️
Harry Potter ❤️
30
இதயம் கொண்ட காதல்

உடைந்து போன இதயத்தில்
உறைந்து போன நினைவுகள் ,
நிறைந்து இருந்த நிம்மதியெல்லாம்
நிமிஷத்தில் நிலையற்று போனதடி....

உன்னை காணாத மனம்
மரணத்தை ருசித்ததடி,
சுற்றி பலர் இருந்தும்
சுயநினைவற்று போனேனடி,
விட்டுச்சென்றவள் உன் நினைவால்
விடையம் அற்றுபோனேனடி...

காதலில் திளைத்த இதயத்தில்
காயங்கள் தந்து போனாயடி,
காலங்கள் கடந்த பின்னும்
கனவுகள் கலைந்த பின்னும்
காத்திருந்தேனடி ...

இரக்கமற்ற காதல் வலி
இதயத்தை உடைத்ததடி,
இருந்தாலும் நான்
இறக்கவில்லை...

உன்னால் உடைந்த இதயம்
வலுவானது,

நீ இல்லா வாழ்கை பழகி
போனது.....

இயல்பு நிலையில் நான்
உணர்தேன் ,வியந்தேன் என் வலுவான
இதாயம் கண்டு,
இரக்கமற்றவளுக்கானது
என்னிதயமல்ல,
எதிர்காலம் உண்டு அதில்
என்வளும் உண்டு அவளுக்கென
உயிர் பெற்றதடி என்னிதயம்....
.......

நன்றி

உங்கள் நண்பன் God_Particle


Pages: 1 2 [3] 4 5 ... 10