அனைவருக்கும் வணக்கம் !✨✨💫நமது கற்றலின் எல்லையை விரிவு செய்யும் வகையில் நல்ல ஒரு தொடக்கமாக தினம் ஒரு திருக்குறள் இங்கு பதிவு செய்யப்படும் ....
💫திருக்குறள் தொடர்பான கேள்விகளை நமது GTC மன்றத்தில் உள்ள விளையாட்டு பிரிவில் வினாக்கள் கேட்கப்படும் .இதில் பங்கேற்று இதன் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
திருக்குறள் :
இயற்றியவர்: திருவள்ளுவர்
அதிகாரங்கள்: 133(௧௩௩)
குறள்: 1330(௧௩௩௦)
பால்: 3(௩)
சிறப்பு பெயர்கள்:
பொய்யாமொழி
முப்பால்
உலகப்பொதுமறை
தெய்வநூல்
வாயுறைவாழ்த்து
உத்தரவேதம்
திருவள்ளுவம்
வள்ளுவமாலை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
திருவள்ளுவர் :
குறிப்பு: (முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை)
செவி வழியாக வந்த செய்திகள் .....
ஊர் : சென்னையில் உள்ள மைலாப்பூர்
பெற்றோர் : ஆதி - பகவன்
மனைவி : வாசுகி
மரபு : வள்ளுவ மரபு
காலம் : கி.மு 31
சிறப்பு பெயர்கள்:
தெய்வப்புலவர்
பொய்யில் புலவர்
பெருநாவலர்
நாயனார்
தேவர்
முதற்பாவலர்
நான்முகனார்
மாதானுபங்கி
செந்நாப்போதார்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
திருக்குறள் சிறப்புகள்:
⭐தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவுள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை.
⭐திருக்குறளில் மொத்தம் 14,000 சொற்கள் உள்ளன.
⭐திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன.
⭐முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
⭐திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
⭐நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
⭐பனை, மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
⭐ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குறளில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும்.
⭐குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது.━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━