31
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-039
« on: March 10, 2024, 12:35:01 pm »என்னுள் நீயே...
இயல்பான ஓர் இனிய உறவில்
மென்மையாக நேசம் நிறைந்த புன்னகையோடு....
தன்னுள் விவரிக்க முடியாத அளவு
வலி நிறைந்த வழிகளில்
பயணித்த களிப்பு துளி அளவு இல்லாமல்...
தனக்காய் என்று, எண்ணம் கொள்ளாமல்
சலிக்காது தன் உயிரான அன்பின் வாசம்
பொழுதும் சேய் மீது விழ...
ஆசையாய் சேயின் அழகை ரசித்தே
அனைத்து இன்னல்களையும்
சிறிய சிரிப்போடு கடந்து...
தன்னை தாக்கியவை ஏதும்
தன்னோடு உறவாடும் சேய்க்கு சேராது
அனைத்து துன்பங்கள் தன்னோடு சேர்த்து
இன்பம் இனிதாக தன் சேய்யோடு பகிர்ந்து...
இணையற்ற அன்பை பொழிந்த அவள்
ஏனோ என்னுடன் இருக்க மட்டும் மறந்துவிட்டால்
நினைவில் கூட எனக்கு
இன்றும் ஆழகாய் காண்பிக்க
ஆழமாய் தன் உறவின் பதிவை
சற்றும் மறுக்கவோ மறக்கவோ இயலாது
அனைத்தும் அன்பாய் என்னுள் நீயே..
மீண்டும் கிடைக்குமோ 🥺
