Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Ruban

Pages: [1] 2 3
2
நானும் என் தோழயும் இருவரும் ஒன்றாய்
ஒரு அழகான மாலை வேளையில்
அழகான பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
இருவர் மட்டுமே இருக்கையில்

அழகிய நினைவுகள் வந்து வட்டமிட
அதை ரசித்தபடி என் தோழியிடம் பேசிக்கொண்டே
அவள் கையை பிடித்தபடி  நேரம்
செல்கயில் ஒரு தனி இன்பம் அவள்
என் தோழியாய் என்னோடு இருக்கையில்

இந்த உலகம்கூட சிறியது தான்
அவள் அன்பின் முன்
அவளே என் உலகமாக இருக்கிற போது
எதற்கு வெறுலகம் எனக்கு
என் அன்புக்கு உருவம் கொடுத்தவள்
அவளே என் அன்பு தோழியுமானவள்

அன்புக்கு நிகர் ஏதும் இல்லை
தேழிக்கு நிகர் யாருமில்லை
அவள் என்னோடிருக்கையில்
எனக்கு நிகர் ஒருவருமில்லை
என்று தோன்றவைக்கும் அவள் அன்பு

அன்பும் என்னோடிக்கிறது
அரவணைப்பும் என்னோடிருக்கிறது
அன்பும் அரவணைப்பும் இருந்தால்
ஒருவனுக்கு அகிலமும் அவன் காலடியில் இருக்கும்
அன்புக்கும் அரவணைப்புக்கும் அவளே அர்த்தம் தந்தவள்.


3
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY SHAA
« on: July 15, 2023, 07:06:52 pm »
Happy BIRTHDAY 🎂 Shaa bro
En kooda pirakkalanaalum neengalum enakku brother thaan ennai nesikkim anbu ithayame innai kaalangal senraalum naa maravene anbukkum panbukkum aaruthalukkum funnukku neethaan muthalil iruppaay innu un piranthanaalil ennangal aasaigal ellam valla iraivanin blessings ungalodu kooda eppavume irukkum Shaa bro ungalukku en HEART la irunthu solren bro wish you Happy BIRTHDAY SHAA bro GOD blessed and happiness to you bro💐❤️ LOVE YOU SHAA BRO ❤️💐

4
வணக்கம் SM Team

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால்  கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: சிங்கப்பெண்ணே

திரைப்படம்: பிகில்
பாடகர்கள் : ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

எனக்கு பிடித்த வரிகள்:

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே…ஹே
ஒருமுறை தலைகுனி
நீ ரெண்டு சிங்க முகத்தை
பார்ப்பதற்கு மட்டுமே

{ஏறு.. ஏறு.. ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு} (2)

உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
 பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இனியாதே


இந்தப் பாடல் Sanjuma க்கு மிகவும் பிடித்த பாடல் .

நான் பார்த்த சிங்கப்பெண்ண் உண்மையும் நேர்மையும் கொண்ட சிங்கப்பெண் எத்தனைத்தான் பழிகளும் பொய்யும் மனதை காயப்படுத்தும் வார்த்தைகளும் தன்மீது விழுந்தாலும் சோர்வாடையாமல் கெர்ஜிக்கும் சிங்கம் போல single laa நிற்கும் சிங்கப்பெண் தோழமைக்கு உண்மையாயிருக்கும் உண்மையுள்ள அன்பு தோழி சஞ்சனா.


நான் இந்த பாடலை SPECIAL DEDICATION SANJUMA க்கு. சிங்கப்பெண்ணுக்கு.

GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


என்றும் அன்புடன்
RuBaN

5
நான் எழுதும் இந்த வரிகள்
என் தாய் நாட்டிற்காய் போர் புரிந்து
மரித்த ஒவ்வொரு வீரர்களுக்கும்
எனது வரிகளை சமர்ப்பிக்கிறேன்

எங்கள் பாரத நாட்டை பாழாக்கும்
பாவிகளிடமிருந்து பாதுகாக்க புறப்பட்டனர்
எங்கள் பாரத திருமகன்கள் போர் வீரர்களாய்
பாயும் புலிகளாய் எதிரில் வரும் எதிரிகளை

நொறுக்க உயிர் கொண்டு எழுந்த
எங்கள் யுத்த வீரர்கள் அவர்கள் முப்படைகள்
பாரதம் என்பது எங்கள் உயிர் மூச்சு அதை
தொட நினைத்தால் போய்விடும் எதிரியின் மூச்சு

பாரதமே எங்கள் தாயடா தாய்க்கு நிகர் யாருடா
பிள்ளையை கருவறையில் சுமப்பவள் தாய்
நாட்டிற்காக மறித்த வீரர்களை
கல்லறையில் சுமக்கிறால் பாரதத்தாய்

எல்லையை காக்க எங்கிருந்தோ இருந்து
வந்த நாங்கள் இன்று ஒன்றாய் ஒருங்கிணைந்து
நிற்கிறோம் ஒரே தாயின் மகன்களாய்
பாரதத் தாயின் புதல்வர்களாய்

விண்ணிலே பறந்து எல்லையை காக்கும்
வீரமங்கைகளுக்கு முதல் வணக்கம்
விண்ணை கிழித்து சொல்லும் விமானத்தில்
எதிரியோடு விளையாடும் வீரமங்கைகள்

பாரத தாயின் மகள்களே நீங்கள்
தேசத்திற்கு கிடைத்த மாணிக்கங்கள்
இந்திய நாட்டை இமைய்ப் பொழுதும் காக்கும்
வீரமங்கையே நீ எதிரியை வீழ்த்தும் வேங்கையே

6
மனிதன் மாறினாலும் மாறாத ஒன்று காதல்

காதல் என்பது கல்லறை என்று
சொல்லி நகைப்பார்கள் ஆனால்
காதலின் கல்லறையும் நினைவுச்
சின்னமானது இன்று அந்த நினைவுச்
சின்னமும் அதிசயங்களில் ஒன்றானது


உண்மை காதல் காலம் சென்றாலும்
வாழும் வரம் பெற்றது
காலமும் மூன்றெழுத்து அந்த
காதலும் மூன்றெழுத்து காதலை
வாழவைக்கும் அன்பும் மூன்றெழுத்து


அன்று உள்ள காதல் அர்த்தமுள்ளதாக
இருந்தது ஆனால் இன்றோ காதல்
அரட்டையாகிவிட்டது இன்றும்
உண்மை காதல் ஆயிரத்தில்
ஒன்றாகத்தான் இருக்கிறது


காதலும் கல்லறையும் ஒன்றுதான்
இருமனம் ஒன்றானால் அது காதல்
இருமனம் பல மனங்கள் ஆனால் அது
கல்லறை இன்று கல்லறைகள் தான் பல
உள்ளது அதில் நினைவுகள் நிறைந்துள்ளது


நினைவுகள் ஒன்றாகி வலம் வரும் அழகிய
நேரம் அன்பு என்னும் அருவியில் ஆனந்த
நடனமிடம் அற்புத தருணம் இரு உயிர்
ஓருயிராய் மாறும் காலம் வண்ணங்கள்
நிறைந்த சோலைவனமானது மனம்


காலங்கள் சென்றாலும் மாறாதது இந்த
காதல் சின்னம் எத்தனை தான் எதிர்ப்புகள்
வந்தாலும் எதிர்கொண்டு சிரிக்கின்றது இந்த
காதல் உண்மை காதல் மரணித்தாலும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது


உண்மையாய் காதலித்துப்பார் மனம்
புதிதாகும் சிந்தை சிறப்பானதாகும்
உண்மை காதல் உன்னை புதியவன் ஆக்கும்
உண்மை காதல் அழகானது அதை
அலங்கோலமாக்கிவிடாதே.

7
Festival Day Wishes / Re: Happy First Anniversary GTC FORUM 2.0
« on: June 11, 2023, 12:15:09 am »
Wish you Happy First Anniversary GTC FORUM

9
HI FRIENDS....THIS IS MY DRAWING WITH GTC..HOPE YOU ALL LIKE IT...

THANK YOU GTC , COFFEE BOY, ISHAN AND SANJANA FOR THE OPPERTUNITY .....

10
My task main la user podura message a copy panni athoda itha seththu itha mattum thaan sollanm ( ithulam aniyayama ella? )

12
நண்பனே தோல்வியைக் கண்டு நீ ஓடாதே
தோல்வியை தாண்டி ஓடு
தோல்வி என்பது பெரிதாய் இருந்து உன்னை பயமுறுத்தினால்
நீ அதை பெரியதாய் எண்ணாதே
அதை தாண்டி செல் நீ
அதை தாண்டி செல்லும்பொழுது
வெற்றியின் வழியோ அழகாய் தெரியும்.

வெற்றி என்பது சிறு புள்ளிதான்
அந்த சிறு புள்ளையை அடைய வேண்டும் என்றால்
தோல்வி என்னும் பெரும் மையத்தை நீ தாண்ட வேண்டும்
தோல்வி உன்னை பயமுறுத்தலாம்
தோல்வி உன்னை நிலை குலைய வைக்கலாம்
தோல்வி உன்னை சோர்வடைய வைக்கலாம்
ஆனால் தோல்வியை எதிர்கொள்ளும் பொழுது
வெற்றி என்னும் மகுடம் உன்னிடத்தில் சேரும்.

மகுடத்தை அடைய மண்ணைக் கவினாலும் தவறில்லை
தோல்வியை கண்டு பின்னிட்டு ஓடாதே நண்பனே
தோல்வியைத் தாண்டி முன்னிட்டு முன் சென்று ஓடு
தோல்வி எனும் தடைகளைத் தாண்டு
தோல்வி என்னும் பிளவுகளைத் தாண்டு
தோல்வி எனும் சமுத்திரத்தின் அலைகளைத் தாண்டு 
தாண்டு தாண்டிக் கொண்டே இரு நண்பனே.

தோல்வி என்பது முடிவல்ல
வெற்றி என்றுமே நிரந்தரம் இல்லை
தோல்வியும் வெற்றியும் இரண்டுமே
உன்னை உயர்த்தும் படிகட்டுகள் தான்
தோல்வியிலே நீ கற்றுக் கொள்கிறாய்
வெற்றியிலே உன்னை நீயே வீரன் என்று அறிந்து கொள்கிறாய்
நண்பா நீ உன் வாழ்க்கையில் சிறந்தவனாய் விளங்க
வெற்றியும் தோல்வியும்  இரண்டும் அவசியம்.

இவை இரண்டையும் நீ பழக்கப்படுத்திக் கொண்டால்
இந்த உலகத்தில் உன்னை விட சிறந்தவன் யாருமில்லை 
வெற்றி என்பது கைகளை போன்றது
தோல்வி என்பது கால்களை போன்றது
நண்பனே நீ ஒரு கடினமான பொருளை எடுத்து நகற்ற வேண்டுமென்றால்
கைகள் மட்டும் போதாது கால்களும் வேண்டும் 
செயல்பட கால்களும் கைகளும் அவசியம்.

இந்த உலகத்தில் நீ சிறப்பானவனாக செயல்பட
வெற்றியும் தோல்வியும் அவசியம்
தோல்வியை கண்டு நின்று விடாதே
வெற்றிகாய் முன்னேறிக் கொண்டே இரு
உன்னால் முடிந்தவரை முன்னேறிக் கொண்டே இரு
வெற்றி உனதே.

Pages: [1] 2 3