Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - NATURE LOVER

Pages: [1] 2
1
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY DEVA
« on: March 09, 2023, 09:57:22 am »
Wish you a Happy Birthday Deva machi😍😍🎉🎉🎊🎊

2
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY DIMPLE
« on: March 08, 2023, 05:05:28 am »
Wish you a Happy Birthday to you Dimple machi🎉🎉🎊🎊

4
"விஞ்ஞானம் அறிவியலும் வளர வளர!!
"விஞ்ஞானம் அறிவியலும் வளர வளர!!
"ஏனோ விரக்தியும் அதிகமாச்சு!!

"விட்டில் இருக்க அடங்க மறுத்த காலம் போயி.... இப்போ வாட்ஸ் அப் உள்ளே நம் பழக்கம் முடங்கிப் போச்சு!!!
"கூடிப் பேசி சந்தோஷமாக குலவியது இப்போ குரலக் கூட மறந்து போச்சு!!!
"இந்த போதை மிகுந்த கைபேசியால் இங்கு பல உறவும் மறந்தே போச்சு!!!

"பக்கத்தில் இருப்பவனை ஏனோ பார்க்கக் கூட தோனல... பத்து நிமிடம் நம் கைபேசியை மறந்து பயணிக்க முடியல"...

"ஆறு அங்குல அளவுல நீ உலத்தையே அடக்கிவச்ச"
"ஓடி விளையாடி திரிஞ்சவன நீ ஒரு மூலையில இருக்கவச்ச"
"சுறுசுறுப்பா இருந்தவன சோம்பேரியா ஆக்கிவச்ச....  உடல் உழைப்பை மறக்கவச்சி அவன் கொழுப்ப ஏத்திவச்ச"
"முகம் அறிந்த உறவுகளை முழுசா நீ மறக்க வச்ச....  முகம் தெரியாத மனிதர்களை நீ முகநூலில் தேடவச்ச"

"முகநூலில் கணக்கு வெச்சு நம்ம முற்றிலுமா முடங்கிப் போனோம்!!!
"முகநூலில் கணக்கு வெச்சு நம்ம முற்றிலுமா முடங்கிப் போனோம்!!!
"சுக துக்கம் அனைத்தையும் அதன் சுவரில் எழுதியே உறங்கிப் போனோம்!!!

"செல்ஃபியைக் கானும் போது"
"செல்ஃபியைக் கானும் போது"
எனக்கு ஒன்று மட்டும் புரியுது
உலகமே அனாதயாய் இன்று உலவுதுன்னு தெரியுது"

"வாட்ஸ் ஆப், பேஸ் புக் என்று டெக்னாலஜி வளர்ச்சியை நோக்கி போகுது!!!
"மனிதனின் சுற்றமும், நட்பும் வீழிச்சியை நோக்கி போகுது!!!

"பல நூறு மைல் தொலைவை நிமிடத்தில் தாண்டினாய்....  பிரிந்து வாழும் உறவுகளை பக்கத்தில் காட்டினாய்"
"அவசர உலகத்தில் மிக அவசியமாய் ஆகின்றாய்....  அலைக்கற்றை பல கொண்டு அகிலத்தை ஆள்கின்றாய்"
"மக்களை கட்டிப்போடும் வித்தையில் நீ வல்லவன்"
"உன்னைச் சரியாக கையாண்டால் என்றும் நீ நல்லவன்"

"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!!!
"கைபேசியை அளவோடு பயன்படுத்தினால் நம் அனைவருக்கும் நன்று!!!

5
Festival Day Wishes / Re: Happy 1st Anniversary GTC 2.0
« on: January 14, 2023, 11:37:10 pm »
Happy 1st Anniversary to GTC

6
"பள்ளிக்கூடம் என்றுமே என் மனதில் பூங்காவனம்!!!...
"பள்ளிப்பருவம் என்றுமே என் நினைவில் பிருந்தாவனம்!!!...
"பள்ளிக்கூடம் என்னை ஈன்றெடுத்த மற்றொரு தாயின் சோலைவனம்!!!...

"என் தாயின் கருவில் பாதுகாப்பாக இருந்தேன்!!!
"இவ்வுலகிற்கு நான் கனவுகளோடு பிறந்தேன்!!!
" தாயின் பிரியாத அரவணைப்பில் அனைத்தும் உணர்ந்தேன்!!!

"வருடங்கள் கடந்தன திடிரென முதல் முறை பள்ளிக்குச் செல்ல ஒரு சின்ன பயம் உண்டானது"....
"என் மனதில் பயத்தையும், தோளில் புத்தகத்தையும் சுமந்தபடி பள்ளிக்கூடத்தை அடைந்தேன்... `அம்மா... அம்மா... என்ன விட்டுட்டு போகாதேம்மா என்று கதறி அழுதேன்"....
"என் அம்மாவோ என் குமுறல் அழுகையைப் பார்த்து கண் கலங்கி நின்றார்"....
"பள்ளிக்குச் சென்ற அந்த முதல் நாள் நான் ஒரு  அசத்துடனும், பயத்துடனும் அழுது கொண்டே பெண் ஆசிரியரின் முகத்தைப் பார்த்தேன்....
என் வகுப்பு பெண் அசரியரோ என்னை தூக்கிக்கொண்டு அழதே என் தங்கமே என்று கூறியது இன்றும் என் நினைவில் வைத்திருக்கிறேன்"....

"பள்ளிக்கூடம் என் உள்ளத்தில் அறிவை அள்ளிக் கொடுத்த ஞானச்சாலை"....
"என் பிஞ்சு விரல் பிடித்து அ...ஆ.... என்று சொல்லித்தந்த என் பெண் ஆசிரியரின் முகம்  31 வருடங்கள் கழித்தும் இன்றும் என் மனதில் பதித்திருக்கிறது"....
"பள்ளிக்கூடம் என் வாழ்க்கையின் பொன்னான பருவ நாட்களில் ஒன்று"....
"பள்ளிக்கூடம் என் நண்பர்களுடன் நான் சந்தோஷமாக குடியிருந்த நினைவுக்குடு"....
"பள்ளிக்கூடம் அன்று என் நண்பர்களுடன் துள்ளிக்குதித்து விளையாடிய ஆனந்தக்களம்"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது,  பந்துவீசி விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாடுவது மற்றும் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வது என பல சந்தோஷம் மிகுந்த அந்ந தருணங்கள் மிகவும் அற்புதமானவைகளே"....
"பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அந்த சந்தோஷமான தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியனவையே"....
"பள்ளிக்கூடத்தில் பள்ளிப்பருவத்தில் எனக்கு கிடைத்த என் ஆருயிர் நண்பர்களின் நட்பு  இன்று வரை எனக்கு கிடைத்த பொக்கிஷம்"....

"பள்ளி விடுமுறை தினங்களில் கூட பள்ளி செல்ல முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித ஏக்கம்"....
"நண்பர்களை காண முடியவில்லையே என்று என் மனதில் ஒருவித துக்கம்"....
"பரிட்சை நேரம்...வினாக்கள் இன்னும்... எத்தனை இருக்குன்னு எண்ணம்.. விநாடிகள் நகர.... பயமோ உதர.... நண்பனோ   விடை கொடுக்க....
பதில்  அளித்தேன் கை வலிக்க.... சந்தோஷமோ என் மனம்முழுக்க"....

"இப்படி என் பள்ளிக்கூட அனுபவத்தை சொல்லிக்கொண்டே போகலாம்"....
"என் வாழ்வில் மீண்டும் திரும்பக் கிடைக்காத அந்த நாட்களை எண்ணி திரும்பி பார்க்கும் போது கனத்த இதயமும் கண்களில் கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது"....
"கடவுள் என்னிடம் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்!!!
"எனக்கு என்னுடைய அம்மாவை திரும்பக் கொடு, எனக்கு என்னுடைய பள்ளி நாட்களை திரும்பக் கொடு என்று தான் கேட்பேன்"....

இப்படிக்கு
உங்கள் NATURE LOVER (இயற்கை நேசகன்)

8
வருடி விட்டு செல்லும்
உருவமில்லா காற்றைப் போல....
அவளின் அன்பில் நான் கரைந்து போய்விட்டேன்....
தேடினாலும் அவளின் அந்த அன்பு மீண்டும்
கிடைக்கப் போவதில்லை!!!!!
"பெண்னே உன்னுடன் நான் இருந்த நினைவுகளை
மறைக்கப்போவதும் இல்லை!!!
மறக்கப்போவதும் இல்லை!!!"

"முதல் முறை அவளின் அழிகிய நிலவு போன்ற முகத்தை பார்த்து தான் அழகின் பிரமிப்பின் உண்மையை உணர்ந்தேன்!!! ஆனால் இன்று அவளின் அழகிய நிலவு முகத்தை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய கண் விழிகளைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன்!!!
ஆனால் இன்று அவளையே என் விழிகளால் நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் பேச்சின் ஓசையை கேட்டு தான் ஓசையின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய பேச்சின் ஓசையை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை அவளின் அழகிய சிரிப்பின் ஒலியைக் கேட்டு தான் ஒலியின் அழகை உணர்ந்தேன்!!!
ஆனால் இன்று அவளின் அழகிய சிரிப்பின் ஒலியை நான் தேடிப் பார்க்கிறேன் எங்கும் கிடைக்கவில்லை"....
"முதல் முறை இப்படி ஒட்டு மொத்த அழகை படைத்த அந்த கடவுளின் அழகிய பிரம்மிப்பை கண்டு வியந்து போனேன்"!!!!
இன்று அவளின் பிரிவால் என்னையே நான் தொலைத்ததாக உணர்கிறேன்!!!

அவளின் மனம் புன்னகைத்த போது பூக்களும் மலர்ந்தது!!!
அவளின் மனம் வாடிய போது பூக்களும் வாடியது!!!
இங்கு பூக்கள் என்று நான் சொல்வது பெண்ணே உன்னைத்தான்! ஏனென்றால் பெண்னே நீயே ஒரு பூவைப் போன்றவள் தான்!!!
பெண்னே இன்று உந்தன் பிரிவால் என் மனமும் வாடிப் போனது!!!

சுவாசிக்க முடியாத ஒரு கிரகத்தில் என்னால் எப்படி உயிர் வாழ முடியாதோ, ஆதே போன்று தான் நீ இல்லாத இந்த வாழ்க்கையை வாழ நினைத்து வாழ முடியால் தினம் தினம் கண்ணீர் சிந்துகிறேன்!!!
பெண்னே உன்னையும், உன்னுடன் சந்தோஷாமாக கழித்த அந்த நாட்களையும் என்னால் மறக்கவும் முடியாது!... வெறுக்கவும் முடியாது!...

நம் உறவின் நினைவுகளை கண்ணீர் துளி விட்டு அழிக்க முயற்ச்சிக்கிறேன்!!
ஆனால் என் கண்ணீர் துளியிலும் கூட உந்தன் நினைவுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து செல்கிறதே தவிர, உந்தன் நினைவுகளை  மட்டும் என் மனதில் இருந்து என்னால் அழிக்கவே முடியவில்லை!!!

தினம் தினம் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும். எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளை சந்தித்து விடமாட்டோமா என்கின்ற அந்த ஒரு தருணத்தை எதிர் நோக்கி நான் என் மனதில் மகிழ்ச்சியோடும், சந்தோஷ்சத்தோடும், வலிகளோடும், கண்களில் கண்ணீரோடும் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். என்னவளே உனக்காக!!!

TRUE LOVE NEVER EVER FAILS !!!
உண்மையான காதல் ஒருபோதும் தோல்வியடைவதில்லை!!!

இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்

9
என் அன்பு  மகளே,

உன் தாயின் கருவில் நீ மலர்ந்தபோது 
இந்த உலகிற்கு என்னை அடையாளம்  காட்டினாய்,
இந்த பூமியில் நீ பூத்த போது உலகை 
எனக்கு அடையாளம் காட்டினாய்!"
தவமாய் தவமிருந்து எம் தாயின் உருவில் பெற்ற என் தேவதையே ! கண்ணே.! கண்ணின்  ஒளியே !

நீ பிறந்த அன்று
ரோஜாப் பூவாய் உனைக் கையில் ஏந்தி ஒரு
ராஜாவாக உணர்ந்தேன்  உலகையே வென்றவனாய்.!
பா.. அப்பா.. என முதன் முதலாக நீ
பவழ வாய் திறந்து தித்திக்கும் தமிழில் பேசியதும்...
தத்தித் தவழ்ந்து நடை பழகியதும் உன்னை
ஈன்ற பொழுதின் பெரிதுவந்த
இனிய தருணங்கள் இன்று நினைத்தாலும்
இதயம் சிலிர்க்கிறது .!

முதன்முதலில், என் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, உன்னை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த அழகிய நொடியை என்னால் மறக்கவோ, விளக்கவோ முடியாது. அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...

உன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், உன் முழு கையையும் வைத்து என்னுடைய ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே எனக்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே! 
தினம் தினம் உன்னுடன் விளையாடும் அந்த அழகான இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ என் மார்பில் எட்டி உதைக்கும் சுகமும், உன் அழகிய கொஞ்சல் சிரிப்பும் என்னை வீழ்த்தும் அஸ்திரங்கள். என் ராஜகுமாரி உன்னை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ முதல் முதலாக என்னைப் பார்த்து அப்பா என்று கூறிய போது நான் மீண்டும் இப்பூமியில் பிறந்ததைப் போன்று உணர்ந்தேன்...

என் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த  உனது பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், எனக்கு  ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் எனக்கு காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடியது... எங்கே நீ கீழே விழுந்து விடுவாயோ என்று நானும் உன்னுடன் சேர்ந்து குழந்தையாகவே மாறிப் போனேன்...

என் விரல் பிடித்து நடந்த என் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், என்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் எந்தன் உடல் எங்கும் பரவியது. அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? என் பெண் பிள்ளையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவிதமான உணர்ச்சியை என் மனதில் உருவாக்கியது. அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.

காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் என் பெண் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். என் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி.... என் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் என் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் என்னைப் போன்ற அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!

இப்படி ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே.

அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே

இறுதியாக சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. வருங்காலத்தில் எனக்கு திருமணம் ஆன பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தால் மிகவும் மகிழ்ச்சியாய் உணர்வேன்... மீண்டும் என்னுடைய அம்மாவே இந்த பூமியில் பிறந்தது போல மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், பேரானந்தமாகவும் உணர்வேன்...

சற்று பெரிய கவிதை தான். என் கவிதையை பொறுமையாக வாசித்து காட்டியதற்கு மிக்க நன்றி...

இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்

10
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY MELLISAI
« on: November 07, 2022, 08:04:36 am »
Wish you a very Happy Birthday Mellisai 🥳🥳🎉🎉
God bless you 🙌🙌

11
Birthday Wishes / Re: Happy Birthday SEMMOZHI
« on: November 02, 2022, 03:56:33 pm »
Wish you a very Happy Birthday to you Semmozhi... 🎉🎉🥳🥳

12
Hi Arjun and all GTC users.
சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் முதல் முறையாக இந்த வாரம் பங்கு பெறுவதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
எனக்கு பிடித்த பாடல்: காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா. அன்பென்றாலே அம்மா
திரைப்படம் பெயர்: நியூ(NEW)
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் மற்றும் சாதனா சர்கம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள்: வாலி
இந்த பாடலில் தாயின் பெருமை பற்றியும் தாய்க்கு பின்பு தாரத்தின் பெருமை பற்றியும் மிக அழகான வரிகளால் இந்த பாடல் அமைந்திருக்கும்.
இந்த பாடலை இந்த பூமியிலிருந்து மறைந்து விட்டாலும் என்றுமே என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாய்க்கு மற்றும் எனக்கு இனி வருங்காலத்தில் வரக்போகும் என் மனைவிக்கும் இந்த பாடலை ஒலிப்பரப்புமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்...
மீண்டும் அர்ஜூன் மற்றும் அனைத்து GTC நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....
இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன் (NATURE LOVER)

13
இந்த தீபாவளி பண்டிகையில்
வெடியோடு சேர்ந்து துன்பங்களும் வெடித்து சிதற...
அளவோடு வெடி வெடித்து
அளவில்லாமல் அன்பை பகிர்ந்து
இனிப்புகள் போல் இல்லமும்
உள்ளமும் தித்தித்து இனிதே கொண்டாடி
மகிழுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
கந்தக பூமி தந்த பட்டாசு பரிசுகளை வெடித்து
மகிழ்ந்து இனிதே இன்புற்று கொண்டாடி
மகிழுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
இனிப்புகளோடும் இனிதாய், வெடிகளோடும் வேடிக்கையாய், உறவுகளோடும் ஒன்றாய்
கொண்டாடுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
குடும்பங்களோடு கோலாகலமாய்,
சொந்தங்களோடு மகிழ்ச்சயாய்,
பட்டாசுகளோடு வண்ணமயமாய்,
தீபங்களோடு ஒளிமயமாய் கொண்டாடுங்கள் இந்த இனிய தீபாவளியை!!!...
நல்லது நினைத்து, நல்லது செய்யும்
அனைத்து GTC நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!...
இப்படிக்கு
உங்கள் இயற்கை நேசகன் (NATURE LOVER)

15
Birthday Wishes / Re: Happy Birthday AADHI
« on: October 09, 2022, 12:44:15 am »
Wish u a very Happy Birthday to you AADHI 🎂🥳🎂🥳🎂🥳

Pages: [1] 2