15
« on: January 23, 2024, 12:19:03 am »
இது அவளின் மனம்....
நேசத்தின் பிடியில் குறையாமல்....
நாட்களோடு தொடர்ந்த ஒர் பொழுது
எது ஏது என்று அறியாமல்....
நீங்காது நின்றே போனது
அதன் ஆழம் தெரியாமல்....
சொல்லித்தான் புறியுமோ அதன் ஆழம்
அவ்வளவு கொடிதா என்ன?
சொல்லி விட வேண்டும் என்றது எண்ணம்
மனமோ கூறாமல் அதன் நேசத்தை சேர்த்து வைத்தது....
ஏங்கியதா என்றால், இல்லையே
எதற்கு அந்த எக்கம்
என்னோடு தான் உள்ளது என்றது....
சேர்த்து வைத்த மனதிற்கு, அதன் தூரம் தெரியவில்லை
ஆனால் பாரத்தின் அளவு குறையகூடுமா?
நகரத் தொடங்கியது நாட்கள்
நேசம் குறையாத நினைவலைகளோடு....
நாட்களின் பாகங்கள் நிஜங்களாய் மீழுமோ
மீண்டாலும் நிஜங்களோடு சேர்க்காமல்
நினைவோடு மட்டுமே கடந்து போக என்னும்....
ஆனாலும் அந்த நேசத்தின் அளவு குறையாது
மறைத்தும் தன் அன்பை வெளிப்படுத்தும்....
ஏன் என்று தான் கேட்டு பாருங்கள்
கூறத் தெரியாமல் நடிப்பது போல் துடிக்கும்...
ஏனெனில் அது அவளின் மனம்....