1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-041
« on: April 12, 2024, 02:17:32 pm »
வாக்குரிமை நம் வாழ்வுரிமை !
வாழ்ந்து பார்ப்போம் வாடா என்றே தேர்தல் களம் நம்மை அழைக்கிறது !
இளைஞனே நம் குலம் காக்க எழுந்து வா !
நோட்டுக்கு ஓட்டென்ற காலம் போகட்டும் !
வீட்டுக்கு வீடு ஓட்டென்று ஆகட்டும் !
வாக்குறுதிகளை நம்பி
நம் வாழ்வுரிமைகளை இழந்த காலம் நீங்கட்டும் !
நம்மை நாமே செதுக்கும் காலம் நம் கையில் வந்துவிட்டது.
சிறுதுளி மை தானென்று சிந்திக்காமல் விரல் நீட்டிய காலங்களை விரட்டியடிப்போம்.
நம்மை ஆள்பவர் யார் என்றே நாம் தீர்மானிப்போம் !
நம் தீர்மானிப்பில் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாகட்டும் !
நாடாளுமன்ற தேர்தல் நடுநடுங்கட்டும் !
கடமையை செய்வோம் என்று கடமைக்கு ஓட்டிடாமல்.
நம் கடமைகளை யார் தம் கடமையாக எண்ணுகிறார் என்றே சிந்தித்து வாக்களிப்போம் !
ஒரு நாள் மட்டும் விரலுக்கு மை பூசி
வாழ்நாளெல்லாம் முகத்துக்கு கரி பூசும்
தேர்தல் திருவிழா அல்லவோ இது !
வாக்குறுதிகளை நம்பி நம் வாழ்வுரிமைகளை விட்டுக் கொடுக்காதீர் !
நம் வாழ்வுரிமைகளை நம்பி நம் வாக்குரிமைகளை தீர்மானிப்போம் !
வாழ்ந்து பார்ப்போம் வாடா என்றே தேர்தல் களம் நம்மை அழைக்கிறது !
இளைஞனே நம் குலம் காக்க எழுந்து வா !
நோட்டுக்கு ஓட்டென்ற காலம் போகட்டும் !
வீட்டுக்கு வீடு ஓட்டென்று ஆகட்டும் !
வாக்குறுதிகளை நம்பி
நம் வாழ்வுரிமைகளை இழந்த காலம் நீங்கட்டும் !
நம்மை நாமே செதுக்கும் காலம் நம் கையில் வந்துவிட்டது.
சிறுதுளி மை தானென்று சிந்திக்காமல் விரல் நீட்டிய காலங்களை விரட்டியடிப்போம்.
நம்மை ஆள்பவர் யார் என்றே நாம் தீர்மானிப்போம் !
நம் தீர்மானிப்பில் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாகட்டும் !
நாடாளுமன்ற தேர்தல் நடுநடுங்கட்டும் !
கடமையை செய்வோம் என்று கடமைக்கு ஓட்டிடாமல்.
நம் கடமைகளை யார் தம் கடமையாக எண்ணுகிறார் என்றே சிந்தித்து வாக்களிப்போம் !
ஒரு நாள் மட்டும் விரலுக்கு மை பூசி
வாழ்நாளெல்லாம் முகத்துக்கு கரி பூசும்
தேர்தல் திருவிழா அல்லவோ இது !
வாக்குறுதிகளை நம்பி நம் வாழ்வுரிமைகளை விட்டுக் கொடுக்காதீர் !
நம் வாழ்வுரிமைகளை நம்பி நம் வாக்குரிமைகளை தீர்மானிப்போம் !