Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
Re: BLACK & WHITE Ani SISS❣


April 24, 2023, 10:18:38 am
1
Re: கவிதையும் கானமும்-023 நான் தனிமையில் இருக்கும் போதும் காதல்..
என் அன்னையின் அரவணைப்பில் இருக்கும்போதும் காதல்..
என்னவரிடம் உரையாடும்போதும் காதல்..
இறைவனை வணங்கும்போதும் காதல்..

ஆம் காதல் எனக்கு இசையின் மேல் காதல்..

ஒவ்வொரு தருணத்திலும் இசை..
தூங்கும்போதும் இசை..
நம் அன்றாட பணியில் இருக்கும்போதும் இசை..
குழந்தை அழும்போது தாலாட்டும் ஒரு இசை..
காதலர்கள் கொஞ்சி கொள்ளும்போதும் இசை..
நண்பரின் பிறந்தநாளுக்கு இசை..
துக்க வீட்டிலும் இசை..

ஆமாம் இந்த உலகம் இயங்குவதிலும் கானம்..

பூக்கள் பூக்கும்போதும் கானம்..
பறவைகள் கூச்சலிடும்போதும் கானம்..
மழை சாரல் அடிக்கும்போதும் கானம்..
இன்று நம்மை கவிதை மழையில் நனைப்பதும் RiJiA வின் கானம்....

பசி தூக்கம் கவலை சந்தோசம் எல்லா நேரங்களிலும் இசையோடு வாழ்ந்து இசையின் பிரியராகிறோம்...

இந்த கவிதை எழுதும் பாரதியும் ஒரு இசை பிரியரே..



May 17, 2023, 01:30:28 am
1
Re: கவிதையும் கானமும்-023
மெத்த படித்த மேதைகளும், மெய்சிலிர்க்கும் பாடலொன்றை இசைமீட்ட கேட்கின்றேன்..! இசைக்கென்ற இனமுண்டோ? இதய ராகம் ஒன்றல்லவா அதன் மொழி..!

சலனமில்லா இருதயத்தில், சரணமது கேட்கையிலே சரணாகதி அடைகின்றேன்..!
இசையே போதுமென்று, இன்னிசையில் தஞ்சமடைந்தேன்..!

பட்டிக்காட்டில் ஒலித்தாலும்.. பாட்டுக்கொரு அர்த்தமுண்டு...! பட்டணத்தில் ஒலித்தாலும்.. பல்லவியில் புரிதலுண்டு..!

இசையின் பிறப்பிடம் இயற்கையென்பேன்..!
வாழ்வியலில் ஒன்றி போன, இசைக்கும் இயற்கைக்கும், பிரிவென்பதில்லை என்பேன்..!

இசையின்றி இல்லை இங்கே எவர் வாழ்வும்...!
இளவயதும் வயோதிகமும் விதிவிலக்கல்ல  இசை முன்னே யாவும்...!

 ஆராரோ தாலாட்டில், அழகாக அறிமுகமாகும் நம்மிடம்...! உறக்கத்திலும் தாயை போல தாலாட்டும் உறைவிடம் ..!

உருவமற்ற உணர்வலை..!
உற்சாகம், உவகை, காதல், கடமை , கோபம், நல்லது, கெட்டது , நட்பு, சொந்தம் என அனைத்திலும் பிரதிபலிக்கும் இதன் அலை...!

மொழிவளம் மெருகேறும் இசைவழி குரல் கேட்டால்..!.
ரணமான மனக் காயமும்,  மயிலிறகாய் மாறிப்போகும் இசைப் பாட்டால்...!

பிறப்பில் தொடங்கி, இறப்பிலும் தொடரும் இசை காதல்..!
ஒருமனதாக ஒலிக்கும் ஒற்றை காதல் இசை. .!
ஒப்பீடுகள் இல்லா ஓசை இசை..!

 புல்லாங்குழலில் புதைந்திருக்கும் இசை கேட்டு, பூக்காத செடியிலும் பூ மலரும்..!
வானத்தில் வளர்பிறையும் நீடிக்கும் வசந்த கானமதை கேட்டால்..!

மானுடர் அறியா நம் மனநிலையும், மறக்காமல் தெரிந்து கொண்டு பின்தொடரும் மாயக் கள்வன் இசை..!

யாதொரு வரம்புமின்றி, மாறி மாறி இசை மீட்டி, மனதை மயங்க வைக்கும் வசியக்காரன்.!

காதலர்களின் காவலன் இசை..!
காதல் சண்டைகள், சமாதானம், என அனைத்திலும், களமாடும் இசையின்றி, காதலும் இல்லை காதலர்களுமில்லை..!

நிஜமான நிழலாக நம்முடனே பயணிக்கும்..  இந்த இசையோடு இயைந்த காதல்.. என்றுமே நமக்கான காதல்..!

இந்த வாழ்வே சங்கீதமாய் மாறிப் போனால் தான் என்ன.?
இசையை மிஞ்சிய ஏதேனும் இவ்வுலகிலுண்டோ..? என்ற

கேள்விக்கான விடையாக.. இசைஞானியின் இனிய இசையுடன் இந்த இரவும் மெல்ல நகர்கிறது விடியலை நோக்கி...

May 17, 2023, 07:32:04 am
1
Re: கவிதையும் கானமும்-023 மனதைச் சுற்றி யுவன் பாடல்களே எனக்கு அதிகம்!! காற்றுக்குள்ளே
வாசம் போல என்ற பாடலை  பற்றி எழுதுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!!!!!

பாடல்கள் என்றும் வாழ்வின் புதிய அத்தியாயங்களின் தருணங்களை தருபவை அல்ல

அவை பழைய அத்தியாயங்களையே புதுப்பித்து திருப்பி தருபவைதான்

யுவன் நிகரில்லாமல்  கஞ்சா விற்று கொண்டிருந்த காலம் அது

 teetotaler முதற்கொண்டு இந்த போதையில் சிக்காதவர் யாரும் இல்லை

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒளிப்பதிவு

இதயத்திற்கு விருந்தாக நடு காற்றில் தனிமை வந்ததே என்று ஆரம்பமாகும் இந்த பாடல்

 காதலியே இல்லை என்பவருக்கும் ஒரு கற்பனை காதலியை ஏற்படுத்திவிடுவார்

பாட்டிலேயே மழை காடுகளுக்குள்ள ஒரு டூர் கூட்டிட்டு போவார்

ஊறிவரும் ஊற்றைப் போல

துளித்துளி தூரலாய் பாடலின் ராகம்

பரவி வரும் வான் மழையில்

பூங்குழலின் நாதம் போல

எழுத்தாளர் பா. விஜய்யின்  எதுகை மோனை இனிமை சேர்க்க

சிலிர்க்க வைக்கும் குரலால்

ஜீவன் உரசும் தருணமாய்  யுவன்  பாட

"மாறாதே" என்ற வரியில் சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று கண் முன்னே காட்டினார்

நடு வீட்டில் தனிமை வந்ததே

இந்த ஒரு பாடல் இதயம் தொட்டதே

மனம் மாறுதே...!!



Song Request ~~இந்த பாடலை எனக்காக ஒளிபரப்பு செய்தால் சந்தோஷப்படுவேன்

Movie : Sarvam

Song : kaatrukulle

May 17, 2023, 10:49:48 am
1
Re: Memorable Persons in GTC Chat And Forum Jesi PVT Dhan Always Miss Pandren😅♥️
May 23, 2023, 02:50:54 pm
1