Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1]
Post info No. of Likes
🏵️🏵️🏵️வலி🏵️🏵️🏵️ இந்த பூமிப் பெருவெளியில்
பெருந்துயரோடு,
வலிகளின் விளிம்பில்
உள்ளவனும் நம்மை கடப்பான்.
அதே வலிகளில் விரக்தியுற்று,
அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான்.

உள்ளே வலிகளின் ரத்தத்தில்
நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி,
பரிதாபமாக வாடுபவனும்
நம்மை கடப்பான்.

மானத்தை காத்துக் கொள்ள
சாதுரியமாக வலிகளை மறைத்து,
உன்னை கடப்பவன் ஒருவன்
சில போது,
வாடாத புன்னகையை கூட உதிர்ப்பான்.

உயிரை மாய்த்துக் கொண்டால் என்னவென்று எண்ணி,
வலிகளின் பள்ளத்தாக்கில் சிக்குண்டு
மூச்சித் திணருபவனும் நடப்பான்.

வாழ்க்கைச் சாலை
அப்படி யாரிலிருந்தும்
வலிகளை ஒதுக்கி,
இன்பத்தை மட்டும் நுகர
வழி விடுவதில்லை.

நீ கடக்க வேண்டிய
மொத்த நாட்களின் பாதியையே
விழுங்கித் திண்ணும் அளவுக்கான வலிகளை பெற்றிருந்த போதும்,
அதையும் சுமந்து கொண்டேனும்
நீ நடந்தே தான் தீர வேண்டும்
என்பதுவே வாழ்வின் கட்டளை.

இங்கே நம்மை கடப்பவனுக்கும்
நாம் கடப்பவனுக்கும், நமக்கும்
தேவை ஒன்று தான்.
அப்பிக் கிடக்கும் வலிகளை
உளரிக் கொட்டி விடவும்,
கொட்டித் தீர்த்து விடவும்,
சொல்லிக் கதறி அழவேனும்
ஓர் தயவான, கனிவான
ஆத்மார்த்தமான நேசம் ஒன்று தான்.

வலிகளை பகிர்ந்து கொள்ள
யாரும் இல்லாத போது,
உண்டாகும் வலிகளைப் போன்ற
ஓர் உயிர் கொள்ளும்
அசுர வேதனை வேறேதும் இல்லை.

வலி பெற்றதே...
ஓர் மனிதன் மூலம் தான் என்றாலும்,
அதை இறக்கி வைத்து
தேற்றிக் கொள்ள தேவைப்படுவதும்,
இன்னோர் மனிதனின் தோள்கள் தான் என்பதே
இவ்வாழ்வின் அழகிய விதி.

March 12, 2023, 06:30:39 am
1
ரணம் மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.

April 07, 2023, 08:45:50 am
1
சுயம்💐 ஒருத்தவங்கள விரும்புறீங்க
அவங்களுக்காக எல்லாத்தையும் மாத்திட்டு
அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கீங்க.
இந்த சூழ்நிலையில அவங்க வெறும் வெறுப்பையும்,
அவமதிப்பையும் மட்டுமே தந்தாங்கன்னா நீங்களே ஒதுங்கீருங்க.

மொத்த சுதந்திரத்தையும் பறி கொடுத்து
ஒரே ஒருத்தருக்கு மட்டுமே புடிச்ச மாதிரி
இருக்க முயற்சி பண்றது முட்டள்த்தனம்.
எல்லா கட்டுப்பாட்டையும் உடைச்சி,
உங்களுக்கு நியாயம்ன்னு பட்டத,
புடிச்சத, எதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொன்னாங்களோ,
அதையெல்லாம் செய்ங்க.

அதுக்கு அப்ரம் வெறுப்பு அதிகமாகி
விலகி போனா போகட்டும்
புரிஞ்சி திரும்பி வந்தா வரட்டும்.
எவ்வளவு மெனக்கெட்டாலும்
நம்மல வெறுக்குறவங்கள விரும்ப வைக்க முடியாது.
அப்டியே விரும்புனாலும் அது நிலைக்காது.

பிரியத்தை திணிக்க முடியாது.
அது இயற்கையின் விளைவுகள்
போல தானே நிகழும்! ❣️

April 11, 2023, 09:32:31 pm
1