Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2 3 ... 5
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-024 ஊடல் பொழுதினில் நான் வெல்ல நினைப்பது அவனை அல்ல என்னை, அவனிடமே செல்லும் என் மனதை...

அவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் உள்வாங்கி ரசிக்கும் நான் அவனின் ஊடலையும் காதலுக்கு நிகராக ரசிக்கிறேன்..

ஏன் எனில் அவன் ஊடலில் வெளிப்படும் அக்கறை காதல் கரையும் நொடிகளை விட பொக்கிஷம் ஆனவை..


என் உணவை மறக்கும் வேளையில் அவனின் கோபம் தாய்க்கு நிகரானது
.

வீடு திரும்ப தாமதம் ஆகும் நொடிகளில் அவனின் கோபம் தந்தைக்கு நிகரானது


என் துயரங்களை அவனிடம் மறைக்க முயன்றும் அவன் அறியும் தருணத்தின் கோபம் உற்ற தோழிக்கு நிகரானது.



அவனின் கருத்தை ஒதுக்கி நான் சுயமாய் எடுக்கும் முடிவுகளில் அவனது கோபம் ஆசானுக்கு நிகரானது...

பிறர் உடனான ஊடலில் ரௌத்திரம் கொள்ளும் அவன் முகம், என்னுடன் சிறு பிள்ளையாய் சண்டை இடுவது என்ன விந்தையோ...

பல பரிமாணங்களில் அவன் ஊடல் கொண்டாலும் அவனிடமே மையல் கொள்ளும் மனதை நான் வரமாக பெற்றேனோ...


இல்லை ஊடல் பொழுதிலும் தாய் பறவையாய் தன் சிறகுகளுக்குள் காக்கும் அவனையே நான் வரமாக பெற்றேனோ....

இனி அவனுடனான அனைத்து பிறவிகளிலும்
நான் வேண்டுவது...

ஊடலில் அவன் சூரியனாய் என்னை பொசிக்கினாலும் அவனுக்காகவே மலரும் சூரிய காந்தியாக பிறக்க வேண்டும்...

சுயமரியாதையில் கட்டுண்டு அவனை விலக நினைக்கும் மனதை பெறாமல் இருக்க வரம் வேண்டும்....

அவன் பாறையாய் இருகினாலும் பாறையின் இடையில் வேர் விட்ட கொடியாய் அவனுள் மலர வேண்டும்....

ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும் அவன் கண்களை காதலுடன் சங்கமிக்கும் வரம் வேண்டும்.....






 

May 25, 2023, 02:08:13 am
1
Re: கவிதையும் கானமும்-027
கலி யுகத்தில் கடவுள் தோன்றுவதில்லை என்பர், காவல் தெய்வமாய் நீங்கள் இருப்பதை அறியாதவர்....

தொல்காப்பியத்தின் நடுகல் தொடங்கி இன்றைய புதுக்கவிதை வரை உங்கள் வீரத்தை பறைசாற்றாத நூல் தமிழில் உண்டோ...

மதம் மொழி இனம் அனைத்தையும் கடந்து பாரதம் ஒன்றே மூச்சு தாய் திருநாட்டை காப்பதே கடமை என்று ஒன்றாய் சேர்ந்த சக்தி நீங்கள்...

கடும் குளிரிலும் அசாதாரண சூழ்நிலையிலும் உன் மன உறுதியினால் இயல்பாய் பொருந்திப் போனவன் நீ....

கைபேசி அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மட்டுமே கொண்டு வருடம் முழுக்க குடும்பத்தை மனதில் சுமப்பவன் நீ...

தீய சக்திகளிடம் இருந்தும் பேரிடரின் பொழுதும் உன் உயிரை துட்சமாய் மதித்து எங்கள் உயிரை காப்பவன் நீ....

உன்னை ஈன்றவளும் உனக்குள் கலந்தவளும் உன்னால் பிறந்தவளும் பெருமிதம் கொள்ளும் பேராண்மை நீ...

ஒரு நடிகனுக்கு கிடைக்கும் புகழை விட ஒரு ராணுவ வீரனுக்கு பேரும் புகழும் கிடைத்திடல் வேண்டும்...

ஒவ்வொரு ராணுவ வீரனின் குடும்பத்திற்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும்....

போரில் வீர மரணம் எய்தியவரின் குடும்பத்தை தாங்கிப் பிடிக்க கரங்கள் நீள வேண்டும்...

அவன் தலைமுறையே பசி இன்றி தன்மானத்துடன் நிறைவாய் வாழ வழி செய்ய வேண்டும்...

வீரக்கனவனை இழந்த கைம்பெண்ணை மணக்க மனங்கள் பெரிதாக வேண்டும்....

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் வீட்டிற்கு ஒரு ராணுவ வீரனை அனுப்பும் உறுதி வேண்டும்....

காவல் தெய்வமாய் நீ இருப்பதால் கவலை இன்றி நாங்கள் உறங்குகிறோம்... அதற்கு கைமாறாய் உன் குடும்பத்தையே காக்கும் பொறுப்பு எங்களுக்கும் உண்டு... நிம்மதியுடன் உறங்கு தோழா....

வந்தே மாதரம்....






July 08, 2023, 12:45:47 pm
1
Re: கவிதையும் கானமும்-028 நெடுந்தூர பயணம் என்னவனோடு....

வாழ்க்கை என்னும்
இலக்கில்லா பயணத்தில்
இலக்கை எட்ட
சில வரைவுகளால் வரையப்பட்ட
ஓர் காதல் பயணம்...

தொலைதூர பயணத்தில்
என் காதலோடு தொலைகிறேன் நான்.........
தீரா காதலோடும்,
என் மன முழுதும் தித்திப்பிலும்
பயணிக்கிறேன் நான்.......

ஏனோ !!
அவனோடு இருக்கும் தருணம்,
அகிலத்தில் நிசப்தம் காண்கிறேன்....
ஆரவாரம் செய்யாமல்
மனதுக்குள் சதிர் ஒன்றை எண்ணுகிறேன்...

அவனோடு இருக்கும் தருணம்,
புது உலகம் ஒன்றையும்,
புதுமை அனுபவத்திலும்,
வானம் வசப்பட்டு மும்மாரி கொண்டு
வாழ்த்துரைப்பையும் உணர்கிறேன் நான்......

அவனோடு இருக்கும் தருணம்,
இளங்காற்று வீசும் திசையில்
அசையும் சாலை ஓர மரங்கள்
ஏதேதோ ஒரு சல சலப்பு சஞ்சரிக்கிறது...
இதில், குயில்களும் குருவிகளும்
புதியதாய் இந்த காதல் பயணத்துக்கு
இசை மீட்டுகிறது...

தென்றலின் மெய் தீண்டலில்  ..
இதயத்தில் ஓர் இணக்கம் ஒன்றை ஏற்படுத்துகிறது....

என்னவனோடு,
நீண்ட தூர பயணத்தை
இனிமையாய் நீளச் செய்கிறது.....


July 24, 2023, 02:17:24 pm
1
Re: கவிதையும் கானமும்-028 அன்றொரு நாள்
கனவில் நான் கண்ட நாள்
மலைகளின் இளவரசியின் மடியில்
மழை சாரல் வருட
என் விரல் பிடித்து நடந்துக்கோன்றிருந்தாய் நீ
என்னவன் எனக்கானவன் என்னோடு எனக்காகவே
என்ற பெருமிதத்தில் நான்

காதலிக்க ஆரம்பித்த அந்த நாள் முதல் இன்று வரை
நான் மட்டுமே உலகம் உனக்கு...

உனக்கு என்ன பிடிக்கும் மாமா ?
என்று நான் கேட்க
உன் சந்தோசம்தான்  என் சந்தோசம் என்று
சொல்வதோடு நிற்த்தவில்லை நீ

நான் அழும்போது
உன் கண்களில் முட்டி நின்ற கண்ணீர்

என்  கனவுகளை
உன் கண்களில் சுமந்து நின்ற அந்த தருணங்கள்,

நான் இருக்கேன் செல்லம்
என்ற உன் வார்த்தைகள்,

எல்லா காதலர்களும் பேசிகொள்வதுதானே
நீயோ பேசுவதோடு நிற்காமல் வாழ்ந்து காட்டுகிறாய்,

என் சுமைகளை என் தோளில் சுமந்து நின்றேன்
நீ வந்தாய் அதிகம் பேசாமல் அலட்டிகொள்ளாமல்
அமைதியாக தோள் கொடுத்தாய்
பிரம்மித்தேன்!

எனக்குள் இருக்கும் குழந்தை தனத்தை
அதிகம் பார்த்தவன் நீ
அரவனைத்தவன் நீ.....

அப்பா.......
ஈடு செய்ய முடியாத ஒரு உறவு உண்மைதான்
ஆனால் எனை ஈன்ற தாயையும் தாங்கும்
நீ ஈடு இணை இல்லாதவனடா.....

எங்கிருந்து வந்தாயோ
ஏன் தாமதமாக வந்தாயோ தெரியவில்லை
 
ஒன்று மற்றும் தெரியுமடா மாமா
இந்த பயணம் என்றும் முடியாதடா!!!!


            Nilaaaaaaaaaa!!!!!!

July 25, 2023, 08:45:01 pm
1
Re: கவிதையும் கானமும்-028 பேருந்தில் நீ என்னக்கு ஜன்னல் ஓரம் ஆனால்   இப்பொழுது நாம்  பயணிப்பது
சுற்றும் திறந்துள்ள  உள்ள இரு சக்கர வாகனம் !

ஒரு ஆணின் வெற்றியின் பின்னால்  பெண்ணுள்ளாள்  என்பது
இந்த படத்தின் மூலமாக தெளிவு பெற்றது !

நம் பயணத்தின் பொது எராளமான காட்டிச்சிகளை காண்பதுண்டு
ஆனால் பெண்ணே நான்  சாலையை காண்பதை விட
வாகன கண்ணாடியில் உனையே காண்கிறேன் !

நாம் வாகனத்தில் செல்லும்போது காற்றுகூட நம்மீது கோபம் கொள்கிறது
இடையே நுழைய இடம் இல்லையென்று !

சூரியன் ஒளிகூட என் மீது கோபம்  கொள்கிறது
எனது நிழலை கொண்டு உன்னை மறைத்து கொள்கிறேன் என்று !

பெண்ணே பயணத்தின் பொது நீ உறங்கும் தலையணை ஆகிறது எனது முதுகு !

காற்றடிக்கும் போது உனது கூந்தல் முடிகள் என்னை வருடிச்செல்கின்றன!

சாலையோர பள்ளங்களில் பார்த்து பார்த்து வாகனத்தை செலுத்துகிறேன்
உனது தூக்கம் கலையக்கூடாது என்பற்காக !

செடியின் கோடி படர்வதுபோல் உனது கைகள்
என்னை பிடிப்பதற்க்க்கா படர்ந்து இருந்தது !

தூங்கி எழுந்ததும் உனது குறும்புத்தனத்தை என்மீது காட்டிடுவாய் !

இப்பொழுது நாம் கண்ட காட்சி  திருமணத்தின் பதாகை

காதலர்களாய்  இரு சக்கர வாகனத்தில் உலாவரும் நாம்

அந்த பதாகையை  பார்த்த பின் எப்பொழும் கணவன் மனைவியாக  வாழ்க்கையை
தொடங்குவோம் என்ற எதிர்பார்ப்பின்   பொழுது எடுத்த புகைப்படம் !!!


நன்றி

 

வான் _நீலம்

July 28, 2023, 11:01:58 am
1
Re: கவிதையும் கானமும்-028 தொலைதூரம் நீ இருக்கும் தருணங்களில்
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்கும் என் உள்ளம்..

என் நெருக்கத்தில் நீ இருக்கும் பொழுது
அடையும்  அளப்பரிய மகிழ்ச்சியை
சொல்லவா வேண்டும்?

காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...

உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்...
இளைப்பாற இடம் கேட்டேன்
இதயத்தில் இணைந்து வாழும்
வரம் கொடுத்தாய்..

துன்பக்கடலில் தத்தளித்த போது
துடுப்பாயிருந்து கரை சேர்த்தாய்
மறந்துப்போன மகிழ்ச்சியை
மறுபடியும் மலர வைத்தாய் நீ...

மௌனமாக பேசிட
உன்னிடம்   மயங்கித்தான்
போனது என் மனம்!

விடுதலையில்லா சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!

நித்தம் போகும் பயணம் தான்!
இருசக்கர வாகனத்தில் உன்னோடான பயணம்
எப்பொழுதும்  இன்பமாய் ஏனோ???
காதலுடனான இரு சக்கர வாகன பயணம்
அளவில்லா இன்பம் தரும் !!

என் காதல் மன்னவனே
இந்த நெருக்கம் என்றென்றும் வேண்டும்மடா...
இந்த நிமிடம் இப்படியே நீள..ள...ள...வேண்டும் என்று
இறைவனிடம்  வேண்டி கேட்கிறது உள்ளம்!!!

July 28, 2023, 04:33:47 pm
1
Re: கவிதையும் கானமும்-028 மழை சாரல்கள்
அவள் நாணங்கள்
இதழ் ஈரங்கள்
முடிவிலா  பயணங்கள்

இருள் சாலைகள்
பொழியும் நிலவுகள்
குளிரும் அணைப்புகள்
கூத்தாடும் இதயங்கள்

செதுக்கிய புருவங்கள்
எனை விழுங்கிய விழிகள்
மலரும் இதழ்கள்
மயக்கும்  வளங்க்ள்


என்னவள் எண்ணங்கள்
என்றென்றும் என்னுள்
உறையும் இந்நிமிடங்கள்
உலகமே உன் நினைவுகள்

உன் மூச்சுக்காற்றில்
என் உயிரின் அசைவுகள்
தேவதையே
உயிர் உள்ளவரை
உன்னை நேசிப்பேன்


 

July 28, 2023, 09:52:27 pm
1
Re: கவிதையும் கானமும்-028 ஒரு வரியில் அடக்கி விட்ட  ஒட்டுமொத்தம்...
அதில் ஒரு பங்காக இருக்கிறேன் நான் ம‌ட்டு‌ம்...

ஒரு வார்த்த வராதானு ஏங்குன...
இப்ப கண்டுக்காம தூங்குன...

பேசணும்னு தினமும்  துடிச்ச...
இப்ப அத மறந்துட்டு  சிரிச்ச...

உன் இசை என் காதுக்குள்ள..
கேட்க கேட்க எனக்கு போதை தள்ள...

நேத்து சொன்ன போகாதென்று...
இன்னிக்கு  மெளனம்  சாதிக்கிற போதாதென்று...

காதலும் இல்ல...காத்திருக்கவும்  இல்ல
ஏங்கவும்  இல்ல... ஏன் எ‌ன்று கே‌ட்க்கவும் இல்ல...

தூங்கவும்  முடியல...
சிக்கிறமாவும்  விடியல...

தொலைந்து  போகவும்  மனமில்ல
தொடர்ந்து பேசவும் அறிவில்ல...

கண்ணீர் வந்து வந்து  போகுது ஒரு ஓரமா...
நீயோ என்ன விட்டு விலகி போர
தூரமா...

கொஞ்சி பேசுன வாயால கெஞ்சி கேக்குறேன்...
உன்ன மட்டும்தானே நெஞ்சுக்குள்ள தாங்குறேன்...

கேள்வியோ மனசுக்குள்ள ஆயிரம் இருக்கு..
கேட்க்கடுமா  பதில் இருக்கா
அதற்க்கு?...

உள்ளத  சொல்லிட்டேன்  வெட்கம்  விட்டு...
மறு பேச்சு  பேசல உன்  வார்த்தைக்கு கட்டுப்பட்டு...

மூச்சு புடிச்சி வச்சிருக்கேன்  உனை  பாக்க...
கரை வந்து சேர்ந்துவிடு எனை மீட்க..


நடந்ததை   மறந்திடு ...
வா என்னோடு  கலந்திடு...

மீண்டும் கிடைக்குமா ஒரு  நீண்ட  பயணம் உன்னோடு....

இம்முறை இறுக்கி அனைத்து கொள்ளவேன் என்னவனை  பின்னோடு..

என்  இரு  கைகள்  பின்னிக்  கொள்ளும் உன்  முன்னாடி....

உன்  உதட்டோரம் வரும்  சிரிப்பு  காட்டும்மடா   இந்தக்  கண்ணாடி...

முடிவே இல்லாத பயணம்  நீள வேண்டும்...
நீல வண்ண மேகம்  தழுவும்  போதை  வேண்டும்....

July 28, 2023, 11:50:23 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035 Song name santhosa kannere
Movie name: uyire

Nan 1st love breakup ana apo nan romba keta intha song than

July 30, 2023, 07:54:19 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#035  >:(Hi sm team.and hi my dr gtc frnds Thanks friends  for ur love and support ..last 2 weeks melody song ah potu ungala thunga vachita so sryy for that ...so this week for change aniruth siva karthickayan combo la vantha song lyrics by vivika.... Movie name velaikaaran...song is karuthavan elam gaaijaa song 😍 i hope everyone love this song 🤗🤗
July 30, 2023, 07:59:03 pm
1