Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: 1 [2] 3
Post info No. of Likes
Re: Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்) 28 May

RJ RiJiA sis, i dont knw what to say...
வார்த்தைகள் தடுமாறுகிறது...
கண்ணீரில் தோய்ந்த காதலை நினைத்து வருந்துவதா அல்லது உங்கள் குரல் தரும் நிம்மதியை உணர்வதா...  உங்கள் குரலில் கேட்கும் என் சோக கதை கூட ரசிக்கும்படியாக இருந்தது...

Inthe feelings eh english or enthe language le kuude sollelam... But tamil le sollum bothu thaan athuku alagu & purithal kidaikum..  Athaan tamil font le typed 🤗...


You extremely talented sis..  You are the best RJ  in Gtc.. No doubt in that.. Thank u so much for the song...


Cant be missed our Best Poet of Gtc Barbie & Yash...  Kutty pasangala irunthalum talents shud appreciated.. Thats Anita's style 😎... 

May 28, 2023, 10:33:10 pm
1
Re: BLACK & WHITE Barbie doll the Poet 😍❤️

These are my fav lines

May 29, 2023, 12:00:35 am
1
Re: BLACK & WHITE Yash bro...  1st time seing a man who can think creatively..
Always ur lines best lah bro 😍

May 29, 2023, 12:04:53 am
1
Re: கவிதையும் கானமும்-025

புதிர் போன்ற வாழ்க்கையும் ஒரு புதிரடா..!
அறிய முற்பட்டும், அறிய முற்படாமலும்.. தோற்று போன புதிர்கள் எண்ணிக்கையே வெற்றிக்கு நிகரடா..!

நாளை என்றும் நம் நம்பிக்கையே ..
நடப்பதை நாளும் எதிர்நோக்கிடாமல்..
இதுவே நடக்கும் உலகை உருவாக்கு..
தொடரும் நொடிகள் நமக்கானது.. !
அதில் தொடர்ந்து செல்லும் பாதை பல முட்களானது..!

வெறுமனே கிடைப்பதில் இல்லை நிம்மதி..!
போராடி கிடைப்பதில் உள்ளது வெகுமதி..!!
சிரிப்புக்கான தேடலில் பல அழுகை இருக்கும்...!
நிம்மதிக்கான தேடலில் பல துன்பம் இருக்கும்...!

வெற்றியின் ஆரம்பமே தோல்வியில் தொடங்கும் பல புதிர்கள் தானடா..!
புதிர்கள் விலகும் நேரம் வெற்றி பயணத்தின் தொடக்கம் தானடா..!

வலிகளிலே தேங்காமல் வாழ்க்கை பயணத்தில் எதிர்‌ நீச்சல் அடிப்போம்..!
வாழ்வில் ஒளிந்திருக்கும் அத்தனை சுவாரசியங்களையும் ரசிக்க தோல்விகள் பல கடந்தே பயணிப்போம்..!

அடடா தோற்று விட்டேனே.. இனி என்ன இருக்கிறது? என எதிர்மறை எண்ணங்களில் துவண்டு போகாமல் கற்றும் கடந்தும் போக தோல்விகளில் கற்றுக் கொள்வோம்..!

தனித்துவங்களின் உச்சம் வெற்றி..!
ஆயிரம் விளக்குகளின் ஒளி வெற்றி..!
எண்ணற்ற கதைகளின் முடிவு வெற்றி..!
கிடைக்கும் நாள் தெரியாமல் ஒட வைப்பதும் வெற்றி..!

வெற்றிகள்.. பல தோல்விகளினாலே பிறக்கிறது.. !!

என் பேனாவின் எழுத்துக்களும் வெற்றியை நோக்கிய தேடலுடனே பயணிக்கிறது.. !!
திகட்டாத தேடல் இந்த வெற்றியின் தேடல்...!!
என்றோ ஒருநாள் இந்த வெற்றியும் நமக்கானதாகும்..!!
நம்பிக்கையுடன் பயணிப்போம்..

May 29, 2023, 04:29:02 pm
1
Re: BLACK & WHITE
Barbie doll the Poet 😍❤️

These are my fav lines

Anita sis  தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி (lots of love sis) ❤️

May 29, 2023, 09:45:56 pm
1
Prayer for the people dead in coromandel express accident in Orissa ஒரிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்தில் இறந்த 260 பயணிகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கிறோம். மேலும் ஆபத்தான நிலையில் 650 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நலம் பெற பிரார்த்திக்கிறோம்...

June 03, 2023, 07:51:56 pm
1
Re: இரயில் விபத்து
இலகுவான ஆறுதலை தரும் பயணங்கள்..
சக மனிதர்களையும் சகஜமாக பழக வைக்கும் பயணங்கள்..
எதிர்பார்ப்பின்றி உதவிக் கொள்ளும் பலநூறு மனங்களின் அன்புகள்...

இரசிக்க வைத்த பயணம் வாழ்வை புரட்டி போட்ட நிமிடங்களாக மாறிய கொடூரம் ஏனோ...

விழிகள் பார்க்க மறுக்கும் உறவுகளின் உருக்குலைந்த முகங்கள்..
எங்கும் எதிரொலிக்கும் மரணவோலத்தின் நடுவிலே தாயை தேடி அலையும் சிறுமியின் கால்தடங்கள்...

சில்லறையாக சிதறி போன உடலுடன் உடைந்து போன எத்தனை எத்தனை கனவுகள்...

பாத்து போய்ட்டு வாங்க..
போனதும் ஃபோன் பண்ணுங்க..
நல்லா சாப்பிடுமா..
நேரத்துக்கு தூங்குடா..
சீக்கிரம் வந்துடுங்க..

இது போன்ற எத்தனை பாசங்களை சுமந்து சென்றிருக்கும்..
வார்த்தைகளும் தடுமாறுது வலிகளை விவரிக்கையில்..


June 04, 2023, 03:56:22 pm
1
Re: காதலே
உன் முகம் பார்த்து நான்
நலமாக இல்லை..
நாட்கள் நகராமல் நின்று விடவில்லை..
எண்ணங்கள் தேங்கி போய் விடவில்லை..
முகவரியை தொலைத்து தேடி அலைய வில்லை..
என்றெல்லாம் பேச விரும்பவில்லை..

எங்கே உன்னை தேடுவதாக நினைத்து கொள்வாயோ...
உன் ஆறுதலுக்கும், அன்பிற்கும் அடிமை என்றெண்ணி விடுவாயோயோ..
என்று மனம் பதபதைக்கிறது..

ஒருவர் மட்டுமே தான் வாழ்க்கையா என்ன..?
முடிந்து போன வாழ்விற்கு முதலுதவி எதற்கு??
நான் ஒன்றும் கடந்து செல்ல முடியாத அளவு அன்பை வைத்து விடவில்லை உன்மேல்..
என் மகிழ்ச்சியான முகமே நீ காணும் என் நிரந்தர முகமாக இருக்கும்..


June 06, 2023, 11:58:08 pm
1
Re: காதலே
நிஜமான காதலே..

பக்கம் பக்கமாக கவிதை வேண்டாம்..
பாசமான பேச்சு வேண்டாம் ..
காதலில் கரைய வேண்டாம்..
கனவுகளில் வரவே வேண்டாம் ..

என் குறுஞ்செய்தி ஒன்றை கண்டு, உன் முகத்தில் பூக்கும் சிறு புன்னகை போதுமடா..

அதிகமான அன்பில் மனம் உன்னையே தேடுவதும்...
பிறகு பேசிக் கொள்ளலாம் என தள்ளி போட்ட கதைகள் பல உள்ளதும்..

சரி என்ற வார்த்தைக்கு பின் சரளமாக பேச நினைத்து பேசாமல் நிற்பதும்..
பேசும் போது அமைதியாக இருந்துவிட்டு பேசாத போது  உன்னையே தேடுவதும்..

விசித்திரமாய் இருக்கிறதே..
காரணங்கள் புரிய மறுக்கிறதே..
 
இறங்கி வருவதில் இரக்கம் காட்டினால் இடைவெளிகள் குறையுமடா..
எல்லைகள் இல்லையென்று தொல்லை தர முடிவெடடா..
நீதான் என் நிஜமான காதலே..




June 08, 2023, 10:56:27 pm
1
Re: கவிதையும் கானமும்-026 ஜோதா அக்பர் 💘💘
indilinrunthu naan jodha

 இந்த ஓவியத்தை பார்த்ததும் என் கண்முன்னே தோன்றிய உருவம் ஜோதா💜💜💜💜
 கத்திஜா என்ற பெயரையே ஜோதா வாக மாற்றிவிட்டேன்
 என் அக்பருக்காக💖💖💖💖
 அந்த அளவிற்கு என் மனதில் இடம்  பிடித்தவர்  அக்பர்.
 என்னை ஜோதாவாக உணர்ந்த தருணம் அனைத்து பெண்களும் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை, காதல், அக்கறை அதை அழகாக எடுத்துக்காட்டிய ஆண்மகன் அக்பர்.
 என்னை முழுவதுமாக கவர்ந்த ஒரு ஆடவன், எப்போது அந்த முகத்தை பார்த்தாலும் இனம்புரியாத காதலும், ஒருவிதமான ஆனந்தமும் என்னில் தோன்றும், என்னை கவர்ந்தவன் அகபர்.


 காதலுடன் தொடங்குகிறேன் எனது கவிதையை:


 இருவரும் எங்கோ இருக்க
இருவரும் எங்கோ இருக்க
 காலம் ஒன்றாய் சேர்க்கும் வரை
 பெண்மையின் தன்மையை அறிய மறந்தேன்
 என்னை ஆள்பவன் யார் என்றே
 மண்ணில் பிறந்த பெண் நெஞ்சு தேடும்
 அதை மறந்து குழந்தையையாய் அலைந்தவள்
 நாளும் சிறுகுழந்தையாய் விளையாண்டவள்

 மாவீரன் என்று உன்னை உலகமே போற்ற
உன்னை காணும் எண்ணம் எழவில்லை ஏனோ!

 காலம் கனிந்தது கண்முன்னே தோன்றினான் என் வீரன்
ஒரு கணம் என் இருதயம் நின்றது!

 சிலை போல்!

 வீதியெங்கும் விளையான்று
சுட்டியாய் திரிந்தவள்

 என் மாவீரனை பார்த்து அசையா மாது ஆகினேன்

 வார்த்தை ஊமையாகும்
 வார்த்தை ஊமையாகும்
 வார்த்தையும் ஊமையாகும்

 என்று அன்று தான் உணர்ந்தேன்
 உன்திருமுகம் கண்டு

 பேசும் வார்த்தை வரவில்லை
 நடக்கும் பாதையும் புரியவில்லை
 என் செய்வேனடா

 என்று முகம் புதைத்தேன்
 என் கைகளால்

 உலகமே உன் வீரத்தால் வென்றாய்
என்னையோ உன் பார்வையால் வென்றாய்
 என்னையோ உன் பார்வையால் வென்றாய்

 எதிர்த்து வரும் பகைவர் அனைவரும் உன் காலடியில்
 என் மன்னவனோ என் காலடியில்

 என்று நினைத்து நினைத்து மகிழ
 தன்னை தாழ்த்தி

 என்னை வென்றவன்

 மக்களே உன்னை காண தவம் கிடக்க
 என் ஒரு விழி அசைவுக்கு ஏங்கும்

 என் வீரன்
 என் மன்னன்
என் கண்ணாளன்

என் நெற்றியில்
 உன் நெற்றியை வைத்து

 என்னை உன் மனதில் வைத்தாய்

 நான் பெண்ணாக பிறந்ததற்கு
 ஒரு அர்த்தம் கண்டேன்

 உன்னால்

 உன் காதலினால் நாளும் பிறக்கிறேன்
 புதிதாய்

 நீ வந்தாலே எனக்குள் ஏற்படும் மாற்றம்
 என் நிலையை என் முகம் சொல்லும்

 உலக  நாடு போற்றும் மாவீரன்
 நீ
 நாடு போற்றும் மாவீரன்
 நீ
 உற்றவளை அணைக்கும் காதலனும் நீயே
 கண்ணில் தூசி பட்டால் துடித்த காதல்
 மத்தியில்
 தூசி கூட என்னை நெருங்காமல் காத்த காவலன்
 நீ

 உன்னை எண்ணி எண்ணி
வியாகிறேனடா
 நாளும்

 என் தவம் செய்தேனோ
என் மன்னவனை அடைய

எழுதும் வார்த்தை நிறுத்த
 மனமில்லை யடா

 உன் காதலை எண்ணி

 ஏழு சென்மம் வேண்டும்
 நீ என்னோடு
இது உங்கள் ஜோதா 💛💛💛💛💛

June 13, 2023, 12:17:44 pm
1