Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-048 ஒலிகள் நிறைந்த உலகில் உன்னுடன் நான் செலவிடும் நேரம்....
சில்லென்று தென்றல் வீச... காய்ந்து உதிர்ந்த இலைகள் கூட நடனமாடுவது போல் தெரிகிறது.......
விட்டுவிட்டு எரியும் மின்விளக்குக் கூட மின்மினிப்பூச்சி போல் தெரிகிறது....
புரியவில்லையா, தனிமையே உன்னால் நான் ரசனைமிக்கவள் ஆகிறேன்....
பலரும் அறிவதில்லை... பொய்யான உறவு தரும் வலிக்கு நீ துணையாய் வந்து வாழ்க்கையின் நிஜத்தை புரிய வைப்பது......
உன்னுடன் வாழ பழகி விட்டால் வாழ்க்கை இனிமையே.....
சொர்க்கம் தான்.... நீயும் இசையும் என்னுடன் சேர்ந்தால்....
முடிவில்,என்னை நான் ரசிக்கவும்.. .
ஏன்.. என் கற்பனையில் உன்னைப் பற்றி கவிதையை முயற்சித்து.. என் பேனாவிற்கு குரல் கொடுத்ததும் உன்னால்தான்....
தனிமையே உன் வழியில்தான் கேட்கிறேன் என் இதயத்தின் குரலை....
உன் வரவில்தான் அறிந்தேன், என் தனி மனவலிமையை..
என் காதலனாக நீ இருக்க ஆசை... காரணம், என் இறுதிக் கதிரவன் மறையும் வரை நீங்காத துணையாக நீ இருப்பாய்....
உன்னை இதுவரை ரசித்த எனக்கு, உன்னிடம் ஒரு வேண்டுகோள்....
உன்னிடம் விரும்புவது ஆறுதல் தான்...
காயங்களின் வலி அல்ல.. என்றும்,
எனக்கு ஆறுதலைக் கொடு....
வெறுமையை கொடுத்து விடாதே....
                                                         இப்படிக்கு, 
                                     தனிமையின் காதலி ஜாஸ்வி♥️

October 05, 2024, 07:46:18 pm
5