Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - AzhaGi

Pages: [1] 2 3 4
1
Birthday Wishes / Re: Happy Birthday Chuttiponnu
« on: Today at 12:01:50 am »
Happy Kuva Kuva Day Chutti sis😘❤️😘


2
Birthday Wishes / Re: Happy Birthday NANNA
« on: July 14, 2026, 01:55:22 am »
HAPPA BIRTHDAY NANNA.. 💐🧡


3
அம்மாவும் நானும்...

அம்மா,
நீ என்னை கருவில் சுமந்த நொடி முதல் அணைத்துக் கொண்டாய்,
நான் உன்னை உன் இறுதி மூச்சு வரை அணைத்துக் கொண்டேன்...

நான் ஒரு துளி உயிராய் உருவான நொடியிலிருந்து,
அவள் தனக்காக வாழ்வதை நிறுத்தி விட்டாள்,
எனக்காக மட்டும் வாழத் தொடங்கினாள்.
என் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும்,
அவளின் ஆயிரம் வலிகள் துணையாக இருந்தன...

பத்து மாதங்கள்…
தன் உயிரையே பணயம் வைத்து,
என்னை பொக்கிஷமாக சுமந்தாள்.
நான் சிரிக்க வேண்டும் என்பதற்காக,
அவள் எத்தனை முறை அழுதாளோ
அதை யாரும் அறிந்ததில்லை...

என்னை கையில் ஏந்திய நாள் முதல்,
நானே அவளின் உலகமானேன்,
அவளையே அவள் மறந்தாள்.
எனக்காக இரவுகள் முழுவதும் விழித்தாள்.
எனக்காக பசியோடு உறங்கினாள்,
எனக்காக கண்ணீரை மறைத்து சிரித்தாள்,
தனக்குத் தெரியாத உலகத்தையும் கற்றுக்கொண்டாள்,
எனக்குத் தெரிந்த உலகமாக மாற்றிக் கொடுத்தாள்...

“என் மகள் உயர வேண்டும்”
என்ற ஒரே கனவுக்காக,
தன் இளமையையே தியாகம் செய்தாள்,
தன் ஆசைகளை அடக்கம் செய்தாள்,
என் ஆசைகளை உயிராக வளர்த்தாள்.
நான் தோற்ற ஒவ்வொரு முறையும்,
என்னை விட அதிகமாக உடைந்து போனவள் அவள்.
நான் வென்ற ஒவ்வொரு நாளிலும்,
என்னை விட அதிகமாக மகிழ்ந்தவள் அவள்...

நிம்மதி தேடி,
பல முறை அவள் தோளில் சாய்ந்திருக்கிறேன்.
என் கதைகள் அனைத்தையும்,
சலிக்காமல் கேட்ட ஒரே உயிர் அவள் தான்,
என் அம்மா...

என் கண்ணீரின் மொழியை,
வார்த்தையில்லாமல் புரிந்த ஒரே இதயம்,
அம்மாவின் இதயம்...

நான் வாழ்வில் உயர வேண்டும் என்று,
தினமும் இறைவனிடம் வேண்டியவள் அவள்.
இன்று,
நான் உயர்ந்த இடத்தில் நிற்கிறேன்.
ஆனால்,
என்னை அந்த உயரத்திற்கு கொண்டு வந்த அவள்,
என்னை விட்டு உயர்ந்த உலகத்திற்குச் சென்று விட்டாள்.

இப்போது,
அவள் மடியில் தலை வைத்து அழ வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
என் கண்ணீரை துடைக்க,
அவள் கைகள் இல்லை...
“அம்மா” என்று ஒருமுறை அழைக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆனால்,
அந்த அழைப்புக்கு பதில் சொல்ல,
அவள் குரல் இல்லை...

இன்று என்னிடம் பணம் இருக்கிறது,
புகழ் இருக்கிறது,
வாழ்க்கை இருக்கிறது.
ஆனால்,
அம்மா மட்டும் இல்லை...

அவளுடன் வாழ்ந்த ஒவ்வொரு நினைவும்,
என் இதயத்தில் என்றும் உயிரோடு இருக்கிறது.

சில இரவுகளில், வானத்தைப் பார்த்து பேசுகிறேன்.
“அம்மா… நீ கேட்கிறாயா?” என்று,
பதில் வருவதில்லை.
ஆனால்,
கண்ணீர் மட்டும் பதிலாக வருகிறது...

இறைவா,
எனக்கு இன்னொரு பிறவி கொடுத்தால்.
இந்த முறை,
அவள் என் அம்மாவாக வேண்டாம்,
நான் அவளுக்கு அம்மாவாகப் பிறக்க வேண்டும்...

அவள் செய்த ஒவ்வொரு தியாகத்திற்கும்,
அவள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும்,
அவள் இழந்த ஒவ்வொரு கனவிற்கும்,
நான் ஈடாக வாழ வேண்டும்.
அவளை என் உயிரைவிட மேலாக நேசிக்க வேண்டும்...

அவள் கடைசி மூச்சு வரை,
என் மடியில் சாய்ந்து,
சிரித்துக்கொண்டே வாழ வைக்க வேண்டும்.
ஏனென்றால்,
இந்த உலகத்தில்,
“அம்மாவின் அன்புக்கு ஈடாக எந்த அன்பும் இல்லை…”
“அம்மாவின் தியாகத்திற்கு ஈடாக எந்த தெய்வமும் இல்லை…”
“அம்மா உயிரோடு இருக்கும் வரை தான் நாம் குழந்தைகள்…”

அம்மா மறைந்த பிறகு,
வயது எவ்வளவு இருந்தாலும்,
நாம் அனாதைகள்தான்...

அம்மா,
நான் உன்னை என்று சுமப்பேனோ,
உன்னை என் இறுதி மூச்சு வரை அணைப்பேனோ...

I miss u Amma, I love u Amma...(Я люблю тебя, мама. Я очень по тебе скучаю.)

    இப்படிக்கு
    என்றென்றும் உங்கள் அழகி(MA)

4
அழகி பேரில் மட்டுமல்ல மனதிலும் தான் எங்கோ இருக்கும்போது இவ்வளவு அன்பு செலுத்துகிறாய் என்றால் உன் அருகிலே இருந்தால்...

5
AzhaGi...
Un peyar sollum pothae, En mugathula oru sirippu thaana vandhidudhu...
Un sirippu en naaloda sweetest moment,
Un paarvai en idhayathin favorite place...
Nee pesum ovvoru vaarthaiyum,
En nenjula oru chinna santhosham vidhaikkudhu...
Un kooda irukkura ovvoru nodiyum,
En vaazhkaiyin azhagana gift madhiri irukku...
Nee sirichaa pothum,
Indha ulagame konjam innum azhaga theriyudhu...
AzhaGi... Un peyarukku artham azhagu na,
En vaazhkaiyila adhan artham nee dhaan.

7
Birthday Wishes / Re: Happy Birthday Mr. Innocent
« on: July 03, 2026, 12:37:50 am »


8
Hi Sangeetha Megam Team and my lovely friends,

Epo naa kekre song oru friedship song. Athu oru Aanukum oru pennukum irukira NATPU  pathi solum song. Avangalukulle irukira understanding and feeling pathi solre song.

SONG: THOZHA THOZHA
MOVIE: Paandavar Bhoomi
MUSIC DIRICTOR: Bharathwaj
SINGERS:Yugendran and Chitra Sivaraman

Fav lines:
Natpukul poigal kidaiyadhu
Natpukul thavarugal nadakadhu
Natpukul thannalam irukadhu
Natpuku aan pen theriyadhu
Natpu ennum nool eduthu
Boomiyai katti nee niruthu

Natpu natpu thaan
Kaadhal kaadhal thaan
Kaadhal maralaam
Natpu maaruma...

I want to dedicate this song to my handsome, cute and sweet boys in GTC (Special DC to MDU machi, Coffee Boy machi, Ludo bestie, Shahidm Anna, All in one Aleem, Peacemaker dude, Handsome Tobi, Sandaikara Mara, sweet Chill, Host Joy, DJ Appu Kutty, Hiccup,Pikachuu, Ahath77, Arjun_here singer, PaatasuBalu, Niharv, NanNa, Scooby doo, Mr Innocent,God_particle,Rakshith and Mouse)

Unge AzhaGi

9
அன்பே...
உன் தோளில் சாயும் அந்த ஒரு நொடி,
உலகமே மறந்து போகிறது.
உன் கண்கள் பார்த்த நொடியே,
என் உலகம் புதிதாய் மலர்ந்தது.
உன் சிரிப்பு கேட்ட போதெல்லாம்,
என் இதயம் இசையாய் மாறியது.
கைகளை பிடிக்காமல் இருந்தாலும்,
மனதை பிடித்தவன் நீயே... ❤️

தூரத்தில் இருந்தாலும்,
துணையாக உணர்ந்தவன் நீயே.
சில நேரம் சிரிக்க வைத்தாய்,
சில நேரம் அழவும் வைத்தாய்.
ஆனால் அந்த கண்ணீரிலும் கூட,
உன் நினைவுகள் இனிமை தந்தது.
சண்டைகள் வந்த நாட்களும் உண்டு,
சமாதானம் தேடிய இரவுகளும் உண்டு.
"போகிறேன்" என்ற வார்த்தையில் வலி இருந்தது,
"இருக்கிறேன்" என்ற நம்பிக்கையில் உயிர் இருந்தது...

உன் அன்பு எனக்கு சொர்க்கம்,
உன் மௌனம் எனக்கு நரகம்.
சேர்ந்து நடந்த பாதைகள் மகிழ்ச்சி,
பிரிந்து நின்ற தருணங்கள் வேதனை.
இருந்தாலும் காதல் தோற்கவில்லை,
ஏனெனில் உண்மை காதல் மறைவதில்லை...

சிரிப்பிலும் நீ இருந்தாய்,
கண்ணீரிலும் நீ இருந்தாய்.
என் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்திலும்,
எழுதப்பட்ட பெயர் நீயே.
இன்று சந்தோஷம் வந்தாலும்,
உன்னோடு பகிர ஆசை.
நாளை சோகம் வந்தாலும்,
உன் தோளில் சாய ஆசை.
வாழ்க்கை முழுவதும் மாறினாலும்,
மாறாத என் காதல் நீயே,
என் அழகனே... ❤️❤️❤️


I dedicate this to my CUTE BOY AZHAGAN😊 ❤️😊

10
Birthday Wishes / Re: Happy Birthday Shahidm
« on: June 23, 2026, 12:25:01 am »
Happy Kuva Kuva day Anna


11
அப்பா...

கைகளைப் பிடித்து நடக்கும் இந்த மூன்று நிழல்கள்,
ஒரு குடும்பத்தின் முழு உலகம்!
மகளுக்கு முதல் ஹீரோ அப்பா,
மகனுக்கு முதல் வழிகாட்டி அப்பா,
இருவரின் கனவுகளுக்கும் உயிர் கொடுப்பவர் அப்பா!
சூரியன் மறைந்தாலும் ஒளி குறையலாம்,
ஆனால் பிள்ளைகளுக்காக எரியும்
அப்பாவின் அன்பு ஒருபோதும் குறையாது.

ஒரு கையில் மகள்…மற்றொரு கையில் மகன்…
நடுவில் நடப்பது மனிதன் அல்ல,
தன் குடும்பத்தின் சொர்க்கத்தை சுமக்கும் ஒரு அப்பா! ❤️
“உலகம் முழுவதும் தேடினாலும்,
அப்பாவின் அன்புக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை!”
ஒரு கையில் என் தேவதை மகள்,
மற்றொரு கையில் என் வீரன் மகன்,
நடுவில் நான் நடப்பதல்ல…
என் இதயத்தின் இரண்டு துடிப்புகளை
அழைத்துச் செல்கிறேன்!

மகளின் சிரிப்பில் நிலவொளி இருக்கிறது,
மகனின் பார்வையில் எதிர்காலம் இருக்கிறது,
இருவரின் அன்பில் என் வாழ்நாளின்
முழு சந்தோஷமும் இருக்கிறது!
நான் சேர்த்து வைத்த சொத்து எதுவுமில்லை,
ஆனால் என்னை “அப்பா” என்று அழைக்கும்
இரண்டு உயிர்கள் இருக்கின்றன…
அதுவே இந்த உலகின் மிகப்பெரிய செல்வம்!

காலம் மாறலாம்…வயது கூடலாம்…
ஆனால் என் கைகளைப் பிடித்த இந்த இரண்டு கரங்கள்,
என் உயிர் இருக்கும் வரை
என் இதயத்தில் குழந்தைகளாகவே இருப்பார்கள்!
மகளின் அன்பும்…மகனின் பாசமும்…
கிடைத்தவன் தான் இந்த உலகின் உண்மையான ராஜா!” 👑

அந்தியிச் சிவப்பின் அமுத ஒளியில்
அப்பா கைபிடித்து நடக்கும்
என் அன்புச் செல்வங்களே!
கைகள் கோர்த்து, கவலை மறந்து,காலடி எடுத்து வைத்து,
எதிர்காலம் நோக்கிச் செல்லும்,என் இனிய இரு கண்கள்!
தந்தை என்னும் பெயர் தாங்கி
என் தோள் கொடுத்த பலம்,
உங்கள் உலகை அமைக்கும் ஒரு புதிய வழி.

சிறு கைகள் என் கையைப் பற்ற
நான் பெற்ற இன்பம்,
எந்த செல்வம் கொடுத்தாலும்
ஈடாகாது என் குழந்தைகளுக்கு.
இந்த மாலைப் பொழுதில்
நாம் நடக்கும் இந்தப் பயணம்,
நம் உறவின் இனிமையை
என்றென்றும் பாடும் கவிதை.....

அப்பாவைப் பற்றி கவிதை எழுதத் தெரிந்த எனக்கு,
அப்பாவின் அரவணைப்பு மட்டும் எழுத முடியவில்லை…

விவரம் தெரிந்த நாள் முதல்,
“அப்பா” என்ற வார்த்தையை விட,
“அம்மா” என்ற உயிரைத்தான் பார்த்து வளர்ந்தேன்.
அம்மாவே எனக்கு அப்பாவாகி,
அப்பாவே செய்ய வேண்டிய கடமைகளையும்
தன் கண்ணீரை மறைத்து செய்தார்.

கிடைக்காத ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்,
அதை குறையென்று நினைக்கவில்லை…
ஏனெனில், அம்மாவின் அன்பு
இரண்டு இதயங்களின் பாசமாக இருந்தது.

ஆனால் ஒரு ஆசை மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது…
எனக்குக் கிடைக்காத அன்பும்,
எனக்குக் கிடைக்காத அரவணைப்பும்,
என் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும்.
அவர்கள் வாழ்க்கையில்
“அப்பா இல்லை” என்ற வெற்றிடம் இருக்கக் கூடாது…
அவர்கள் சிரிப்பில் நான் சிரிக்க வேண்டும்,
அவர்கள் கனவில் நான் துணையாக இருக்க வேண்டும்,
நான் காணாத சொர்க்கத்தை
அவர்களின் வாழ்வில் தர வேண்டும்.

ஏனெனில்…
ஒரு குழந்தையின் முதல் ஹீரோ அப்பா,
முதல் உலகம் அம்மா.
என் குழந்தைகள் மட்டும்,
“எங்கள் அப்பா… எங்கள் பெருமை!”
என்று நெஞ்சு நிறைந்து சொல்லும் வாழ்க்கையை
அவர்களுக்கு பரிசாகத் தர வேண்டும்.

எனக்குக் கிடைக்காத வாழ்க்கையை நினைத்து அழுவதில்லை…
என் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாழ்க்கையை நினைத்தே இன்று நான் வாழ்கிறேன்… ❤️

13
அப்பா...

கைகளைப் பிடித்து நடக்கும் இந்த மூன்று நிழல்கள்,
ஒரு குடும்பத்தின் முழு உலகம்!
மகளுக்கு முதல் ஹீரோ அப்பா,
மகனுக்கு முதல் வழிகாட்டி அப்பா,
இருவரின் கனவுகளுக்கும் உயிர் கொடுப்பவர் அப்பா!
சூரியன் மறைந்தாலும் ஒளி குறையலாம்,
ஆனால் பிள்ளைகளுக்காக எரியும்
அப்பாவின் அன்பு ஒருபோதும் குறையாது.

ஒரு கையில் மகள்…மற்றொரு கையில் மகன்…
நடுவில் நடப்பது மனிதன் அல்ல,
தன் குடும்பத்தின் சொர்க்கத்தை சுமக்கும் ஒரு அப்பா! ❤️
“உலகம் முழுவதும் தேடினாலும்,
அப்பாவின் அன்புக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை!”
ஒரு கையில் என் தேவதை மகள்,
மற்றொரு கையில் என் வீரன் மகன்,
நடுவில் நான் நடப்பதல்ல…
என் இதயத்தின் இரண்டு துடிப்புகளை
அழைத்துச் செல்கிறேன்!

மகளின் சிரிப்பில் நிலவொளி இருக்கிறது,
மகனின் பார்வையில் எதிர்காலம் இருக்கிறது,
இருவரின் அன்பில் என் வாழ்நாளின்
முழு சந்தோஷமும் இருக்கிறது!
நான் சேர்த்து வைத்த சொத்து எதுவுமில்லை,
ஆனால் என்னை “அப்பா” என்று அழைக்கும்
இரண்டு உயிர்கள் இருக்கின்றன…
அதுவே இந்த உலகின் மிகப்பெரிய செல்வம்!

காலம் மாறலாம்…வயது கூடலாம்…
ஆனால் என் கைகளைப் பிடித்த இந்த இரண்டு கரங்கள்,
என் உயிர் இருக்கும் வரை
என் இதயத்தில் குழந்தைகளாகவே இருப்பார்கள்!
மகளின் அன்பும்…மகனின் பாசமும்…
கிடைத்தவன் தான் இந்த உலகின் உண்மையான ராஜா!” 👑

அந்தியிச் சிவப்பின் அமுத ஒளியில்
அப்பா கைபிடித்து நடக்கும்
என் அன்புச் செல்வங்களே!
கைகள் கோர்த்து, கவலை மறந்து,காலடி எடுத்து வைத்து,
எதிர்காலம் நோக்கிச் செல்லும்,என் இனிய இரு கண்கள்!
தந்தை என்னும் பெயர் தாங்கி
என் தோள் கொடுத்த பலம்,
உங்கள் உலகை அமைக்கும் ஒரு புதிய வழி.

சிறு கைகள் என் கையைப் பற்ற
நான் பெற்ற இன்பம்,
எந்த செல்வம் கொடுத்தாலும்
ஈடாகாது என் குழந்தைகளுக்கு.
இந்த மாலைப் பொழுதில்
நாம் நடக்கும் இந்தப் பயணம்,
நம் உறவின் இனிமையை
என்றென்றும் பாடும் கவிதை.....

அப்பாவைப் பற்றி கவிதை எழுதத் தெரிந்த எனக்கு,
அப்பாவின் அரவணைப்பு மட்டும் எழுத முடியவில்லை…

விவரம் தெரிந்த நாள் முதல்,
“அப்பா” என்ற வார்த்தையை விட,
“அம்மா” என்ற உயிரைத்தான் பார்த்து வளர்ந்தேன்.
அம்மாவே எனக்கு அப்பாவாகி,
அப்பாவே செய்ய வேண்டிய கடமைகளையும்
தன் கண்ணீரை மறைத்து செய்தார்.

கிடைக்காத ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்,
அதை குறையென்று நினைக்கவில்லை…
ஏனெனில், அம்மாவின் அன்பு
இரண்டு இதயங்களின் பாசமாக இருந்தது.

ஆனால் ஒரு ஆசை மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது…
எனக்குக் கிடைக்காத அன்பும்,
எனக்குக் கிடைக்காத அரவணைப்பும்,
என் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும்.
அவர்கள் வாழ்க்கையில்
“அப்பா இல்லை” என்ற வெற்றிடம் இருக்கக் கூடாது…
அவர்கள் சிரிப்பில் நான் சிரிக்க வேண்டும்,
அவர்கள் கனவில் நான் துணையாக இருக்க வேண்டும்,
நான் காணாத சொர்க்கத்தை
அவர்களின் வாழ்வில் தர வேண்டும்.

ஏனெனில்…
ஒரு குழந்தையின் முதல் ஹீரோ அப்பா,
முதல் உலகம் அம்மா.
என் குழந்தைகள் மட்டும்,
“எங்கள் அப்பா… எங்கள் பெருமை!”
என்று நெஞ்சு நிறைந்து சொல்லும் வாழ்க்கையை
அவர்களுக்கு பரிசாகத் தர வேண்டும்.

எனக்குக் கிடைக்காத வாழ்க்கையை நினைத்து அழுவதில்லை…
என் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாழ்க்கையை நினைத்தே இன்று நான் வாழ்கிறேன்… ❤️

14
Birthday Wishes / Re: Happy Birthday VICKY
« on: June 11, 2026, 02:52:29 am »
HAPPY BIRTHDAY
VICKY



15
Birthday Wishes / Re: Happy Birthday MDU
« on: June 09, 2026, 02:52:22 am »
HAPPY BIRTHDAY MDU machi

எல்லா புகழும் மகிழ்ச்சியும் உன்னை வந்து சேரட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா! May all fame and happiness reach you. Happy Birthday, friend!


Pages: [1] 2 3 4