Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Niharv

Pages: [1]
1
Birthday Wishes / Re: Happy Birthday Misty Sky & Mansi
« on: September 25, 2025, 12:07:11 am »
🎂 May your lives be filled with endless cheer,
🌈 With countless blessings year after year.

💐 May your smiles shine brighter than the dawn,
🌟 Lighting every path you walk upon.

💖 May love embrace you in every place,
🎉 And joy forever crown your days with grace.

🌹 May happiness bloom in all you do,
🌸 With hearts so pure, forever true.

🌟 May every prayer be answered with care,
✨ And peace surround you everywhere.

🎁 May your dreams unfold like stars at night,
🌈 Painting your future with colors so bright.

💞 May your bond grow stronger with time,
🌊 Flowing like music, gentle, sublime.

🥳 May laughter echo in all that you share,
🎂 With memories created beyond compare.

🌸 Host and Mansi, treasures so rare,
🌟 May God’s love keep you in His care.

💖 A blessing to many, shining like light,
🌹 May your journey ahead be forever bright.

2
மழை துளிகள் மெதுவாக விழும் இரவில்,
நினைவுகளின் நிழல் தன் கதையை சொல்லும்.

உன் மென்மையான கண்கள் பேசாத மொழியில்,
என் உள்ளத்தை உருக்கும் ஒரு ரகசியம் போல.

சொல்லப்படாத வார்த்தைகள் மௌனமாகவே
என் இதயத்துள் நனைந்த கனவுகளாய்.

ஒரு நிழல் போல மறைந்து நின்றாய் நீ,
என் உயிரின் ஓரத்தில் விரிந்து நிலைக்கின்றாய்.

உன் சிரிப்பு, மறைக்கப்பட்ட புன்னகை,
மழை நதியில் ஒளிரும் ஒற்றை துளி மாதிரி.

மௌனத்தின் இசையில் உரையாடும்
உன் நினைவுகள் என் நெஞ்சில் ஒளிர்கின்றன.

மழைக்காலத்தின் மென்மையான காற்று
நம் ரகசிய அன்பின் வாசல்களை திறக்கின்றது.

ஒரு வஞ்சனை போல மறைந்த உன் வார்த்தை,
என் இதயத்தின் விரக்தியை எழுதிக் கொண்டு வருகிறது.

மழைதுளிகளின் அழகில் நமக்குள் ஒளிரும்
மறைக்கப்பட்ட பாசத்தின் அழகு.

உன் பார்வை மௌனத்தில் புனைந்த
அன்பின் மென்மை மொழியாகக் கருதப்படும்.

மறைந்த அன்பின் நதி போல
என் நினைவுகள் மெதுவாக ஓடுகின்றன.

ஒரு நிழலாய் உன் இசை என் உயிரில்
மௌனத்தின் தனிமையைத் தொட்டு செல்கிறது.

நீ பேசாத இந்த ரகசிய மொழி
என் இதயத்தின் கோணங்களில் எப்போதும் உயிரோடு நிற்கிறது.

மழைமழையில் மறைந்தது காதல்,
என் உள்ளத்தின் ஒரு மென்மையான வெறுமை.

ஒரு காலம் போல் மறைந்து,
மறைக்கப்பட்ட அந்த அன்பின் கவிதை
என் உயிரின் சுவையாக வளரும்…

🌧️🌹

3
🌿 அப்பா – சொல்லப்படாத பாசம் 🌿

வானத்தில் பறக்க வைக்க கைகளால் தூக்கும்,
தான் தரையில் குனிந்து நிற்கும் உறவு – அப்பா.

சிரிக்க சூரியனைத் தேவை இல்லை,
அவனது மகளின் சிரிப்பே போதும்.

தனக்கான கனவுகளை நிழலில் புதைத்து,
பிள்ளையின் கனவுகளை வெளிச்சத்தில் மலர வைப்பான்.

பலருக்கு கடைசி வரை புரியாத புதிர்,
அவரது வாழ்க்கையே – அப்பா.

அவன் பேசாமல் பாடம் கற்பிக்கிறான்,
அவன் பார்வையிலே எச்சரிக்கை மறைந்திருக்கிறது.

மகளின் கண்ணீரால் உருகும் இதயம்,
மகளின் சிரிப்பால் துடிக்கும் உயிர்.

தாய்க்கு பின் துணை இருக்கலாம்,
ஆனால் அப்பாவின் இடம் யாராலும் நிரப்ப முடியாது.

அவருக்கு நிகர் அவர் தான்,
அவரது தியாகத்துக்கு அளவே இல்லை.

ஆயிரம் புன்னகைகள் பூத்தாலும்,
அப்பாவுடன் பகிரும் புன்னகை தான் சிறந்தது.

தன் வாழ்நாளையே போராடி,
பிள்ளையின் வாழ்வை கட்டியமைக்கும் கரங்கள் – அப்பா.

சுயநல உலகத்தில் சுயநலமற்ற,
அரிய உறவு அவர் தான்.

அப்பாவை இழந்தவர்களுக்கே உணர்வு வரும்,
உலகம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்று.

அம்மாவின் பிரசவ தழும்புகள் போலவே,
அப்பாவின் உழைப்பில் பிறந்த காயங்கள்.

மௌனத்தில் மறைத்த கனவுகள்,
பிள்ளையின் கண்களில் மலர வைக்கின்றன.

அவனது சிரிப்பு சில நேரங்களில் போலி,
ஆனால் அதன் காரணம் பிள்ளையின் கண்ணீரை மறைப்பதே.

வாழ்க்கை எத்தனை சிரமம் வந்தாலும்,
பிள்ளையை விட்டு கொடுக்காத ஒரே உறவு – அப்பா.

அவன் உழைப்பால் வீடு நிறையும்,
அவன் நிழலில் பாசம் பெருகும்.

அவன் வார்த்தைகள் கடினமாய் கேட்டாலும்,
அவன் இதயம் எப்போதும் மென்மை கொண்டது.

பாதையில் நிழலாய் பின்தொடரும் காவலன்,
சுவாசத்தில் வாழும் பாசம் – அப்பா

 என் முதல் ஹீரோ நீ தான்,
❤️ என் வாழ்வின் பாதுகாப்பு நீ தான்,
❤️ என் இதயத்தின் என்றும் நிலையான அன்பு – அப்பா, உன்னை நேசிக்கிறேன்!

4
.  💞🌧️ தாங்கா காதல் 🌧️💞

உன் நினைவில் நான் விழித்தால் விடியல்,
உன் புன்னகை நினைத்தால் என் வாழ்வு விழா.

உன் பெயர் சொல்லும் உதடுகளுக்கே,
தேவதைகள் பொறாமை கொள்ளும்.

மழைத்துளி விழும் ஒவ்வொரு நொடியிலும்,
உன் சுவாசமே எனக்கு இசை.

உன் கண்களில் சூரியன் உதிக்கும்,
உன் சிரிப்பில் சந்திரன் ஒளியும்.

தூரத்தில் நீ இருந்தாலும்,
என் உள்ளத்தில் நீ எப்போதும் அருகில்தான்.

உன் குரல் கேட்டதுமே,
உலகம் முழுதும் அமைதியாகிறது.

நீ ஒரு பார்வை தந்தால்,
நாட்கள் எல்லாம் மலர்களாய் மலர்கின்றன.

உன் கரம் என் கரத்தைத் தொட்டால்,
வானமே பூமிக்கு இறங்கிவிடும்.

உன் அருகில் நிற்கும் ஒவ்வொரு நொடியும்,
நித்தியத்தைவிட இனிமையாய் இருக்கிறது.

நீயின்றி ஒரு நாளும் நான் வாழ முடியாது,
நீயே என் உயிரின் மூச்சுத் துளி.

வானம் சிதறினாலும் பரவாயில்லை,
உன் காதலில் தான் என் வானம் நிறைந்துள்ளது.

புயல் அடித்தாலும் நான் விழ மாட்டேன்,
உன் நினைவே என் நெஞ்சின் வேராகிறது.

உன் சிரிப்பு இல்லாமல் என் வாழ்வு வெறுமை,
உன் சுவாசம் இல்லாமல் என் உயிர் மவுனம்.

நீ தான் என் கவிதையின் தொடக்கம்,
நீ தான் என் வாழ்க்கையின் நிறைவு.

நீயின்றி நான் ஒரு நிழல்,
நீ இருந்தால் நான் முழு பிரபஞ்சம்.

என் உயிர் உன்னோடு கட்டுண்டது,
அதை அறுத்திட வானமே முடியாது.

உலகம் எல்லாம் என்னை விட்டு சென்றாலும்,
உன் காதல் மட்டும் என்னை அணைத்துக் கொள்கிறது.

என் இதயம் தாங்க முடியாத காதலில் மூழ்க,
நான் உயிரோடு வாழ்கிறேன் உன் பேரிலே!   

5
சிற்பியும் நாங்களே,
சிலையும் நாங்களே!
சிந்தனையின் உலக்கையில்
சுயமெனும் கல்லை செதுக்குகிறோம்.

விழுந்த இடம் தரையாகும்,
விரும்பினால் மேடையுமாகும்!
பிணைப்பு இல்லா காலத்தில் கூட
நம் நிழலே நமக்கு துணையாகும்.

வெற்றிக்குக் கோவணம் கட்டி
தோல்வியைச் செதுக்கிறோம்,
வீணாகும் ஒரு நொடியும்
ஒரு பாடமாய் பதிகிறோம்.

கடவுளின் கரங்களாகவே
தோன்றும் நம் விரல்கள்,
புதையல் இல்லாத இடத்தில் கூட
புதிய கனவை விரித்துவைக்கின்றோம்!

சின்ன தவறுகள் கூட
பெரும் வடிவம் தருகின்றன,
அவையும் சிற்பத்தின் ஓர் கோடு
நம்மை அலங்கரிக்கின்றன!

வலி ஒரு தங்க வேலைபோல்
மனதைப் பொலிவூட்டுகிறது,
ஓர் ஏமாற்றம் கூட
உண்மையின் கண்காட்சியாகிறது!

நம் குரலும் கைகளும்
வாழ்க்கையை வடிப்பதற்கான கருவிகள்,
நம் உள்ளமும் முயற்சியும்
அதற்கான கோர்வையாசிரியர்கள்!

அடையாளம் எதற்கும் இல்லை,
நம்மை நாம் உருவாக்கும் வரை!
முன்பே யாரும் இல்லாத
புதிய சிலையாகும் நம் பாதை!

Pages: [1]