Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - புகழ்

Pages: [1]
1
Tittle Card ~கடவுள் அளித்த மறு உயிர்


மாலை நிழல்கள் மெதுவாக வீசும் நேரம் அது,

அந்தச் சாலையிலோ!

மனம் கனிந்த ஐந்தே வயது நிரம்பிய பொன் வண்ணச்சாரம்

பாதையில் ஏதும் கவனிக்காமல் வேகமாக ஓடிக்
ஓடிக்கொண்டிருந்தாள்

ஒரு நிமிடம், ஓரங்கால் மாறிய அந்த நொடியில்,

திடீர் உச்சத்தில் மோதி விழுந்தால் அவள்

வெடிக்கும் சத்தம்,
கண்ணீர் கலந்த கூச்சல்கள்,
அசைவில்லாத கைகளும் கால்களும்,

மருத்துவமனையின் வெறும் வெளிச்சத்தில்,
ஒரு வாழ்க்கை சிதறியதை உணர்ந்தாள் அவள்.,

அவளுடைய சிறிய மார்பு மெதுவாக உயர்த்தி இறக்கின,

வெளிச்சம் மறைந்த அறையின் மடியில்,
மருத்துவர்கள் விரல்களை வெற்றிடத்தில் சுழற்றினார்கள்

கண்கள் தேடியவை நம்பிக்கையின் ஒரு சிறு ஒளி மட்டுமே.!

ஆனால் நிமிடங்கள் ஓடி விட்டன,

சில நேரங்களில்!

விடாமுயற்சி வீழ்ந்துவிடும் மிதமான உவமை போல.

அவளின் விழிகளின் மேல் சாய்ந்தது வெற்றிடம்

அவளது கனவுகள் துளிர் விடுகிறது கனவுகளாய் மட்டுமே..,

அந்தக் கணத்தில் உலகமே சுழன்று கொண்டிருக்கும் பொழுது அவளுடைய உலகம்
மட்டும்,,! சுழலாமல்  நின்று போனது

மனம் கண்ட வெறுமையை அந்த கண்களும் கண்டது
அவளது விழிகள் மூடப்பட்டன

புகும் இருள் சூழ்ந்தது அந்த அறையை! 

இருந்தும்
.........................,,,,,,,..............................,,,,,,,........,,,,,,........,.........
சுழலும் உலகத்தின் கடிகார முட்களின் ஓசை சற்று கேட்கிறது!

ஒரு வண்ணத் தெளிவு போல,
அந்தக் கதிர் அவளுடைய உள்ளம் தீட்டியது,

கரம் ஈட்டிய அந்த கதிர் வெளிச்சம்
அந்த அறையை தத்தெடுத்துக் கொண்டன ,,

அவள் உயிர்த்தெழுந்தார் ஒரு புதிய ஜீவனின் தொடக்கம்,,

ஒரு நிகழ்வின் நிழல் கடந்து பிறந்த மறுஉயிர்!

ஐந்தே வயதை உடைய பொன் வண்ணச்சாரம் மீண்டும் மலர்ந்தது!! (God's Child)


#The_Child_Rises_Started_From_Here❤️⚡️

2
 
TITTLE CARD - - >  ஒரு சிறுமி

இது ஒரு போர் களம் அல்ல,
இது ஒரு கனவின் உடைந்த சுவர்,
ஒரு குட்டிச் சிரிப்பு சிதறிய காட்சி.

கையில் மெத்தமான பழைய பொம்மை.

அவள் பேசவில்லை,
அவளது பார்வை பேசுகிறது.

அவளின் கண்கள் நிஜத்துக்கும், கனவுக்கும் இடையே ஒரு பாலம் போடுகின்றன.
அவள் கண்கள் எங்கும் தேடுகின்றன.

கண்ணுக்கு எட்டிய வரை காற்றின் சத்தமே
காற்று ஒரு கதை சொல்வது போல வீசுகிறது,

அவளது முடி சுழல்கிறது,
கண்கள் ஓரம் வெறுமை,
இதழோரம் முணுமுணுக்கும் வார்த்தைகள்,

"சட்டென அந்த காற்று அவளது அமைதியை தத்தெடுத்துக் கொண்டன"

மேகம் தாக்கும் சத்தம் கேட்கிறது

மழை பெய்யத் தொடங்குகிறது.

சிறுமி தன்னிடமிருக்கும் குட்டி பொம்மையால்  தலையை மறைக்க முயல்கிறாள்.

பின்புறம் நகர்கிறாள்

ஒரு வட்டத் தோணியில் தண்ணீர் தேங்கி இருக்க,

இருந்தது ஒரு அழகியல்
தெரிந்தது ஒரு மெய்யியல்

அந்த நீரின் எதிரொளிப்பில்

அம்மாவின் கை..
அப்பாவின் கரம்...
அவ்ளோ நடுவில் தவழ்கிறாள்

சொட்டு சொட்டாக விழும் மழை நீரும் அந்த அழகியலை அழிக்க முடியவில்லை

மழையின் மொழியை  புரிந்த அந்த சிறுமி பேசுகிறாள்,

"மழை என் மேல் விழும் ஒவ்வொரு துளியும்,
என் வாழ்க்கையின் பக்கங்களை வாசிக்கிறது போல இருக்கிறது.

சில பக்கங்கள் அழிந்து விட்டன,

சில இன்னும் வாசிக்கப்படவில்லை…

அம்மா... நீ சொன்னது போல, மழை வரும்போது
துயரம் கழுவிக் கொண்டு விடுமா?


நான் கண்ணீரை மறைக்கிற மழையாய் வாழ்ந்து விட்டேன்.

அப்பா சொன்னாரு,

கனவு காண் அது புதுமையானது

இப்ப கனவே வாழ்க்கையானது"

ஒரு கனவு சிதைந்தது,
ஒரு நிழல் கரைந்தது.
வழி தெரியாத சாலையில்,
வாசல் தெரியாத வீடு போல.


அவள் கையை நீட்டி
நீரில் கையை பதித்து
பொம்மையை மெதுவாக தண்ணீரில் விடுகிறாள்.

அது மிதக்கிறது... மெல்ல மாறுகிறது...
பொம்மை அல்ல...
அவளே...

கனவு ஒரு தடமாக மாற,
நிழல் தான் நிஜமாய் மாற,
சுழலும் உலகம் சொல்லுதே...
சிறுமி," நீ தான் நாளைய ஒளி"

3
Movie - - >KGF
Song - - - ->Agilam Ne(அகிலம் நீ முகிலும் நீ)
Singer : Ananya Bhat
Music by : Ravi Basrur

Fav Lines

ஆயிரம் படைகளும் முரசுதான்
முழங்கியே வரட்டுமே,
 ஒருவனாய் வெல்லடா உனக்கு நீ
ஆயுதம் உலகிலே...



Song Touch

இந்த  பாடலுக்கும் எனக்கும் உள்ள பந்தம் எனக்கு மட்டுமே புரியும் .. This Song always Reminds my mum  Sacrification ❤️

4
Intersting intro Brother.. I love ur Open Mind.. Great welcome to GTC👌☘️✨

Pages: [1]