Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Shaswath

Pages: [1]
1
வாடி நின்றபடி சோர்ந்து சாய்ந்திருந்தேன்,
அடர்த்தி மிகுந்த அகத்தினுள் உறைய மறுத்த குமரல்களின் உறப்பு,
என் முகத்தின் பொலிவிற்கு தடை விதித்தது

அன்று ஓர் நாள் என் முன்னே தோன்றினாய்…காலமே…

பூவின் காம்பில் மிதக்கும் முள்படுக்கை மீது அச்சம் கொண்டேன் எனவோ,
இரண்டு முட்கள் மட்டுமே இருப்பினும்,
மணிக்கூண்டில் ஒளிந்திருந்து,
என் முகத்தில் இகழ்ச்சி ஊட்டி மகிந்தாயே காலமே…

நீ முன்னோக்கி அடி மேல் அடி வைக்க,
பாதையற்ற போர்வெளியில் நின்றிருந்தேன்,
படிக்கட்டுகள் அமைத்து தோள்கொடுத்தாய்

முதல் படி நீ ஏறவே,
படித்து உயர ஊக்கம் அளித்தாய்,
சூழ்நிலை பாராமல் எதிலும் வெற்றி பெற வலிமை வழங்கினாய்

மேலும் படிகள் ஏறவே,
மனிதத்தை கண்ணில் எட்டும்படி செய்தாய்,
அதனின் அகத்தின் அழகு என்னை வந்து சேரவே வழி வகுத்தாய்

முன்னோக்கி சென்றபடியே,
பாறை தடுக்காமல் பாதை முடக்காமல்,
திட்டமிடுதலின்றி செல்லும் வழி முழுதும் நன்மையே வந்து சேருமாறு செய்தாய்


முன்னோக்கியபடியே பயணிக்க உதவிய நீ சட்டென்று ஒறைந்துவிட்டாய் இன்று…
பின்னோக்கி திரும்புகிறாய்,
ஒரைந்திருந்த துயரங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றன

காலமே…
கணக்கில்லா படிகள் உன்னிடம் மட்டுமே,
இருந்தும் ஏன் முன்னேற்ற மறுக்கிறாய்?

வழி காட்டும் முட்களாக இருந்தாய், பெருக்கெடுத்து திடீர் வலிகள் பதிப்பது ஏன்?

படர்ந்து விரிந்த பொலிவு மறைந்து குறுகிய பாவனையில்..இன்று மீண்டும் நான்,

வெற்றி காண துவங்கிய காலத்தில்,
புன்னகையற்ற தோற்றத்தை வெளிக்காட்ட தயக்கம் இருந்தது இல்லை,
இன்று அமுதை அளந்துவிட்டு துயரத்தின் சிறுமையை இவுலகிற்கு காட்ட விருப்பமில்லை

குறைந்தபட்சம் சிறித்தபடி முகமூதி ஒன்று கொடு,
என் நடுக்கம் மறைத்து நடிக்க துவங்கவே….

2
Vanakkam tholaragale🥳🥳,

GTC roast kada pakkam vandhu ethana naal aachu..👏kada nalla develop aagiruchunu thagaval Ghee roast mastergal and Ghee seira team ku periya vaalthukkal

Naan DJ vidam keka virumbum paadal ennavendraal…

Song name: Pattu Poochi
Movie: Sundara Kandam
Director: K. Bhagyaraj
Music director: Deepak
Singer: S Janaki
Actress (song): Sindhuja (special mention)


Ennamo theriyala indha padam paakurapa ellaam epa Indha Song varudho, lifela the most cruel tragedy a Noki manusham pogurapa kooda lesaa kannula thanniyoda…Che ivalodhaanaa life apdinu thonum.

Indha movie a oru 50 times aachum paathurupen and indha song Play aagum bodhu..suddenaa gnyaani aana feel varum…

S. Janaki mam and Andha actressoda performance avlo emotionalaa irukum❤️

Indha paadalai play seiyumaaru DJ avargalai ketukolgiren..aprm ghee roast konjam paathu ghee kammiyaa podunga samiyalkaar 🤣🤣

Ipadiki ungal Shasu


3
காடெங்கும் ஒளி கூட,
கூடி மகிழ்ந்து உரையாட

குயில் பாட்டின் குரலாட,
ஒத்திசைத்து நீ போட்டியிட

படபடக்கும் உன் இமை திறக்கவெ,
கதிரவனின் கரங்கள் கண்ட இடுக்குகள் அனைத்தையும் தகர்க்கவே

ஆடும் அசையா மரங்கள் வழி வகுக்கவே,
திரண்ட கரங்கள் யாவும் உன் பாதம் தொடும் அளவில் மண்டியிடுகின்றன

இது போன்ற உலகினில் அத்தகைய வடிவத்தில் உன்னை பேணிக்காக்கவே நான்

நான்…
சுழலும் ஒண்முகில்,
கைவீச்சடித்து உன்னை காக்க

தீண்டும் கதிரவனின் பாதுகாப்பின் அப்பால் எட்டாத உயிரத்தில் பிரகாசிக்கும் சுடரே…உன் கவனத்தை ஈர்க்க


சுற்றும் பூமியில் பின்தொடரும் நம் கற்பனை உலகை கண்டறிவோம் வா!

ஈரமற்ற பூமியில் தற்காலிக நனைதல்,
கானல் நீராய் பேயும் மழையை நம்பிவிடாதே!

வேரோடு பிடுங்க பிரியவே துயரம்,
நிலம் காய்த்த என் கைகளை பிடித்துக்கொள்,
குடை நிழலில் பரந்து செல்ல

பாட்டொன்று பாடு ரோஜாவே,
இசை மழையில் பொழிந்து மகிழவே,
இடம் சேரும் வரை உன் தாகம் தனியவே…

4
பத்து மாதங்கள் சுமக்கும் தாயின் இன்பச்சுமையை மார்பின் சிகை கொண்டு தாங்குவாய் என்றால் மிகை ஆகாது,

என் கால்கள் தரையை வருட விடாமலே நடை பழக்குகிறாய்,
மண்ணில் விழுந்து தோல் சரிந்தால் மனம் ஒடைந்து சரிய அமர்வாய்

வீட்டின் வாசப்படியை உன் நிழல் வருட,
என் விரிந்த கண்களின் மயத்தில் ஒன்றுக்கூடும் ஒளி விளக்கின் ஈரம் சொல்லும்…நீ யார் என்று

என்ன நிகழ்ந்தும் அவர் கண்ணீர் சிந்த நான் கண்டதில்லை,
கண்டெடுத்த முத்தானவள் நான், என் சிரிப்பில் மகிழ்ந்து சிரகடிக்கவே, அழுக தோண்றவில்லை என்று சொல்வாய்

உலகை சுற்றி வலம் வர ஆசை இல்லை,
உன்னை சுற்றி வரும் சிறுமியாகவே இருப்பதில் நிம்மதி

கையோடு அள்ளி என்னை வானை நோக்கி எறிவாய்,
அச்சத்தில் மிதந்து நிற்பேன்,
விழுந்து விடுவேனோ என்று எண்ணி அல்ல,
தாங்கி பிடிப்பது எப்பொழுதும் உந்தன் கரங்கள்ஆகவே இருக்க வேண்டும் என்று

6
நினைவுகள் ஓய்வதில்லை!

நெகிழ்ச்சியின் நட்ச்சரித்தல் என்றும் சலித்ததில்லை,
சோகம் என்னும் சொல்லை வாசித்ததில்லை,
ஏன் என்ற கேள்வி தோன்றியதுமில்லை

கை அளவில் சிவந்த உலகம் ஒன்றை அடித்து மகிழ்ந்தேன்,
கை அளவு அல்ல என்று பள்ளிக்கூடங்களில் கற்றுணர்ந்தேன்

செங்கல் கொண்டு கட்டமைப்பது அல்ல வீடு என்று உணர்ந்தேன்,
தனிமையில் காணும் வாழ்க்கை கனவாக தகர்த்தினேன்


நினைவுகள் ஓய்வதில்லை!

துவங்கியது…

சோகம் என்ற சொல் மனக்கதவைத் தாழமிடுகிறது,
அதனின் உறையாடல் காதுகளின் போர்வையை கூறுபடுத்துகின்றன,

கை அளவில் சிவந்த உலகம்,
அதன் நிறம் மட்டுமே இன்று கையோடு ஒன்றி விட்டது

உலகம் முழுதையும் விரித்து வைத்த படிப்பு,
வாழ்க்கை என்னும் சவாலை நேரிட கண்டிப்பு

இல்லம் என்னும் மாளிகையின் மகிமை உணர்ந்திருந்தேன்,
இன்று விலகி பதற்கிறேன்

நினைவுகள் ஓய்வதில்லை!
வரைப்படங்கள் மறைவதில்லை!

மறைந்துவிடக்கூடும் என எண்ணினேன்,
மயில் இறகு ஒன்றை தடுப்பாக பொருத்தினேன்,

பொருத்தியதும் இறகின் சிறகுகள் முளைக்க வெலகின!




நினைவுகளின் தாகம் - நெருப்பின் ஆற்றல் மிகுந்த நீர்பாய்ச்சல்







7
ஜகத்தினால் அளக்க முடியா அளவில் மிதக்கிராய்,
தூய்மையாக எங்கள் நெகிழி குப்பிகளில் அடைந்து கிடக்கிறாய்

எங்கும் எப்பொழுதும் ஓலையிடும் தாகம்,
 உடனடியே எங்கள் இதயம் குளிர செய்வாய்

பல வடிவங்களை ஏற்றி சுற்றி வறுகிராய்,
உயிர் கொண்ட ஜீவன்கள் யாவும் பிழைக்க இடம் தறுகிராய்

ஆனால் பலர் உன்னை மதிப்பதில்லை,
 உன் மதிப்பை அறியா அலச்சியவாதிகளாக அலைகிறோம்

மதிக்க பழகுவோம்!
நம் வாழ்வை நிமிடம் தோறும் கரைசேர்க்கும் சாம்ராஜியத்திற்கு தீங்கு செய்ய இயலாது!

செய்தோமே ஆனால்…ஒன்றை நினைவில் பதிப்போம்:

நம் எல்லோரின் வாழ்வில் அசையா தடமாய் வலிகள் கோடி எரிந்துகொண்டு இருக்கின்றன,
அவைகளை அவ்வப்போது தனிக்க கப்பல் ஒன்று கண்ணோரம் ஆட செய்யும்,

ஆடுவது தொடர வேண்டும் அல்லவா? இல்லையெனில் சோகங்கள் நம்மை பொசுக்கி விடும்!


நீர் 💧

8
இரவினில் ஆட்டம்


நிலவின் ஒளி மிஞ்சும்,
அறைகளில் அடைந்து வாழும் விலக்குகளை!

உயிரும் இரங்கி கெஞ்சும்,
இவைகளின் விடுதலை எண்ணி!

சுய ஓய்வை பற்றின கவலை இன்றி,
இவைகளின் உறக்கம் சார்ந்து கவலையா?

விரிந்த காதுகள்,
இசையருவியை அனுமதிக்கும் கதவுகள்

வீடெங்கும் உழாவும் சாந்தம்,
தனக்கென்று விளையாடும் பாடலின் ஆனந்தம்

பகல் முழுதும் மற்றவர் சார்ந்த ஆட்டம்!

குறுகிய நேரம் ஒன்று,
எனக்குரியதாய் அமைந்திருக்க,
உறக்கம் எனும் பாரத்தை நான் மறுக்க இயலாதா நிலவே?

🌙 🎶


9
பரிதாபம்

கடிகாரத்தில் முப்பது நிமிட அளவில்…
இக்கரைக்கு அக்கறை இருண்ட அணை

அளவை கடந்ததும்…
இக்கறைக்கு இக்கறை தான் துணை

அக்கறை வேதனையின் ஒளி சட்டென்று தோன்றியதோ?
இல்லையெனில் இக்கறையின் சோகம் தான் குறுகிய நேரம் மறைந்திறந்ததோ?

இல்லை!

அக்கறையின் நரகத்தின் ஒளி துகள்கள் பரவலாக சுற்றி கொண்டு தான் இருக்கிறது,
இக்கறையின் விழிகளில் விழத்தான் எங்கிருந்தோ முளைக்கும் இந்த முப்பது நிமிடங்களின் தேவை

முப்பது நிமிடம் முழுதும் அரங்கேறும் ஊழல்!

தீமை என்று தெரிந்தும் அரங்கேறுவது பணம்,
அறியாமலே அரங்கேறுவது பரிதாபம்

😊









12
SM roast kadai pattaalathirku en vanakangal,

Roast: Cauliflower

Song request: Moochile Theeyumai
Movie: Bahubali - The Beginning
Director: S.S. Rajamouli

Intha murai kooda isai mazhaiyil nenaiya aarvamaaga ullen, jaladhoshame pudichaalum ok 😁

Flood ALERT ‼️


Thank you,
Idhu ungal Roast Master Shaswath

13
Vanakam SM team,

Naan enna paadal keka virumbugiren endraal..(Yosipom..):

Anjala song from Vaaranam 1000 podungo..😊😊

Thank you so much ☺️☺️

Ipadiku ungal Shaswath 😎

14
Annaivarukum iniya thamizh puthaandu vaazhthukkal!❤️🥳🥳🥳🎉🎉🎉

15
Vanakamgo 🙏😁

This is Shaswath here…

I would like to listen to Dheerane from Bahubali: The Beginning (Tamil) 👌👌

It would be nice to hear it on this Platform

Nandri 🙏

Pages: [1]