1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-049
« on: October 15, 2024, 11:50:42 pm »
பாடல்
நிசப்தமான இரவினில்
இனிமையான இசையுடன்
இனிமை குரல்களில் ஒலிக்கும்
பாடல்
காதல் கதைகள் கதைக்கும்
பாடல்
கண்களில் கனவுகள் நிறைக்கும்
பாடல்
விழாக்காலம் அதிரும் பாடல்
பக்தியோடு பாடும் பாடல்
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் பாடல்
கண்ணீரில் கரையும் ஒருவனை
கனிவுடன் தேற்றும் பாடல்
கல்நெஞ்சமும் கசிந்துருக செய்யும்
கவிஞ்சனின் பாடல்
இசை தந்தைக்கும் மொழியெனும் தாய்க்கும்
பிறந்த பிள்ளையின் பெயர் பாடல்
பாடல் பற்றிச்சொல்ல ஆயுளும்
போதுமோ ..?
பிறவிகள் எடுத்து வந்தும்
சொல்லத்தான் இயலுமோ.?
மானுடம் மரபினோடு
கலந்துவிட்ட பாடலை
கவியினில் விரித்துரைக்க
முடியுமோ...?
இயன்ற வரை சொல்லிபோட்டேன்
இனிய என் மித்திரரே..!
கேளுமின் யான் மொழிந்ததோர் கவியை
கவிதையும் கானமும் தன்னிலே...🥳💐😉✍️
நிசப்தமான இரவினில்
இனிமையான இசையுடன்
இனிமை குரல்களில் ஒலிக்கும்
பாடல்
காதல் கதைகள் கதைக்கும்
பாடல்
கண்களில் கனவுகள் நிறைக்கும்
பாடல்
விழாக்காலம் அதிரும் பாடல்
பக்தியோடு பாடும் பாடல்
பிறப்பு முதல் இறப்பு வரை
தொடரும் பாடல்
கண்ணீரில் கரையும் ஒருவனை
கனிவுடன் தேற்றும் பாடல்
கல்நெஞ்சமும் கசிந்துருக செய்யும்
கவிஞ்சனின் பாடல்
இசை தந்தைக்கும் மொழியெனும் தாய்க்கும்
பிறந்த பிள்ளையின் பெயர் பாடல்
பாடல் பற்றிச்சொல்ல ஆயுளும்
போதுமோ ..?
பிறவிகள் எடுத்து வந்தும்
சொல்லத்தான் இயலுமோ.?
மானுடம் மரபினோடு
கலந்துவிட்ட பாடலை
கவியினில் விரித்துரைக்க
முடியுமோ...?
இயன்ற வரை சொல்லிபோட்டேன்
இனிய என் மித்திரரே..!
கேளுமின் யான் மொழிந்ததோர் கவியை
கவிதையும் கானமும் தன்னிலே...🥳💐😉✍️