1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-063
« on: January 13, 2026, 11:45:18 am »
குறிப்பு:-
நான் இதில் குறிப்பிடப்பட்ட படத்தை கொண்டு தொலை தூரத்தில் உள்ள இரு ஆன்மாக்களின் காதல் புரிதல் உரையாடலை கருத்தில் கொண்டு எழுதிய கவி .. குறிப்பிட்ட பயனர்களையோ தனி நபர்களையோ காயப்படுத்தும் வகையில் யாம் எமது படைப்பை வெளியிடவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் ...கற்பனை படைப்பாயினும் கதை மாந்தர்கள் நிஜமாகும்...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
நீயும் நானும்
நிலவும் நதியும் போல
நிலவின் உருவம் நதி மீது
வானத்தின் நீலம் காணது
வார்த்தைகள் வசப்படவில்லை
உள்ளத்தில் உதிக்கும் வர்ணனை
சொல்ல..,
தொலைதூரத்தில் நீ
உன்னில் தொலைந்து
போகிறேன் நான்..
நிசப்தமான இரவில்
உன் சப்தம் கேட்டாலே
துள்ளி குதிக்கும் சிறுபிள்ளை போல
எனது உள்ளம்...
நீ இல்லா இரவின் நொடிகள்
தூக்கமற்று போகிறதேனோ..?
உலகின் அழுத்தங்கள் ஆயிரம்
மனதில் வருத்தங்கள் ஆயிரம்
கண்மணி உன் சப்தம் கேட்ட நொடி
மறைந்து விடும் நூறாயிரம் துன்பங்கள்
நான் அமைதியாக நித்திரை கொள்வேன்.
அமைதி கொள்ள ஆன்மா தேடும்
உறைவிடம் நீ
குயிலின் கீச்சிடும் குரலோ
மயிலின் அகவலோ
சிறப்பாகுமோ உன் குரலொலி முன்னே..?
நான் எங்கே என்று ஆவலாய்
தேடும் உன் அன்பிற்கு ஈடாகுமோ
இப்பிரபஞ்சம்..?
என் உலகில் என்னவளின்றி
ஏதுமுண்டோ..?
சிரிப்பாய் நீ சில நேரம்
அச்சிறு சிரிப்பில் என்னை
சிறை வைத்து செல்வாய்
நான் ஆயுள் கைதியாவேன்
உன் சிறையில் மட்டும்..
சில நேரம் நீ அழுவாய்
அத்தருணம் மரணத்தை
உணர்வேன் நான்..
குறுஞ்செய்தி வருகைக்காக
குறும்புகள் செய்ததுண்டு..
ஓயாத உரையாடல்
நம்மில் பல உண்டு..
சண்டைகள் இல்லா காதலுண்டோ..?
ஆம் நம் சண்டைக்கு காரணம்
நாம் அறிவோம் ..
நீ வேண்டுமென நானும்
நான் வேண்டுமென நீயும்
நித்தம் ஆயிரம் சண்டைகள் செய்ததுண்டு..
உன் சுதந்திரத்தில் நானும்
என் சுதந்திரத்தில் நீயும்
கட்டுபாடுகள் விதித்தில்லை..
உன்னை நீயாகவும்
என்னை நானாகவும்
நாம் ஏற்றுக் கொண்டோம்..
பொறுத்து போவதும்மில்லை
மாற்றிக்கொள்வதுமில்லை
ஏற்றுக்கொள்வதே காதலென்பதை
உணர்ந்ததாலே சண்டைகளே
நம்முன்னு சரண்ணடைந்தது..
திகட்டி போகும் அதீத
தேடல் அதீத பாசம்
அதீத காதல்
இவைகளை நான் நீ சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் காணது காணது
திகட்டவும் செய்யாது என்று உலகில் ஒன்று
உண்டெனில் அது எனக்கு நீயாகவே இருப்பாய்..
குறை நிறைகள் கண்டு
கலக்கம் கொண்டது இல்லை
நம்மில் நாம் ...
சொல்ல வார்த்தைகள் இல்லை
நீ பேசும் போது
நான் மெளனமாக இருந்தால்
உரிமையுடன் அதட்டு வாய்
நீ கடிந்து கொள்வதும் அழகடியே..
எனக்கு புரிதல் குறைவு
எப்பெண்ணும் அவ்வாறு பல
முறை பதில் கூறாள்..
நீயோ புரியும் வரை உடனிருப்பாய்..
விலகிச்செல்ல காரணங்கள் பல
உண்டு ..
உன்னை கோபத்தால் நான்
உடைத்த போதும்
உன் அன்பால் என்னை நீ மட்டுமே
தேற்றினாய்..
மாறிவரும் உலகில் பலர்
உறவை மதிப்பதில்லை
என்னவள் நீயே
நம் உறவை பெரிதென
காத்து நின்றாய்..
பொன்னோ பொருளோ
மண்ணோ மனையோ
எதுவும் ஈடாக
உன் முன்னே..
என் காலையின் தொடக்கம்
இரவின் உறக்கம்
உன்னில் தொடங்கி
உன்லே முடிவடைய வேண்டும்
மரணம் வரையல்ல
நித்தியமாக நீ இருக்க
நான் வேண்டுகிறேன்
இறையை..
காதல் வார்த்தையல்ல
வாழ்வியல் ..
மங்கி போவதும்
மறைந்து போவதும்
காதாலல்ல..
என் காதல் யாதென
பெண்ணே உன்னிடம்
சுருங்கச் சொல்வதெனில்
நாளும் வளர்கிற
உன்மீது பொழியும்
பாசமும் போதாது போதாது ..
நீ திகட்டா அமுது
நீ எனக்கு போதாது போதாது..
காதலில் விழுந்தேன்
என்று யாம் சொல்லோம்
நீ என்னுள்ளும்
யாம் உன்னுள்ளும்
மூழ்கி போனோம்..
பல பெண்களை நான் காணலாம்
என் நினைவெல்லாம் நீ
என்பதால் சலனம் கொள்ளாது
என் மனம்...
பல ஆண்கள் உன் கவனத்தை
கவரவும் முயற்சிக்கலாம்
ஆனாலும் பலனில்லை
சலனம் கொள்ளாது
உன் மனம்..
நான் ராமன் அல்ல
அசுரன் ஆயினும்
என்னவளே
உன்னால்
உன்னதமானேன்.
என்னிருளொளி
உணர்ந்தவள் நீ
உன்னடமே
உண்மையை காண்கிறேன் ..
பயம் குழப்பம் நம்
உறவில் இல்லை
இருள் சூழினும்
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...❤️💕🕊️✨
நான் இதில் குறிப்பிடப்பட்ட படத்தை கொண்டு தொலை தூரத்தில் உள்ள இரு ஆன்மாக்களின் காதல் புரிதல் உரையாடலை கருத்தில் கொண்டு எழுதிய கவி .. குறிப்பிட்ட பயனர்களையோ தனி நபர்களையோ காயப்படுத்தும் வகையில் யாம் எமது படைப்பை வெளியிடவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் ...கற்பனை படைப்பாயினும் கதை மாந்தர்கள் நிஜமாகும்...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
நீயும் நானும்
நிலவும் நதியும் போல
நிலவின் உருவம் நதி மீது
வானத்தின் நீலம் காணது
வார்த்தைகள் வசப்படவில்லை
உள்ளத்தில் உதிக்கும் வர்ணனை
சொல்ல..,
தொலைதூரத்தில் நீ
உன்னில் தொலைந்து
போகிறேன் நான்..
நிசப்தமான இரவில்
உன் சப்தம் கேட்டாலே
துள்ளி குதிக்கும் சிறுபிள்ளை போல
எனது உள்ளம்...
நீ இல்லா இரவின் நொடிகள்
தூக்கமற்று போகிறதேனோ..?
உலகின் அழுத்தங்கள் ஆயிரம்
மனதில் வருத்தங்கள் ஆயிரம்
கண்மணி உன் சப்தம் கேட்ட நொடி
மறைந்து விடும் நூறாயிரம் துன்பங்கள்
நான் அமைதியாக நித்திரை கொள்வேன்.
அமைதி கொள்ள ஆன்மா தேடும்
உறைவிடம் நீ
குயிலின் கீச்சிடும் குரலோ
மயிலின் அகவலோ
சிறப்பாகுமோ உன் குரலொலி முன்னே..?
நான் எங்கே என்று ஆவலாய்
தேடும் உன் அன்பிற்கு ஈடாகுமோ
இப்பிரபஞ்சம்..?
என் உலகில் என்னவளின்றி
ஏதுமுண்டோ..?
சிரிப்பாய் நீ சில நேரம்
அச்சிறு சிரிப்பில் என்னை
சிறை வைத்து செல்வாய்
நான் ஆயுள் கைதியாவேன்
உன் சிறையில் மட்டும்..
சில நேரம் நீ அழுவாய்
அத்தருணம் மரணத்தை
உணர்வேன் நான்..
குறுஞ்செய்தி வருகைக்காக
குறும்புகள் செய்ததுண்டு..
ஓயாத உரையாடல்
நம்மில் பல உண்டு..
சண்டைகள் இல்லா காதலுண்டோ..?
ஆம் நம் சண்டைக்கு காரணம்
நாம் அறிவோம் ..
நீ வேண்டுமென நானும்
நான் வேண்டுமென நீயும்
நித்தம் ஆயிரம் சண்டைகள் செய்ததுண்டு..
உன் சுதந்திரத்தில் நானும்
என் சுதந்திரத்தில் நீயும்
கட்டுபாடுகள் விதித்தில்லை..
உன்னை நீயாகவும்
என்னை நானாகவும்
நாம் ஏற்றுக் கொண்டோம்..
பொறுத்து போவதும்மில்லை
மாற்றிக்கொள்வதுமில்லை
ஏற்றுக்கொள்வதே காதலென்பதை
உணர்ந்ததாலே சண்டைகளே
நம்முன்னு சரண்ணடைந்தது..
திகட்டி போகும் அதீத
தேடல் அதீத பாசம்
அதீத காதல்
இவைகளை நான் நீ சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் காணது காணது
திகட்டவும் செய்யாது என்று உலகில் ஒன்று
உண்டெனில் அது எனக்கு நீயாகவே இருப்பாய்..
குறை நிறைகள் கண்டு
கலக்கம் கொண்டது இல்லை
நம்மில் நாம் ...
சொல்ல வார்த்தைகள் இல்லை
நீ பேசும் போது
நான் மெளனமாக இருந்தால்
உரிமையுடன் அதட்டு வாய்
நீ கடிந்து கொள்வதும் அழகடியே..
எனக்கு புரிதல் குறைவு
எப்பெண்ணும் அவ்வாறு பல
முறை பதில் கூறாள்..
நீயோ புரியும் வரை உடனிருப்பாய்..
விலகிச்செல்ல காரணங்கள் பல
உண்டு ..
உன்னை கோபத்தால் நான்
உடைத்த போதும்
உன் அன்பால் என்னை நீ மட்டுமே
தேற்றினாய்..
மாறிவரும் உலகில் பலர்
உறவை மதிப்பதில்லை
என்னவள் நீயே
நம் உறவை பெரிதென
காத்து நின்றாய்..
பொன்னோ பொருளோ
மண்ணோ மனையோ
எதுவும் ஈடாக
உன் முன்னே..
என் காலையின் தொடக்கம்
இரவின் உறக்கம்
உன்னில் தொடங்கி
உன்லே முடிவடைய வேண்டும்
மரணம் வரையல்ல
நித்தியமாக நீ இருக்க
நான் வேண்டுகிறேன்
இறையை..
காதல் வார்த்தையல்ல
வாழ்வியல் ..
மங்கி போவதும்
மறைந்து போவதும்
காதாலல்ல..
என் காதல் யாதென
பெண்ணே உன்னிடம்
சுருங்கச் சொல்வதெனில்
நாளும் வளர்கிற
உன்மீது பொழியும்
பாசமும் போதாது போதாது ..
நீ திகட்டா அமுது
நீ எனக்கு போதாது போதாது..
காதலில் விழுந்தேன்
என்று யாம் சொல்லோம்
நீ என்னுள்ளும்
யாம் உன்னுள்ளும்
மூழ்கி போனோம்..
பல பெண்களை நான் காணலாம்
என் நினைவெல்லாம் நீ
என்பதால் சலனம் கொள்ளாது
என் மனம்...
பல ஆண்கள் உன் கவனத்தை
கவரவும் முயற்சிக்கலாம்
ஆனாலும் பலனில்லை
சலனம் கொள்ளாது
உன் மனம்..
நான் ராமன் அல்ல
அசுரன் ஆயினும்
என்னவளே
உன்னால்
உன்னதமானேன்.
என்னிருளொளி
உணர்ந்தவள் நீ
உன்னடமே
உண்மையை காண்கிறேன் ..
பயம் குழப்பம் நம்
உறவில் இல்லை
இருள் சூழினும்
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...❤️💕🕊️✨
