Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Shruthi

Pages: [1] 2 3
1
யார்   இவள்.....?


விடியாத  இரவு...
அங்கே ஓர்  நிலவு மட்டுமல்ல,
இரு நிலவு  காட்சி கொள்கிறது....


சுற்றி இருக்கும் மரங்கள்
அவள் அழகில்  கிசுகிசுக்கின்றன...
வவ்வால்கள் துள்ளி குதித்து றெக்கை
விரிகின்றன....
புதையுண்ட பிணங்களை மீண்டும்
உயிர்த்தெழ வைத்தாள் அவள் பேரழகில்...
யார்  இவள்...?


எடுத்து  வைக்கும்  ஒவ்வொரு அடியும்
அவள் கதை  சொல்கின்றன...
இருந்தும் அவள் பார்வை மட்டும்,
அந்த மாளிகையை  விட்டு அகலவில்லை...

அவள் வருகையை கண்ட  அந்த மாளிகையின்  கதவுகள்  தானாகவே  திறக்கிறன...
இருள் சூழ்ந்த அந்த  அறையில்....
நிலவொளியில்  அவள்  நிழல் மட்டுமே
அவளுக்குத் துணையாக.....யார் இவள்?


அவள் இதழின்  ஓரம் சிறு புன்னகை மலர்கின்றது...
எங்கையோ  எப்பவோ  கேட்ட  ஓர் இசை...
அந்த  இசை ஒலிக்கும் திசையை நோக்கி
விரைந்தது அவள்  கால்கள்...
அறையின் கதவு  தானாகவே திறக்க..
காத்திருந்தது  பேரதிர்ச்சி....

அவள் கண்களையே அவளால்
நம்ப முடியவில்லை...
அருகில் சென்றாள்... வினா
எழுப்பினாள்...
கின்னரப்பெட்டியிலிருந்து
(piano)  ஒலித்த அந்த
இசையை  மீட்டியது  நீயா?  யார்  நீ?
உனக்கு  உனக்கு  எப்படி தெரியும்  இந்த  இசை?  யார்  நீ.....? என்று வினா எழுப்பிக்
கொண்டே  அந்த  முகத்தை பார்க்க
முயல்கிறாள்...
மீண்டும் மீண்டும் பார்க்க முயல்கிறாள்..
இருந்தும் பலனில்லை...
சற்று  அமைதிகொண்டாள்...


மயான  அமைதியில்
ஓர்  கம்பீர குரல் ஒலித்தது...

"இங்க என்ன பண்ற?
"எதுக்கு  இங்க வந்த?
"செஞ்சதுலாம்   போதாதா?

"யார்  நீ  யார்   நீ  என்று கதறுகிறாயே
நீ  யார் என்று  நான்  சொல்லவா...?
சொல்லடி  என்  அழகு  பெண்ணே..
நீ  யார்  என்று  நான்  சொல்லவா... ?


உன் வாழ்க்கை பக்கங்களில் நான்
எழுதப்படாத  கதை....
இன்னும்  சொல்ல  போனால்
என் தலை எழுத்தை கிறுக்கியவள்  நீ...
என்ன  யோசிக்கிற?
உன்னை சுமந்த  இந்த  இதயத்தில் 
இன்னும்  கொஞ்சம்  ஈரம் ஒட்டி  கொண்டுதான்  இருக்கிறது  போ  இங்கிருந்து.....
போயிறு...போயிறு...

ஆனா  போகும்  போது  திரும்பி மட்டும் பார்க்காமல்  போ,,,என்று
சொன்னது  அந்த  ஆன்மா...

அந்த  மாளிகையை விட்டு  பிரிய
மனமில்லாமல்  அழுதபடி
அங்கிருந்து  வெளியேறினாள்.....

ஒலித்த இசை...
பார்த்த உருவம்...
கேட்ட  குரல்...
இவை யாவும்  நிஜம் தானா என்று
யோசிக்க  தொடங்கினாள்...

"ஒருமுறை  அந்த  மாளிகைய  திரும்பி  பார்க்கலாமா?..
இல்ல  வேண்டாம்...
ஒருவேள பார்த்தா  என்ன ஆகும்..?

பார்க்கலாமா...?
வேண்டாமா ...
பார்க்கலாமா...?
வேண்டாமா... ? இல்ல  பார்க்கலாம்..
என்ன  ஆனாலும்  பரவால" என்று  யோசித்த  அவள்,,
இதயம்  வேகமாக  துடிக்க...
சற்று  தயகத்தோடு,,,
திரும்பி  பார்க்கிறாள்..

"இது  முடிவல்ல.......ஆரம்பம்"

5
Hai Sangeetha Megam Team na vantutiten

 My  fav song Yennai Izhukkuthadi  from Kadhalikka Neramillai movie

This song full vibe song with Ar rahman  & Singer  Dhree  voice

Elarum serthu vibe panuvom dedicate to all GTC frends

6
Woww arumai 👍

7
Super pa 👍

9
Limat super  pa 3 kavithai super  a elutirkeal👍

10
Hi All

My Fav Song Kaathodu Kaathanen

Movie  JAIL

Music GV Prakash

Singer  Dhanush & Aditi  Rao

Ellam line pidikum karanam my fav AdiTi Rao padirkanga

This song dedicate  to all

11
தனிமை...!!!

தனிமை  நீயே  ஏற்று  கொண்டால் உன் வாழ்கையில்  அது  புது விதமான  ஒளி...
அதுவே  உனக்கு  பிறர்  கொடுத்தால் உன்  வாழ்கையில்  தாங்கவே  முடியாத ஒரு விதமான  வலி....!!!

ஏன் இப்படி  தனியா  குறுகி  உட்கார்ந்து  இருக்கிற?
உனக்கு  என்னத்தான்  பிரச்சனை?
எதுக்கு  இந்த  சோகம்?

இப்படி  ஆறுதலா  நாலு  வார்த்த  பேச  ஒருத்தரும்  இல்ல...
அது  நெனச்சு  வருத்ததுல  இந்த  புள்ள...

அந்த  மெழுகுவர்த்தியை பார்...
இருட்டில்  இருக்கும் உனக்கு
தன்னையே  உருக்கி  கொண்டு  ஒளியை கொடுக்க  வில்லையா?

உலகிற்கே  வெளிச்சம்  கொடுக்கும்  நிலா இன்று  உன்னை  காண  உன் வீட்டு ஜன்னலில்  எட்டி  பார்ப்பது உனக்கு தான்  தெரியவில்லையா....

சோர்ந்து போகும்  நேரம் நீ  சாய்ந்து கொள்ள மடியாக உன்  வீட்டு சுவரும் உன்  தோழி  தானே? 
அது இன்னுமா  உனக்கு புரியவில்லை?

இல்லாதவர்களை நினைத்து நீயோ தனிமையில்...
உன்னையே வருத்தி  கொள்ளாதே இந்த  இளமையில்....

தனிமையும்  ஒரு சுகமான காலம்தான்...!!!!
அதில் நீயும்  கற்றுக் கொள்ளவாய் புதிய பாடம்தான்...!!!!

தனிமை எனும்  என்னை  தனித்து  விடாதே...
தங்கம் போல தாங்குவேன் என்னவளே...
தலை சாய்த்து தூங்க வா என் மடி  மேலே....

இந்த நொடியில்...
இந்த  நொடியில் தனிமை  எனும்  போதையை அனுபவித்துக்கொள்....
மீண்டும்  ஒரு  பிறப்பு  தனிமைக்கு கிடைத்தால்  உன்  அதிர்ஷ்டம்  என்று  தெரிந்துக்கொள்...

இப்படிக்கு  உன்னை  நேசிக்கும் உன்னை மட்டுமே  நேசிக்கும் நான்தான்   தனிமை...!!!!

12
I choose G

Gold

15
Naamalum  oru song keppom....

Song: Achacho
Movie : Aranmanai 4

Romba fast song ithu elarum ketthu Enjoy panungo.

Pin kurippu:

SM team ku onnu solenum  song req pandre  all users're prgm time kalaikiringa  ungela pali vaanga yenakku vere vazhi theriyalai athan font colour  white la kuduthuten  nalla utthu paathu kandu pudichi script  yeluthungo...happada  ippethan  happy a irukku... Tq SM Team

Pages: [1] 2 3