1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-067
« on: April 18, 2026, 08:38:00 am ». .. "மழை பேசும் என் மழலை நாட்கள்"
வானம் லேசா இருட்ட ஆரம்பிக்கும்...
என் மனசுக்குள்ள குஷி பூக்க ஆரம்பிக்கும்!
தூறல் போட்டா போதும் தட்டுல வரும் சுடச் சுட பஜ்ஜி,
அம்மா கண்ணுல மண்ணைத் தூவிட்டு நனைய ஓடுவேன், நான் தான் எங்க வீட்டு செல்ல புஜ்ஜி!
"மாடியில துணி காயுது ஓடிப் போய் எடுடி",
அப்படின்னு பாட்டி தரும் பாசமான குரலடி!
"மின்னல் அடிக்குது மரத்துக்கடியில நிக்காத பாப்பா",
அப்படின்னு பதட்டமா அதட்டுவார் எங்க அப்பா!
"மழையில ஒளிஞ்சு பிடிச்சு விளையாடலாமா?"ன்னு கேட்கும் அண்ணன்,
குறும்பு ஐடியா கொடுப்பதில் அவன் தான் எங்க வீட்டு மன்னன்!
"அய்யோ அம்மா! தம்பியும் பாப்பாவும் நனைய பிளான் போடுறாங்க",
அப்படின்னு அக்கா நடுவுல ஓடி வந்து போட்டுக் கொடுப்பாங்க!
யார் சொன்னது மழை தரும் வெறும் அமைதி?
எங்க வீட்ல அது தரும் ஒரு அழகான பரபரப்பு செய்தி!
மெதுவா நழுவி முற்றத்துல குதிச்சுப் பார்ப்பேன்,
மழைத் துளியை "ஆ"ன்னு வாயைத் திறந்து குடிப்பேன்!
மழைத் துளி ஒவ்வொன்னும் ஒரு தாளம் போடும்,
என் கால் சலங்கையும் அதற்கேற்ப ஜதி பாடும்!
தகிடததிமி என நான் ஆடும் அந்த அபிநயம்,
மழைத் தூறலோடு சேரும்போது அதுவே ஒரு காவியம்!
பேப்பர்ல கப்பல் செஞ்சு கால்வாயில விடுவேன்,
அது "டைட்டானிக்" மாதிரி கவுந்தா ஓன்னு அழுவேன்!
தெருவுல தேங்குமே குட்டி குட்டி குட்டை,
அதுல குதிச்சுத் தெளிப்பேன், ஏன்னா நான் ஒரு அழுக்கு மூட்டை!
நைசா வீட்டுக்குள்ள நுழையப் பார்ப்பேன்,
அம்மா முன்னாடி வந்து நின்னா 'ஸ்டேச்சு' மாதிரி நிப்பேன்!
"சொன்னா கேக்க மாட்ட"னு முதுகுல விழும் ரெண்டு அடி,
"காய்ச்சல் வரும்"னு திட்டிட்டே தலையைத் துடைப்பாங்க மறுபடி!
திரும்பி வர வழியில்லாத மாய நிலம் - என் "சிறுவயது",
இருந்தும் உயிரைத் தீண்டிப் போகுதே - இந்த "மழைப்பொழுது"!
நாட்கள் நகர்ந்து போனாலும் தீராத - என் மழையின் ராகம்,
தூறல் விழுந்தா போதும் உயிர்த்தெழுமே - என் குழந்தை வேஷம்!
காலம் என்னைக் கூட்டிச் சென்றாலும் மழையின் நேசம் போவதில்லை,
மேகம் முத்துக்களைச் சிந்தினால் போதும்... என் 'சின்ன வயசு' தொலைவதில்லை!
