Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Neelavaanam

Pages: [1] 2 3 ... 6
2
எனக்கு பிடித்த பாடல்

பாடல் : பூவே வாய்பேசும் போது

பாடம்  : 12 பி


ஒரு பெண் இப்படியும் காதலிப்பாளோ ஒரு ஆணை

 உணர்ச்சியை தூண்டும் காதல் வரிகள்

3
மழையும் குழந்தையும் குடையும்

மழை மேகம் மெதுவாக வந்து சேரும் நேரம்
வானம் தன் கதையை பூமிக்கு சொல்லும்
துளி துளியாக விழும் அந்த ஒலி
குழந்தையின் இதயத்தில் இசை உருவாக்கும் வழி

சின்ன கண்கள் வியப்பில் திறந்து
மழைத்துளிகளை எண்ணிக் சிரிக்கும்
வீதியெங்கும் நீர் ஓடையாகி
அதில் அவள்  கனவுகள் ஓடிச் செல்லும்

கால் தடங்கள் நீரில் மலர்ந்து
மீண்டும் மறைந்து விளையாடும்
சின்ன சிரிப்பு மழையோடு கலந்து
உலகமே மகிழ்ச்சியில் நனைந்து போகும்

கையில் குடை ஒன்று விரிகிறது
அது மழையில் இருந்து காத்துக்கொள்ள அல்ல
அதன் கீழ் ஒரு உலகம் பிறக்கிறது
அங்கு கவலைகள் யாருக்கும் இடமில்லை

துளிகள் குடையில் தட்டும் சத்தம்
மெல்லிசை போல காதில் முட்டும்
அந்த ஒலியில் குழந்தை மனம்
தன் கற்பனையை திட்டும்  வர்ணம்

காற்று வீசும் போது குடை ஆடும்
அதை பார்த்து குழந்தை மனம் கூத்தாடும்
சின்ன பயமோ மகிழ்ச்சியாக மாறும்
அது தான் வாழ்க்கையின் பாடமாக ஆகும்

மழை நனைத்தாலும் மனம் குளிரும்
அன்பின் தொடுதல் போல அது இருக்கும்
பூமி முழுவதும் புதுமை தரும்
பசுமை வாசம் மனதை நிரப்பும்

குடையின் கீழ் ஒரு சிறு பிரபஞ்சம்
அதில் சிரிப்புகள் பூக்கும் மலராகும்
மழை நாளும் ஒரு திருவிழா கோலம்
குழந்தைக்கு எதோ ஒரு புதிய  உலகம்

இந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும்
இதயத்தில் மழையாகப் பொழியும்
அந்த அரும்பின் இதயத்தில்
இணையில்லா சந்தோஷம்


என்றும் அன்புடன்

நீலவானம்

4
மெய் மறந்தேன் பெண்ணே

மெய் சிலிர்த்தேன் பெண்ணே உன் அழகினில்
மெல்லிசை போல என் உள்ளம் உருகிட
உன் பார்வை என்னைத் தொடும் நொடியிலே
உலகமே நின்றது காதல் என்னும் மொழியிலே

மலரின் வாசம் கூட உன்னிடம் தோற்குமடி
நிலவின் ஒளி கூட உன் முகத்தில் மறைந்ததடி
உன் சிரிப்பில் விழுந்தது பழுதானது என் இதயம்
என் உயிர் முழுவதும் உன் காதல் உதயம்

உன் கை பிடித்த அந்த சிறு நேரம்
என் வாழ்நாளில் காணாத இனிய பேரானந்தம்
உன் அருகில் நின்ற ஒவ்வொரு நொடியும்
உன் அழகை கண்டு புதிய பிறவியாகும் என் மனம்

உன் பெயரை சொல்லும் என் உதடுகள்
என் உள்ளத்தில் பதிந்த காதல் எழுத்துகள்
உன் நினைவுகள் வந்து தழுவும் போதெல்லாம்
என் உள்ளம் பூவாய் மலர்ந்து நான் ஒளிர்கின்றேன்

கனவிலும் நீயே, விழித்தாலும் நீயே
என் கண்களின் உள்ளே பதிந்த தேவதையே
உன்னை நேசிப்பது வார்த்தை அல்ல பெண்ணே
அது உயிரோடு கலந்த உணர்ச்சி வெளிப்பாடு

உன்னை சுவாசித்து நான் வாழ்கிறேன்
உன்னோடு இருக்கவே நான் பிறந்தேன்
உன்னை காதலித்ததாலே நான் என்னை கண்டேன்
என் இதயத்தின் அர்த்தம் நீயே ஆனாய்

இதயத்தில் ஏன் இவ்வளவு பாரம்?
நீ என்னுள் வந்து குடியேறியதாலோ…
இனிமையான வலியாய் நீ இருந்தாலும்
அதை விட நான் மகிழ்வது இந்த உலகத்தில் என்ன ?

நான் என்றால் நீயே, நீ என்றால் நானே
இரு உயிர்கள் ஒன்றாய் இணைந்ததே
மெய் மறந்தேன் பெண்ணே உன் அழகினில்
என் உயிரே நீயாகி விட்டதடி பெண்ணே

மெய் மறந்தேன் பெண்ணே…
காணாத அழகை கண்டாற்போல் என் வாழ்வு மாறியது
உன்னை கண்ட நொடியிலே என் உலகம் பிறந்தது


என்றும் அன்புடன்
நீலவானம்


7
தூங்காத இரவுகள்

காதலில் விழுந்தபின்
தூக்கமும் களைந்து போகும்,
கைபேசியே நமக்கு உயிராகும்.

நமது வாழ்வில் நடந்த ஒன்று –
இரவில் நிலவையே தோற்கடித்து
உறங்காமல் குறுஞ்செய்தி அனுப்பிய நாட்கள்.

நீ ஒரு ஓரத்தில்,
நானோ வெகு தூரத்தில்…
நம்மை இணைத்தது
அந்த சிறிய கைபேசியே.

இரவு பகலாகி,
விடிய விடிய குறுஞ்செய்திகள் செய்து,
பல நாட்கள் கொன்றோம்
கைபேசியை மின்கலம் இல்லாமல்.

ஒரு நாள் முழுவதும்
கையோடு  இருக்கும் அந்த கைபேசி,
“நீ என்னோடு இருக்கிறாய்”
என்ற உணர்வைத் தருகிறது.

என்னைச் சுற்றி
இருள் ஆட்கொண்ட வேளையில்,
உனது ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் முகத்தை ஒளிரச் செய்கிறது
கைபேசியின் வழியே.

கைவிரல்களின் ரேகை அழிய அழிய
செய்தி அனுப்பினேன்,
அழிந்தது ரேகை மட்டுமல்ல பெண்ணே
கைபேசியின் உள்ள
எழுத்து அச்சுகளும்தான்.

“என்ன இது,
கைபேசிக்கே கவிதை எழுதுகிரேனோ ?”
என்று எண்ணாதே…
நமது இரு இதயங்களின்
ஓசை ஒளிர்வது
அந்த கைபேசியிலிருந்துதான்.

இதயம் இல்லை, உயிரும் இல்லை
அந்த கைபேசிக்கு அனால்
பல காதலர்களின்
இதயங்களை இணைத்தது.

காதலர்கள்
முதன்முதலில் பகிர்ந்த முத்தமும்
கைபேசியின் வழியேதான்,
அதுவும் உண்மையில்
கைபேசிக்குத்தானே…

எல்லைகளை கடக்காமல்,
காதலை மட்டும் சுமந்து  சென்ற
அந்த தூங்காத இரவுகள்…



என்றும் அன்புடன்

நீலவானம்

11
நாவினாற் சுட்ட வடு

உலகம் முழுவதும் பரவி இருப்பது காதல்
காதல் இல்லாத மனிதன் இல்லை, காதல் இல்லாத விலங்குகளும் இல்லை
இதயத்தின் பரிமாற்றம் காதல், உணர்ச்சிகளின் புரிதல் காதல்
விட்டுக்கொடுத்து வாழ்வது காதல், உறவின் முறையை வலுவாக்குவது காதல்
இன்றுவரை காதலின் சின்னமாக இருப்பது இதயம்தான் 🧡
அந்த இதயம் நொறுங்குவதற்குக் காரணமும் காதல்தான் 💔
பிடித்த பெண் வேண்டாம் என்றதும் அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது...
நண்பனிடம் நெடுநாள் பழகிப் பிரியும்போது ஏற்படும் வேதனையைத் இந்த லேசான இதயம் எப்படித் தாங்கிக்கொள்கிறது...
நம்மைத் தாலாட்டிச் சீராட்டிக் கடினப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களின் பிரிவினை இந்த இதயம் இன்னும் துடித்துக்கொண்டே இருக்கிறதே ஆச்சரியம்தான்!
சகோதர சகோதரிகளாகப் பல வருடம் ஒன்றாக வாழ்ந்து திருமணத்தின்போது நம்வீட்டுத் தேவதை நம்மைவிட்டுச்செல்லும்போது வரும் துயரத்தை இ ந்தச் சின்ன இதயம் எப்படித் தாங்குகிறது!
வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம், இனம் மதம் மொழிகள் தாண்டி அனைவரையும் ஒன்று சேர்ப்பது இதயத்தின் உள்ள காதல்தான்
ஏன் நமது GTC யில் கூட அண்ணனாகத் தங்கையாக நண்பர்களாகப் பழகி வருவதற்குக் காரணம்கூட இந்த மென்மையான இதயத்தில் இருக்கும் காதல்தான்
ஒருநாள் காணவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று துடிக்கும் இதயம்...
இந்த இதயம் நொறுங்குவதற்கு முக்கியக் காரணம் அளவுகடந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு...
காதல் தெரியாதவர்களிடம் இதை எதிர்பார்த்து இதயத்தை நாமே உடைக்கிறோம்..
காதலில் இதயங்கள் பரிமாற்றம் நடக்கும். காதல் உடைந்தால் இதயங்களில் மாற்றம் ஏற்படும்
கூரான ஆயுதத்தால் இதயத்தைக் கிழித்தால் கூட அதைச் சரிசெய்ய மருத்துவர்கள் உள்ளனர் இந்த உலகத்தில்
மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத  இதயத்தின் காயம் மனிதனின் சொல். மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத  இதயத்தின் காயம் மனிதனின் சொல்.
என்ன ஒரு அதிசயம், சிறிய நாக்கிற்கு எத்துணை வலிமை
இதயத்தை அல்லவா தாக்குகின்றது
சிந்திப்போம், நமது இதயத்தின் காதலைச் சிறகடித்துப் பறக்கவிடுவோம்
நமது சொல்லினைக் கட்டுப்படுத்திப் பிறரின் இதயத்தைப் பலவீனப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு."
இதைப் புரிந்து நடந்தால் நண்பா நண்பி புகைப்படத்தில் பார்ப்பதுபோல
இதயத்திற்குக் காயமும் ஏற்படாது, கட்டும் தேவைப்படாது.


நீலவானம்


13
படத்தின் பெயர் : 12பி

பாடல் : பூவே வாய்  பேசும் போது

காரணம் : என்னை அறியாமலே மெய்மறந்து கேட்கும் பாடல்

14
நிலவின் பிரதிபலிப்பில் அவள்

அழகிய இரவில் நிலவின் ஒளியில்
அமர்ந்து நிலவை ரசிக்கும் மறு நிலா!

கருநீல வானத்தில் ஒளிரும் வட்ட நிலா
வானத்தை இரவில் ஒளிரச் செய்கிறது.

அவள் வந்ததும் எனது வாழ்க்கை ஒளிர்ந்தது போல
அவள் வந்ததும் வசந்தம் எனது வாழ்வில் நட்சத்திரமாய் மின்னியது.

பாலை போல இருக்கும் நிலவே
இரவையும் பகல் போல ஆக்குகிறாய்!

எனது வாழ்க்கையில் அவள் மாற்றியது போல …

நிலவின் மகளே  எனது மனதை கொள்ளையடித்த என்னவளே
உன்னையும் நிலவையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

எனக்கு ஒரு சந்தோகம்: நீ நிலவை ரசிக்கிறாயா?
இல்லை, நிலவு உன்னை ரசிக்கிறதா?

அழகின் அரசியே, உன் முகத்தில் நான் கண்டா
முகப்பரு அப்பொழுதுதான் புரிந்தது நிலவுக்கும் பாரு உண்டு என்று...

மின்னும் நட்சத்திரங்கள் இரவுக்காக காத்திருக்கும் நிலவை காண அல்ல,
நிலவை காணவரும் என்னவளை காண என்று !

இரவில் வரும் நிலவுக்கு வெளிச்சம் தருவது சூரியன் என்று நினைத்தேன்,
ஆனால் இன்றுதான் புரிந்தது என்னவளின் முகத்தின் ஒளி என்று!

தேய்பிறையும் வளர்பிறையும் இல்லாத நிலவின் மகளே,
நிலவும் பொறாமைப்படும் உனது அழகினை கண்டு…

உன்னை ரசிப்பது நிலவு மட்டும் அல்ல, நீ
அமர்ந்திருக்கும் இருக்கையும் தான்…

ஒரு சில நொடி உன்னை சுமக்கும் இருகைக்கு,
எவ்வளவு ஆனந்தம் என்றால்,

வாழ்நாளெல்லாம் உன்னை சுமக்கும் எனது
ஆனந்தத்தை சொல்ல வார்த்தை இல்லை, பெண்ணே...

இரவுக்கு நிலவழகு எனக்கு அவள் அழகு.
 


நீலவானம்

15
அனைவரும் வணக்கம்

சங்கீத மேகத்தில்

எனக்கு பிடித்த பாடல்


படம் - 12 பி

பாடல் - பூவே வாய் பேசும் போது


பாடலில் வரிகள் , ஒரு பெண்ணுக்கு ஆணின் மேல் எவ்வளவு காதலை

"நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு"


அருமையான வரிகள்

நன்றி


நீலவானம்

Pages: [1] 2 3 ... 6