1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-063
« on: January 14, 2026, 06:39:26 pm »
தூங்காத இரவுகள்
காதலில் விழுந்தபின்
தூக்கமும் களைந்து போகும்,
கைபேசியே நமக்கு உயிராகும்.
நமது வாழ்வில் நடந்த ஒன்று –
இரவில் நிலவையே தோற்கடித்து
உறங்காமல் குறுஞ்செய்தி அனுப்பிய நாட்கள்.
நீ ஒரு ஓரத்தில்,
நானோ வெகு தூரத்தில்…
நம்மை இணைத்தது
அந்த சிறிய கைபேசியே.
இரவு பகலாகி,
விடிய விடிய குறுஞ்செய்திகள் செய்து,
பல நாட்கள் கொன்றோம்
கைபேசியை மின்கலம் இல்லாமல்.
ஒரு நாள் முழுவதும்
கையோடு இருக்கும் அந்த கைபேசி,
“நீ என்னோடு இருக்கிறாய்”
என்ற உணர்வைத் தருகிறது.
என்னைச் சுற்றி
இருள் ஆட்கொண்ட வேளையில்,
உனது ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் முகத்தை ஒளிரச் செய்கிறது
கைபேசியின் வழியே.
கைவிரல்களின் ரேகை அழிய அழிய
செய்தி அனுப்பினேன்,
அழிந்தது ரேகை மட்டுமல்ல பெண்ணே
கைபேசியின் உள்ள
எழுத்து அச்சுகளும்தான்.
“என்ன இது,
கைபேசிக்கே கவிதை எழுதுகிரேனோ ?”
என்று எண்ணாதே…
நமது இரு இதயங்களின்
ஓசை ஒளிர்வது
அந்த கைபேசியிலிருந்துதான்.
இதயம் இல்லை, உயிரும் இல்லை
அந்த கைபேசிக்கு அனால்
பல காதலர்களின்
இதயங்களை இணைத்தது.
காதலர்கள்
முதன்முதலில் பகிர்ந்த முத்தமும்
கைபேசியின் வழியேதான்,
அதுவும் உண்மையில்
கைபேசிக்குத்தானே…
எல்லைகளை கடக்காமல்,
காதலை மட்டும் சுமந்து சென்ற
அந்த தூங்காத இரவுகள்…
என்றும் அன்புடன்
நீலவானம்
காதலில் விழுந்தபின்
தூக்கமும் களைந்து போகும்,
கைபேசியே நமக்கு உயிராகும்.
நமது வாழ்வில் நடந்த ஒன்று –
இரவில் நிலவையே தோற்கடித்து
உறங்காமல் குறுஞ்செய்தி அனுப்பிய நாட்கள்.
நீ ஒரு ஓரத்தில்,
நானோ வெகு தூரத்தில்…
நம்மை இணைத்தது
அந்த சிறிய கைபேசியே.
இரவு பகலாகி,
விடிய விடிய குறுஞ்செய்திகள் செய்து,
பல நாட்கள் கொன்றோம்
கைபேசியை மின்கலம் இல்லாமல்.
ஒரு நாள் முழுவதும்
கையோடு இருக்கும் அந்த கைபேசி,
“நீ என்னோடு இருக்கிறாய்”
என்ற உணர்வைத் தருகிறது.
என்னைச் சுற்றி
இருள் ஆட்கொண்ட வேளையில்,
உனது ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் முகத்தை ஒளிரச் செய்கிறது
கைபேசியின் வழியே.
கைவிரல்களின் ரேகை அழிய அழிய
செய்தி அனுப்பினேன்,
அழிந்தது ரேகை மட்டுமல்ல பெண்ணே
கைபேசியின் உள்ள
எழுத்து அச்சுகளும்தான்.
“என்ன இது,
கைபேசிக்கே கவிதை எழுதுகிரேனோ ?”
என்று எண்ணாதே…
நமது இரு இதயங்களின்
ஓசை ஒளிர்வது
அந்த கைபேசியிலிருந்துதான்.
இதயம் இல்லை, உயிரும் இல்லை
அந்த கைபேசிக்கு அனால்
பல காதலர்களின்
இதயங்களை இணைத்தது.
காதலர்கள்
முதன்முதலில் பகிர்ந்த முத்தமும்
கைபேசியின் வழியேதான்,
அதுவும் உண்மையில்
கைபேசிக்குத்தானே…
எல்லைகளை கடக்காமல்,
காதலை மட்டும் சுமந்து சென்ற
அந்த தூங்காத இரவுகள்…
என்றும் அன்புடன்
நீலவானம்
