Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Neelavaanam

Pages: [1] 2 3 ... 5
2
நாவினாற் சுட்ட வடு

உலகம் முழுவதும் பரவி இருப்பது காதல்
காதல் இல்லாத மனிதன் இல்லை, காதல் இல்லாத விலங்குகளும் இல்லை
இதயத்தின் பரிமாற்றம் காதல், உணர்ச்சிகளின் புரிதல் காதல்
விட்டுக்கொடுத்து வாழ்வது காதல், உறவின் முறையை வலுவாக்குவது காதல்
இன்றுவரை காதலின் சின்னமாக இருப்பது இதயம்தான் 🧡
அந்த இதயம் நொறுங்குவதற்குக் காரணமும் காதல்தான் 💔
பிடித்த பெண் வேண்டாம் என்றதும் அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது அதன் வேதனை இதயத்தை அல்லவா சென்றடைகிறது...
நண்பனிடம் நெடுநாள் பழகிப் பிரியும்போது ஏற்படும் வேதனையைத் இந்த லேசான இதயம் எப்படித் தாங்கிக்கொள்கிறது...
நம்மைத் தாலாட்டிச் சீராட்டிக் கடினப்பட்டு வளர்க்கும் பெற்றோர்களின் பிரிவினை இந்த இதயம் இன்னும் துடித்துக்கொண்டே இருக்கிறதே ஆச்சரியம்தான்!
சகோதர சகோதரிகளாகப் பல வருடம் ஒன்றாக வாழ்ந்து திருமணத்தின்போது நம்வீட்டுத் தேவதை நம்மைவிட்டுச்செல்லும்போது வரும் துயரத்தை இ ந்தச் சின்ன இதயம் எப்படித் தாங்குகிறது!
வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம், இனம் மதம் மொழிகள் தாண்டி அனைவரையும் ஒன்று சேர்ப்பது இதயத்தின் உள்ள காதல்தான்
ஏன் நமது GTC யில் கூட அண்ணனாகத் தங்கையாக நண்பர்களாகப் பழகி வருவதற்குக் காரணம்கூட இந்த மென்மையான இதயத்தில் இருக்கும் காதல்தான்
ஒருநாள் காணவில்லை என்றாலும் ஏன் வரவில்லை என்று துடிக்கும் இதயம்...
இந்த இதயம் நொறுங்குவதற்கு முக்கியக் காரணம் அளவுகடந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு...
காதல் தெரியாதவர்களிடம் இதை எதிர்பார்த்து இதயத்தை நாமே உடைக்கிறோம்..
காதலில் இதயங்கள் பரிமாற்றம் நடக்கும். காதல் உடைந்தால் இதயங்களில் மாற்றம் ஏற்படும்
கூரான ஆயுதத்தால் இதயத்தைக் கிழித்தால் கூட அதைச் சரிசெய்ய மருத்துவர்கள் உள்ளனர் இந்த உலகத்தில்
மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத  இதயத்தின் காயம் மனிதனின் சொல். மருத்துவரால் கூட குணப்படுத்த முடியாத  இதயத்தின் காயம் மனிதனின் சொல்.
என்ன ஒரு அதிசயம், சிறிய நாக்கிற்கு எத்துணை வலிமை
இதயத்தை அல்லவா தாக்குகின்றது
சிந்திப்போம், நமது இதயத்தின் காதலைச் சிறகடித்துப் பறக்கவிடுவோம்
நமது சொல்லினைக் கட்டுப்படுத்திப் பிறரின் இதயத்தைப் பலவீனப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு."
இதைப் புரிந்து நடந்தால் நண்பா நண்பி புகைப்படத்தில் பார்ப்பதுபோல
இதயத்திற்குக் காயமும் ஏற்படாது, கட்டும் தேவைப்படாது.


நீலவானம்


4
படத்தின் பெயர் : 12பி

பாடல் : பூவே வாய்  பேசும் போது

காரணம் : என்னை அறியாமலே மெய்மறந்து கேட்கும் பாடல்

5
நிலவின் பிரதிபலிப்பில் அவள்

அழகிய இரவில் நிலவின் ஒளியில்
அமர்ந்து நிலவை ரசிக்கும் மறு நிலா!

கருநீல வானத்தில் ஒளிரும் வட்ட நிலா
வானத்தை இரவில் ஒளிரச் செய்கிறது.

அவள் வந்ததும் எனது வாழ்க்கை ஒளிர்ந்தது போல
அவள் வந்ததும் வசந்தம் எனது வாழ்வில் நட்சத்திரமாய் மின்னியது.

பாலை போல இருக்கும் நிலவே
இரவையும் பகல் போல ஆக்குகிறாய்!

எனது வாழ்க்கையில் அவள் மாற்றியது போல …

நிலவின் மகளே  எனது மனதை கொள்ளையடித்த என்னவளே
உன்னையும் நிலவையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

எனக்கு ஒரு சந்தோகம்: நீ நிலவை ரசிக்கிறாயா?
இல்லை, நிலவு உன்னை ரசிக்கிறதா?

அழகின் அரசியே, உன் முகத்தில் நான் கண்டா
முகப்பரு அப்பொழுதுதான் புரிந்தது நிலவுக்கும் பாரு உண்டு என்று...

மின்னும் நட்சத்திரங்கள் இரவுக்காக காத்திருக்கும் நிலவை காண அல்ல,
நிலவை காணவரும் என்னவளை காண என்று !

இரவில் வரும் நிலவுக்கு வெளிச்சம் தருவது சூரியன் என்று நினைத்தேன்,
ஆனால் இன்றுதான் புரிந்தது என்னவளின் முகத்தின் ஒளி என்று!

தேய்பிறையும் வளர்பிறையும் இல்லாத நிலவின் மகளே,
நிலவும் பொறாமைப்படும் உனது அழகினை கண்டு…

உன்னை ரசிப்பது நிலவு மட்டும் அல்ல, நீ
அமர்ந்திருக்கும் இருக்கையும் தான்…

ஒரு சில நொடி உன்னை சுமக்கும் இருகைக்கு,
எவ்வளவு ஆனந்தம் என்றால்,

வாழ்நாளெல்லாம் உன்னை சுமக்கும் எனது
ஆனந்தத்தை சொல்ல வார்த்தை இல்லை, பெண்ணே...

இரவுக்கு நிலவழகு எனக்கு அவள் அழகு.
 


நீலவானம்

6
அனைவரும் வணக்கம்

சங்கீத மேகத்தில்

எனக்கு பிடித்த பாடல்


படம் - 12 பி

பாடல் - பூவே வாய் பேசும் போது


பாடலில் வரிகள் , ஒரு பெண்ணுக்கு ஆணின் மேல் எவ்வளவு காதலை

"நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு"


அருமையான வரிகள்

நன்றி


நீலவானம்

7
காதலுக்கு கவிதை

"காதலித்துப் பார் முகத்தில் ஒளிவட்டம் தோன்றும்" என்று
கூறினார் கவிஞர் வைரமுத்து.
ஒளிவட்டம் இல்லாத முகத்திலும்கூட காதல் தோன்றும்
என்பது எனது கூற்று...

காதல் ஒருவகைப் போதை,
அது பேதையைப் பொறுத்து!
காதல் ஊடுருவாத மனமும் இல்லை,
காதலில் விழாத மனிதர்களும் குறைவு.

பள்ளிப் பருவத்தில் காதல்,
அனைத்துப் பெண்களும் அழகாகத் தெரியும்.
ஆனால் பொழுதுபோக்கான காதல் நீடிக்காது.
கல்லூரிகளின் காதல்,
நேரம் செலவிடும் கதைகள் பேசிடும்.
புதுப் பெண்கள் வந்தால்,
காதல் பழையதாகிவிடும்.

வேலையின் போது காதல்,
தனது பளுவை மறைக்க,
கவலை மறக்க நம்மை,
நாம் ஏமாற்றிக்கொள்வது.

இவை அனைத்தையும் கடந்து,
வருவதுதான் காதல்!!!
ஒரே மனமாகக் கலப்பது,
ஒரே உணர்வாக இருப்பது.
விட்டுக்கொடுக்காமல் வாழ்வது,
மனதில் ஒருவரை மட்டும் வைத்திருப்பது.

ஒரு சிலர் மட்டுமே இதைக் கடைபிடிப்பார்,
மற்றவர்களோ பொழுதுபோக்குக் காதலர்கள்.
மாறிவரும் சமுதாயம்,
மனிதரையும் மாற்றுகிறது.

காதலின் நினைவாகக் காட்டிய தாஜ்மஹாள் கூட,
தனது இரண்டாம் காதலிக்காகத் தானே!
காதல் நிரந்தரமானது,
ஆனால் மனிதனின் மனமோ நிரந்தரமில்லாதது.

காதலைக் கொலை செய்யாமல் காதல் செய்வோம்,
காதலை வாழவைப்போம்.

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐


நீல வானம்


8
படிகளை உடைத்திடு, சிறகை விரித்து பறந்திடு!

"தோல்வியே வெற்றியின் முதல் படி"

அனைவருக்கும் எதிர்கால வாழ்க்கைப் பயணத்தில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம் படிகளைக் கடந்து…

பேருந்துப் படிகளில் நின்று பயணிப்பது போலத்தான்
இன்றைய நமது வாழ்க்கையின் பயணம்...
ஒரு கால் தடுக்கினால் கிடைக்கும் எட்டுக்கால் பயணம்...

ஒரு பெண் சாதனைப் படைக்க எத்தனை தடைகள்
இந்தச் சமுதாயத்தில்!
அத்தனை தடைகளையும் படிக்கட்டுகளாக மாற்றி
வெற்றியடையும் பெண்களும் உண்டு...
அந்தத் தடைகளில் மாட்டிக்கொண்டு தங்கள்
கனவைத் தொலைத்தவர்களும் உண்டு...

பெண்ணே! பிறவியிலேயே உனக்கு மனத்தைரியத்தை
அளவுக்கு அதிகமாகக் கொடுத்தான் கடவுள்...
மனிதரோ சாதி, மதம், இனம் என்னும் பாகுபாடால்
பெண்ணை அடிமையாக்கி அவளின் கனவைக் களைத்தான்...

தோல்வியே வெற்றியின் முதல் படி... ஆனால்
ஒரு சிலரின் வாழ்வில் தோல்வியே பல படியாக உள்ளது...

ஆணைவிடப் பெண்ணுக்குப் பொறுப்பும் தைரியமும் அதிகம்
என்பதால்தான் என்னவோ படைக்கும் பொறுப்பைப் பெண்ணிடம் கொடுத்தான்...
படைப்பவளுக்கே சமுதாயத்தில் இந்த நிலை...

மாறிவரும் காலம் சாதி, மதம், இனம் எல்லாம்
பெண்ணின் காலடியில்...
பெண்ணே! தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை
மறந்துவிடு... மீண்டும் மீண்டும் அந்தப் படியையே உனக்கு அளிப்பார்கள்.

பெண்ணே! பிரசவத்தின் வலியைவிட வேறு வலி உண்டோ இந்த உலகில்!
அதைத் தாங்கிக்கொண்ட உனக்குப் படிக்கட்டுகள் எல்லாம் பஞ்சு மெத்தை!

சிறகை விரித்துப் பார, படிக்கட்டும் இல்லை, தோல்வியும் இல்லை
அனைத்திலும் வெற்றியே காண்பாய்...

தடை இல்லாத சமுதாயம் அமைத்திடு, சாதனை படைத்திடு !

அனைத்து பெண்களுக்கும் ஒரு சமர்ப்பணம் !


நீல வானம்

9
குடைக்குள் அன்னை


என்னை காணாதபோதே பாசம் வைத்தவள் அன்னை

கர்ப்பத்தின் காலத்தில் நீ என்னை கருத்தாய் பாதுகாத்தாய்
உனக்கு எத்தனை  இன்னல்கள் வந்தாலும் …

கருவறை நான் பூமிக்கு வரும் முன்னால்  தங்கியிருந்த
நந்தவனம் …

கலப்படம் இல்லாத காற்றை சுவாசித்தேன்  கருவறையில்

வற்றிபோகாத நதி ஒன்று உண்டென்றால் அது அன்னையின்
அரவணைப்பும் பாசமும் தான் ...

கோடிகள் குவித்துவைத்தாலும் கிடைக்காத ஒன்று அன்னையின் அன்பு

பாசத்தில் என்னை வசீகரித்தவள்  சமையலில் என்னை வசீகரித்தவள்
வசீகரிப்பதில் ராணி அன்பின் மூலமாக …

தனக்கென்று ஏதும் செய்யாத உள்ளம் தாயின் உள்ளம் …

நாம் நேரத்திற்கு சாப்படிவதர்க்காகவே அவள் சாப்பிடும் நேரத்தை குறைப்பவள் ...

அனைத்து பாசத்தையும் கொடிவளர்ப்பதால்தான் என்னவோ கடவுளுக்கு மேல்
அன்னை வகிக்கிறாள் முதல் இடத்தில் …

தனக்கு இருக்கும் இன்பத்தையெல்லாம் மூட்டைகட்டிவிட்டு
என்னுடைய இன்பத்தை சுமந்தாள் வாழ்நாளெல்லாம்  …

ஒரு எறும்புக்கடித்துவிட்டாலும் பொறுக்காத மனது அன்னையின் மனது …

அன்னையிடம் நீ அன்பை வங்காளம் என்ற கூற்று உண்மையாய்
இருக்கிறது அன்னை இருக்கும் அணைத்து வீட்டிலும் …


கணவன் தன்னை சுயநலத்தின்முலம் கைவிட்டாலும்
பிள்ளைகளை இறுதிவரை சுமப்பவள் அன்னை …


தன் இரத்தத்தை பாலாக உன்ன தந்தவள்
இன்று எனக்காக வேர்வை சிந்தி உழைக்கிறாள் …
 

காரணம் ஒன்றுதான் பாசம் …


கொட்டும் மழையிலும் எனக்காக உழைக்கிறாயே தாயே !
உனக்கு மகனாக இருக்க என்ன தவம் செய்தேன் தாயே!
உனது வாழ்நாள் முழுவதும் உனது பாதத்திற்கு காலனியாய்  இருப்பேன் தாயே !
என்னை கண்ணின் மணிபோல பார்க்கிறாயே நீயே எந்தன் தாயே !

உயரம் எட்டவில்லையென்றாலும்  மழையாய் உன்மேல் படவிடமாட்டேன் தாயே ☔
நாற்காலி போடு குடைக்குள் வைத்து உன்னை பாதுகாப்பேன்  தாயே ...


ஆயிரம் வார்த்தைகள் தமிழில் இருந்தலும் உயிருள்ள வார்த்தை "அம்மா"

வாழும் தெய்வங்களான அனைத்து அன்னைக்கு ஒரு சமர்ப்பணம் !


இது என்னது கடைசி கவிதை


நன்றி ரிஜியா மற்றும் வாழ்த்துக்கள் 💐

நீலவானம்

10
என் இனியவளே

உன்னோடு பேசிய நாட்கள் உன்னோடு பேசிய பொழுதுகள்
இனி கிடைக்குமா கண்மணியே ....

கதிரவன் வரும் முன் , கதிரவனைப்போல வருவாள்
வாசலில் கோலம்போட என்னவள் ....

அவளை காண்பதற்காவே காலையில் கண்விழிப்பேன்
ரீங்காரத்தை இதயத்தில் வைத்தேன் ....

அவளது அழகில் மயங்கியது எனது உள்ளம் அவள்
கோலம் வாசலில் மட்டும் போடவில்லை .....

எனது இதயத்திலும் போட்டுவிட்டால்
கோலத்தின் புள்ளிகளோடு ஆரம்பித்த காதல் …..

காதல் மலர்ந்த தருணம்.. அவளை நேசிக்க தொடங்கினேன்
சுவாசிக்க விரும்பினேன் வாழ்நாள் முழுவதும் …..

அவள் போகும் பாதியில் அவளின் கால்தடங்களில்
எனது கால்தடத்தையும் பதித்தேன்  ஒன்றாக பயணிக்க …..

மின்சாரம் பாய்ததுபோல இருந்தது அவள் என்னை பார்த்த பார்வை
அன்றே நினைத்தேன் அவள் தான்  எனது சம்சாரம்  என்று …..

இதயத்தில் மலர்ந்த காதலை சொல்ல துணிந்தேன்
மலரை கையில் ஏந்தியபடி சென்றேன் என் தேவதை காண …..

நான் அன்று கண்ட காட்சி இதயத்தில் அம்பை எய்ததுபோல்
அவள் அவளுக்கு பிடித்தவனுடன் ….. நான் தனிமையில்

மலர்ந்த மொட்டு கருகியது போல எனது காதல் கருகியது
அன்று உணர்ந்தேன் இதயத்தின் வலியை கண்கள் புரிந்துகொள்ளும் என்று ….

எனது மனதின் நிலைமை தண்ணீரில் இருக்கும் மீனை
தரையில் போட்டதுபோல் துள்ளியது …..


அன்று நான் மறைத்தது மலரை மட்டும் அல்ல
எனது மனதையும் தான் … புதைத்தேன் காதலை என் இனியவளுக்காக …..


நீலவானம்



11
Poove vai pesum pothu from 12B

12
மழலையாக மாறத்தான் ஆசை எனக்கு

மாலை வேளை கதிரவன் கண்ணை சாய்க்கும் நேரம்
மழலை கூட்டங்கள் மகிழ்வோடு உலாவருகின்றனர் …

கதிரவனை விட உயரே பறக்கும் பட்டம்
மழலையின் மனதினை போல  …

தனது சகோதரனை போல நான்கு கால்
ஜீவனையும் பாவிக்கும் மழலை மனது  …

பறவைகள் ஆனந்தமாய் உலவருவது போல
மாலையில் உலாவரும் குழந்தைகள் கூட்டம்  …

செக்க சிவந்த வானத்தின் அழகில் செந்நீர  கதிரவனின் நிறத்தில்
அங்கங்கே வெள்ளை மேகம் கண்ணுக்கு தரும் விருந்து  …

கலங்கம் இல்லாத மனது கலப்படம் இல்லாத சிரிப்பு
இதுவே மழலைக்கு கடவுள் தந்த பரிசு  …

கல்லோ முள்ளோ காலில் குத்தினாலும்
அதை பொருட்படுத்தாமல் விளையாடும் மழலை உள்ளம்  …

ஓடும் தூரம் தெரியாமல் குறிக்கோள் ஏதும் இல்லாமல்
நண்பர்களோடு ஆனந்தமாக உலாவரும் மழலை  காலம் …

பட்டத்தை நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்ப்போம்
காற்றடிப்பதால் பட்டம் பறக்கிறது உயரே  …

நாமும் வாழ்வில் உயரே பறக்கிறோம்
பட்டத்தை போலே நம்பிக்கையெனும் நூலுடன்  …

நம்பிக்கை அறுப்பட்டால் நூல் இல்லாத காற்றடிபோல
காற்றுபோகும் திசைக்கு பட்டம் செல்வதுபோல செல்லும்  நமது வாழ்கை …

நமது வாழ்கை பட்டத்தை போல பறந்தாலும்
பலவித ஆசைகள் உலகத்தின் மாற்றம் சுமுக வலைத்தளம்
இவற்றில் நாம் அடிமையாகும் பொது

நம்பிக்கை எனும் பட்டத்தின் நூல் அறுந்து
நமது வாழ்க்கை நமது கையை விட்டு  பறந்து செல்கிறது

மழலையாக மாறத்தான் ஆசை எனக்கு
மழலையாக மாறத்தான் ஆசை எனக்கு

இந்த சமுதாயம் மாறவிடாது தெரியுமா உனக்கு?




என்றும் அன்புடன்

நீலவானம்

13
நிலவுடன் உறவு

இரவின் மடியில் நிலவும் தாலாட்டும்
கடலின் அலைகள் கூட இசை மீட்டும் !!!

உனது கைகோர்த்து நடக்கும்பொழுது
அந்த நிலவே பொறாமைகொள்ளும் ...

இரவில் மின்சாரம் இல்லாமல்
எரியும்  விளக்கு சந்திரன் மட்டுமே !!!

அந்த விளக்கின் ஒளியில் நீயும் நானும்
நடந்துச்செல்லும் போது  இனம் புரியாத சந்தோசம் !!!

இரவில் பால்போன்ற  நிலவழகு
அந்த நிலவின் ஒளியில் நீ பேரழகு !!!

கடற்கரை மணல்கள் கூட தவம் கிடக்கிறது
உனது பாதத்தின் சுவடுகள் பதிப்பதற்காக ...

நீலவானத்தை கண்டு நான்  பொறாமை படுகிறேன்
நிலவை வெண்மையாய் காட்ட அது இருளில் சென்றுவிட்டது ....

பெண்ணே உன்னோடு கோர்த்த இந்த கைகள்
ஒருபோதும் உன்னை விட்டு பிரியாது !!!

நான் சிறுபிள்ளையாய் இருக்கும்போது நிலவை
காட்டி என்னக்கு உணவு கொடுத்தால் அன்னை …

அதே நிலவின் அருகில் கை  கோர்த்து நிற்கிறோம் 
வருடங்கள் போனாலும்  அழகே போகாத ஒன்று நிலவு !!!

நிலவே உனக்கு  வருடம் முடிவில்
ஒரு வயது குறைகிறதா என்ன ?

எத்தனை வருடங்கள் ஆனாலும் நிலவை போல
பிரகாசமாய் இருக்கும் நம் காதல் !!!

கை  கோர்த்து செல்வோம் நிலவின் ஒளியில்
கடலின் அலைகள் பூக்கள் போல பாதத்தில் மோத
இங்கு ஏற்ப்படுகிறது நிலவுடம் ஓர் உறவு



அன்புடன்
நீலவானம்



(பின்குறிப்பு ரிஜியா உங்கள் பணி  சிறக்க வாழ்த்துக்கள் )

14
மாற்றம் ஒன்றே மாறாதது (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது



5 வருடத்திற்க்கு ஒரு முறை கையில் போடும் அடையாளம்
அடுத்த 5 வருடத்திற்ககான மக்களின் வாழ்விற்கான அடையாளம்

18 வயது வந்ததும் வருகிறது ஓட்டுப்போடும் உரிமை
போட்டபின்பு மக்கள் இருப்பதோ தனிமை

ஆட்சியை மாற்றவேண்டும் என்பதர்க்காக அல்ல இந்த தேர்தல்
நம்மை ஆட்சி செய்பவரினை நாமே தேர்ந்தெடுப்பதே இந்த தேர்தல்

விரலில் மை வைப்பார் ஓட்டுப்போடதருக்கு அடையாளமாய்
அந்த மை மறைவதற்குள் சொன்ன வாக்கு போய்விடும் மாயமாய்

அனைத்திலும் கலப்படம் நாடாகும் இ ந்த உலகத்தில்
ஓட்டுப்போடும் போது நடக்காத இந்த நகரத்தில்

காச வாங்கிட்டு போடுறியே ஓட்ட ,காச வாங்கிட்டு போடுறியே ஓட்ட
உனையலாம் நடுரோட்டுல வச்சிஅடிக்க வாங்கணும்டா சாட்ட ....

தேர்தலில் வெற்றியடைந்தால் தருவாங்கப்ப இலவசம்
இவங்கதான் மக்களை சோம்பேறியாகும் வேஷம்
இவங்கதான் மக்களை சோம்பேறியாகும் வேஷம்

ஒரு விரல் புரட்சின்னு ஊருப்பூர கத்துறோம்
தேர்தல் முடிஞ்சா வாயதானே பொத்துறோம்
ஏதும் கேட்காம நாம  வாயதானே பொத்துறோம்

கள்ள  ஓட்ட போடுற குடிமகன்
நல்ல ஓட்ட போடமா வீட்டுல இருக்க குடிமாகான்

எந்த வேலையும் செய்யாம சம்பளம் வரும் அரசியல் வாதிக்கு
அட வேலையை செஞ்சு கொடுத்த கிம்பளம் கிடைக்கும் அரசியல் வாதிக்கு

நண்பா நண்பி நா வரேன் டா அரசியலுக்கு
சரி அந்த கத நமக்கு எதுக்கு அதுக்கு இன்னும் காலம் இருக்கு


பெரிசு சிறுசு எல்லாமே அரசியல் பத்தி பேசி துள்ளுது
மச்சி அரசியல மாற்றம் ஒன்றே மாறாதது
ஏமாற்றம் ஒன்றே மாறாதது


நீலவானம்

15
விலைமதிமற்ற அன்பு

நீளவானத்தை விட நீண்டந்து  அன்பு எங்கள் அன்பு ...

பறந்துகிடக்கும் கடலின் ஆழத்தைவிட ஆழமானது எங்கள் அன்பு ....

அரைக்கால் சட்டை போடு ஊர் சுற்றுவோம் காற்றைப்போல ...

சட்டைகளில் ஆயிரம் கரை இருக்கலாம் ஆனால் எங்கள் உள்ளங்கள்
தூய்மைக்கு மறுபெயர் …

நாம் உயிர்வாழும் காற்றில் கூட  கலப்படம் உள்ளது, 
கலப்படம் அற்றது எங்கள்  அன்பு

சந்தோஷத்தில் நாங்கள் துள்ளிக்குதித்து ஆடும்போது
பூக்கள் கூட பூத்துக்குலுங்கும் இன்பத்தில்

எங்கள் துக்கங்களை எங்களோடு  கண்ணீராக பகிர்ந்துகொள்ளும் மழைகள் ...

இயற்கையின் வரப்பிரசாதங்கள் அனைத்தும் எங்கள் அன்பிற்கு  கிடைத்த பரிசு ...


ஆம் , ஒரு அண்ணனின் அன்பை பற்றிய கவிதைதான் இது ....

வாடாத மலரைப்போல் என்னை வாடாமல் பார்ப்பவன்

என்னக்கு ஒன்று என்றல் இதயத்தில் இருந்து துடிப்பவன்

தனக்காக எதையும் எண்ணாதவன்

தன்  கரங்களில் என்னை சுமப்பவன்

கடவுள்கூட தம்பியாக இருக்க ஆசைப்படுவார்  இவனிடம் ….

எத்தனை அன்பு காட்டுகிறாய் என்னிடம் …

அண்ணா என்று கூப்பிடுவதைவிட அம்மா என்று கூப்பிடுவது பிடித்தது எனக்கு

இப்படிபோல ஒரு அம்மா ஆனா அண்ணா உண்ட உனக்கு ??




நீலவானம்

Pages: [1] 2 3 ... 5