1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-073
« on: August 25, 2026, 09:14:33 am »
இசை மாத்திரை
உடலுக்கு ஒரு காயம் என்றால்
மருத்துவரின் மாத்திரை போதும்...
ஆனால், உள்ளத்திற்கு ஒரு காயம்
என்றால் என்ன செய்வது? அங்கேயே
பிறக்கிறது இசையின் தேவை!
சொற்கள் தோற்கும் இடத்தில் சங்கீதம்
பேசுகிறது... வலிகள் கூடும் இடத்தில்
இசை மருந்தாக மாறுகிறது.
ஆறுதல் அற்ற பல நேரங்களில்...
தோலோடு தோல் கொடுத்த இசையே...
உன் வார்த்தைகள் வெறும் இசையல்ல..
எனது இதயத்திற்கே ஒரு மருந்து......
மருத்துவர் தரும் மாத்திரைகள்
உடலின் நோயை மட்டுமே தீர்க்கும்......
இசை என்னும் மாத்திரையோ ....
உயிரின் வலியையும் மெல்ல ஆற்றும்.
ஆறுதல் வார்த்தையின்றி,,,
பேச யாருமின்றி,,,
இரவோடு உறக்கத்தில் உறங்க முடியாமல்
தவிக்கும் இதயத்திற்கு தெரியும்...
அந்த இசையின் ஒவ்வொரு வார்த்தையும் ஆறுதலும்....
என் தனிமைக்கு இசை மட்டும் இல்லையெனில்.....
என்றோ நான் மனநோயாளி ஆக மாறி இருப்பேன்....
அமைதியாய் என் மனம் GTC குள்ளே நுழைந்தது...
இசையில் மடியில் தவழ....
என் உறங்காத இரவுகளை கழிக்க.....
மௌனமாய் சாய்ந்துகொண்டேன்....
இயர்போன் ஐ அணிந்து கொண்டேன்...
பாடலை கேட்டுக்கொண்டே,
கண்களை மூடிக்கொண்டேன்!
வெளி உலகச் சத்தமெல்லாம்.
வெளியிலேயே நிற்கட்டும்...
என் இதயத்தின் தனிமையிலே.
இசை மழை மட்டும் பொழியட்டும்!
வலிகள் தந்த நினைவுகளும்.
வழியை விட்டு விலகட்டும்...
இசை தந்த மாத்திரையில்.
மனசும் மெல்ல ஆறட்டும்!
காலமும் நொடியும் உறையட்டும்,
கவலைகள் காற்றாய் கரையட்டும்...
இசை என்னும் பேரலைக்குள்.
என் ஆயுள் வரை அமைதி தொடரட்டும்!
மருந்தென ஒன்று மாத்திரையில் இருந்தால்.....
அதன் பெயர் ‘இசை’ என எழுதலாம்!
மருத்துவக் கூடமும் தேவையில்லை.
இசை வெள்ளத்தில் நாமும் மூழ்கலாம்!
கவலையின் சுவடுகள் கரைந்து போகும்,
கண்ணீரின் துளிகளும் மறைந்து போகும்!
காற்றில் மிதக்கும் (g)கானத்திலே.
ஆயுள் வரை நிம்மதி நிலைத்து வாழும்!...
இது இசையில் தொலைந்த மனம்...
இசையோடு இணைந்து வலியை
மறைக்க நினைத்த மனம்.....
துடிக்க மறுக்கும் இதயத்தை ..
இசையாக வந்து மருந்தாக இருந்த இசையே....
உன்னை நான் மீண்டும் சந்திக்க வருகிறேன்....
என் உறங்காத இரவில்.... 💚
உடலுக்கு ஒரு காயம் என்றால்
மருத்துவரின் மாத்திரை போதும்...
ஆனால், உள்ளத்திற்கு ஒரு காயம்
என்றால் என்ன செய்வது? அங்கேயே
பிறக்கிறது இசையின் தேவை!
சொற்கள் தோற்கும் இடத்தில் சங்கீதம்
பேசுகிறது... வலிகள் கூடும் இடத்தில்
இசை மருந்தாக மாறுகிறது.
ஆறுதல் அற்ற பல நேரங்களில்...
தோலோடு தோல் கொடுத்த இசையே...
உன் வார்த்தைகள் வெறும் இசையல்ல..
எனது இதயத்திற்கே ஒரு மருந்து......
மருத்துவர் தரும் மாத்திரைகள்
உடலின் நோயை மட்டுமே தீர்க்கும்......
இசை என்னும் மாத்திரையோ ....
உயிரின் வலியையும் மெல்ல ஆற்றும்.
ஆறுதல் வார்த்தையின்றி,,,
பேச யாருமின்றி,,,
இரவோடு உறக்கத்தில் உறங்க முடியாமல்
தவிக்கும் இதயத்திற்கு தெரியும்...
அந்த இசையின் ஒவ்வொரு வார்த்தையும் ஆறுதலும்....
என் தனிமைக்கு இசை மட்டும் இல்லையெனில்.....
என்றோ நான் மனநோயாளி ஆக மாறி இருப்பேன்....
அமைதியாய் என் மனம் GTC குள்ளே நுழைந்தது...
இசையில் மடியில் தவழ....
என் உறங்காத இரவுகளை கழிக்க.....
மௌனமாய் சாய்ந்துகொண்டேன்....
இயர்போன் ஐ அணிந்து கொண்டேன்...
பாடலை கேட்டுக்கொண்டே,
கண்களை மூடிக்கொண்டேன்!
வெளி உலகச் சத்தமெல்லாம்.
வெளியிலேயே நிற்கட்டும்...
என் இதயத்தின் தனிமையிலே.
இசை மழை மட்டும் பொழியட்டும்!
வலிகள் தந்த நினைவுகளும்.
வழியை விட்டு விலகட்டும்...
இசை தந்த மாத்திரையில்.
மனசும் மெல்ல ஆறட்டும்!
காலமும் நொடியும் உறையட்டும்,
கவலைகள் காற்றாய் கரையட்டும்...
இசை என்னும் பேரலைக்குள்.
என் ஆயுள் வரை அமைதி தொடரட்டும்!
மருந்தென ஒன்று மாத்திரையில் இருந்தால்.....
அதன் பெயர் ‘இசை’ என எழுதலாம்!
மருத்துவக் கூடமும் தேவையில்லை.
இசை வெள்ளத்தில் நாமும் மூழ்கலாம்!
கவலையின் சுவடுகள் கரைந்து போகும்,
கண்ணீரின் துளிகளும் மறைந்து போகும்!
காற்றில் மிதக்கும் (g)கானத்திலே.
ஆயுள் வரை நிம்மதி நிலைத்து வாழும்!...
இது இசையில் தொலைந்த மனம்...
இசையோடு இணைந்து வலியை
மறைக்க நினைத்த மனம்.....
துடிக்க மறுக்கும் இதயத்தை ..
இசையாக வந்து மருந்தாக இருந்த இசையே....
உன்னை நான் மீண்டும் சந்திக்க வருகிறேன்....
என் உறங்காத இரவில்.... 💚
