1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-067
« on: April 18, 2026, 07:11:52 am »
மழைத் துளியும்... மலர் புன்னகையும்!
மின்னல் வெட்டி மேகம் கறுக்க,
மண்ணில் விழுந்தது மழைத் துளிகள்!
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளித் குதிக்க,
சிதறிப் போனது கவலை வரிகள்...
வானவில்லின் வர்ணங்கள் உன் பின்னே,,,,
உன் சிரிப்பின் வண்ணங்கள் என் முன்னே,,,
மழைநீரில் நனைவது உடலல்ல உன்...
மழலைச் சிரிப்பில் நனைவது என் மனதல்லவா...
மழை நீரில் துள்ளி குதிக்கும் பிஞ்சு கால்கள்....
பிஞ்சு கையில் பட்டு விழும் மழைத்துளிகள்....
ஒரு கையில் மஞ்சள் குடை ,,
அதுக்குள்ளே ஒழிந்து கொண்டு,,,
மழை நீரை தொட்டு தொட்டு...
மொழி இல்லா வார்த்தை பேசுகிறாள்...
வானவில்லும் அவள் விளையாடும் அழகை கண்டு...
பல வண்ணங்களில் முகம் சிவக்கிறது...
மழையின் சங்கீதத்தில் மனம் தொலைந்து...
கவலை இல்லா அந்த நொடிப்பொழுது...
வானுக்கும், பூமிக்கும் காதலை சொல்லும் அன்பு மழையில்
துள்ளி குதித்து விளையாடும் உன் அழகை கண்டு,
இந்த பூமியும் நாணம் கொள்கின்றது...
நேற்றைய கவலைகள் நிழலாய் தொடரட்டும்,
நாளைய பயங்கள் வழியில் மறையட்டும்.
ஆனால் உன் மஞ்சள் குடைக்குள் கீழே,
இந்த நிமிடம் மட்டுமே நித்தியமானது
ஆயிரம் கவலைகள் அலை மோதும் உலகில்,
ஒரு துளி மழையில் இத்தனை இன்பமா?
செருப்புகள் நனையட்டும்... ஆடை நனையட்டும்...
மனம் மட்டும் கறையின்றி வெண்மையாய் இருக்கட்டும்!
மின்னல் வெட்டி மேகம் கறுக்க,
மண்ணில் விழுந்தது மழைத் துளிகள்!
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளித் குதிக்க,
சிதறிப் போனது கவலை வரிகள்...
வானவில்லின் வர்ணங்கள் உன் பின்னே,,,,
உன் சிரிப்பின் வண்ணங்கள் என் முன்னே,,,
மழைநீரில் நனைவது உடலல்ல உன்...
மழலைச் சிரிப்பில் நனைவது என் மனதல்லவா...
மழை நீரில் துள்ளி குதிக்கும் பிஞ்சு கால்கள்....
பிஞ்சு கையில் பட்டு விழும் மழைத்துளிகள்....
ஒரு கையில் மஞ்சள் குடை ,,
அதுக்குள்ளே ஒழிந்து கொண்டு,,,
மழை நீரை தொட்டு தொட்டு...
மொழி இல்லா வார்த்தை பேசுகிறாள்...
வானவில்லும் அவள் விளையாடும் அழகை கண்டு...
பல வண்ணங்களில் முகம் சிவக்கிறது...
மழையின் சங்கீதத்தில் மனம் தொலைந்து...
கவலை இல்லா அந்த நொடிப்பொழுது...
வானுக்கும், பூமிக்கும் காதலை சொல்லும் அன்பு மழையில்
துள்ளி குதித்து விளையாடும் உன் அழகை கண்டு,
இந்த பூமியும் நாணம் கொள்கின்றது...
நேற்றைய கவலைகள் நிழலாய் தொடரட்டும்,
நாளைய பயங்கள் வழியில் மறையட்டும்.
ஆனால் உன் மஞ்சள் குடைக்குள் கீழே,
இந்த நிமிடம் மட்டுமே நித்தியமானது
ஆயிரம் கவலைகள் அலை மோதும் உலகில்,
ஒரு துளி மழையில் இத்தனை இன்பமா?
செருப்புகள் நனையட்டும்... ஆடை நனையட்டும்...
மனம் மட்டும் கறையின்றி வெண்மையாய் இருக்கட்டும்!
