Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Crowny

Pages: [1] 2
1
மழைத் துளியும்... மலர் புன்னகையும்!

மின்னல் வெட்டி மேகம் கறுக்க,
மண்ணில் விழுந்தது மழைத் துளிகள்!
சின்னஞ்சிறு பாதங்கள் துள்ளித் குதிக்க,
சிதறிப் போனது கவலை வரிகள்...

வானவில்லின் வர்ணங்கள் உன் பின்னே,,,,
உன் சிரிப்பின் வண்ணங்கள் என் முன்னே,,,
மழைநீரில் நனைவது உடலல்ல  உன்...
மழலைச் சிரிப்பில் நனைவது என் மனதல்லவா...

மழை நீரில் துள்ளி குதிக்கும் பிஞ்சு கால்கள்....
பிஞ்சு கையில் பட்டு விழும் மழைத்துளிகள்....
ஒரு கையில் மஞ்சள் குடை ,,
அதுக்குள்ளே ஒழிந்து கொண்டு,,,
மழை நீரை தொட்டு  தொட்டு...
மொழி இல்லா வார்த்தை பேசுகிறாள்...
வானவில்லும் அவள் விளையாடும் அழகை கண்டு...
பல வண்ணங்களில் முகம் சிவக்கிறது...

மழையின் சங்கீதத்தில் மனம் தொலைந்து... 
கவலை இல்லா அந்த நொடிப்பொழுது...
வானுக்கும், பூமிக்கும் காதலை சொல்லும் அன்பு மழையில்
துள்ளி குதித்து விளையாடும் உன் அழகை கண்டு,
இந்த பூமியும் நாணம் கொள்கின்றது...

நேற்றைய கவலைகள் நிழலாய் தொடரட்டும்,
நாளைய பயங்கள் வழியில் மறையட்டும்.
ஆனால் உன் மஞ்சள் குடைக்குள் கீழே,
இந்த நிமிடம் மட்டுமே நித்தியமானது

ஆயிரம் கவலைகள் அலை மோதும் உலகில்,
ஒரு துளி மழையில் இத்தனை இன்பமா?
செருப்புகள் நனையட்டும்... ஆடை நனையட்டும்...
மனம் மட்டும் கறையின்றி வெண்மையாய் இருக்கட்டும்!

2
விழிகளின் மொழிகள்....

அடுக்கு மௌனங்கள் சூழ்ந்திருக்க,
அதிசய மொழியொன்று அங்கங்கே...

உதடுகள் பிரிந்து உரைக்காதப் பேச்சை,
உன் இரு விழிகள் கவிதையாய் வாசிக்குதே!

பேசும் வார்த்தைகள் பாதியில் நிற்க,
பேசாத மௌனமோ பல்லவி பாடுதே...

காதல் கடலில் விழுந்தவன் தத்தளிக்க,
கரை சேர்க்கும் துடுப்பாய் உன் பார்வை மாறுதே!

உன் கண்கள் பேசும் விந்தையை
கண்டுபிடிக்கத் தெரியாமல் - நான்
ஊமைப் பார்வையாளனாய்
உன்னருகே உறைந்து கிடக்கிறேன்!

எழுதாத ஒரு நீண்ட காவியத்தை
உன் கருவிழிகள் வாசிக்க - அதை
என் இதயம் மட்டும்
இசை தப்பாமல் ரசிக்கிறது!

உன் விழிகள் ஒரு புத்தகமென்றால்,
ஆயுள் முழுக்க நான் ஒரு வாசகனாய் இருப்பேன்.

பேசத் தெரியாத மொழியொன்றை,
உன் கருவிழிகள் எனக்குக் கற்றுத் தருகின்றன...
அதில் காதலைத் தவிர
வேறெந்த இலக்கணமும் இல்லை..

ஒரு ரகசியம் சொல்லவா.... சண்டை வரும்போதெல்லாம் வார்த்தைகள் தேடாமல்.... நாணத்தை தேட இரு விழிகள் நான்கு விழிகளோடு பேசிப்பார்..... இனி அடிக்கடி சண்டை போடுவாய், அந்த பார்வையில் தொலைவதற்காக....

3
 சங்கீத மேகங்கள் பூக்களைத் தூவ, நான் தான் GTC-இன் அன்பு தோழி crowny .
இசை என்பது மொழிகள் கடந்த உணர்வு. காதல் என்பது பொறாமையில் வளர்ந்த உறவு....
பொறாமையா? அது என்னனு தானே யோசிக்கின்றீங்க....
இருங்க இருங்க சொல்லுறேன்,,,,

சந்தேகம் என்பது கசப்பு,
சிறு பொறாமை என்பது இனிப்பு!
உன்னை இன்னொருவர் பார்ப்பதை நான் ரசிக்கவில்லை,
ஏனென்றால்...
உன் பார்வையின் முழு உரிமையும் எனக்கு மட்டுமே வேண்டும்!- காதலில் 'சந்தேகம்' இருக்கக் கூடாது,
ஆனால் அந்த உறவை இன்னும் அழகாக்க 'சிறு பொறாமை'
 கட்டாயம் இருக்க வேண்டும்..

என்னவன் ஒரு பெண்ணிடம் பேசும்போதும்,
என்னவள் ஒருவனிடம் பேசும்போதும்
அடிமனதில் தோன்றும் அந்தச் சிறு கோபமும், பொறாமையும்தான் காதலின் ஆகச்சிறந்த மொழி,

அந்த உணர்வை அழகாகச் சொல்லும் இந்தப் பாடலை gtc நண்பர்கள் உங்கள் அனைவருக்கும்,,,பகிர்கிறேன்!"😋

Movie name - குஷி
Song - ஒரு பொண்ணு ஒன்னு



4
GTC நண்பர்கள் அன்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்...

சங்கீத மேகம் இற்கு முதல்ல ஒரு 4 வரி குட்டி கவிதை....

இருதய துடிப்பும் சங்கீதமாய் ஒலிக்க, தூறல் போல சாரல் அடிக்கும் சங்கீத மேகமே தொடரட்டும்.... உங்கள் இசைபயணம்...
_________________________

இது என்ன song என்று சொல்ல முன்பு, இந்த song யாருக்கு dedicate பண்றேனா, self dedicate தான், but ஏன் self dedicate nu சொன்னா, இது நான் எனக்கே dedicated பன்றதனால, இத கேட்கிற உங்க எல்லாருக்கும் தனக்கு தானே ஒரு self feelings இந்த song ல கண்டிப்பா இருக்கும் so எனக்கு நானே சமர்ப்பணம் செய்வது மூலமாக உங்க எல்லாருக்கும் அதே same mind கொண்டு வரும் nu நினைக்கிறேன்... உங்களை போல நானும் மனம் கொண்டவள்...எனவே *Thanks* சங்கீத மேகம்

---------------------------------------
எனக்கான பாடல், நமக்காக!

👉பாடல்: சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
👉படம்: அமர்க்களம்
👉பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா
 மோகன்
👉இசை: எச்.ஆர் பரத்வாஜ்
👉பாடல் வரிகள்: வைரமுத்து

                   என்றும் isaiyaal vasamaana idheyam ✌️

5
அறிவாளியையும் வென்றிடு. 🤗

முட்டாளாய் நடி, அறிவாளியை வென்றிடு, விழாமல் ஓட வேண்டும் என்றால், விழுந்து விழுந்து எழ வேண்டும், காயங்கள் இன்றி, தடைகள் இன்றி,
தோல்விகள் இன்றி,
வலிகள் இன்றி, எதுவும் கிடைத்து விட போவதுமில்லை,
அப்படி கிடைக்கும் எதுவும் நிறந்தரமும் இல்லை,

கீழே விழுந்து விடுவாய் ஓடாதே என்று கூற பல பேர் உண்டு, ஆனால் விழுந்தாலும் பரவாயில்லை மீண்டும் எழுந்து ஓடு என்று சொல்ல சிலர் உம் உண்டு, முயற்சி இல்லாமல் பயிற்சி இல்லை, பயிற்சி இல்லாமல் இலட்சியம் இல்லை,

உன்னால் முடியாது என்று கூறியவனின் முன்னாள் ஓடு..
உன்னை குறை கூறியவனுக்கு முன்பு ஓடு..
உன்னை மட்டம் தட்டியவனின் முன்பு ஓடு...
ஒருநாள் இவர்கள் யாரும் உன்னை பார்த்து கைத்தட்டும் சத்தம் கேட்கும் வரை ஓடு...
உனக்கான அந்த பொன்னான நாளை நீயே அடையும் நாள் வரும்... தடைகளை உடைத்து சாதனை படைக்க ஓடு ஓடிக்கொண்டே இரு.

குறை கூற இருப்பவர்கள் இருந்து கொண்டு தானே இருப்பார்கள் சாக்கடை நீரை போல அதையே நாம் நின்று கேட்டு கொண்டிருந்தால், உன் வாழ்வில் மாற்றம் எங்கிருந்து வருமோ,

ஓடும் ஆற்றினை பார்  தினமும் புதியதாய் ஓடிக்கொண்டே இருக்கின்றது. அதன் இலக்கு கடலை சென்றடையும் வரை அது தன் பயணத்தை இடைநிறுத்துவதில்லை, ஆற்றை போல நீயும் ஓடிக்கொண்டே இரு, உன் இலக்கு வரும் வரை ஓடு...

நம்பிக்கையை விதை , அதுவே மரமாகி உனக்கு நிழல் கொடுக்கும்,

ஒரு விதையை விதைத்து, அதற்கு நீரூற்றி, அது மண்ணில் இருந்து செடியாய் தலைகாட்ட ஆரம்பித்த வுடன் உரங்கள் இட்டு, மேலும் மேலும் தேவையான நீரை ஊற்றி அந்த செடி மரமாகி அதில் இருந்து பழங்களும், பூக்களும் கிடைக்க வேண்டும் என்று அவன் விதையில் இருந்தே காட்டிய அக்கறையும் கவனமும் மரமாய் வளர்ந்து இன்பத்தை
அளிக்கின்றது, முயற்சி இல்லாமால் எதுவும் இல்லை. அந்த விதையின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, உன் முயற்சியில் தான் அது மரமாகியது,

தட்டி கொடுக்க கைகள் இருந்தாலும், உன்னை தட்டி வீழ்த்தி விடவும் கைகள் உண்டு, உன் நம்பிக்கை என்ற மூன்றாவது கை கொண்டு முயற்சிக்க தவறாதே!

நம்பிக்கை இருக்கும் இடத்தில் தான் முயற்சி வரும், முயற்சி இருக்கும் இடத்தில் பயிற்சி வரும் பயிற்சி இருக்கும் இடத்தில் தான் வெற்றி வரும், வெற்றி வந்த பின்பே  எல்லாமே தானாய் வரும்,

கல்லடி பட்டு காயங்கள் கண்டு, சில மனிதர்களின்  சொல்லடி பட்டு,  கண்கலங்கி நின்றாலும் கிழக்கு சூரியனை போல இரவு கடந்து காலையில் வரும் பல கை கொண்டு உலகிற்கே வெளிச்சம் கொடுக்கும்,

உன் விடா முயற்சியும், உன் ஆர்வமும், உன் வலியும் உன்னை வீழ்த்த என்று நினைக்காதே, உன்னை வடிவமைக்கும் கருவிகள் என்று நினைத்து நம்பிக்கையோடு முன் செல்ல ஏமாற்றத்தையும்,
அவமானத்தையும், ஊக்குவிக்கும் ஆயுதாமாய் கையில் எடு!

இன்று என் நம்பிக்கையில் நான் எழுதிய இந்த கவிதை என் முயற்சி, உங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகின்றேன், இன்றும் என்றும்  என் முயற்சியில் ஒரு கவிதை உங்களுக்காக....😊

8
ஆயிரம் ஆயிரம் வார்த்தை இல்லாமால்  மொழி பேசும் இதயத்திலே.....❤️

நான் முதல் கேட்ட கீதம்.....கருவறை முதல் எனக்காக துடித்த என் தாயின் இதய துடிப்பின் ஓசையில் அறிந்த சங்கீதமே....
யாரும் இதுவரை இசைக்கவில்லை அது போல் ஒரு கீதம்.....இன்று முதல் எல்லோர் இதயத்திலும் விட்டு விட்டு துடிக்குது தாயின் கருவறை முதல் பாடிய தாலாட்டு.....

எத்தனை வகை சங்கீதம் இருப்பினும்....
என்னை பத்து மாதம் பத்திரமாய் பார்த்து கொண்ட தாயின் இதய துடிப்பின் கீதமே என் முதல் கீதமும் என் கடைசி கீதமும்......

தாயின் அன்பை தியாகத்தை மறந்து விட கூடாது என்பதாலோ என்னவோ....கடவுளால் நம் ஒவ்வொரு இதயமும் இடைவிடாது துடித்து கொண்டிருக்கின்றது... தாயின் தியாகத்தை இசையாய் ஒரு ஓசையாய் என்னுள் கேட்டுக்கொண்டே இருக்கின்றது....

பல பல சாங்கீதங்கள் உலகில் இருந்தாலும்.... அதை பற்றி சொல்ல தோனவில்லை என் இதயத்திற்கு.... எவராலும் இதயம் துடிப்பின் ஓசையை நகல் எடுத்து இதயத்தில் சேர்க்க முடியாத கீதம் அது தாயின் தியாக கலந்த  சங்கீதம் இதய துடிப்பின் ஓசை அது....

நம் கருவறை தோன்றிய நாள் முதல் கேட்ட இதயம் கீதம் ! இன்று பல உணர்வுகளில் கதை பேச கற்று தந்தது அதுவும் உண்மை தான்....நம் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு கீதம் ஒலிந்து கொண்டு தான் இருக்கின்றது
இதயம் அது எத்தனை நாள் துடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் நீ துடிக்கும் வரை என் தாயின் கீதம் என்னுள் இசைந்து கொண்டே இருக்கும்.... என்று நான் என் தாயை மறந்தேனோ அன்று என் இதயம் துடிப்பதும் நின்று விடும்.....

எத்தனை எத்தனை இசைகளால் உலகம் சுற்றி கொண்டு இருந்தாலும் நமக்குள் துடித்து நம் உயிரோடு இருப்பதை உலகிற்கு காட்டி கொண்டிருக்கும் இதயம் போடும் இசையே முதல் இசை....

என் இதயத்தை நான் மறந்தாலும்... என் இதயம் என்னை மறக்கவில்லை லப் டப்... லப் டப்... என்ற சத்தத்துடன் இன்னும் இசைத்து கொண்டு தான் இருக்கின்றது.......அன்னையின் அன்பில் ஒரு தாலாட்டு என்னுள் இதயத்தோடு இதயம் உயிரோடு இணைந்த சங்கீதம்....(❤️அன்னையின் அன்பில் ஒரு தாலாட்டு என்னுள் இதயத்தோடு இதயம் உயிரோடு இணைந்த சங்கீதம்)....❤️

9
★உழைத்து உழைத்து
நித்தமும் உழைத்து
ஓய்ந்து விடாமல்... சோர்ந்து விடாமல் உழைத்து சிந்தும் வியர்வையில் வாழ்வை கரைத்து.... உயிர் போகும் நொடி வரை உழைக்கும் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் இதோ....~~~

உழைக்கும் கரங்காலாய் நீ இருக்க சொல்லில் சொல்ல முடியாது உழைப்பாளியின் மகிமையை.....
படிப்பு மாறலாம் ...
துறைகள் மாறலாம்...
சேவைகள் மாறலாம்....
ஆனால் உழைப்பு மட்டும் மாறதே....

விழிகளில் தூக்கம் தொலைத்து கைகள் சிவக்க, கால்கள் கடுக்க.... வீட்டிற்காய், வூறுக்காய், நாட்டிற்காய் உழைத்து மடியும் உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வறுமைபட்டு, கஷ்டப்பட்டு,காயப்பட்டு
இஷ்டப்பட்டு கஷ்டப்படும் தொழிலாளிகளே  உம்மை மறந்தவர்களுக்கு நினைவூட்டும் அந்த இனிய நாள் இன்று...

தொழிலாளிகள் இல்லாவிடின் முதலாளி ஏது... முதலாளியின் கெளரவம் தொழிலாளி கொடுத்த  வியர்வை முத்துக்கள்... வியர்வை முத்துக்களாய் சிந்தியதால் பவளமாய் மின்னுகின்றனர் முதலாளிகள்.... உமக்கு நன்றி சொல்லவே இந்த நாள்....

 இலட்சியங்கள் ஏதுமில்லை.... உழைப்பை இலட்சியமாய் கொண்டு பூமியில் எங்கும் பூக்களாய் பூத்து குலுங்கும்  உழைப்பாளிகளே உமக்கு நன்றி சொல்ல இந்த நாள்....

வஞ்சனை செய்யா நெஞ்சத்தோடு....சிவந்த கரம் நீட்டி உழைக்கும் உங்கள் கரம் பற்றி பிடித்து சொல்லுகின்றேன்... உடல் அளவில் நீங்கள் காயாப்பட்டாலும் மனதளவில் நீங்கள் நிம்மதியாய் வாழ்வீர்கள்... முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை...
உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...(முதலாளிகளை உருவாக்கும் தொழிலாளிகளே... உம்மை மறக்க நினைக்கவில்லை... உங்கள்  உழைப்பால் எங்களை உயர செய்த எங்கள் சொந்தகாரர் நீங்கள்...

மீண்டும் ஒரு முறை உம் சிவந்த கரம் தொட்டு உமக்கு இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை சொல்ல கடமை பற்றியிருக்கின்றேன் நான்....

10
தடம் பிரலாமல் தடம் பார்த்து செல்லும் தொடர்வண்டி... என்னை சுமக்க நீ இருக்க.. இயற்கை ரசிக்க கற்றுத்தந்த முதல் பயணம் இது....

நீண்ட தூரம் போகனும்..
நினைவு இனிமை ஆகனும்....ஜன்னல் ஓரம் கரம் நீட்டி கொட்டும் மழையை ரசிக்கணும்...

எண்ணம் சிறகை விறிக்குது... பசுமை கண்டு வியக்குது....
ரசனைக்கு எட்டா நினைவில் அது ரசிக்க வைத்த பயணமிது....

 சில்லென்று காற்று வந்து மெல்லிசை பாடுது.... மழை சாரலும் துளி துளியாய் தாளம் போட... என் கரங்கள் தொட ஜாலம் காட்டுது... என் மனம் அலை பாயுது இயற்கையை  என் மீது கொண்ட காதலை கண்டு....

 இயற்கையோடு கதை பேசும் பயணமிது இயற்கையோடு வந்த காதலிது.... (இயற்கையோடு கதை பேசும் பயணமிது இயற்கையோடு வந்த காதலிது....)
கபடமில்லா இயற்கை அதை என்னை மறந்து ரசித்து விட்டேன்....

தொடர் வண்டி பயணமிது இன்னும் தொடராதா என்று ஏக்கத்தோடு விடை கொடுத்து செல்ல.... ஜன்னல் வெளியே நீட்டிய கரத்தை கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சி விளையாடிய மழையில் இருந்து விட்டு பிரிய..... மழை சாரளும் அதிகமாய் தூறல் இட தூறலோடு வந்த கண்ணீர் அது என்று நான் புரிந்து கொண்ட.... இயற்கையோடு வந்த காதல் இது....

விடை கொடுத்து 
நானும் மெல்ல மெல்ல நடந்தேன்....இயற்கை காதலை இழந்த படி,(நானும் மெல்ல மெல்ல நடந்தேன்....இயற்கை காதலை இழந்த படி)😔

11
காரிருள் சூழ்ந்திட வயிற்றிலே சுடா வெப்பத்தை சுமந்து மின்னலுக்கே சிறு மின்னலாய் ஆனாயோ...
அதனால் தான் என்னவோ உனக்கு மின் மினி என்று பெயர் வந்ததோ...

இரவை ரசிக்க நீ வந்தாய் உன்னை ரசிக்க நான் வந்தேன்...
வெப்பம் இல்லாத அந்த ஒளியை உருவாக்க இன்றுவரை எந்த மனிதனாலும் முடியவில்லை....

இரவிலே
மரக்கிளையிலே அமர்ந்து மின் மினி பேரழகு தான்... ஆமாவசை இரவிலே பொளர்ணமியாய் சுற்றி திரிய நீ இருக்க... எந்த விளக்கும் தேவையில்லை எம் கைகளுக்கு.... கற்பனைக்கு எட்டா அளவு உன் வருகையோ ஒரு ஆச்சரியம் நிறைந்த விசித்திரம்....

உம் ஒளியை காண எம் கண்களுக்கு தான் இன்னும் ஒளி தேவை...
பகலிலே உறக்கம் கொண்டு  இரவிலே ஊர்வலமா
 வானில் தெரிவது விண்மீன்....பூமியில் திரிவது மின்மினி...
உம் அழகை காண குட்டி தேவதையாய் நான் இருக்க.... நிசப்தம் இல்லா இரவில் நித்தம் ஒரு கதை பேசிட வாராயோ மினிமியே என் கண்ணில் பட்ட கண்மணியே.... இந்த தேவதையையும் ரசிக்க வைத்து விட்டாயே உன் வெப்பம் இல்லா ஒளியால் என்னை கவர்ந்து விட்டாயே.....

யாரை தேடி அலைகிறாய் இந்த இரவில்...உன்னை தேடி நான் அலைகிறேன்... உன் வருகையால் என் கண்கள் மின்னலடிக்கிடிக்கின்றது.. என் இதயம் இடி இடிக்கிறது.... உன்னை காணும் இந்த நித்தம் ஒரு பயணம் முடிவில்லா பயணம்.....

உன்னை காணும் அழகிலே இனிய இரவிலே உன் வருகையை பார்த்து மரக்கிளையிலே பூத்திருப்பேன்.... அடடே கதை பேசி பேசி  விடியலும் வந்துவிட்டது... உன் ஒளியும் மங்கி விட... நானும் இனி மறைய போகிறேன்... நித்தமும் ஒரு இரவில் சப்தம் இல்லா பயணம் இது....

12
கொஞ்சி கொஞ்சி வளர்த்தாலும் கொய்யாப்பழம் தந்தாலும்.... அஞ்சி அஞ்சி வாழ எனக்கு விருப்பமில்லை....

கூண்டுகுள்ளே அடைத்து செல்வமாய் வளர்த்தாலும் தேவை இல்லை அது எதுவும்....என் சிறகை விரித்து இறக்கை அடித்து வானில் சுற்றி வர வேண்டுமே....

மரத்தின் உச்சியில் கூடு கட்டி கதைகள் பேச தோணுதே!!...விடியலை  கண்டவுடன் கூட்டமாய் கூட்டை விட்டு உலாவி வர தோணுதே..

இந்த மானிடம் செயல் கண்டு வருந்துகிறேன் ... எங்கே சென்று முறையிடுவேன், நீதி எப்படி பெற்றிடுவேன்... கூண்டுக்குளே கைதியாய் அடைத்து வைக்களாகுமோ.... அப்படி என்ன தவறு செய்தேன் உங்கள் கண்களில் பட்டது பாவம் தான்....

பாவப்பட்ட ஜீவன் நாங்கள் வார்த்தை புரியா  ஊமை நாங்கள்....இத்தனை செயல் பார்க்கும் நீங்கள் கண்கள் இருந்தும் குரடர்களோ...

அடைத்து வைத்து ரசிக்கின்றீரே.... எங்கள் உணர்வை உணரவில்லை..

கொஞ்சி கொஞ்சி பேசினாலும்... கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் அடைக்கலமும் வேண்டாம் அடைத்து வைக்கவும் வேண்டாம்... உலகம் பார்க்க சிறகை விரித்து
...வானவில்லை ரசிக்கணும்....கொட்டும் மழையில் நனையனும்.... சிறு கூட்டை அமைக்கணும்... நேரம் பார்த்து வசிக்கணும்... உறவுகளை ரசிக்கனும்... எட்டா தூரம் பரக்கனும்....

அடைத்தும் வைக்கும் கரங்களே...விடுதலை தர  மறுக்கின்றிரே... இன்னொரு ஜென்மம் இருக்குமென்றால்... மானிடா எம் நிலை அறிய நீ இறக்கயுடன் பிறக்க வேண்டும் நான் கரங்களுடன் பிறக்க வேண்டும்.....
இருந்தும் மனிதா உம் தவறை நாங்கள் செய்ய நினைக்கல புரிய வைக்க முடியல😒.....



13
என்னவனே....
இலட்சத்தில் இலட்சியமாய் கரம் பிடிக்க வந்த என்னை கரம் தட்டி விட்டு போகாதே.....

இருளிலும் விலகி விட நீ என் நிழலாக இல்லை... என் உதிரமாக இருக்கின்றாய்... காயங்கள் இல்லாமல் வலிகளை உன்னால் மட்டுமே கொடுக்க முடியும் அன்பே.....

காலம் உள்ள வரை என் இதய கருவறையில் உன்னை  சுமப்பேன்.... நியோ தள்ளி சென்று நினைவின் வேதனை சுமையை கொடுத்து செல்கிறாய்.....

வாரத்தில் இரு நாள் விடுமுறையாம்.... உன் நினைவிற்கு  என்றும் விடுமுறை இல்லை உன் நினைவில் நான்.... துடிக்கும் இதயத்திற்கு எப்படி சொல்லி புரியவைப்பேன் துடிக்க வைப்பது அவன் தான் என்று....

தள்ளி செல்லாதே என் அன்பே...வேண்டும் உன் காதல் ஒன்றே...உன்னை மட்டும் நேசித்தேன் அது உண்மை மீண்டும் வேறொரு காதல் இல்லை .....         

சிதரிப்போன என் சிந்தனையில் சில்லு சில்லாய் உன் நினைவுகள்...கடந்து போன நீயும் மறக்க நினைக்க நானும்...பிரிந்து போன இடத்தில் உரைந்து போனதோ என் இதயம்....அதை உயிர் பிழைக்க செய்வாயா??....

காதல் ஒன்று உன்னில் கண்டேன்...வாழும் ஆசை என்னில் கொண்டே காதல் என்றால் கண்ணீர் என்று....இன்று நான் அறிந்து கொண்டேனடா....
விலகி சென்றதெனோ...விட்டு விலக முடியாமல் தவிக்கும் என் இதயம்...
     
மனசுல இருக்கிற வலியை மறைக்க தெரியுதே தவிர....
மறக்க தெரியவில்லை.... வழி நெடுவில் வலியுடன் ஒரு பயணம் உன் நினைவுடன்..... மறந்தும் கூட மறக்க மாட்டேன் உன் நினைவுகளை.....   




14
வெண்ணிற ஆடையிலலே காற்றோடு கலந்து..
தனிமையிலே தொலைந்து..
உதிரமில்லா இதயத்தின் புலம்பல் கேட்கிறதா....
விண்ணோடும் இல்லாமல் மண்ணோடும் இல்லாமல்...
வழி நடுவில் வலியாய்...
யாரிடமோ பயணம் சொல்ல மறந்தது போல்
அங்கும் இங்குமாய் சிறகடிக்கிறது....

ஒஹ் மனிதா...
என்னை தள்ளி போகாதே....
உடல் விட்டு உயிர் ஓடிவிட்டது...
இப்போது உடலும் இல்லை..உயிரும் இல்லை..
தனிமை வாட்டுகிறது....

உடல் அடக்கமானதும்
குடும்பமே என்னை விட்டு பிரிந்து விட்டது ..
உள்ளம் நினைத்து உறவை தேடி போனால்....
என்னை பார்த்தவுடன் நடுக்கதில் ஓடகின்றனர்.....

உறவே நான் என்ன பிழை செய்தேன்...
உறவை தேடி நான் வந்தது அது  என் தவறா?...
அல்லது என்னை மறந்து பிரிந்தது உங்கள் தவறா?...
 பகலிலே என்னால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை....
 இரவிலே என்னால் நடமாடமல் இருக்க முடியவில்லை....

இரவு என்னை நிம்மதியாய் உறங்க விடாமல்....
நினைவுகளால் அலைய விடுகிறது...
தொலைத்த என் உறவை தேடி
கால் இல்லாமல் காற்றோடு மிதந்து வருகின்றேன்....

உறவோடு இருக்கும் போது
சென்ற இடமெல்லாம் தலை கோதி
போய் வா மகளே என்று சொல்லி அனுப்பும் உங்கள் வார்த்தை...
இப்போதும் என் காதில் ஒளித்து க்கொண்டு தான் இருக்கின்றது....
 
கடைசி நிமிடத்தில் ஏன் கூற மறந்தீரோ
 போய் வா என்று...
விடை தெரியாமல் அலைந்தோடி
வருகின்றேன் தெருவோரம்....
விடை கிடைக்காமல் செல்லவும் மாட்டேன் என் நிரந்தர இல்லத்திற்கு.....

வெளிச்சத்தை தொலைத்து இருளுக்குள் அடங்கி விட்டேன்...
என் நிறைவேறாத ஆசையால் நினைவுகளை தேடுகின்றேன்....
வா என்னிடம்... போய் வா என்று சொல்ல மறந்தாயோ...
உறக்கமில்லதா என் இரவுகளுக்குள்...
இரக்கமில்லாமல் என்னை தொலைத்து விட்டாயே ....

 நினைவோடு நான் இருக்கும் வரை
இரவோடு கலந்த என் பயணம் தொடரும்....
இப்படிக்கு நான் தான் உங்கள் பக்கத்தில் இருக்கும் ....
ஹாஹா ஹா ஹா சட்டென்று திரும்பி பார்க்காதே
நடுக்கத்தில் உறைந்து விடுவாய்....🙄

Pages: [1] 2