1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-059
« on: September 20, 2025, 09:03:16 am »
என்னவளுக்காய் நான் எடுத்து வைத்த ரோஜா இது !
என்னைப்போல் அவளுக்காய் தனியே காத்து நிற்கிறது இங்கே !
என்று வருவாள் தெரியவில்லை!
எப்போது ரோஜாவை எடுத்து செல்வாள் புரியவில்லை !
ஏங்கி தவிக்கிறோம் இந்த ராஜாவும்
அந்த ரோஜாவும் !
விடாமல் பெய்யும் மழையே !
உனக்கு விடை கொடுக்க குடை பிடிக்கிறேன் நான் !
தடைவிதிப்பது நான்
தனியே சென்று விடு நீ !
நீயோ பன்னீர் தூவுகிறாய்
நானும் கண்ணீர் சிந்துகிறேன் !
அவளுக்காய் நான் வைத்த ரோஜாவின் அங்கங்களை !
சாரலை அள்ளி தெளித்து நனைக்காதே !
அவள் இதழிலிருந்து வடியும் அமுதத்தேனே முதலில் நனைக்க வேண்டும் அந்த ரோஜாவை !
ஆதங்கம் தான் உன்மேல்
அவள் கைப்படும் ரோஜாவை நீ
கரைப்படுத்தக் கூடாது !
என் தேவதையின் தேகம் தொடும் ரோஜாவே
தேவையில்லாமல் நீ தொடர்வது ஏனோ !
ஏய் மேகத்தூரலே
உனக்கென்ன மோகம் !
என் காதலிக்காய் நான் வைத்திருக்கும் ரோஜா பூங்கொத்தின் மீது உனக்கென்ன மோகம் !
அவளை எண்ணி எனக்குத்தான் சோகம்!
அவளுக்காய் நான் வைத்திருக்கும் இந்த ரோஜாவை தொடுவதில் உனக்கென்ன இத்தனை வேகம் !
என்னைப்போல் அவளுக்காய் தனியே காத்து நிற்கிறது இங்கே !
என்று வருவாள் தெரியவில்லை!
எப்போது ரோஜாவை எடுத்து செல்வாள் புரியவில்லை !
ஏங்கி தவிக்கிறோம் இந்த ராஜாவும்
அந்த ரோஜாவும் !
விடாமல் பெய்யும் மழையே !
உனக்கு விடை கொடுக்க குடை பிடிக்கிறேன் நான் !
தடைவிதிப்பது நான்
தனியே சென்று விடு நீ !
நீயோ பன்னீர் தூவுகிறாய்
நானும் கண்ணீர் சிந்துகிறேன் !
அவளுக்காய் நான் வைத்த ரோஜாவின் அங்கங்களை !
சாரலை அள்ளி தெளித்து நனைக்காதே !
அவள் இதழிலிருந்து வடியும் அமுதத்தேனே முதலில் நனைக்க வேண்டும் அந்த ரோஜாவை !
ஆதங்கம் தான் உன்மேல்
அவள் கைப்படும் ரோஜாவை நீ
கரைப்படுத்தக் கூடாது !
என் தேவதையின் தேகம் தொடும் ரோஜாவே
தேவையில்லாமல் நீ தொடர்வது ஏனோ !
ஏய் மேகத்தூரலே
உனக்கென்ன மோகம் !
என் காதலிக்காய் நான் வைத்திருக்கும் ரோஜா பூங்கொத்தின் மீது உனக்கென்ன மோகம் !
அவளை எண்ணி எனக்குத்தான் சோகம்!
அவளுக்காய் நான் வைத்திருக்கும் இந்த ரோஜாவை தொடுவதில் உனக்கென்ன இத்தனை வேகம் !