Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Sivarudran

Pages: [1] 2 3 4
1
சங்கீத மேகம் நிகழ்ச்சி குழுவினருக்கு எனது வணக்கம். சங்கீத மேகம் நிகழ்ச்சியில் மீண்டும் பாடல் விருப்பத்தை தெரிவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. இந்த முறை எனது விருப்ப பாடலாக தீனா திரைப்படத்திலிருந்து என் நெஞ்சில் நீங்கலானே. என்ற இந்தப் பாடலை எனது விருப்ப பாடலாக இங்கு பதிவு செய்கிறேன்
இந்தப் பாடலை முதல் முறை நான் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்த பாடல். எனவே இந்த பாடலை நமது ஜி டி சி நண்பர்களோடு சேர்ந்து கேட்டு என்ஜாய் பண்ண நான் காத்திருக்கிறேன்.நன்றி.

2
சங்கீத மேக நிகழ்ச்சி குழுவினர்க்கு வணக்கம்.

 " சங்கீத மேகம் - இது சந்தோஷ கீதம் "
 
இந்த நிகழ்ச்சி குழுவினர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ந்து பாடல் விருப்பத்தை தெரிவிக்கும் நபரை பக்குவமாக பங்கம் செய்து சங்கடமில்லாமல் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நிகழ்ச்சியாக இது  அமைந்தது வருவதற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இன்று சங்கீத மேகம் நிகழ்ச்சியில் பாடல் விருப்பத்தை தெரிவிக்கும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. இன்று நான் எனது விருப்ப பாடலாக நெஞ்சினிலே திரைப்படத்திலிருந்து அன்பே  என்ற பாடலை எனது விருப்ப பாடலாக இங்கு பதிவு செய்கிறேன். தேவா இசையில் ஹரிஹரன் குரலில் அமைந்த பாடல் இந்தப் பாடல். மிகவும் அருமையான பாடல். எனக்கு பிடித்த பாடல் இது. நன்றி வணக்கம்.

3
தங்கமான பொண்ணு
தள்ளி நின்னு பேசும் அவளோட  கண்ணு !

அவளோ ஆளு கொஞ்சம் உயரம்தா !
அழகுல அவ சிகரம்தா !

வாய் திறந்து பேசுறதில  அவளோ கஞ்சம் !
சேய் அவளளோட  சிரிப்புல என்னைக்குமே இருந்தது இல்ல பஞ்சம் !

பள்ளி சீருடையிலும் பளிச்சுன்னு தெரிவா !
வெள்ளி கொலுசு பூட்டி வெள்ளந்தியா திரிவா !

அவளோட கீழ் உதட்டோரம் ஒரு மச்சம்
அது தான் அவ அழகோட உச்சம் !

அவ  என்னவோ தல குனிஞ்சு தா இருந்தா
ஆனா என்னோட தலைக்குள்ள எப்படியோ புகுந்தா !

தாவணியில அவள பார்க்கையிலே
 நா தலை சுத்தி போனேன்  !

தரிகிடதோமென தனி நடனம் அவ ஆடயிலே நா தறிகெட்டு போனேன் !
 
பள்ளி நாளெல்லாம் துள்ளி குதிக்கும் என்னுள்ளம் !
பாழாய் போன சனி ஞாயிறுகளில் பரிதவிக்கும் என்னுள்ளம் !

பாதி நேரம் பாதகத்தி அவ நினைப்பு !
அதனால
பத்தாவது வகுப்போ  எனக்கு பகுதி நேர படிப்பு  !

உள்ளத்திலே ஏதோ சிலிர்ப்பு
ஒரு நாளும் அவ மேல வந்ததே இல்ல எனக்கு சலிப்பு !

கன்னி அவ மேல எனக்கு காதலாச்சு
அது சொல்ல ஏனோ காலமாச்சு ! 

அவகிட்ட நா காதல சொல்லி பழகவும் இல்ல!
அவள காணாம விலகவும் இல்ல !

அவளோட கைபிடிச்சு  நா நடந்ததும் இல்ல !
அவளோட கண் பார்வைய நா கடந்ததும் இல்ல !

விடை பெறும் நாளும் வந்தது
என் விழியிலே வெள்ளம் சூழ்ந்தது !

ஒதுங்கியே நின்னேன் நா !
இல்ல இல்ல அவகிட்ட என் காதல சொல்லாம பதுங்கியே நின்னேன் நா !

எப்போவோ அவகிட்ட  சொல்லாத காதலை
ஒரு வழியா சொல்லிட்டேன் .
இப்போ கவிதையில கிறுக்கி தள்ளிட்டேன் !

எண்ணத்துக்கு சக்தி இருந்தா எடுத்துகிட்டு போகட்டும்
அவளோட  தான் என் முதல் காதல்ன்னு அவகிட்ட சொல்லட்டும் !

அவளின் அந்த சிரிப்பை மட்டும் பதிலுக்கு என்னோட  காதல் பரிசா வாங்கி வரட்டும் !

4
Birthday Wishes / Re: Happy Birthday Sivarudran
« on: January 16, 2025, 12:12:31 pm »
Thank you friend

5
வில் புருவ வில்லியே
விரல் பிடித்த மல்லியே - ஆம்
எந்தன் விரல் பிடித்த மல்லியே !
வீசும் காற்று நீயெனக்கு 
பேசும் காதல் ஊற்று நான் உனக்கு !

புவி ஈர்ப்பு விசையில் நானிருக்க - உந்தன்
விழி ஈர்ப்பு விசையில் நான் சருக்க
விழுந்துவிட்டேன் உன் வழியில் !
காயங்கள் ஏதும் இல்லை 
மானே நீ செய்த மாயங்கள் ஏராளம் !

பூவினும் மெல்லிய புன்னகை உனக்கு -அது
பூங்காற்றாய் வீசியது அன்றெனக்கு !

தேனினும் இனிய
குரல் உனக்கு -அது
தென்றல்காற்றாய் வீசியது அன்றெனக்கு !

நூலினும் மெல்லிய இடை உனக்கு - அதில்
நுழைந்து மரணிக்க ஆசை அன்றெனக்கு !

பனித்துளி படர்ந்திடும் செவ்விதழ் உனக்கு - அதை
பக்கத்தில் பார்த்து ரசித்திடும் மனது அன்றெனக்கு !

குறைவில்லாமல் நீ அனுப்பும் குறுஞ்செய்தி மட்டுமே
 என் உடம்பின் குருதியோட்டம் அன்றெனக்கு !

அழகின் சொர்க்கம் நீ
அன்பின் வர்க்கம் நீ !
கவிதையின் தொடக்கம் நீ - என்
காதலில் அடக்கம் நீ !

காட்டன் புடவையில் கற்சிலை நீ கடந்து செல்ல
கல்லூரி வாசல் அன்றெனக்கு காளவாசல் ஆனதடி !

தவழ்ந்து வரும் தத்தை உன்னிடம்
காதல் வித்தைக்காட்ட தாவி வரும் காளை நானே !

புடவை கட்டிய பட்டாம்பூச்சியே !
நீ வீசி நடக்கும் உன் முந்தானையின் நுனிபட்டே வீழ்ந்து போனவன் நானே !

கல்விச் சாலையில் கிடைத்த  காதல் சோலையோ நீ ?

அலுவலக வாசலில்
பூத்த அடுக்கு மல்லியோ நீ ?

அத்தை பெற்றெடுத்த தத்தை கொஞ்சலோ நீ ?

இணையத்தில் கண்டெடுத்த இதய துடிப்போ நீ ?

என் எதிரே நின்று
என் இதயத்தை துளைக்கும் அம்பே !

யாரடி நீயென்று
எகிரி குதித்தேன்
மணி எட்டாகி போனது - என் மனம் துண்டாகிபோனது .
தூக்கம் கலைந்து போனது .
ஏக்கம் என்னுள் ஆழ்ந்து போனது.
யார் இவள் என்றே ஏங்கி தவிக்கிறேன்
என்னை ஏந்திக் கொள்ள வருவாளா ?
கனவு நினைவாக காதல் தேவதை கரம் பிடிக்க வரம் தருவாளா ?

6
Festival Day Wishes / Re: Happy Pongal 2025
« on: January 14, 2025, 01:26:23 am »
அனைவருக்கும்  தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾🌄

7
Festival Day Wishes / Re: Happy 3rd Anniversary GTC
« on: January 14, 2025, 01:15:44 am »
அன்புள்ள ஜி டி சியே !
அன்று நான் உன் மீது அடியெடுத்து வைக்கும் போதே  அரவணைத்தாய் என்னை !
உன் அரட்டைத்தளம் எனக்கு புதிதுதான் - இங்கே
சேட்டைத்தனம் எனக்கு
அரிது தான்.
விதவிதமாய் பல பெயர்களில் வித்தியாசமாய் பல பேர்கள் !
அனுதினம் வருபவரையும் அடிக்கடி வரவேற்பதும் !
விரட்டி விரட்டி அரட்டை விடுதும் !
விரைவாய் சென்று பெண்கள் பிரைவேட்டில் குறட்டை
விடுவதும் !
வந்த சில நாட்களில் வகையாய் பழகிக் கொண்டேன் நானும்.
நாட்கள் செல்லச் செல்ல நட்பு வட்டம் பெரிதானது !
நாளெல்லாம் நடுவில் அரட்டை இனிதானது !
நான் காலை கண் விழிப்பதும் இங்கேதான்
இரவு கடையடைப்பதும் இங்கேதான் !
இடையில் கண்விழித்தால் எட்டிப் பார்த்து மீண்டும் கடை திறப்பும் இங்கேதான் !
துக்கம் வந்தாலும் இங்கேதான்
தூக்கம் வரவில்லை என்றாலும் இங்கேதான் !
பெண்களோடு கடலை என்றாலும்
இங்கேதான்
பெண்களால் கவலை என்றாலும் இங்கேதான்  !
விளையாட்டில் விடை சொல்ல முந்தியடிப்பதும் இங்கேதான்
முடிந்த விளையாட்டின் விடைகளை பேசி தந்தியடிப்பதும் இங்கேதான் !
சங்கீத மேகத்திற்கு துண்டு போட முண்டியடிப்போம் !
கவிதையும் கானத்திற்க்கு கதையடிப்போம் !
ஜி டி சி யின் கானங்களுக்கு எப்போதுமே தலையசைப்போம் !
ஜிடிசியின் பாச முடிச்சிட்டு மூன்று வருடமாயாச்சு
அன்று போல் என்றும்
சக தோழாய் தோழிகளும் தோழர்களும் நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்
நம் அரட்டை நட்பை .
இப்போது bye bye .
 
Happy 3rd anniversary GTC

Sivarudran

8
யாருமற்ற இருண்ட அறையில்
துவண்டு கிடக்கும் சூரியன் நான் !

இருள் சூழ்ந்த அறையில் ஒளிராமல்
ஓய்ந்து ஒளிர்த்துக் கொள்ளும்
ஒளிப் பந்து நான் !

இருளையே எரித்துவிடும் ஒளிப்பிழம்பு நானென்று தெரியாமல்
இருண்ட அறையின் நடுவே அமர்ந்து இருக்கும் அக்னி தேவன் நான் !

எனக்கு நானே ஒளியாக இருந்த போதிலும்
எகிரி குதிக்க வழி தேடியே பல நேரங்களில் இருண்டு போகிறேன் நான் ! 

என்னால் அறை முழுவதும் வெளிச்சமாகிய போதும்
எனக்கு நானே இருளாகிப் போகிறேன் இங்கே !

வழித்தேடி விழி துவண்ட போதே
இருண்ட அறையில் இருந்து
என் ஒளிக் கதிர்கள் பாய்ந்து வெளிச் செல்ல 
பூட்டின் சிறுவழி
இடம் தரவே இங்கு ஒளிரும் சாவியாகவே நான் !

9
அனைவருக்கும் வணக்கம் !
சிரீய தலைப்பை அளித்து என் சிந்தைக்குள் சிறுத்தையை சீறிப்பாய செய்திருக்கிறீர்கள் .
இதுவே என்றும் என் உரையின் துவக்கம் !

ஐந்து வயதில் மேடையேறிய என் முயற்சி !
அந்த ஆசிரியை எனக்கு தந்த அயராத பயிற்சி !

அடுத்த அடுத்த வகுப்புகளிலும் அதிரும் பேச்சுக்கு அடையாளம் ஆனேன் நான் !

தமிழ்த்தாயின் மடியில் தஞ்சம் புகுந்தேன் நான் !

எத்தனை பெரிய கூட்டத்திலும் ஓங்கி ஒலிக்கும் உன் பேச்சுக்கு ஒலி வாங்கி எதற்கு என்று ஒய்யாரமாக பேச சொன்னவர்கள் பலர் !

பேச்சு மூச்சு இல்லாத வகுப்பறையில் பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுங்கள் என்றதுமே பேச்சே இல்லாமல் பேரானந்தமாய் கை உயர்த்திவிடுவேன் நான் !

பேச்சுப்போட்டிக்கென பக்கம் பக்கமாக ஆசிரியை எழுதிக்கொடுத்த தாளை கையிலேயே வைத்துக் கொண்டு சுற்றுவேன்
தனியாக நின்றுக் கொண்டு கத்துவேன் !

விளையாட்டாய்க் கூட இந்த முறை நீ வேண்டாம் என்று சொன்னாலும் நான்
விட்டதில்லை ஒரு போதும் விவேகானந்த கேந்திர பேச்சு போட்டிகளை !

பின்னோக்கி பார்க்க தேவையில்லை முன்னோக்கி செல்லுங்கள் என்பதுபோல்
முதலோ மூன்றாவதோ பரிசை தட்டிவிடுவேன் எப்படியும் !

என்னால் முடியும் என்றும் நான் நினைத்ததில்லை
என்னால் மட்டும் தான் முடியும் என்றும் நான் நினைத்ததில்லை !

தலைக்கணம் தான் கொஞ்சம்.
என்னை தவிடு பொடியாக்க சக போட்டியாளர்கள் வரும் வரை !

வெற்றியில் ஆடியதும் தோல்வியில் வாடியதும் வர வர வாடிக்கையாகி போனது எனக்கு !

பள்ளி சொல்லி தந்தப் பாடத்தால் பல மேடைகள் பழகிப்போனது எனக்கு !

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லை
புத்தியில் சிறந்ததாய்
வழக்கம் இல்லை !

மெத்தனமாய் இருந்ததுமில்லை மெனக்கெடுதல் ஏதும் இல்லை !

வாய்க்கு வந்ததை பேசியதுமில்லை
வாய் சொல்லில் வீரனும் இல்லை !
ஆனால் என்
கடமையை செய்ய காற்றிலே கர்ஜித்துவிடுவேன் நான் எப்படியோ ?

உச்ச சாயலில் பேசியே ஓரிரு
உச்சரிப்புகளில் கோட்டைவிடுவேன்.
பலரின் கரகோஷங்களும் பரிகாசகங்களும் பட்டைத் தீட்டியது என்னை !

இன்று காலங்கள் செல்ல செல்ல என் கர்ஜனையே
கசந்துப்போனது எனக்கு !
என் சுவரமே  பாரமானது எனக்கு !

ஊடக தாகம் ஊடுருவியே ஊரெல்லாம் சுற்றினேன் !

காசுக்கும் கடமைக்கும் ஏதோ ஒரு கடையில் டீ ஆத்துவதைவிட
என் கனவுகளை நினைவாக்க கடவுளை வேண்டியே காத்து நிற்கும் கற்பூரம் நானே !
காற்றில் கரைந்துவிடுவேனோ தெரியவில்லை ?

எப்படியோ வானொலியிலோ , தொலைக்காட்சியிலோநான் உங்கள்
சுட்டித்தோழன் சிவருத்ரன் என்றே புத்துயுயிர் பெற்ற குரலோடு நான் என்னை சுயஅறிமுகம் செய்து பேசும் நாட்களுக்காய் காத்துக் கிடக்கிறேன் !

என்னுடைய பேராசை தான் இது .
பாவம் நானும் மனிதன் தானே !

10
எம்மா !  🤣

ஏலே ! பத்து மணியானாளும்
பதராம நீ துங்குவ . இங்க
பயித்தியக் காரி ஒருத்தி இருக்கேன்லா
உங்களுக்கு பாடு தொலைக்கன்னு  - நீ புலம்பும் சத்தம்
அனுதினமும் அதிகாலையில் எனக்கு அலாரமாகும் !


எம்மா !  எங்கம்மா போன நீ !
வீடுன்னு இருக்கமாட்டியா நீ ! அப்படின்னு நா கேட்டா ?
ஏம்லே ! உசிரு போற மாதிரி கத்துற
உனக்கு என்னய மட்டும் வீட்லயே சிலையடிச்சு வைக்கனுமே !
அப்பனுக்கு பிள்ள தப்பாம பொறந்துருக்கன்னு -  நீ ஆரம்பிக்கும் வசை
நாளெல்லாம் எனக்கு இசையாகும் !


எம்மா ! எனக்கு ஏழு கழுத வயசானாலும் 
எப்போதுமே என் தலைக்கு எண்ணெய் தேய்க்கும்
உன் கரங்கள் என்றுமே
எனக்கு வரமாகும் .

எம்மா ! எத்தனை முறை சாப்பிட்டாலும் என்னைக்குமே சலிச்சதில்ல .
நீ வைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
என்றுமே எனக்கு அமிர்தமாகும்  .

எம்மா ! உப்புமா எனக்கு வேண்டாம்னு ஒத்த கால்ல நா நின்னா
வம்படியா வந்து என் வாயில் நீ திணிக்கும்
ஒரு வாய் உப்புமா நாளெல்லாம் என் நாக்குல இனிக்கும்.

எம்மா ! ஆத்துக்கு நா குளிக்க போனா !
 ஏலே ரொம்ப நேரம் தண்ணியில ஆடிக்கிட்டே இருக்காம ஆறு மணிக்குள்ள வீட்டுக்குவான்னு நீ பாசமா சொல்லும் வார்த்தை
என்றுமே எனக்கு பாடமாகும்.

எம்மா ! ஆசையா என்கிட்ட வந்து
வசந்தமாளிகை பட பாட்டு போடு ,
வாய்க்குரிசியா ஒரு டீ போடுன்னு 
நீ வைக்கும் கோரிக்கைகள் என்றுமே
எனக்கு வேடிக்கையாகும்.

எம்மா ! மூத்தமகன் ஒரு முழுமாடு ,
கடைக்குட்டி தான் என் கன்னுக்குட்டின்னு
தம்பிய நீ ஆசையா  கொஞ்சும் போது
அது என்றுமே எனக்கு வயித்தெரிச்சலாகும் .


எம்மா ! செல்போன் பாத்துட்டே நான் சிரிச்சா
ஏலே ! எவள பாத்து சிரிச்சுட்டு இருக்க?
எவ்வளவு நேரமா தா போன் பேசுவ ?
எத்தனை தடவ தான் தல சீவுவன்னு நீ வரிசையாய்
அடுக்கும் கேள்விகள் என்றுமே எனது வாடிக்கையாகும்.


எம்மா !
இப்படி நாளெல்லாம் உன் புராணத்த
சொல்லிக்கொண்டே இருப்பேன் சோர்ந்து போகாமல்.

எம்மா !

தொப்புள் கொடி அறுத்து !
தொட்டில் சுகம் கொடுத்து !
என் தொல்லைகள் பல பொருத்து !
உன் உள்ளத்தை இரும்பாக்கி !
உன் உதிரத்தை பாலாக்கி !
இன்று என்னையும் ஓர் ஆளாக்கி !
இங்கு
நான் எழுதிய கவிதைக்கு உன்னையே சொல்லாக்கி !
எய்துள்ளேன் உன் அன்பை அம்பாக்கி !

11
Movie  - Seema Raja

Song -  varen varen Seema Raja

12
ஆள மயக்குதடி 
உன் சிரிப்புல - என்
ஆவி துடிக்குதடி !

இந்த பாவி மனசுல
தாவிக் குதிச்சு வந்து நின்னவ நீ தானடி !

சொல்லி போனாயடி என்னுள்ளே
உன் வார்த்தைகள் பல சொல்லி போனாயடி !

பாதியில வந்த பந்தம் நீயடி - இப்ப
பாத மறந்து போனதென்ன சொல்லடி !

புன்னகை செய்தவளும் நீதானடி - இன்று
புறக்கணித்தவளும் நீதானடி !

கதை பேசியவளும் நீதானடி - இன்று
கத்தி வீசியவளும் நீதானடி !

கனவில் வந்தவளும் நீதானடி - கடைசியில்
கனவாய் போனவளும் நீதானடி !

கன்னி உந்தன் கள்ளச்சிரிப்ப
காதலுன்னு நான் நினைச்சேன் ! எனக்குள்ளே
கண்டபடி நான் சிரிச்சேன் !

அனுதினம் உன்னோட நான் பேச எனக்குள்ளே
அடிக்கடி  ஒத்திகை நான் பார்த்தேன்!

கடிகார நொடி முள்ளாய் கடந்துக்கொண்டே இருந்தேன்
என் காதலை உன்னிடம் சொல்ல நகர்ந்து கொண்டே இருந்தேன்!

காதல் சொல்ல
ஆவலோடு நான்?
கைகள் கோர்த்து அவனோடு நீ !

உனக்காக வந்தேன் சிவருத்ரன் - ஆனால்
உன்னருகே வேறொருத்தன் !

 நான்
கண்ட காட்சி என் கண்ணுக்குள்ளே அனலாச்சி
என் காதலின் கடைசி மூச்சியும் நின்னாச்சி !

உன் காதல் அவனோடு
  - கடைசியில்
என் கையில் திருவோடு !

மங்கை உனக்காக கொண்டு வந்த மலரை
மறைத்துக் கொண்டேன்
என் மனதோடு !

எழுதி முடித்த என் டைரியில் எழுதாமல்விட்ட பக்கங்கள் நீ !
கிழிக்க மனமின்றி கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்
ஒரு தலை காதலோடு கவிதைகளை !

மறக்காமல் வந்துவிடு
மறு ஜென்மத்தில் உன்னை தந்ததுவிடு !

13
தன்னந்தனியாக நான் நின்றிருந்தேன்
வழித் துணையாக வந்தவள் நீ தானே !
காற்றாய் தொட்டாய் !
காதில் விழுந்தாய் !
இதயத்தில் நுழைந்தாய் !
இடைவிடாது நின்றாய் !
பேரைக் கேட்டேன்
இசை என்றாய்  !
இணைந்தாய் என்னோடு
இசைத்தாய் என் நெஞ்சோடு !
காற்றின் மொழி நீ !
காதல் வலி நீ !
அன்னை மடி நீ !
அன்பின் பிடி நீ !
மங்கையின் சினுங்கல் நீ ! - அவள்
சலங்கையின் முனங்கல் நீ !
மழலையின் சிரிப்பு நீ !
என்னை மயக்கும் மந்திர விரிப்பு நீ !
எந்திர உலகில் என்ன இது மாயம் !
ஆற்றுகிறாய்
என் இதய காயம் !
இசை மகளே உன்னை ஆராதிக்கிறேன் !
வசை பாடும் வாயெல்லாம்
இசை பாடுது இங்கே !
தரிகிடதோம் நீ பாட
தடம் மாறுது என் மனசு !
வழியெங்கும் தேடினேன் உன்னை 
வகை வகையாய் வாத்தியங்களுக்குள்ளும் பலர்
வார்த்தைகளுக்குள்ளும்  குடிபோனாய் நீ !
நல்ல வேளை என் தோழி Rijia குரலிலும் குடிபோனாய் நீ !
உன்னை கண்டு கொண்டேன் இங்கே கவிதையும் கானமுமாய்  !   
கானக் குயில் Rijia குரலில் கவிதையே கானமாய்
கண்டு கொண்டேன் இங்கே உன்னை !

15
ஆச வெச்சேன் உன்மேல !
ஆசை தீர வாழுவோமா இந்த மண் மேல !

உன் காலடி ஓசைய வச்சு
காவடி சிந்து ஒன்னு பாடட்டுமா ?

நிக்காம துள்ளுதடி என் மனசு -அத
சொல்லாம சொல்லுதடி உன் கொலுசு !
உன்ன பார்த்ததுமே குறையுதடி
என் வயசு -அத
கொல்லாம கொல்லுதடி உன் ரவுசு !

ஊசிக் கொண்ட காரி
என்ன உசுப்பு ஏத்தும் சண்டைக்காரி !

உடுக்கை இடுப்புக்காரி
என்ன கடுப்பு ஏத்தும்
மிடுக்குகாரி !

கத்தரி மூக்குகாரி
என்ன கவுத்துபோடும்
நேக்குகாரி !

செவிதழ் சின்ன பொண்ணு -உனக்கு
செந்தாமரை சின்ன கண்ணு !

ஆயுள் தீரும் மட்டும்  ஆசை தீர வாழ -என்
ஆவி துடிக்குதேடி !

Pages: [1] 2 3 4