1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-063
« on: January 14, 2026, 06:38:03 am »
"திரை தாண்டிய தேடல் நீயடி"
"திரையில் மலரும் என் காதலும் நீயடி"
"இரவின் மெல்லிய இருளில்,
என் கைப்பேசி ஒளிர்ந்திருக்க"
"இரவின் மடியில் உலகம் சாய்ந்திருக்க"
"என் கண்களில் உன் முகம் மட்டுமே நிறைந்திருக்க"
"என் கண் இமைகள் மூடாமல் உனக்காய் விழித்திருக்க"
"என் இதயமோ உன்னிடம் பேச துடித்திருக்க"
"உன்னிடமிருந்து எப்போது அழைப்பு வருமென என் மனம் தவித்திருக்க"
"நட்சத்திரங்கள் மின்னும் வானம் ஒருபுறம்"
"நம் நேசம் பேசும் திரை மறுபுறம்"
"இருள் சூழ்ந்த இரவினில் என்
இதயத்தில் உந்தன் நினைவு"
"அருகினில் நீ இல்லா நேரத்திலே இந்த மின்னணுத் திரை தான் நம் உறவு"
"சுவரோடு நான் சாய"
"திரையோடு நீ பேச"
"என் கையில் இருக்கும் சிறு மின்னணுத் திரையில் கண்ணாடிப் பிம்பமாய் உன் முகம் பார்க்கிறேன்"
"ஜன்னல் வழியே நிலவு நம்
சல்லாபத்தைக் கண்டு சிரிக்குதே"
"தனித்தனி அறையில் நாம் இருந்தாலும் நம் காதல் மட்டும் காற்றோடு இனிக்குதே"
"தனிமைச் சிறையில் நான் வாடினாலும், உன் குரல் கேட்கும் அந்தக் கணம் ஆனந்தமாகும்"
"சில நேரங்களில் நம் மௌனங்கள் கூட மொழியாகும்"
"இந்த நள்ளிரவு நமக்கொரு வழியாகும்"
"விடியும் வரை இந்த மின்மினி வெளிச்சம் நம் காதலைச் சொல்லும் ஒரு சாட்சியாகும்"
"நம் இருவரின் அறைகள் நடுவே பெரும் தூரங்கள்"
"ஆனாலும் குறையவில்லை நம் காதலின் ஈரங்கள்"
"மைல்கல் தூரத்தில் நாம் பிரிந்திருந்தாலும், காதலெனும் நூலில் நாம் பிணைந்திருக்கிறோம்"
"உன் புன்னகையின் சிரிப்பொலி கேட்டு என் இதயம் மகிழ்ந்திட"
"தூரம் என்பது இங்கே சுருங்கிப் போகிட"
மின்னணுத்திரைகள் கூட நமக்கு வரமாய் மாறிட"
"உன் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதையாய்"
"என் பார்வைகள் அதை ரசிக்கும் ஓவியமாய்"
"காலங்கள் கடந்து நின்றாலும் நம்
காதல் மட்டும் மாறாத காவியமாய்"
"பகலில் நடந்த சின்னச் சின்ன கதைகளும், ரகசியங்களும் ஒவ்வொன்றாய் நீ சொல்லச் சொல்ல அங்கே சந்தோஷ மழையில் நான் நனையத் தொடங்கினேன்"
"நீ அழகாய் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்தச் சத்தம், என் அறையின் தனிமையை அறவே விரட்டுதடி"
"காதலோடு கிண்டலும், கேலியும் நம் பேச்சில் கலந்திருக்க"
"நேரம் போவதே தெரியாமல் நாம் இருவரும் தூங்காமல் விழித்திருக்க"
"நம் உரையாடலில் என் நெஞ்சமோ சந்தோஷ வெள்ளத்தில் பொங்குதடி"
"சார்ஜ் குறைகிறது என நீ எச்சரிக்க"
"காதல் குறையவில்லையே என நான் வம்பு இழுக்க"
"மின்சாரக் கம்பிகள் வழியே பாயும் மின்னோட்டமாய், நம் மகிழ்ச்சி இருபுறமும் கரைபுரண்டு ஓடுதடி"
"இந்த நள்ளிரவு உரையாடல்கள் ஓயப்போவதில்லை தூக்கம் நம்மைத் தழுவும் வரை அல்ல"
"நம் காதல் உலகை ஆளும் வரை"
"நூறு ஜென்மம் எடுத்தாலும் நான் உன் மேல் வைத்த காதல் குறையாது"
"உன் முகம் பார்த்து நான் வாழ இந்த ஒரு யுகம் போதாது"
"விண்மீன்கள் உதிர்ந்து போனாலும், நம் விழி பார்த்த காதலின் ஒளி என்றும் மங்காது"
"சுவர்கள் மறைந்து, திரைகள் உடைந்து, நம் இருவரின் கரங்கள் கோர்க்கும் அந்த நிஜமான விடியலுக்காய் காத்திருக்கிறது என் உயிர்"
"நம் விரல்கள் கோர்க்கும் அந்தப் பொன்னாள் வரை, காலத்தின் ஒவ்வொரு நொடியும் உன் நினைவால் நிரம்பட்டும்"
"மின்னணுத் திரையின் எல்லைகள் தாண்டி, நம் காதல் அண்டத்தின் எல்லைகளைத் தேடிப் பறக்கட்டும்"
"நம் நள்ளிரவு உரையாடல்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை இருண்ட இரவில் ஒளிர்ந்த அணையாத காதல் தீபங்கள்"
"விடியலை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்"
"ஒவ்வொரு தடையும் நம் காதலின் பாதையில் தூசியாகட்டும்"
"இருள் விலகிச் செல்லட்டும்"
"புதிய விடியல் புலரட்டும்"
"நம் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்"
"நம் உறவு என்றும் பிரகாசமாகட்டும்"
"இணையம் இன்றி உலகம் இயங்காது என்பார்கள், உன் இணை இன்றி என் இதயம் இயங்காது"
"என் உலகம் உன்னைச் சார்ந்தே சுழல்கிறது"
"உன் வருகைக்காக இந்த இதயம் ஏங்குகிறது"
"உன் பிரிவின் வலி தாங்காமல் தவிக்கிறேன்"
"நம் காதலை நெஞ்சில் சுமந்து உனக்காய் காத்திருக்கிறேன்"
"சீக்கிரம் வந்துவிடு, ஒவ்வொரு நொடியும் விடியலாய் புலர"
"என் வாழ்வில் வசந்தம் மலர"
"நீ வருவாயென உனக்காய் காத்திருக்கிறேன்,
என் பிரியமானவளே,
என் அன்பிற்குரியவளே,
என் என்னவளே" 💜💜
சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் MISTY SKY 💜💜
"திரையில் மலரும் என் காதலும் நீயடி"
"இரவின் மெல்லிய இருளில்,
என் கைப்பேசி ஒளிர்ந்திருக்க"
"இரவின் மடியில் உலகம் சாய்ந்திருக்க"
"என் கண்களில் உன் முகம் மட்டுமே நிறைந்திருக்க"
"என் கண் இமைகள் மூடாமல் உனக்காய் விழித்திருக்க"
"என் இதயமோ உன்னிடம் பேச துடித்திருக்க"
"உன்னிடமிருந்து எப்போது அழைப்பு வருமென என் மனம் தவித்திருக்க"
"நட்சத்திரங்கள் மின்னும் வானம் ஒருபுறம்"
"நம் நேசம் பேசும் திரை மறுபுறம்"
"இருள் சூழ்ந்த இரவினில் என்
இதயத்தில் உந்தன் நினைவு"
"அருகினில் நீ இல்லா நேரத்திலே இந்த மின்னணுத் திரை தான் நம் உறவு"
"சுவரோடு நான் சாய"
"திரையோடு நீ பேச"
"என் கையில் இருக்கும் சிறு மின்னணுத் திரையில் கண்ணாடிப் பிம்பமாய் உன் முகம் பார்க்கிறேன்"
"ஜன்னல் வழியே நிலவு நம்
சல்லாபத்தைக் கண்டு சிரிக்குதே"
"தனித்தனி அறையில் நாம் இருந்தாலும் நம் காதல் மட்டும் காற்றோடு இனிக்குதே"
"தனிமைச் சிறையில் நான் வாடினாலும், உன் குரல் கேட்கும் அந்தக் கணம் ஆனந்தமாகும்"
"சில நேரங்களில் நம் மௌனங்கள் கூட மொழியாகும்"
"இந்த நள்ளிரவு நமக்கொரு வழியாகும்"
"விடியும் வரை இந்த மின்மினி வெளிச்சம் நம் காதலைச் சொல்லும் ஒரு சாட்சியாகும்"
"நம் இருவரின் அறைகள் நடுவே பெரும் தூரங்கள்"
"ஆனாலும் குறையவில்லை நம் காதலின் ஈரங்கள்"
"மைல்கல் தூரத்தில் நாம் பிரிந்திருந்தாலும், காதலெனும் நூலில் நாம் பிணைந்திருக்கிறோம்"
"உன் புன்னகையின் சிரிப்பொலி கேட்டு என் இதயம் மகிழ்ந்திட"
"தூரம் என்பது இங்கே சுருங்கிப் போகிட"
மின்னணுத்திரைகள் கூட நமக்கு வரமாய் மாறிட"
"உன் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதையாய்"
"என் பார்வைகள் அதை ரசிக்கும் ஓவியமாய்"
"காலங்கள் கடந்து நின்றாலும் நம்
காதல் மட்டும் மாறாத காவியமாய்"
"பகலில் நடந்த சின்னச் சின்ன கதைகளும், ரகசியங்களும் ஒவ்வொன்றாய் நீ சொல்லச் சொல்ல அங்கே சந்தோஷ மழையில் நான் நனையத் தொடங்கினேன்"
"நீ அழகாய் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்தச் சத்தம், என் அறையின் தனிமையை அறவே விரட்டுதடி"
"காதலோடு கிண்டலும், கேலியும் நம் பேச்சில் கலந்திருக்க"
"நேரம் போவதே தெரியாமல் நாம் இருவரும் தூங்காமல் விழித்திருக்க"
"நம் உரையாடலில் என் நெஞ்சமோ சந்தோஷ வெள்ளத்தில் பொங்குதடி"
"சார்ஜ் குறைகிறது என நீ எச்சரிக்க"
"காதல் குறையவில்லையே என நான் வம்பு இழுக்க"
"மின்சாரக் கம்பிகள் வழியே பாயும் மின்னோட்டமாய், நம் மகிழ்ச்சி இருபுறமும் கரைபுரண்டு ஓடுதடி"
"இந்த நள்ளிரவு உரையாடல்கள் ஓயப்போவதில்லை தூக்கம் நம்மைத் தழுவும் வரை அல்ல"
"நம் காதல் உலகை ஆளும் வரை"
"நூறு ஜென்மம் எடுத்தாலும் நான் உன் மேல் வைத்த காதல் குறையாது"
"உன் முகம் பார்த்து நான் வாழ இந்த ஒரு யுகம் போதாது"
"விண்மீன்கள் உதிர்ந்து போனாலும், நம் விழி பார்த்த காதலின் ஒளி என்றும் மங்காது"
"சுவர்கள் மறைந்து, திரைகள் உடைந்து, நம் இருவரின் கரங்கள் கோர்க்கும் அந்த நிஜமான விடியலுக்காய் காத்திருக்கிறது என் உயிர்"
"நம் விரல்கள் கோர்க்கும் அந்தப் பொன்னாள் வரை, காலத்தின் ஒவ்வொரு நொடியும் உன் நினைவால் நிரம்பட்டும்"
"மின்னணுத் திரையின் எல்லைகள் தாண்டி, நம் காதல் அண்டத்தின் எல்லைகளைத் தேடிப் பறக்கட்டும்"
"நம் நள்ளிரவு உரையாடல்கள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை இருண்ட இரவில் ஒளிர்ந்த அணையாத காதல் தீபங்கள்"
"விடியலை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்"
"ஒவ்வொரு தடையும் நம் காதலின் பாதையில் தூசியாகட்டும்"
"இருள் விலகிச் செல்லட்டும்"
"புதிய விடியல் புலரட்டும்"
"நம் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்"
"நம் உறவு என்றும் பிரகாசமாகட்டும்"
"இணையம் இன்றி உலகம் இயங்காது என்பார்கள், உன் இணை இன்றி என் இதயம் இயங்காது"
"என் உலகம் உன்னைச் சார்ந்தே சுழல்கிறது"
"உன் வருகைக்காக இந்த இதயம் ஏங்குகிறது"
"உன் பிரிவின் வலி தாங்காமல் தவிக்கிறேன்"
"நம் காதலை நெஞ்சில் சுமந்து உனக்காய் காத்திருக்கிறேன்"
"சீக்கிரம் வந்துவிடு, ஒவ்வொரு நொடியும் விடியலாய் புலர"
"என் வாழ்வில் வசந்தம் மலர"
"நீ வருவாயென உனக்காய் காத்திருக்கிறேன்,
என் பிரியமானவளே,
என் அன்பிற்குரியவளே,
என் என்னவளே" 💜💜
சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் MISTY SKY 💜💜
