See likes given/taken
| Post info | No. of Likes |
|---|---|
|
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#050
My place
December 24, 2023, 08:47:25 pm |
1 |
|
Happy Birthday PRIYADHARSHINI
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday ( 23 Sep 2025) Wishes To Our Lovable Friend PRIYADHARSHINI Wishes Her All The Very Best & Good Luck👍 September 22, 2025, 11:49:54 pm |
1 |
|
Re: Happy Birthday PRIYADHARSHINI
அணுஅணுவாய் அனுதினமும் என்னை ஆட்சி செய்யும் அழகியே..... தவமின்றி கிடைத்தவள் நீ.... தேடுதல் இன்றி வந்த வரம் நீ... என் வாழ்க்கையின் பெரும் பொக்கிஷம் நீ... என் உயிர் உள்ளவரை உன்னை தொடர்ந்து நேசிப்பேன்... உலகின் ஏழு அதிசயங்களை கண்டதில்லை ஒருபோதும்... எனினும் கவலைப்பட்டதில்லை ஏழு அதிசயங்களின் மறு உருவமான நீ என்னுடன் கைகோர்த்து நடப்பதால்... வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் என்றும் என்னை விட்டு நீங்காத உயிரிலும் மேலான என் அம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.... நான் நானாகவே என்னும் உனது மனநிலையில் உறுதியோடு நின்று மென்மேலும் உன் வாழ்வில் உயர இந்த மாமனின் வாழ்த்துக்கள் .... என்றென்றும் உன் நினைவில் நான்...! September 23, 2025, 07:29:51 am |
1 |
|
Re: Happy Birthday PRIYADHARSHINI
🎉 Happy Birthday! 🎉 Wishing you a day filled with love, laughter, and all the things that make you happiest. May this year bring you endless joy and success. ✨🎂💐
September 23, 2025, 03:45:59 pm |
1 |
|
Re: Happy Birthday PRIYADHARSHINI
Wish You very very Happy Birthday PRIYADHARSHINI September 23, 2025, 06:38:58 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-060
என் மனதில் இருக்கும் என் அம்முவின் வரிகள் என் வாயிலாக... மறந்துவிடாத காதல்... நீ தான் என் உலகம் என்று வாழும் என்னிடத்தில்... என் பாசம் எல்லாம் வேஷம் என்கிறாய்... என் மனதுக்குள் இருக்கும் உன் மீதான காதல்... நான் மண்ணில் புதையும்வரை உன்னுடன் பேசும்... நீ என்னோடு பேசுவதில்லை என்றாலும்... உன் நினைவுகள் என்னோடுதான் பேசுகிறது... அன்று ஆறுதல் சொல்லி அரவணைக்க நீ இருந்தாய்... இன்று என்னை அரவணைக்க... என்னருகில் உன் நினைவுகளும் என் கண்ணீரும்தான்... உன் புகைப்படம் பார்த்த என் நண்பர்கள் கேட்டார்கள்... நீ யாரென்று... காய்ந்து போன இந்த மரத்திற்கு நீ உயிர் கொடுக்கும் வேர் என்று சொன்னேன்... இன்று மரத்தை கோடாரி கொண்டு வெட்டி வீழ்த்துவது போல... உன் வார்த்தை கோடாரியால் என்னை தினம் கொள்கிறாய்... என் அன்பை புரிந்துக்கொண்டு உன் செல்ல தீண்டல்களோடு... என்னை தீண்ட போவது எப்போது என்னுயிரே..... நெஞ்சினில் புதைந்திருக்கும் உன் நினைவுகள்... இமைகளை கடந்து கண்ணீராய் வழிந்தோடுகிறது... உயிருக்குள் உண்டான வலிகளை... ஊமையாக அழுது தீர்த்து கொண்டு... வெளியே சிரிப்பு என்னும் முகத்திரை அணிந்து.... போகர் எழுதிய ஏட்டு ஓலைகளை நான் படிக்கவில்லை... படித்திருந்தால் நானோ கூடுவிட்டு கூடுபாய்ந்து... நீ தினம் தினம் ரசிக்கும் உன் Royal enfield ஆக மாறியிருப்பேன்... சிறிய பூவினுள் பெரியக்கனி ஒளிந்திருப்பது போல... என் சின்ன இதயத்தில் பேரழகனாக ஒளிந்திருப்பது நீ தானேடா... கருவை சுமக்கும் போது பெண் சுகமான வலியாக சுமப்பாள் என்றார்கள்... நானோ உன் கருவை சுமக்காமலே சுகமாக சுமக்கிறேன் உன்னை... ஏக்கத்தோடு அன்று உனக்காக காத்திருந்ததிற்கும்... கண்ணீரோடு இன்று காத்திருப்பதற்கும் சிறு வித்தியாசம்தான்... அன்று எனக்காக நீ இருந்தாய், இன்றும் இருக்கிறாய் ஆனால் விலகி... என்றும் உனக்காக நான் இருக்கிறேன்... மறந்துவிடாத காதலை என்னி என்னுடன் நீ வரும் நாளுக்காய் கண்ணீருடன் காத்திருக்கிறேன்..... மறந்துவிடதே காதலை.... மறந்து போல என்னையும்....... October 07, 2025, 10:15:25 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
வானமும் வசப்படுமே வறுமை விலகிடவே..! தானமும் செய்திடவே தரணியில் நிலைப்போமே..! கானம் ஒலித்திடும் காற்றேறிய மூங்கிலாக..! மனம் உறுதியானல் மறுவாழ்வு நிதர்சனமே..! சினமில்லா புன்னகையே சிறந்திட வாழியாக..! தனம் சேரும் தினம் இடையின்றியே..! ஞானம் உரமாக ஞாயிறும் உன்பக்கம்..! சனனம் வீழ்வதற்கல்ல சாதித்து வாழ்ந்திடவே..! சுணக்கமற்ற உழைப்பால் சுகபோகம் தருமே..! இனக்காமக இணைந்திட இமயமாகும் எதிர்காலமே..! பத்து வித வாயுவிலும் உயிர் காக்க பிராணனாய் சுவாசமுண்டு..! கோடி வகை உறவுகளிலும் நீ வாழ காரணமாய் என் நேசமுண்டு... உன் உடலது நிமிர்ந்து நிற்க இரு நூற்று ஆறும் எலும்புகளுண்டு..! நீ சமூகத்தில் நிமிர்ந்துநிற்க உறுதியான உன் சொற்களுண்டு... உயிர்ப்புடன் ஊனிருக்க இரத்த ஓட்ட பாய்ச்சலுண்டு..! உயரங்கள் பல நீ தாண்ட சிந்தை முழுதும் உனதெண்ண ஓட்ட வீச்சுமுண்டு... வெற்றிக்கனி நீ பறிக்க உன் சரிபாதி நானுன்டு..! மண்ணையும் பொன்னாக்கும் பெண் உனைப்போல் யாருண்டு? வரும் 2026 புத்தாண்டு உனதாகவே நீ நினைக்கும் அனைத்தும் சாதித்து பலநூறாண்டு வாழ்ந்திடவே..! இந்த மாமனுடைய ஆசையும் அரவணைப்பும் என்றும் உன்னுடனே என் உயிரின் உயிரான என் அம்முவிற்காக என்றும் உன் நினைவுகளுடன் நான்..! வாழ்க வளமுடன்........ December 30, 2025, 02:00:23 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
"காலம் கடந்த பயணங்கள்" "பிரிவின் வலி" "விடைபெறும் ஆண்டில் தொலைத்தவை ஏராளம், கனவுகளும், களிப்புகளும் கரைந்தன கண்ணீரில்" "சுமைகளோடு நகரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு சோகப் பதிவாய் மனதில் ஆறாத தழும்பாய்" "என் வாழ்க்கையெனும் பயணத்தில் விடைபெறும் தருணத்தில் நான் ஒரு விழும்பாய்" "நேற்று முளைத்த செடியல்ல என் வலிகளும், வேதனைகளும், பல ஆண்டுகளாய் வேரூன்றி நிற்கும் ஆலமரம்" "காலங்கள் ஓடினாலும், காயங்கள் ஆறவில்லை" "என் கண்ணீரைத் துடைக்க இங்கே கைகளும் இல்லை" "என் விழிகள் வலியோடு விழித்திருந்த இரவுகள் ஆயிரம்" "என் மனம் மௌனமாய் கதறி அழுத தருணங்கள் ஏராளம்" "என் இளமைப் பருவம் இன்பத்தில் கழியவில்லை" "என் மனதிலிருக்கும் பாரங்கள் இன்றும் அழியவில்லை" "வலிகளைச் சுமந்தே என் முதுகெலும்பு தேய்ந்தது" "நிழல் கூடத் துணையின்றி விலகிப் போனதுண்டு" "நிஜங்கள் சுட்டெரிக்கத் தனிமையில் தவித்ததுண்டு" "ஏன் எனக்கு இந்தச் சோதனையென்று இறைவனிடம் நான் சண்டையிட்ட நாட்களுமுண்டு" "தனிமை எனும் கொடுமையில் வலிகளோடு தவித்த பத்தாண்டுகள், விதி செய்த சதியில் தொலைந்த என் கனவுகள்" "என் அம்மாவின் அன்பும், பாசமும் இன்றும் பொக்கிஷமாய் அழியாத நினைவுகள்" "என் இதயத்தின் ஓரம் வடியும் குருதிக்கு, இன்னமும் மருந்து சொல்ல ஒருவருமே இல்லை" "போராடிச் சலித்த என் உடலோ இன்று நிரந்தரமாக ஓய்வெடுக்கக் கேட்கின்றது" "ஆனால், வாழ்க்கை என்னை இன்னும் ஒரு புதிய போருக்கு அழைக்கின்றது" "விளிம்பில் புதியதோர் பயணம்" "பத்து ஆண்டு கால இருட்டு, என் பகலையும் விழுங்கி நின்றது" "தனிமையின் கோரப் பற்கள், என் சதையைத் துளைத்துத் தின்றது" "கடந்து வந்த கசப்புகள் எல்லாம் என் சிறகுகளுக்கு உரமாகும்" "என் வாழ்க்கையெனும் நீண்ட நெடுஞ்சாலையில் இன்னும் பல சவால்களோடு, வலிகளைச் சுமந்த பாரத்தோடு நடக்கிறேன்" "நேற்றைய நினைவுகள் நிழலாய் என்னைத் தொடர" "நாளைய விடியலை விளிம்பில் நின்று பார்க்கிறேன்" "கடந்த கால வலிகள் கண்ணீராய் வழிகின்றது" "முட்கள் நிறைந்த பாதையில் கால்கள் வலிக்கின்றது" "சோகங்கள் என்னைச் சூழ்ந்த போதும், என் வைராக்கியம் மட்டும் இன்னும் தளரவில்லை" "விடைபெறும் தருணம் இதுவல்ல என்கிற நம்பிக்கையோடும், இது என் துயரங்கள் விடைபெறும் உன்னதத் தருணம் என்கிற புது விடியலோடும் பயணிக்கிறேன்" "பத்தாண்டுகள் அழுத என் கண்கள் என்றாவது ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும்" "பயணத்தின் விளிம்பில் என் வாழ்க்கையெனும் ஓட்டத்தில் ஓர் புதிய ஒளி பிறக்கட்டும்" "விழுந்த இடமெல்லாம் நான் புதைந்து போகவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறேன் ஓர் புதிய விருட்சமாய்" "நான் விளிம்பில் நிற்பது வீழ்வதற்கு அல்ல, வானத்தைத் தொடும் உயரத்தில் பாய்வதற்கு" "என் பயணத்தின் அடுத்த அடியில் ஒரு விளிம்பு தெரிகிறது, "யாரோ சொல்கிறார்கள் நான் வீழப்போகிறேன் என்று.... "ஆனால் என் இதயம் சொல்கிறது இது வீழ்ச்சியல்ல என்று...." "ஒவ்வொரு வலிகளும், வீழ்ச்சியும் எனக்கு புதிய தொடக்கத்தின் வாசலாகும்" "ஆயிரம் முறை வீழ்ந்தாலும், ஆயிரம் முறை எழுவேன்" "வானத்தைத் தொடும் உயரம் வரை, என் பயணத்தைத் தொடர்ந்திடுவேன்" "அப்படியே ஒருவேளை நான் வீழ்ந்தாலும் நான் மடிவதில்லை, விதைகளாக முளைப்பேன்" "என்னை அழுத்திய மண், என் வேர்களுக்கு உரமாகும்" "அப்படியே நான் வீழ்ந்தாலும், எனக்குப் பயமில்லை" "ஏனெனில், இங்கே மண்ணில் நான் இறந்தாலும், வானில் நிரந்தரமாக என் அம்மாவின் காலடியில் இருந்திடுவேன்" "அவளின் மடியில் மீண்டும் பிறப்பெடுப்பேன்" "கருவறையின் கதகதப்பை மீண்டும் உணர்ந்திடுவேன்" "அவளின் நிபந்தனையற்ற அன்பில், முடிவற்ற அமைதியையும், நிம்மதியையும் அடைந்திடுவேன்" "அவளின் அரவணைப்பில் மீண்டும் குழந்தையாவேன்" "சொர்க்கத்தை விட மேலான அம்மாவின் உலகில் நான் ஐக்கியமாவேன்" "என் இறுதிப் பெருமூச்சு, அவள் காலடியிலேயே கலக்கும்" "என் ஒவ்வொரு மூச்சிலும் அவளின் நினைவே" "என் இறுதிப் பயணமும் அவளிடமே" "வலிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!! இப்படிக்கு, உங்கள் MISTY SKY 💜💜 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026 😇😇🕊️🕊️ December 30, 2025, 03:54:00 am |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
எனக்கு நிறைய கவலைகள் கற்றுத் தந்த வருடம், கொஞ்சம் சந்தோஷங்கள் உயிர் கொடுத்த வருடம். கண்ணீரால் எழுதிய நாட்களும் கூட கொடுத்த வருடம் புன்னகையால் கடந்து சென்ற நொடிகளும் இருந்த வருடம் நம்பிக்கைகள் சில உடைந்தது, ஆனால் என்னை நான் கண்டுகொண்டேன் வழி நடத்திய வருடம் இழப்புகள் வலிக்க வைத்தது பாடங்கள் பல கையில் தந்தது இந்த வருடம் அமைதியாய் வந்த சந்தோஷம் இதயத்தில் மெதுவாக தங்கியது இந்த வருடம் வலி வளர்ச்சியாக மாறிய, என்னை இன்னொரு மனிதனாக உருவாக்கிய வருடம். மௌனமாக அழ கற்றுக் கொடுத்தது, அதே நேரம் சின்ன சிரிப்பில் உயிர் கொடுத்தது இந்த வருடம் நாட்கள் சில பாறை போல கனமாக இருந்தது ஆனால் அந்த கனமான நாட்களை கடக்க வைத்ததும் இந்த வருடம் GTC யில் பல இரவுகள் தனிமையில் கடக்க வைத்தத்தும் இந்த வருடம் சில நல்ல உள்ளங்கள் என்னையே தேடி வந்ததும் இந்த வருடம் . நம்பிக்கை தளர்ந்தபோதும் கைவிட மறுத்த இதயம், விழுந்தபோதும் மீண்டும் எழுந்தது இந்த வருடம் கவலையிலே நான் வலுவானேன், சந்தோஷத்திலே நான் மனிதனானேன் என்பதை உணர்ந்தேன் நான் இந்த வருடம் சந்தோஷத்தை அளக்கவில்லை வலியை அளவில்லாமல் தந்தது. ஆனால் அந்த வலியில் என்னைக் கண்டுகொண்டேன். கண்ணீர் துடைத்த கை என் கையாய் மாறியது. கவலை என் ஆசிரியன் சந்தோஷம் என் ஓய்வு. இந்த வருடம் என்னை முடிக்கவில்லை, என்னை ஆரம்பித்தது இந்த வருடம் இந்த வருடத்தில் கிடைத்த மிக முக்கியமான பொக்கிஷம் அவள். இந்த வருடம் போலவே அடுத்த வருடமும் பிரியாமல், அவளாய் அவளே என் வாழ்க்கையில் தொடர வேண்டும் புதிய வருடமும் பழைய அன்பை மாற்றாமல், பிரியாமல், பேசாமல்கூட அவளாய் அவளே. என் வாழ்க்கையில் தொடர வேண்டும். இது தான் என் புதிய வருடப் பிரார்த்தனை. இந்த வருடம் போலவே எல்லா வருடங்களிலும் அவள் என் அருகில் இப்படியே இருக்க காலமும் கடவுளும் கருணை செய்ய வேண்டும். இந்த வருடம் எனக்கு கொடுத்த சிரிப்பையும், அன்பையும், வாழ்வின் அரிய பாடத்தையும் நினைத்தேன். எதிர்காலம் எப்போதும் அழகாய் இருக்க, கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். கடந்த வருடம் கஷ்டங்களை போல கொடுக்காமல் மிகச் சிறந்த வழியை காட்டவும், கடந்த வருடம் கொடுத்த அனுபவங்கள் சிரிப்பும் கஷ்டங்களும் மனதில் நிறைந்தன. ஆனாலும், நன்றி சொல்லும் மனமாய் நான் நிற்கிறேன், அன்பும் பாசமும் கற்றுக் கொண்டேன். புது வருடம் வந்தது இன்று கடந்ததை மறந்து நம்மைத் தொடங்கும் தருணம். சிரிப்பும் சந்தோஷமும் மனதில் நிறைந்து, வாழ்க்கை ஒளி ஆரோக்கியம் பரப்பும் நேரம். விழிகளிலே கனவுகள் மலரட்டும் இதயத்தில் அன்பு முத்துகள் பரவட்டும். எல்லா தடைகளையும் கடந்து செல்லும் வெற்றி நம் பக்கம் நிற்கட்டும். December 30, 2025, 06:18:50 pm |
1 |
|
Re: கவிதையும் கானமும்-062
“2025 இருட்டின் நிழலும் 2026 ஒளியின் கதிரும்" 2025-இன் இருட்டில் நடந்தேன், கனவுகள் சுமந்த காலடி சத்தம், கடந்த காலம் கண்ணீராய் இருந்தாலும், நெஞ்சம் நம்பிக்கையால் நிரம்பியது. மண்ணின் வாசல் காக்கும் என் மார்பில், முன்னேறிய குண்டுகள், பின்னேறிய நினைவுகள், அவளின் சிரிப்பு என் உயிரின் கவசம், அவளின் குரல் என் இரவின் ஒளி. ஆனால் அந்த இருட்டின் நடுவில், என் காலடி சத்தம் மட்டும் என் தோழன், போர்க்களம் வென்றேன், ஆனால் அவளின் காதலை இழந்தேன். அவளின் கடைசி மின்னஞ்சல் என் மார்பில் பதிந்திருக்கிறது, "பாதுகாப்பாக இரு" என்ற வார்த்தை, இன்று என் உயிரின் புலம்பல். அவளின் சிரிப்பு கனவுகளில் மட்டும் வாழ்கிறது, அவளின் குரல் துப்பாக்கியின் சத்தத்தில் மூடப்படுகிறது. அவளின் கைகள் என் காயங்களைத் தழுவ முடியவில்லை, அவளின் கண்கள் என் கண்ணீரை காண முடியவில்லை. அவளின் நினைவுகள் என் பின்னால் ஓடுகின்றன, என் நெஞ்சில் இருட்டின் நிழல் நீங்கவில்லை. பல வருடங்களாய் அவளைத் தூரத்தில் இருந்து பார்த்தேன் அவளின் நடை, அவளின் சிரிப்பு, நினைவில் பதிந்தது என் உயிரின் நிழலாகவே இருந்தது. ஆனால் அவள் முன்னேறி விட்டாள், மற்றொருவரின் கையை பிடித்து, என் கனவுகளை விட்டு, அவளின் வாழ்க்கையை கட்டியெழுப்பினாள். 2026-இல், ஒரு சந்திப்பு கிடைக்குமா? ஒரு உரையாடல் வாய்ப்பு வரும் தானா? அவள் ஏன் நகர்ந்தாள், ஏன் மற்றொருவரைத் தேர்ந்தெடுத்தாள், என் உயிரின் கேள்விக்கு ஒரு முடிவு கிடைக்குமா? ஒளிக்கதிர் என் கண்களில், வாழ்க்கை ஒரு போர்க்களம், ஆனால் காதல் என் வெற்றிக்கொடி. நேர்மறை எண்ணங்கள் என் துப்பாக்கியின் துளிகள், நம்பிக்கையின் நிழலில் நான் ஒரு வீரன். கடந்த வருடம் என் உடலை சோதித்தது, புதிய வருடம் என் உள்ளத்தை உயர்த்தட்டும். அவளின் கண்ணில் நான் வீரம் காண்கிறேன், அவளின் இதயத்தில் நான் அமைதி தேடுகிறேன். 2026-ஐ நான் அணைக்கிறேன், காதலுடன், வீரத்துடன், நம்பிக்கையுடன், அவளின்றி, ஆனால் அவளின் நினைவுகளுடன். என் பயணம் தொடரும் ஒளிக்காக, உயிருக்காக, ஒரு வீரனின் காதலுக்காக, ஒரு மனிதனின் புண்ணும் நம்பிக்கையும் கலந்த கவிதைக்காக. "2025 Iruttin Nizhalum 2026 Oliyin Kathirum" 2025-in iruttil nadandhen, Kanavugal sumantha kaaladi satham, Kadantha kaalam kanniraai irundhaalum, Nenjam nambikkaiyaal nirampiyathu. Mann-in vaasal kaakkum en maarbil, Munneriya kundugal, pinneriya ninaivugal, Avalin sirippu en uyirin kavasam, Avalin kural en iravin oli. Aanaal andha iruttil naduvil, En kaaladi satham mattum en thozhan, Porkkalam vendren, Aanaal avalin kaathalai izhandhen. Avalin kadaisi minanjal en maarbil pathindhirukkirathu, "Paadhukaapaga iru" endra vaarthai, Indru en uyirin pulambal. Avalin sirippu kanavugalil mattum vaazhgirathu, Avalin kural thuppaakiyin sathathil moodappadugirathu. Avalin kaigal en kaayangalai thazhuva mudiyavillai, Avalin kangal en kannirai kaana mudiyavillai. Avalin ninaivugal en pinnal odugindrana, En nenjil iruttin nizhal neengavillai. Pala varudangalai avalai doorathil irundhu paarthen, Avalin nadai, avalin sirippu, ninaivil pathindhathu, En uyirin nizhalaagaave irundhathu. Aanaal aval munneri vittaal, Mattroruvin kaiyai pidiththu, En kanavugalai vittu, Avalin vaazhkaiyai kattiyezhuppinaal. 2026-il, Oru sandhippu kidaikkumaa? Oru uraiyaadal vaayppu varumaa? Aval yen nagarnthaal, Yen mattroruvai therndheduththaal, En uyirin kelvikkku Oru mudivu kidaikkumaa? Olikathir en kangalil, Vaazhkai oru porkkalam, Aanaal kaadhal en vettrikkodi. Nermai ennangal en thuppaakiyin thuligal, Nambikkaiyin nizhalil naan oru veeran. Kadantha varudam en udalai sodhiththathu, Puthiya varudam en ullaththai uyarthattum. Avalin kangalil naan veeram kaangiren, Avalin idhayaththil naan amaidhi thedugiren. 2026-ai naan anaikkiren, Kaathaludan, veerathudan, nambikkaiyudan, Avalinri, aanaal avalin ninaivugaludan. En payanam thodarum Olikkaaga, uyirukkaaga, Oru veeranin kaathalukkaaga, Oru manithanin punnnum nambikkaiyum kalanda kavithaikkaaga. December 30, 2025, 11:09:22 pm |
1 |