See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-051
அறியா வயதில் தாயை இழந்து பருவ வயதில் தந்தையை இழந்து தான் யாரென உணரும் வயதில் பாட்டி மற்றும் உடன்பிறவா சகோதரியையும் இழந்து உறவென சொல்லிக்கொள்ள அண்ணன் இருந்தும் சகோதர பாசம் இன்றி தவித்த பேதையாய் என் முன்னே தோன்றிய என் அம்முவின் சோதனைகளும் அதில் அவள் கண்ட வெற்றியை பற்றியும் நம் கவிதையும் காணமும் நிகழ்ச்சி மூலம் உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்... அவளாகியவள்... சொல்லி கொள்ள சொந்தமின்றி சொந்த வீட்டில் அகதியாய் வாழ்ந்தாள் அவள்.. உறக்கம் வேண்டாம் உணவும் வேண்டாம் தனது தந்தையின் கனவுகளை நிறைவேற்றினால் போதும் என்றாள் அவள்.. ஏதேனும் செய்ய வேண்டும்.. எப்படியும் சாதித்தே ஆக வேண்டும்.. சூளுரைத்தாள் அவள்.. பணம் இருந்தும் பரிவு கொள்ள யாரும் இல்லை.. ஊசியாய் குத்துகிறது அன்பின் ஏக்கம்.. துடித்தாள் அவள்.. நித்திரை இன்றி ஒளி இழந்த கண்கள்.. சிவப்பு சாயம் பூச அழுதாள் அவள்.. கனவுகளின் வாயிலில் விசும்பும் தாயின் முகம் கண்டாள்.. நொடிந்தே போனாள்.. கடல் அலையாய் அவளது இழப்பு வந்து தாக்க. அலையிலே நுரைத்தெழுந்த சோகத்தோடு நொறுங்கி போனாள்.. முயன்று தான் பார்த்தாள் மீண்டும் தோற்றாள்.. முயன்று முயன்று வியர்த்து போனாள்.. உடல் சுகமில்லாமல் பல மாதங்களாக தன் நிலை மறந்து மரண படுக்கையில் கிடந்து மரண தேவனை நெருங்கி " நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று சிறு புன்முறுவலுடன் மீண்டும் கனவை நோக்கி பயணித்தாள்.. ( தோல்வி படிகளை ஏறி மிதித்து சாதித்தாள் இன்று இரு பள்ளிகளுக்கு தாலாளராக🌹) அதோ.. அந்த கண்ணுக்கெட்டிய தொலைவில் சிரித்தபடி நிற்கிறாள்..!! வெற்றி களிப்பா அது..?? இருக்கலாம்.. தோல்வியோடு அவள் புரிந்த கோர போர்களின் முடிவாகவும் இருக்கலாம்.. அதுவரை.. எங்கோ இழுத்து செல்கிறது அவளையும் அவள் காலங்களையும் அவளாகிய அவள் கனவுகள்.. February 05, 2025, 07:00:29 am |
1 |
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #22
20 Feb ![]() February 18, 2025, 09:51:16 am |
1 |