See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-047
❣️என் தாயே ❣️ உன்னால் நான் ஜனனம் கொண்டேன் என்னுள் உன் உதிரம் கண்டேன் ஆயிரம் அர்த்தம் உன் பார்வை என்றும் எங்களுக்கே உன் சேவை மனதாலும் உடலாலும் களைத்தாயோ என்றுதான் எங்களிடம் உரைப்பாயோ நினைவு தெரிந்து எங்களுக்குப் பின் நீ எழவில்லையே நினைத்து பார்த்தாலும் எங்களுக்கு முன் நீ உறங்கியது இல்லையே என்ன வரம் தான் வாங்கி வந்தேனோ - என் தாயே எல்லா வரமுமாய் நான் உன் சேயே நீ அயர்ந்து நான் கண்டதில்லை எனக்கு முன் என்றுமே நீ உண்டதில்லை காலமெல்லாம் உன் இதயம் எங்களுக்காகவே துடிக்கும் உன் கைகள் எங்களுக்காகவே உழைக்கும் உனக்காய் என்று நான் வருவேன் உன் பாரம் குறைக்க அதுவரை என் கைகள் உனக்கு குடை பிடிக்க அன்பு ஒருவழி என்று நீ ஏற்க மறுக்க எப்படி உரைப்பேன் என் மனதை உறக்க தாயே நீயே என்னுள் என்றும் வாழும் தெய்வமாய் வளர்வேன் உன் துயரம் தீர்க்க விரைவாய் காலங்கள் உருண்டோடும் நம் வாழ்வும் கரை சேரும் நாமும் வாழ்வோம் உயர்வாக உன் கரம் ஓய்வாக நம் வாழ்வும் ஒளியாக என் கனவும் நினைவாக உன் ஜென்மம் நூராக என்றும் உன் சேயாக இறையருள் இருந்தால் உன் தாயாக ❣️❣️தென்றல்❣️❣️ September 19, 2024, 12:01:19 pm |
1 |
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#072
![]() சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.. புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில் .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.. அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. உதாரணமாக ..... கடந்த வாரம் சங்கீத மேகம் 71இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 72இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும். சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#072 நிகழ்ச்சி : சங்கீத மேகம் ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:00 மணி நிகழ்ச்சி பற்றிய குறிப்பு : உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம். பங்கேற்கும் விதம் : சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் . பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும். வரைமுறைகள்: ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும். ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ---------------------------------------------------------------------- முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் September 29, 2024, 06:31:43 pm |
1 |
கவிதையும் கானமும்-048
உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும். இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும். 2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது. 4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். கவிதையும் கானமும்-048 இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம். மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள். September 30, 2024, 03:32:35 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#072
Hiye Sangeetha Megam team ❤️❣️ Awesome job team👍 Hearty Congrats to new Rj Jasvi 💝 n Nila 💖,the script Queen 👑 n Coffee Boy, the edit Master 👍 This week am gonna request my favourite song Movie - Jai Bhim Song - Thala Kodhum Music - Sean Roldan Singer - Pradeep Kumar Lyrics - Rajumurugan My favourite lines are ❣️❤️❣️தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு❣️❤️ I dedicate this song to all friends in GTC ❣️❤️Misty Sky, Hansom Hunk ,Shree didi , Jodha , Jasvi, Nila ,Wings and Dan _Bilzerian❤️❣️ Thank u Sm Team ❤️❣️ keep rocking... miles to go !!!!❤️❣️ ❣️❤️ Thendral ❤️❣️ September 30, 2024, 04:03:31 pm |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#072
HI SM TEAM First of all my heartiest congratulations to all the new RJs and my sincere thanks for your contribution. Movie : VIRUMANDI Year : 2004 Artists: Kamal Haasan, Shreya Ghoshal Song : Unna Vida Fave Line : நூறு ஜென்மம் நமக்கு போதுமா வேற வரம் ஏதும் கேட்போமா? சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும் ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும் இருக்கணும் கலக்கணும் உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை.... ![]() It is not dedicated to anyone. But I dedicate to all those for whom I am important. I love you so much my dear best friends and GTC families. Miss you all.. September 30, 2024, 05:10:23 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-048
❣️❤️என்னுயிர் அன்பனே!❤️❣️ என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! தனிமை ஒரு வரம் என இருந்தேன் இன்று என்நிலை அறியும் வரை தனிமை எனக்கான அரண் என்னிடம் என்னை உணர்த்தும் வரை தனிமையில் நான் உன்னை நினைக்கவும் இல்லை உணரவும் இல்லை உன்னை தேடவும் இல்லை என பொய் உரைத்தேன் ஆம் உன்னை தேடவும் இல்லை உணரவும் இல்லை... என் இருள் போக்க நீ வரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! அழகான நாட்கள் தந்த நினைவுகள் வெளிச்சமாய் என்னுடன் இருக்க அவ்வொளியில் தொலைத்த உன்னை தேடினேன்... என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வாயோ .... என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே!!! தனிமை சோகமா வரமா ![]() சோகமே வரமாக ஆனதோ !!! என் நிலை மாறும் ... என் வாழ்வில் இனிமை கூடும் நாள் நீ வரும் நாளோ .... அந்த நாளும் என்று வருமோ என் தனிமை சாபம் தீர உன்னுடன் சேரும் காலம் எப்பொழுது... வருவாயோ அன்பனே !!! வழி துணையாய் நீ வேண்டும் நம் வாழ்வும் சீராகும் உன் விழியில் ஒளி கண்டேன் நம் வாழ்வின் வழி உணர்தேன் தனிமை துயர் துடைத்தாய் என் தந்தையுமாய் ஆனாய் நீ நீயே என் ஒளி என் தனிமை தீர்க்கும் வழி என் இருள் போக்க வருவாயோ என்னுடன் தான் சேர்வையோ என் தனிமை தீரும் காலம் எப்பொழுது .... வருவாயோ அன்பனே !!! அழகான அந்நாட்கள் மீண்டும் வாழ கிடைக்குமோ நான் தொலைத்த நீயும் எனை தழுவிய தனிமையும் நீ அறியும் காலம் எப்பொழுது ..... வருவாயோ அன்பனே!!! நீ எனை சேரும் காலம் எப்பொழுது.... வருவாயோ அன்பனே !!! என்றும் தனிமையில் ❣️தென்றல்❣️ October 05, 2024, 12:04:11 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-056
மறக்க முடியாத என் நிமிடங்கள் கல்லாய் மாறிய என் கனவுகளின் பயணம்!!! சிறுவயதில் சிரித்தேன், சிறகு இல்லாமல் பறந்தேன், சின்னதாய் சொந்தங்கள், இருந்தும் சிங்காரமாய் நின்றேன், மழலைக் கனவுகளில் கலந்தேன், மழையில் நனைந்த பூவை போல் மிதந்தேன். படிக்கவே வந்தேன், வேலைக்கு ஓடிய பாதையில், படர்ந்தது கனவுகள், பசுமையில்லா பாதையில் . பணத்தால் பறந்து போன என் பதற்றக் காலம், படிப்புக்கே பிழைப்பாய் மாறிய பயணம். நட்பில் நான் நிழலாய் இருந்தேன், நண்பர்கள் பேசும் வரை சிரித்தேன், நெஞ்சத்தில் அந்த குரல்கள் புதைந்துகொண்டிருந்தது, இன்று அந்தக் குரலும் காற்றில் அழிந்தது. பனித்துளிகளோடு வந்த என் கல்லூரி நாட்கள், பாரம்பரியங்களை விட்டுப் போன சாயல்கள். பார்ட் டைம் வேலை என்ற பெயரில் பரந்த என் தூக்கம், பயிற்சி இல்லாமல் பரிசளிக்கும் சூதாட்ட வாழ்க்கை போல். காலமும் கட்டுப்பாடுகளும் சேர்ந்தபோது, காதலும் கூட என்னை விட்டுப் போனது. வெற்றிக்கு முன்பே வெறுமை வந்தது, வெளிச்சத்தில் நான் தோற்ற வலிகள் இருந்தது. விளக்கின்றி போன என் தோழனின் முகம், விழிகளுக்குள் உருகும் என் அக்காவின் நிழல். இறங்கினேன் கனவுக்கு… ஏறினேன் மேடைக்கு, தூக்கமில்லா இரவுகள், இன்பமில்லா பகல்கள், இனிமை கொண்ட உறவுகள் எனக்குள் இருந்த சுவடுகள். சேர்த்தேன் வெற்றிகள், சிந்தினேன் உறவுகள், சிறகு இல்லா அந்த பறவை போல் . சிரிப்பின்றி சிகரம் சேர்த்த என் காலடி ஓசை, சில நேரம் என்னிடம் கேட்கிறது – “இது உனக்கான தேசமா?” எங்கே என் அம்மாவின் கதை சொல்லும் குரல்? எங்கே என் அப்பாவின் அமைதியான உறைச்சல்? எங்கே என் நண்பனின் சிரிப்பு கொண்ட மழை? எங்கே என் காதலியின் முகம்? தடம் போன நேரங்கள், தடுமாறும் நினைவுகள், தவிர்க்க முடியாத பணி, தவிக்கும் என் உயிர்கள் . நீங்கிய ஒவ்வொரு நிமிடமும் நிழலாய் நடக்கும் என் நிமிட சுவடுகள். உணர்வுகள் மட்டும் அறிந்த பாதைகள்… மீள முடியாத சில தருணங்கள், மறக்க முடியாத சில முகங்கள்… இது அனைத்தும் என்னை பற்றி நான் அறிந்த பக்கம். இபடிக்கு உங்கள் தோழன் Harry Potter Always peace ✌️and love ❤️ July 15, 2025, 02:21:44 am |
1 |
Re: கவிதையும் கானமும்-056
நினைவுகள் ஓய்வதில்லை! நெகிழ்ச்சியின் நட்ச்சரித்தல் என்றும் சலித்ததில்லை, சோகம் என்னும் சொல்லை வாசித்ததில்லை, ஏன் என்ற கேள்வி தோன்றியதுமில்லை கை அளவில் சிவந்த உலகம் ஒன்றை அடித்து மகிழ்ந்தேன், கை அளவு அல்ல என்று பள்ளிக்கூடங்களில் கற்றுணர்ந்தேன் செங்கல் கொண்டு கட்டமைப்பது அல்ல வீடு என்று உணர்ந்தேன், தனிமையில் காணும் வாழ்க்கை கனவாக தகர்த்தினேன் நினைவுகள் ஓய்வதில்லை! துவங்கியது… சோகம் என்ற சொல் மனக்கதவைத் தாழமிடுகிறது, அதனின் உறையாடல் காதுகளின் போர்வையை கூறுபடுத்துகின்றன, கை அளவில் சிவந்த உலகம், அதன் நிறம் மட்டுமே இன்று கையோடு ஒன்றி விட்டது உலகம் முழுதையும் விரித்து வைத்த படிப்பு, வாழ்க்கை என்னும் சவாலை நேரிட கண்டிப்பு இல்லம் என்னும் மாளிகையின் மகிமை உணர்ந்திருந்தேன், இன்று விலகி பதற்கிறேன் நினைவுகள் ஓய்வதில்லை! வரைப்படங்கள் மறைவதில்லை! மறைந்துவிடக்கூடும் என எண்ணினேன், மயில் இறகு ஒன்றை தடுப்பாக பொருத்தினேன், பொருத்தியதும் இறகின் சிறகுகள் முளைக்க வெலகின! நினைவுகளின் தாகம் - நெருப்பின் ஆற்றல் மிகுந்த நீர்பாய்ச்சல் July 15, 2025, 04:50:15 am |
1 |
Re: கவிதையும் கானமும்-056
சிற்பியும் நாங்களே,
July 21, 2025, 10:25:35 am |
1 |
Re: கவிதையும் கானமும்-056
காலை நேரம்,
சாதாரணமாய் சாலையில் செல்கிறேன். ஒவ்வொருவர் முகத்திலும் ஓர் வெறுமை தெரிகிறது. பிடிக்காத வேலைக்கென நேர்த்தியாய் வெளிக்கிட்டுச்செல்லும் இளைஞர்கள், யுவதிகள்; பொருந்தாத திருமணம் செய்துவிட்டு பொறுப்புகளை சுமந்து செல்லும் தம்பதிகள்; மனமுறிவு தாங்காமல், மனமுறிவும் ஏற்பட்டு தனியே பிள்ளையை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் தாய்மாரும் தந்தைமாரும்; இக்குடும்ப வாழ்க்கைக்குள்ளேயே நுழையாமல் தனியனாகிப்போனவர்கள்; அத்தனைபேர் முகத்திலும் ஓர் வெறுமை. யாருக்காக ஓடித்திரிகிறார்கள் இந்நேரத்தில்? முழுதாய் உணர முடிகிறதே, அவர்கள் அவர்களுக்காய் வாழவில்லை என்று. காண்பவர்களிடம் சற்று கதைத்துப்பார்த்தேன். ஒரு ஐந்து வயதுப் பாலகியின் அம்மா, கல்யாணமாகி ஈராண்டுகளில் கணவனை தொலைத்ததாய் சொன்னாள். ஒரு தம்பதி, கல்யாணமாகி நான்காண்டுகள் தாண்டியும், கர்ப்பம் காணா வயிற்றோடும் கண்டவர்கள், காது படப்பேசும் வசைச்சொற்களோடும் சொந்தங்களை சந்திக்கவே தவிர்ப்பதாய் சொன்னாள். இரு சிறுமிகளின் தாய், அவளின் கணவன் இவளை பிரியாமலேயே இன்னொருத்தியோடு திருமணம் செய்து சந்தோசமாய் இருக்க இவள் மன அழுத்தத்தில் இருப்பதாய் சொன்னாள். ஒரு தாய், தந்தையாகும் கனவில் களித்திருந்த தம்பதி சுகவீனமுற்று மகவும் வெளி உலகம் காணாமலே கலைந்து விட்டதாய் சொன்னாள். வெறுமை கனக்கிறது. வெளிச்சொல்லாமல் ஆயிரம் வலிகளை தாங்கி கடக்கிறார்கள் சகமனிதர்கள். இவர்களை கண்ட பின் கடவுள் நம்பிக்கையே மெல்ல அகல்கிறது, ஆனால் அனைவரோடும் கனிவோடு நடப்போரில், மீளக் கடவுளே தெரிகிறது. சிலரில் ஏனோ சாத்தானும் தெரிகிறது. செல்வாக்கு மிக்கோரால் வழக்கு பதியப்பட - எம்மைப்போல் ஒருவன் செல்-வாக்கிலேயே கொல்லப்பட்டான், அதிகார வர்க்கத்தால் - அன்புச் சகோதரன் அஜித்குமார் பிறந்த வீட்டிற்கு பாரமாய் இருக்க கூடாதென்றும் புகுந்த வீட்டின் பாரம் பொறுக்க முடியாதென்றும் வரதட்சணை கொடுமையால் வாழும் வழி தவறிய மாமியார், மணமகனால் தற்-கொல்லப்பட்டாள் - அன்புச் சகோதரி ரிதன்யா ஆவிகளாயினும் வந்து - உங்களை இப்படிச்செய்த இப்பாவிகளை ஆயிரம் மடங்கு கொடூரமாய் வதம் செய்து விடுங்களேன். அரசாங்கம், சட்டம் மீதெல்லாம் நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. இனி எப்போதும் இவ்வாறெல்லாம் நடக்காது; எல்லாம் மாறும் என நினைத்தால் #justicefor மாறிலியாய் இருக்க பின் வரும் பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கண்ணீரோடு என் வலிகளை எழுதுகிறேன். மனிதராய் இருப்போம்; அன்பே எம் அறம். July 22, 2025, 12:48:12 am |
1 |