GTC FORUM
POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Barbie Doll on June 04, 2023, 03:25:39 pm
-
""சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன..
சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன...""
எத்தனை மென்மையான வரிகள்..
விபத்தில் கண்டெடுக்கப்பட்ட கவிதையே..
உன் கரங்கள் ஏங்கி கவிதையும் கண்ணீர் வடிப்பது காதில் விழவில்லையோ..
ஓசையடங்கி போன 275 உயிர்களின் கடைசி பயணமா இது..
அங்கீகாரம் தேடி..
காதலை தேடி..
கடமையை தேடி..
கனவுகள் தேடி..
பயணித்த மனங்களின் ஏக்கம்.. நிறைவேறா கானல் நீராக போனதேனோ...
இதயத்தின் ஒரு பக்கம் ஊசிக்களால் துளைத்தெடுத்தது போன்ற ஆழமான வலியாக உணர்கின்றேன்.. கவிதை வரிகளும் கவிஞனும் மாண்டு கிடக்கும் மண்ணை கண்டு...
-
இலகுவான ஆறுதலை தரும் பயணங்கள்..
சக மனிதர்களையும் சகஜமாக பழக வைக்கும் பயணங்கள்..
எதிர்பார்ப்பின்றி உதவிக் கொள்ளும் பலநூறு மனங்களின் அன்புகள்...
இரசிக்க வைத்த பயணம் வாழ்வை புரட்டி போட்ட நிமிடங்களாக மாறிய கொடூரம் ஏனோ...
விழிகள் பார்க்க மறுக்கும் உறவுகளின் உருக்குலைந்த முகங்கள்..
எங்கும் எதிரொலிக்கும் மரணவோலத்தின் நடுவிலே தாயை தேடி அலையும் சிறுமியின் கால்தடங்கள்...
சில்லறையாக சிதறி போன உடலுடன் உடைந்து போன எத்தனை எத்தனை கனவுகள்...
பாத்து போய்ட்டு வாங்க..
போனதும் ஃபோன் பண்ணுங்க..
நல்லா சாப்பிடுமா..
நேரத்துக்கு தூங்குடா..
சீக்கிரம் வந்துடுங்க..
இது போன்ற எத்தனை பாசங்களை சுமந்து சென்றிருக்கும்..
வார்த்தைகளும் தடுமாறுது வலிகளை விவரிக்கையில்..