GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Vaanmugil on February 12, 2023, 08:21:15 pm

Title: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on February 12, 2023, 08:21:15 pm
எனக்கெனவே நீ......

நீ என் நிஜம் என்பதா? - இல்லை
என்னை தொடரும்
என் நிழல் என்பதா?

நீ என் உயிர் என்பதா? - இல்லை
என்னுள் இருக்கும்
என் சுவாசகாற்று என்பதா?

நீ என் இமை என்பதா? - இல்லை
எனக்குள் நுழைந்து
கலைந்து செல்லும் கனவென்பதா?

நீ என் அகிலம் என்பதா - இல்லை
என்னுள் வசிக்கும்
முகில் என்பதா?

அன்பே. நீ  நான் செய்த தவமல்லவா?
என் வாழ்வில் கிடைத்த வரம்மல்லவா?
அன்பே. என்றும் எனக்கெனவே நீ,
எனக்கு மட்டுமே நீ......
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Ishan on February 12, 2023, 08:54:18 pm
(https://media.tenor.com/fwjsdQI-b3IAAAAM/super-nice.gif)

Vaanmugil nejamave romba azhaga erku enum unga kavithai varanum ethir pakren
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on February 14, 2023, 07:44:21 pm
போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....

Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on February 17, 2023, 07:29:04 pm
புது உறவு......

புதிய  உறவு.....
புதியதாய் இணையத்தில்.....
பொக்கிஷமாய் கிடைத்த உறவு.....
இது சொந்தமும் இல்லை,
இது பந்தமும் இல்லை,
சொந்தமாய் உரிமைகொள்ளவும்,
பந்தமாய் தொடரவும்,
பாவி விதி அவன் விட்டு வைப்பானோ?
வினவி கொண்டு ?
ஆழ்ந்த சிந்தனையில் நான்......
உரிமை நட்பு வரை வேண்டும்,
உறுதியாய் உரக்க கூறிட வேண்டும்,
உலகம் முழுதும் வியப்பில் ரசிக்க வேண்டும்,
விமர்சனம் எழுந்தால் விளக்கம் தாராமலே.....
உறவை பார்த்து மன்னிப்பு கோருதல் வேண்டும்,
இவனே என் சொந்தமாய்,
இவனே என் பந்தமாய்,
இவனே என் நட்பின் உரிமையாய் ,
என் நண்பன் இஷான் என்கிற கண்ணனுக்கு சமர்பணம்........



Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on February 28, 2023, 11:57:05 pm
தொலைதூர காதல்

தொலைதூர காதல்.....
தொலையாத காதல்......

முகம் காணாமல்,
முகவரி தெரியாமல்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

கடல் தாண்டியும்,
பல நாடுகள் தாண்டியும்,
பல ஆயிரம் மைல் தாண்டியும்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

இரு மனம் கதைக்க
வலைதளமும், கைபேசியும்
காதலின் தூதாய்
வந்த காதல்
தொலைதூர காதல்.....

கண்கள் பேசா காதல்
கை பிடித்து கதைக்கா
முடியா காதல்.....
கணம் ஒரு பொழுதும்
பிரியாத காதல்
தொலைதூர காதல்.....

பல ஆண்டுகள் கடந்தும்
சந்திக்க நாள் இல்லா காதல்
ஒரு பொழுதேனும் சந்திப்பில்
விடியாதா ?
என்னும் காத்திருப்பில்,
இரு மனங்களின் தவிப்பில்
வரும் காதல்
தொலைதூர காதல்.....

சந்திப்பில் இல்லா காதல்
சற்றும் மாறாத காதல்
இரு மனங்களின் காதல்
தொலைதூர காதல்.....
என்றும் தொலையாத காதல்....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on February 28, 2023, 11:59:33 pm
கனா.....

விழி இரண்டும் உறக்கத்தில்
மனம் மட்டும் கனவின் மிதக்கத்தில்....
நினைக்க நினைக்க இன்பம்
நினைவில் ஒரு துன்பம்
உன்னோடு நான்,
இன்பமே.....
நிஜம் இல்லை, நிழல் என்றாலும்
துணை இல்லையே,
துன்பமே.......
கனா ஒன்றே வாழ்வின் நிலையானதே......
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Ishan on March 01, 2023, 02:42:02 am
(https://media.tenor.com/qlOzZpiTUOsAAAAM/%EC%8A%88%ED%8D%BC%EC%A3%BC%EB%8B%88%EC%96%B4-%EC%9D%80%ED%98%81.gif)


கவிதைக்கு உயிர் அதில் இருக்கும் வார்த்தைகள் தான்.வாண்முகில் உன் கவிதை அழகு என்று சொல்லுவாத இல்லை உன் சிந்தனை அழகு என்று சொல்லுவாத.... என்னிடம் வார்த்தைகள் இல்லை உன்னை பாராட்ட... ரொம்ப அழகா இருக்கு வாண்முகில் ♥️♥️
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 01, 2023, 11:12:15 pm
முதலும் நீ.....முடிவும் நீ....

எதிர்பாராமல் எனக்குள் வந்த
முதல் காதலும் நீ.....

எனக்குள் என்னவன் ஆன
முதல் உறவும் நீ......

ஏராள கனவுகளையும்,
உணர்வுகளையும் தந்த
முதல் உரிமையும் நீ......

எண்ணிலா கவிதைகளை
வார்த்தைகளால்
வடிவமைத்த கவிதை நீ.....

என்னருகில் நீ இல்லை
என்ற போதிலும்
என் மனதில் என்றும்
முதலும்......முடிவுமாய் நீ........
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 01, 2023, 11:14:30 pm
 தூது போ தென்றலே

தூது போ தென்றலே....❤❤❤
தூது போ தென்றலே...❤❤❤

மன்னவனின் செவிகளும்,
தேகங்களும் சிலிர்க்க
மங்கையின் செய்தியை
தூதாக கொண்டு போ தென்றலே.....

மன்னவனின் வருகையை எண்ணி
மங்கையவள் வழி வாசலில்
விழி வைத்து காத்திருக்கிறாள் என்றும்.....❤❤❤

மன்னவன் மணவாளனாய் ஆகும்
தருணங்களை எண்ணி
மங்கையிவள் மணமகள் கோலத்தில்
சிந்தனை கனவில் காத்திருக்கிறாள் என்றும்.....❤❤❤

மன்னவனின் சுட்டு விரல் பிடித்து
அக்னி சாட்சியாய் வலம் வர,
அம்மி மிதித்து அருந்ததி பார்க்க
மனதுக்குள் கோட்டை எழுப்பி
காத்திருக்கிறாள் என்றும்.....
என்னவனிடம் தூதாக கொண்டு போ தென்றலே.....❤❤❤
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 04, 2023, 04:18:58 pm
தரிசு நிலம்

கழனியிலே கால் பதிச்சு......
காலமெல்லாம் நெல் விதைச்சு.....
அரைஜான் வவுத்துக்கு
அல்லும் பகலும் பாராது
அயராது உழைத்தேனடா....

பட்டினியாய் நான் கிடந்தேன்
பச்சை மண்ணு போல நான் காத்தேன்.....
வர்ணனின் கருணை இல்ல....
வாடிய தோரணையில் என் பிள்ள....

பெண் பிள்ளையாய் நான் வளர்க்க....
பேரம் பேசி எவனோ விலை கேட்க....
பெத்த வவுறு எரியுதடா.....
பாலும் மனம் நோகுதடா....
உசுர கிள்ளி போகுதடா.....

விளைஞ்சதெல்லாம் என் வியர்வை....
விலை பேச வேலையில்ல...
விதைச்சவன் உசுரு கண்ணீருல
விட்டேனைய்யா தரிசு நிலத்துல.........
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 04, 2023, 04:21:43 pm
கண்ணால வாழ்க்கை.....

பட்ட படிப்பு பாதியில
பக்கத்தூரு மாப்பிள்ளை
பாவி மனம் புரியவில்ல
எடுத்து சொல்ல நாதி இல்ல.....

வந்தவரெல்லாம் வாழ்த்து சொல்ல
வானம் சாட்சி கல்யாணம்
பெத்த மனசு குளிருதடா
பெண்ணை எண்ணி மகிழுதடா....

வெளிநாட்டில் வேலையாம்
வெள்ளை சூட்டில் வருவாராம்
கையோடு கண்ணாலமாம்
கைய விட்டு போவாராம்....

அப்பன் ஆத்தா சொல்ல கேட்டு
கழுத்துல வாங்கினேன் மஞ்ச கயிறு
கயிரு ஈரம் காயல
மஞ்சள் மணம் மாறல
மறுநாளே பறந்தாரே
என் கண்ணான கண்ணாளன் .....

யார் எவருன்னு தெரியல்ல
சொந்த பந்தம் மத்தியில்ல
தன்னந்தனியா விட்டு
தவிக்க விட்டு போனாரே.....

செங்கடல் போறவரு
செந்தூரம் வச்சவரு
அழகான மனசுல
ஆழமா பதிஞ்சிட்டாரு.....

தொலைதூர அழைப்பிலே
தொடருதடா என் வாழ்க்கை
கண்ணாளன் வரும் நாளை எண்ணி
கன்னி மனம் வாசலிலே
காத்திருந்தே கழியுதடா
கால்கள் கோலம் போடுதடா.......
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Ishan on March 04, 2023, 05:29:20 pm
வாழ்வும் வரமும்.....

பெண்ணின் வாழ்வு.....

பிரம்மன் படைத்த படைப்பே....

பெண் என்ற உருவமே.....

அற்புதமே,
சொல்லுக்குள் அடங்காத அதிசயமே.....

உதாசீனம் செய்ய, 
இவள் "பெண்" என்ற பெயரே வேதமே.....

உள்ளத்தில் உறுதுணை அதிகமே....

உதிரத்திலும், உற்சாகத்திலும் பெண் என்ற வீரமே.....

இவளின் உழைப்பே பாதி வாழ்வே......

வன்மம் செய்ய சிலரே,
வக்கிரமம் பிடித்த கொடுமைகாரரின்
மத்தியில் இவளின் வாழ்வு போராட்டமே.....

மறு வாழ்வுக்கு அர்த்தமே....
இவளே தேவதையின் அம்சமே...

பெண் என்ற பிறப்பே வரமே,
ஆனாலும்,
வாழ்வின் எல்லை வரை போராட்டமே......

வாழ்க்கை துணை வரமாய் அமைந்தால்
வாழ்வில் அவள் கொண்ட இன்பம்
வேறோன்றிருக்கும் ஈடில்லையே....
..
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 06, 2023, 03:54:10 pm
யார் அவனோ ? யார் அவனோ ?

சற்றே கணம்,
சலனத்தில் மனம்,
மௌனத்தில் தத்தளிக்கிறது,
யார் அவனோ ?

பெயர் என்னவோ?
பேதையின் மனம் களவாடி சென்றானே !!
பேரழிவு ஒன்றை எனக்குள் தந்தானே !!
யார் அவனோ ?

மறுமுறை காண்பேனா?
மனம் என்னும் பேழைக்குள் பூட்டி வாழ்வேனா?
மந்திரமாய் அவன் பெயர் கூற்வேனா?
யார் அவனோ ?

நித்திரையில் வருவானோ?
நீங்காமல் நீட்டிப்பானோ?
நிரந்தரமாய் வாழ்வானோ?
யார் அவனோ?

மின்னலாய் தெரிவானோ?
மீட்டெடுத்து செல்வானோ?
மிகுதியாய் காதல் கொள்வானோ?
யார் அவனோ?
என்னவன் என்பவன் யார் அவனோ?

Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 06, 2023, 03:55:56 pm
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்

என் ஆசை ராசவே,

என் அயித்த மவன் ராசாவே....


என் நினைப்பு உன்மேல

ஏங்குதைய்யா மனம்போல.....

மண் வாசனை போனாலும்

உன் வாசனை போகாதே.....


உசிருகுள்ள நின்னு

உருக்குதைய்யா உன் நினைப்பு,

இந்த ஒத்த உசுரு வாடுதய்யா...

உம்ம முடிஞ்சு வைக்க தேடுதைய்யா....


நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சு வைக்க

நித்தம் நித்தம் தவிக்குதையா....

நேரம் காலம் பார்க்காமல்

உன்னை எண்ணி கண்ணீர் வடிக்குதையா....


ராவெல்லாம் உன் நினைப்பு

ராட்டினாமாய் சுத்துதய்யா....

ராசாவே உன்ன பாக்கத்தான்

என் ராப்பகலும் நீளுதைய்யா......


என் ஆசை ராசவே,

என் அழகு ராசாவே,

என் நினைப்பு ஏங்குதைய்யா

உம்ம நெஞ்சுக்குள்ள முடிஞ்சி வைக்க

தேடி வாடுதைய்யா....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 08, 2023, 04:15:01 pm
மழலையின் மகத்துவம்.......

அழகு மழலையே !!!

பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....

உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....

உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....

உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....

தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!

அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....

எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....

மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே......
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Barbie Doll on March 08, 2023, 06:38:40 pm
மழலையின் மகத்துவம்.......

அழகு மழலையே !!!

பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....

உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....

உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....

உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....

தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!

அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....

எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....

மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே......


பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......

உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?

உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....

உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே
Beautiful lines sisy vaanmugil 💞
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 08, 2023, 09:01:20 pm






Tnq Barbie Sis💞💞
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: RiJiA on March 08, 2023, 09:45:19 pm
போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....



SUPERB  LINES SISS 👏👏
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 10, 2023, 05:23:01 pm
TNQ SIS RIJIA :-*
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 10, 2023, 07:35:46 pm
காத்திருப்பு (ஏக்கத்தின் வெளிப்பாடு)


என்னவனே....
என் உயிரில் கலந்தவனே......

உன்னை நினைத்த போதெல்லாம்
கண்ணீருடன் காத்திருக்கிறேனடா.....
உன் வரவை எண்ணி......

கனவில் உன்னை பார்த்தபோதெல்லாம்
நிஜம் என்ற ஒன்று
என்று என எண்ணி காத்திருக்கிறேனடா.....

தனிமையில்,
நம் காதலை நினைவில் வைத்து
தவிப்பில் காத்திருக்கிறேனடா.....

நீ என்னை சேரும் நாள் வரும் வரை
காத்திருக்கிறேனடா.....

என் உயிர் இம்மண்ணில்
வாழும் வரை காத்திருக்கிறேனடா.....
உனக்காய் காத்திருப்பேனடா....

காத்திருப்பில் சுகம் அல்ல,
அது சுமை என்றும் அறிந்தேனடா....
மரண வலி என்பதையும் உணர்ந்தேனடா....

Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 19, 2023, 12:02:26 am
தயக்கம்....

உன் தினசரி நினைவுகளை
தினமொரு கடிதம் எழுதி
உன் வரவை எதிர் பார்த்தே
என் நாட்கள் நகர்கிறது....

உன்னை காணவே
என் கண்கள் ரெண்டும்
அங்கும் இங்கும் அலை பாய்ந்து
தினமும் உன்னை உளவு பார்க்க செல்லுது....

உன்னை பார்த்த கணம்
என்னவோ !
என் இதய துடிப்பு அதி வேகமாய்
சந்தோஷத்தில்  பட படக்கிறதே.....

உன் அருகில் வர துடிக்குது மனம்
ஆனாலும்,
பதபதைத்து தவிக்குது ஏனோ....
இப்படியே பல வருடம் கடந்து விட்டேன்
என் காதலை சொல்லாமலே
தினம் தயங்கியே தவிப்பில் வாழ்கிறேன் நான்.....






Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 19, 2023, 12:20:51 am
அவனும் நானும்.....

அந்தி சாயும் நேரம்
யாரும் இல்லா சாலையோரம்
அவன் கை இடுக்குகளில் என் கை கோர்த்து
கால்கள் போகும் தூரம் கடந்து செல்கிறோம்....
இது என்னவனோடு செல்லும்
புது பயணமோ, புது உலகமோ...
இயற்கையின் வரவழைப்பும்,
சாலையோர பூக்களும்,
மரங்களும் சாய்ந்து கொண்டு
ஏதோ சலசலப்பு உரையாடுகிறதே....
இவனோடு போகும் நேரம்
இன்னும் நீள ஏக்கம்தான் கூடுகிறதே....
எனக்குள் ஏனோ நாணம்தான் தேங்குகிறதே.....



Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on March 27, 2023, 11:01:25 am
மறந்து போன ஞாபகம் நான்...

நீ மறந்து போன உன் ஞாபகம் நான்....
என்னை மறந்தாயா?
இல்லை,  உன் மனதில் நான் இல்லை என்பதை
மறைத்து வாழ்கிறாயா?
உணர்வில்லாமல் உடல் மட்டும் இங்கே, 
உன் ஞாபகத்தில் உறைந்து கிடக்கிறேன், 
பிரிந்த போதெல்லாம்
உன் ஒற்றை குறுஞ்செய்திகாக
காத்திருப்பேன் என்று அறிந்தும்,
இன்று கவனிப்பில் இல்லாமல்
மனம் கல்லாய் மாறியது ஏனோ?....
என்னோடு தினம் உரையாடிய
நாட்கள் எல்லாம் இன்று வீனோ?
என் தினசரி பொழுதும் கண்ணீரில்,
உன்னோடு கடந்த நாட்களை
எண்ணி எண்ணியே
என் மீதி ஜென்ம வாழ்வை கடக்கிறேன்,
கண்களில் கண்ணீர் தீரும் முன்னே
உன் ஞாபகத்தில் என்னை வைத்து
என்னை சேர்வாய் என்ற எண்ணத்தில்
காத்திருக்கேன் என் காதலே....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on April 03, 2023, 01:23:56 pm
கைதி ஆனேன்....

மனம் களவு போன
கணம் அறியவில்லை,
காத்திருந்து களவாடிய
கள்வன் அவன் என்று கூற முடியவில்லை...

கைதி ஆகினேன்....
கள்வனின் மனதில் அடைப்பட்டு,
அவன் தந்த அன்பினால்,
ஆயுள் கைதி என அகப்பட்டேன்....

அவன் அகத்தினுள்
அன்பின் எல்லை கண்டு
அவனையும் மீள முன் வாராமல்
அவனோடு ஓர் பந்தம் உருவாக்கப்பட்டேன்...

புது வரவாய் புதுப்பித்து கொண்ட உறவில்
புது உலகம் காண முற்பட்டேன்...
புத்தி கொண்டு மறுத்த போது
மத்தியில் அகம் கூறும் ஆணையை மறுக்க முடியவில்லையே....

மானிடன் எவர் ஆகினும்...
மர்மமாய் வந்த காதல்
மதி இழந்தவரையும் மானிடனாக்குமே,
யான் மட்டும் என்ன இவ்வுலகில் விதி விலக்கோ?...

விருப்பத்தின் எல்லையை
முட்டுக்கட்டை போட்டு மூடி வைத்தாலும்
மனதை களவு செய்த கள்வனை
மூடி மறைக்க முடியவில்லையே....

என் மூச்சிலும் கலந்த கள்வனை,
என் மூச்சு முடியும் வரை,
முடிவில் மணம் இல்லை என்றாலும்,
மனதினுள் வாழ்வின் எல்லை வரை
சுமந்தே வாழ்வேனே.....

Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: RiJiA on April 17, 2023, 06:31:07 pm
கைதி ஆனேன்....

மனம் களவு போன
கணம் அறியவில்லை,
காத்திருந்து களவாடிய
கள்வன் அவன் என்று கூற முடியவில்லை...

கைதி ஆகினேன்....
கள்வனின் மனதில் அடைப்பட்டு,
அவன் தந்த அன்பினால்,
ஆயுள் கைதி என அகப்பட்டேன்....

அவன் அகத்தினுள்
அன்பின் எல்லை கண்டு
அவனையும் மீள முன் வாராமல்
அவனோடு ஓர் பந்தம் உருவாக்கப்பட்டேன்...

புது வரவாய் புதுப்பித்து கொண்ட உறவில்
புது உலகம் காண முற்பட்டேன்...
புத்தி கொண்டு மறுத்த போது
மத்தியில் அகம் கூறும் ஆணையை மறுக்க முடியவில்லையே....

மானிடன் எவர் ஆகினும்...
மர்மமாய் வந்த காதல்
மதி இழந்தவரையும் மானிடனாக்குமே,
யான் மட்டும் என்ன இவ்வுலகில் விதி விலக்கோ?...

விருப்பத்தின் எல்லையை
முட்டுக்கட்டை போட்டு மூடி வைத்தாலும்
மனதை களவு செய்த கள்வனை
மூடி மறைக்க முடியவில்லையே....

என் மூச்சிலும் கலந்த கள்வனை,
என் மூச்சு முடியும் வரை,
முடிவில் மணம் இல்லை என்றாலும்,
மனதினுள் வாழ்வின் எல்லை வரை
சுமந்தே வாழ்வேனே.....



NICE ONE SISS 👏👏👏
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on April 19, 2023, 08:01:15 pm
அன்புள்ள அப்பா.....

தாயின் பாதி தந்தையே.....
கர்ப்பத்தில் சுமகிறாள் அவள்.
வாழ்வின் எல்லை வரை,
மார்பிலும், மனதிலும் சுமக்கிறாய் நீயே....

பூமிக்கு வந்தவுடன்
பூவாய் தாங்குகிறாய்....
உன் முதல் பார்வை புன்னகை கண்ணீரில்
என்னை ஏந்துகிறாய் நீயே....

நான் காணும் முதல் உறவு !
என் புது உறவு என் தந்தை  நீயே....
பசி என்று அழுதால் அணைப்பாள் அவள்,
என் பசி அறிந்தும், தன் பசி மறந்து
தாலாட்டில் துயில வைப்பாய் நீயே....

தத்தித் தவழும் வேளையில்,
என்னை  போல் அங்கு  நீயும்
சிறு குழந்தை ஆகிறாய் என் தந்தையே.....

பாகன் போல் நானும் மாற
நீ அந்நேரம் மண்டியிட்டு
மகிழ வைப்பாய் தந்தையே......

என் பிஞ்சு விரல் பிடித்து
உன் பாதம் தொடர
சிறந்த வழிகாட்டியும் நீயே.....

பருவம் வந்தாலும், 
உன் மடியில் துயிலும்
இன்பம் வேறில்லை தந்தையே.....

அன்றும் என்றும்
சிறு குழந்தை போல என்று
எண்ணுகின்ற என் தந்தையே.....

புது உறவு புகுந்த வீடு என்று
அழைப்பில் காத்திருக்க
ஊரார் உறவினர் கூடியிருக்க
கட்டியணைத்து கண்ணீர் மல்க
முத்தமிட்டு துன்பம் காணும் 
என் அன்புள்ள அப்பவே....

இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....

I love you DAD.....


Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Barbie Doll on April 21, 2023, 04:12:35 pm
அன்புள்ள அப்பா.....

தாயின் பாதி தந்தையே.....
கர்ப்பத்தில் சுமகிறாள் அவள்.
வாழ்வின் எல்லை வரை,
மார்பிலும், மனதிலும் சுமக்கிறாய் நீயே....

பூமிக்கு வந்தவுடன்
பூவாய் தாங்குகிறாய்....
உன் முதல் பார்வை புன்னகை கண்ணீரில்
என்னை ஏந்துகிறாய் நீயே....

நான் காணும் முதல் உறவு !
என் புது உறவு என் தந்தை  நீயே....
பசி என்று அழுதால் அணைப்பாள் அவள்,
என் பசி அறிந்தும், தன் பசி மறந்து
தாலாட்டில் துயில வைப்பாய் நீயே....

தத்தித் தவழும் வேளையில்,
என்னை  போல் அங்கு  நீயும்
சிறு குழந்தை ஆகிறாய் என் தந்தையே.....

பாகன் போல் நானும் மாற
நீ அந்நேரம் மண்டியிட்டு
மகிழ வைப்பாய் தந்தையே......

என் பிஞ்சு விரல் பிடித்து
உன் பாதம் தொடர
சிறந்த வழிகாட்டியும் நீயே.....

பருவம் வந்தாலும், 
உன் மடியில் துயிலும்
இன்பம் வேறில்லை தந்தையே.....

அன்றும் என்றும்
சிறு குழந்தை போல என்று
எண்ணுகின்ற என் தந்தையே.....

புது உறவு புகுந்த வீடு என்று
அழைப்பில் காத்திருக்க
ஊரார் உறவினர் கூடியிருக்க
கட்டியணைத்து கண்ணீர் மல்க
முத்தமிட்டு துன்பம் காணும் 
என் அன்புள்ள அப்பவே....

இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....

I love you DAD.....




💗
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: RiJiA on April 21, 2023, 08:04:24 pm
அன்புள்ள அப்பா.....

தாயின் பாதி தந்தையே.....
கர்ப்பத்தில் சுமகிறாள் அவள்.
வாழ்வின் எல்லை வரை,
மார்பிலும், மனதிலும் சுமக்கிறாய் நீயே....

பூமிக்கு வந்தவுடன்
பூவாய் தாங்குகிறாய்....
உன் முதல் பார்வை புன்னகை கண்ணீரில்
என்னை ஏந்துகிறாய் நீயே....

நான் காணும் முதல் உறவு !
என் புது உறவு என் தந்தை  நீயே....
பசி என்று அழுதால் அணைப்பாள் அவள்,
என் பசி அறிந்தும், தன் பசி மறந்து
தாலாட்டில் துயில வைப்பாய் நீயே....

தத்தித் தவழும் வேளையில்,
என்னை  போல் அங்கு  நீயும்
சிறு குழந்தை ஆகிறாய் என் தந்தையே.....

பாகன் போல் நானும் மாற
நீ அந்நேரம் மண்டியிட்டு
மகிழ வைப்பாய் தந்தையே......

என் பிஞ்சு விரல் பிடித்து
உன் பாதம் தொடர
சிறந்த வழிகாட்டியும் நீயே.....

பருவம் வந்தாலும், 
உன் மடியில் துயிலும்
இன்பம் வேறில்லை தந்தையே.....

அன்றும் என்றும்
சிறு குழந்தை போல என்று
எண்ணுகின்ற என் தந்தையே.....

புது உறவு புகுந்த வீடு என்று
அழைப்பில் காத்திருக்க
ஊரார் உறவினர் கூடியிருக்க
கட்டியணைத்து கண்ணீர் மல்க
முத்தமிட்டு துன்பம் காணும் 
என் அன்புள்ள அப்பவே....

இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....

I love you DAD.....




இவ்வுலகில் மிகவும்
அரிதான, அழகான, ஆழமான உறவு
என் தந்தை நீ என்பதும்,
உன் மகள் நான் என்பதுமே.....LYRICS SUPERB 💐
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on May 28, 2023, 11:32:50 pm
அவள் பார்வையில்......

(https://lh3.googleusercontent.com/5PMA2Fd_T7jaxUF6uY033SK9RKqkU63gGMCVfIvZj43kexlRnrflCnH2idERob91mIch8WUIIILN4LF1ExLmZ548KLKczXD17ofGxu8Iog)

உன் விழிக்கொண்டு வலை வீசுகிறாயே
உன் விழி வலையில்
என் மனசு சிக்கித் தவிக்குதுடி மானே....

நீ புருவம் சுழித்து பார்க்கையில்
உன் புருவ சுழிப்பில்
என் கர்வம் யாவும் காணாமல் போகிறதடி மானே...

நேர் வகிடெடுத்த
நெற்றியின் புருவ நடுவில்,
சிறு புள்ளியைப்போல்
வட்ட நிலவாய் உன் பொட்டழகில்
நான் மெய்மறந்து போனேன்டி மானே....

வாக்கியம் கொண்டு
வர்ணிக்க வார்த்தைகள் இல்லையடி மானே....

என்னை உன் பார்வை வசியம் செய்து
என்னை உன் வசமாக்கி கொல்கிறதடி மானே...

ஆனாலும், ஒற்றை வரியில் கூறுகிறேனடி
நீ தேவ தேவனின் அரசவையில் இருக்கும்
அழகு தேவதையடி பெண்ணே....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on May 28, 2023, 11:45:27 pm
அவனோடு அழகிய தருணம்.....

(https://lh3.googleusercontent.com/VxBB0SvBov5pNZfOgWFIBYCl8mMcIf522VmTivastm-Mh0vi00yo9JTDhwEEjBT48JBafxgzFpQ_tzr0r2ieNnyVikb6DC7EbMbywret)

அழகான நேரம் அவனோடு பயணித்த தருணம்...
என்னவனின் கை இடுக்குகளில்
என் கை கோர்த்து...

ஓர் நடை பயணம் நானும் அவனும்,
எத்தனை ஜென்ம போராட்டமோ,
அவன் அருகில் நான் இருக்க,
வரமாய் கிடைத்த நாள்.....

வாழ்த்து கூற வான் தேவர்கள் வந்திருந்தால்
வரம் தந்த கருணை கடலே
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்
வாழ்க்கைதுணை என,
என்னவனை கண்டதில்
என் ஆயுள் வாழ்வை முழுவதையும் சமர்ப்பிக்கிறேன்.....
என்று சரணடைந்திருப்பேன்....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 09, 2023, 08:02:11 pm
ஓர் பெண்ணின் உறுக்கம்

எங்கிருந்தோ வந்தான்,
எண்ணமெல்லாம் நீயே என்றான்,
என் உறவாய் நீ இரு என்றான்,
பேச்செல்லாம் தேன் என்றான்,
தித்திப்பாய் நீ என்றான்,
எப்பவும் நான் உனக்குன்னு சொன்னான்,
என் உசுரே நீதான் என்றான்,
சொன்னதெல்லாம் உண்மையின்னு நான் இருக்க
அப்போ உருகி போன என் உசுரு
இப்போ ஊசலிலே தள்ளாடுது
சொந்தம் எல்லாம் ஒதுக்கி வச்சேன்
சொந்தமா நீ மட்டுமே நான் இருந்தேன்
இப்போ ஒத்தையில விட்டுபுட்டு,
கண்ணீருல மிதக்கவிட்டு,
கண்ணாலம்னு மடல காட்டிபுட்டு,
கடைசியில என் உசுரையும் கொன்னுபுட்டு போனானே......



 
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 18, 2023, 12:02:09 am
நினைக்காத நேரமில்லை.......

நினைக்காத நேரமில்லை,
உன் நினைவுகள்
எனக்குள் என்றும் பாரமில்லை,

பார்க்காத தூரமிருந்தும்
பழகிய நாட்கள் என்னுள்
மிதந்து தளும்புகிறது,

கதைக்காத நேரமெல்லாம்
என் கை பேசியும்
ஓய்வில் ரணமாய் எண்ணுகிறது,

உறங்காத நேரமெல்லாம்
கனவாக உன் வரவை
தினமும் ஏங்குகிறது,

அழுகின்ற நேரமெல்லாம்
உன் தோள் ஒன்றை,
ஆறுதலாய் தேடுகிறது

எப்போதும்
உன் பார்வை என்மீது
என்று நானறிவேன்,

ஆனால் நானோ,
என்றும்,
இந்த கிறுக்களில்
உன்னை தேடுவேன்.....
இப்படிக்கு உன்னை மறவாதவள்......
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 19, 2023, 08:37:09 pm
உன் நினைவில்.....

என் இரு விழியினுள் தென்பட்டு
ஆழ்மனதில் புகுந்து,
சொப்பனத்தில் மிதந்து,
என் உறக்கத்தை களவு கொண்டாய்....

இன்று என் அகிலமாய் நீ மட்டுமே
என்று நினைக்க வைத்தாய்.......

ஆனால் நீ ஒன்றும் அறியாதவனாய்,
யாரோ ஒருவனாய்,
என் முன் வருகிறாய், செல்கிறாய்.....

நான் மட்டும் உன் நினைவுகளில்
உறக்கத்தை மறந்து,
உணவை மறந்து,
என் நினைவை மறந்து.....
மதி இழந்த பேதையாய் நான்...

எனக்குள் ஏன் இந்த இம்சை செய்கிறாய்.....
என்னை இம்சிக்க யார் உன்னை அனுப்பியது.....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 21, 2023, 05:02:55 pm
அன்பில் விளைந்த வரமே.....

ஆதவன் எழுகின்ற வேளையிலே,
அழகான காலை கருக்கலிலே,
அதிகாலை தென்றல் வீசயிலே.....

கூரமேல நின்னுக்கிட்டு
கோழி கூவி எழுப்புதம்மா
குருவிகளும் கூச்சலிலே.....
கொஞ்சி கொஞ்சி குலவுதம்மா....

என் ஆசை மச்சானே
வெட்டருவா மீசை வச்சானே....
மண்வெட்டி கையயோட
மனசாலே சொல்லி சென்றானே.....

மெல்லிசை சலசலப்பில்
மிதமான வயல் வெளியில்
மண் வாசம் பார்க்கத்தான்
வயலுக்கு போனாறே....

மத்தியான வேளையில,
உச்சி பொழுது நேரத்தில,
மச்சான் வயலில
பசியத்தான் தீர்க்க
கண்டாங்கி சேலையில
கஞ்சி கொண்டு போனேனே.....

வரப்பு மேட்டுல நின்னுகிட்டு
மச்சான்னு அழைக்கையிலே
எட்டத்தில மச்சான் மனசு
பறக்குறத கண்டேனே...
கிட்டத்தில வந்ததும்
தன் முந்தானை சொருவளை
முகத்தைத்தான் துடைத்தேனே...

பாதி நீ என்றும்
பாதி நான் என்றும் பகிர்வாரே.....
என் பாசமுள்ள மச்சானே.....
இந்த ஜென்ம போதாது
நீ தந்த வாழ்வுக்கு
உனக்கு வாக்கப்பட
ஏழேழு ஜென்மம் வேண்டும் என
படைத்தவனிடம் வரமாய் கேட்பேனே......
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 23, 2023, 10:54:57 pm
என் தங்கை நிலா.....

என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,

பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,

பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,

புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,

அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,

அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,

இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,

இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும்  தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,

எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......

I love u da NILA CHLMM.....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 23, 2023, 11:31:23 pm
அன்பே !!

அன்பே சுகமா?
உன் சுகத்தில்
உனக்குள் நானும் நலமா?

அன்பே !!
என் நினைவினில்
உன்னை திணிக்கிறேன்,
தித்திப்பில் தனியாய் சிரிக்கிறேன்,
என் சிரிப்பினில்
எனக்குள் நீயும்  என்று உணருகிறேன்,

அன்பே !!
கடந்து போக தவிக்கிறேன்,
கடக்க நினைத்த கணமே,
உன் நினைவுகள்  தகர்த்து கொண்டு
என்னை தடுக்குதே.....

அன்பே !!
ஏதேதோ சொல்ல தவிக்கிறேன்
குறுஞ்செய்தி ஒன்றை தட்டச்சு செய்கிறேன்
நினைவில் நீ சொல்லிய வார்த்தைகள்
வந்து போகவே அதை,
அப்படியே அழித்து விட்டு செல்கிறேன்,

அன்பே !!
இன்று ஏதோ உன் நினைவு,
என்னை உருக்குலைத்து கொண்டே இருந்தது,

அன்றைய நாள் ஞாபகம்,
ஆழமாய் என் நினைவுக்குள்
அழகாய் உணர செய்தது,
அத்தனையும் கனவாய் போனதா?
என்று எண்ணச் செய்தது,
அந்த கணம் I miss you,
என்ற உணரவை உணர செய்தது.....


Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Nilla on June 23, 2023, 11:37:11 pm
Sis ma 🥹love u so much
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 23, 2023, 11:42:01 pm
Sis ma 🥹love u so much



LOVE YOU TOO SISY MA UMMAA
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: RiJiA on June 24, 2023, 12:39:03 pm
என் தங்கை நிலா.....

என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,

பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,

பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,

புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,

அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,

அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,

இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,

இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும்  தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,

எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......

I love u da NILA CHLMM.....


BEAUTIFUL  KAVITHAI  ❣
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 25, 2023, 07:54:19 pm
என் தங்கை நிலா.....

என் செல்ல தேவதை இவள்,
என் சின்ன தேவதை இவள்,

பூமிக்கு கிடைத்த அதிசய நிலவு இவள்,

பூக்களை விட மென்மையான
மனம் கொண்டவள்,

புன்னகையில் மனம் கவரும்
பூஞ்சோலை இவள்,

அதட்டி பேச அறியாதவள்
அன்பால் அரவனைப்பவள்,

அழுகை ஆள வந்தால்,
நம்பிக்கை என்ற வாள் வீசி
வதம் செய்பவள்,

இன்பம் துன்பம் வந்த போதிலும்
எதிர்த்து போராடும்
வீரப் பெண் என்ற பெயரும் கொண்டவள்
சாதிக்க பிறந்தவள்,

இவள் போல அழகு எங்கும் இல்லை,
இவளே என் செல்ல பிள்ளை,
இவள் குழந்தை மனம் போல்
வேறு எதுவும்  தேவை இல்லை....
இவள் அன்புக்கு அடிமையாகாதவர் எவருமில்லை,

எனக்கு தங்கை இல்லை என்ற குறை தீர்த்தவள்,
இவளே என் அன்பு தங்கை நிலா செல்லம்......

I love u da NILA CHLMM.....


BEAUTIFUL  KAVITHAI  ❣





நன்றி Sis
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on June 28, 2023, 10:39:34 pm
மாயக்கண்ணனே....

மன்னனே,
என் மாயக்கண்ணனே,
மந்திரமாய் வருவானோ?
தந்திரமாய் மனதிலே,
காதல் அம்பு ஒன்று எய்துவானோ?
கள்வன் என்று பேர் பெறுவானோ?
மனம் மகிழ செய்வானோ?
மயக்கும் வர்ணிப்பு வார்த்தைகள் கூற்வானோ?
எண்ணமெல்லாம் அவன் நினைவை விட்டு செல்வானோ?
அவன் வருகையை ஏக்கத்தில் வைத்து விட்டு போவானோ?
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on July 02, 2023, 01:03:06 pm
அம்மா !!!

என் அன்பு தாயே,
அகிலம் போற்றும் அன்னையே !

பாரம் என தெரிந்தும்
வரமாய் நினைத்து
பத்து மாதம் சுமந்தாயே !

தன் வலி பாராமல்
தரணியை காண
தங்கமென பெற்று எடுத்தாயே !

அல்லும் பகலும் தூங்காம
தாலாட்டி, சீராட்டி
அரவணைப்பை தந்தாயே !

பட்டினியா கிடந்தாலும்
பச்சை மண்ணு நானுன்னு
தன் பசிய மறந்து
என் பசிய தீர்க்க பாலூட்டி வளர்த்தாயே !

பச்சிளம் குழந்தையில்
எட்டி எட்டி உதைத்தாலும்
என் பிள்ளை நீயின்னு
முத்தத்தாலே கொஞ்சிடுவாயே !

வறுமையில் நீ இருந்தாலும்
பண்டிகையின்னு வந்தா
புது பட்டுடுத்தி அழகு பார்ப்பாயே !

பக்குவமாய் நான் வளர
அம்மா உன் அன்பு வளர்ப்பில்
உன் வாழ்வை எனக்காய் அர்பணித்தாயே !

அம்மா.......உன்னை போல் ஓர் உறவும்
இவ்வுலகில் ஒப்பிட இயலாதே.....
என் அன்பு தாயே.....
ஏழேழு பிறப்பிற்க்கும் நீயே என் தாயே......



Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on July 02, 2023, 09:05:41 pm
தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on July 04, 2023, 11:56:48 pm
கடலும், கடற்கரை அலையும்......

கரை தொடும் அலை கடலே,
கண்கவரும் கருங்கடலே,
பல பெயர் கொண்ட ஆழ்கடலே,
சீற்றெடுக்கும் செங்கடலே,
பரவிக்கிடக்கும் பெருங்கடலே......

நீல வண்ண கடலே,
நீண்ட அகல கடலே,
நீரோடிய அழகே,
நீரோடு உப்பு கொண்ட கடலே.....

வானில் கதிரவன் எழும் வேளையிலே
வியக்க வைக்கும் கடலே,
வான் அழகை தனக்குள்
வர்ணிப்பில் வெளிபடுத்தும் கடலே......

வீசும் காற்றில் எழும் அலையே,
விரைந்தோடிய விரவியே,
ஓயாமல் உருவெடுத்து
கரை தொடும் அலையே,
நுரையென வந்து
பாதத்தில் முத்தமிடும் அலையே........

இருளென ஆகினும்
அலையோசை அகலாத கடலே,
கட்டுமர அசைவில்
கட்டழகாய் காட்டும் கடலே,

ஆழ்கடலில் எண்ணற்ற உயிரினம்
கொட்டிகிடக்கும்  முத்துக்கடலே.....
மீனவனின் வீடே....
மிரள வைக்கும் சுனாமியே....

அழகின் உச்சம் உன் அழகே,
ஆக்ரோஷம் உன் குறையே,
அன்பின் எல்லை உன் கரையே.....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on July 05, 2023, 12:54:58 pm
கோபம்....

அன்பே ! கோபம் வேண்டாமே,
நான் உடைந்து போவேனே.....

அன்பே ! வார்த்தையால் வதைக்காதே,
சிந்தனையிலும், மனதிலும்
காய தழும்பை தீட்டாதே...

அன்பே ! நான் உன்னவள் என்பதை
மறக்காதே,
மறந்தும் ஒரு நாளும் என்னை இழக்காதே,
என் வாழ்வை என்றும் சிதைக்காதே.....

அன்பே ! உன் கோபப் பார்வையால்
என்னை கொல்லாதே......
அதனால்,
என் மனம் தாங்காதே....

அன்பே ! நீயே என் அகிலமே
உன் மனமே எனக்கு அடைக்கலமே
உன்னிலிருந்து என்னை
நீ விரட்ட எண்ணாதே....

அன்பே ! உன் நினைவால்
தினம் உருகுகிறேன்...
உன் நினைவால்
உயிரையையும் இழக்குகிறேன்....

அன்பே ! நீ பிரிய வேண்டாமே,
உன் பிரிவில்
என் வாழ்வில் ரணமும் வேண்டாமே.....

குறிப்பு : இது வெறும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on July 05, 2023, 09:30:42 pm
என்னவளே  நீயே என் காதலடி......


என்னவளே !!

என்னை உன் பார்வையில்
கொஞ்சம்  கடத்தி விட்டு போ......

நெஞ்சமெல்லாம் உன் நினைவை
தந்து விட்டு போ.....

ஒவ்வொரு கணமும்
உன் காதலால் நிறைத்து விட்டு போ.....

என் கனவினிலும்
தினம் உன் வருகையை
வைத்து விட்டு போ......

உன் பாசம் என்னும் கடிவாளத்தில்
என்னை கட்டிவிட்டு போ.....

உன் காதல் என்றும்
எனக்கு மட்டுமே என்று
கட்டளையிட்டு போ......

என்னவளே என்றும்
நான் உன்னவனடி என்று
உனக்கு உரைத்து
உளற செய்துவிட்டு போ....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on July 14, 2023, 07:34:19 pm
என் தோழனே !!

பள்ளி பருவம் முடித்தோம்
கல்லூரி காலம் கடந்தோம்,
காலங்கள் கடக்க கடக்க
நாம் நட்பில் வாழ்ந்த காலமும், நேரமும்
Slam book-ல் மட்டுமே ரசிக்கிறோம்.

பார்த்த ஞாபகங்களும்,
பழகிய நாட்களும்,
விளையாடிய நேரங்களும்,
சண்டையிட்ட தருணங்களும்,
எமது எண்ணங்களில்
மட்டுமே வந்து போகிறது,

மீண்டும் கதைக்க காலமும் இல்லை,
மீண்டும் சந்திக்க நேரமும் இல்லை,
எங்கெங்கோ நம் வாழ்க்கை பயணம்....
முடிவில்லா கதையாய் பயணிக்கிறோம்....

காலங்கள் மாற மாற
நமது கைப்பேசியில் பத்து எண்களில்
நலம் விசாரிப்பில் முடிகிறது நம் நட்பு,

ஆனாலும் தோழனே,
உந்தன் நட்பில் கடந்து போன வாழ்க்கை
நினைவின் பொக்கிஷமாய்.....சந்தோஷமாய்.....
என் நினைவில் இன்றும் நான் உந்தன் தோழியாக....
நம் நட்பு வாழ்கிறது என் தோழனே.....
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: RiJiA on July 19, 2023, 11:28:31 am
தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


GOOD ONE SISS👏👏👏💐💐
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on July 22, 2023, 03:26:47 pm
தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


GOOD ONE SISS👏👏👏💐💐

Thank you sis
Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on August 07, 2023, 02:20:30 pm
இது என்னோட 100வது பதிவு....


எனக்குள் உன் காதல்....

மனதிலே பூகம்பமா?
மங்கையின் மனம் பேரழிவிலா?

என்னவனே!!
என்னில் நுழைந்தாயே...
எனக்குள் கலந்தாயே....
எனது உயிரிலும்,
எனது உதிரத்திலும்,
எனக்குள் நீ ஊடுருவிகிறாயே....

உன் நினைவு எமக்கு சுகமா? இல்லை சுமையா?
இம்சை என்பதா? இல்லை இன்பம் என்பதா?
ரணமா ? இல்லை ரசிக்கின்றேனா?
புரியவில்லையே,
புதிராய் இந்த ஈர்ப்பு
என்னை கொன்று வதைக்கிறதே....

என்னவனே உன் நினைவுகள்,
எனக்குள் ஈட்டி போல் எய்துகிறதே.....
உன் பார்வை ஈர்ப்பிலே காதலை
உளி கொண்டு செதுக்குகிறதே...

என்னவனே,
எனக்குள் நுழைந்த காதல்
உனக்குள்ளும் வந்ததா?
உன் காதலை மொழிவாயா?
இல்லை மௌனத்திலே கடப்பாயா?
இல்லை என்னை காத்திருப்பிலும், ஏக்கத்திலும்,
என்னை தவிப்பில் விடுவாயா?
சொல் மனமே
உன் சொல் வரும் வரை
என் உயிர் ரணமே....

Title: Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
Post by: Vaanmugil on September 26, 2023, 09:18:35 pm
அழகான தருணம்.....

ஏதோ ! அறியா மென் சத்தம்
மிதமான குளிர் காற்று.......
எங்கிருந்தோ மெதுவாய்
மெல்லிசை கானம்.....
முகிலினங்கள்
அங்கும் இங்கும்
அலைந்தோடி ஆர்பரித்து செல்ல
சட்டென்று ஆலி சூழ்ந்து
புவியை தொட்டு முத்தமிடுகையில்
அவ்வழகை கண்ட நொடி
மெய் அனைத்தும் சிலிர்கின்றது
ஆலியில் சதிர் ஒன்றை எழுப்ப
மனம் உற்சாகத்தில் மிதக்கின்றது.....