💜💜💜💜💜💜💜💜💜💜💜💜Ammuu
அக்கா |
அக்கா
பூக்கள் காற்றில் அசையும் போது பேசும் இனிமையான மொழி போல பேசுபவள் என் அக்கா..!!
மழைக்கால இசை போல என் மனதோடு பதிந்தவள் என் அக்கா..!!
என் தந்தையை போன்றவள், என்னை காயப்படுத்தாதவள் என் அக்கா..!
பகலில் சூரியன், இரவில் நிலா என என் வாழ்வின் வெளிச்சமானவள் என் அக்கா..!!
யார் பிடிக்கும் என்றால் நீ தான் என்று சொல்லும் தடுமாற்றம் இல்லா அன்பு கொண்டவளே..!
யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாத அன்பு கொண்டவளே..!
முள்ளில்லா ரோஜாவே உன் அழகிய உலகில் நானும் ஒரு அத்தியாயம் ஆனேனே ..!
வந்து வந்து போகும் கடலலை போன்றது அல்ல நம் அன்பு என்பேனே..!
கடல் நீர் வற்றி போனாலும் குறையாதது நம் அன்பு என்பேனே..!
மறுவார்த்தை பேசாமல் உங்கள் அன்பிற்கு கட்டுப்படுபவள் நானே..!!
வண்ணத்துப்பூச்சியாக நீ இருந்தால் உன் சிறகாக நான் இருக்க விரும்புகிறேன்...!
அள்ள முடியா அன்பை மட்டும் கொடுக்க விரும்புகிறேன் என் அன்பு அக்கா..!
இது முடிவில்லா கவிதை.. என் உடன் பிறவா சகோதரிக்கான கவிதை..!!
படித்து விட்டேன் என் இரு விழி வழியில்
மயங்கி போனேன் உன் கவிதை வரியில் BY~RiJiA
Sema ammuu ❤❤❤❤
அப்பா அம்மா
அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!
ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!
இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..
ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!
உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!
ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!
எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!
ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!
ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!
ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!
ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!
ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!
அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!
என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !
என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !
வாழ்க்கை பாடம்❤❤❤❤❤
தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!
ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!
தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!
எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!
Sema ammuu ❤❤❤❤
அப்பா அம்மா
அன்பான வாழ்க்கை நமக்கு அளிக்கும் அழகான முதல் பரிசு நம் அப்பா அம்மா...!
ஆயுள் மட்டும் அன்பு, மென்மை, பொறுமை, வலிமை மிக்கவர் என் அம்மா..!
இலக்கு,குறிக்கோள், கடமை,வழிகாட்டியாக இருப்பவர் என் அப்பா..
ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் அம்மா நீ இத்தனை தன்னலமற்று இருப்பதேனோ..!
உங்கள் மொத்த வாழ்வும் பெற்ற பிள்ளைகளுக்கே என நீங்கள் இருப்பதேனோ..!
ஊற்று நீர் போல திகட்டாமல் அன்பு தரும் நீங்கள் என்ன அதிசய பொக்கிஷமோ..!
எட்டா கனியாக இருக்கும் வெற்றியை எட்டிப் பறிக்க ஊன்று கோலாக இருப்பவர்களே..!
ஏற்ற இறக்கங்கள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைப்பவர்களே..!
ஐயம் நீக்கி எங்கும் நேர்மையை பின்பற்ற வேண்டும் என்று அறத்தை போதிப்பவர்களே..!
ஒருவரை உளமாற அன்பு செய் என கற்றுக் கொடுப்பவர்களே..!
ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் சுறுசுறுப்பிற்கு சொந்தக் காரர்களே...!
ஔவியம் அற்று ஊக்குவிக்கும் குணம் அனைவரிடத்தும் இருத்தல் நலம் என்பவர்களே...!
அஃதிலும் எந்த பின்புலமின்றி மேன்மையான மக்களை உருவாக்க துடிப்பவர்களே...!
என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !
என்ன தவம் செய்தேனோ என் பெற்றோராய் நீங்கள் கிடைக்க.. !
வாழ்க்கை பாடம்❤❤❤❤❤
தோல்விகள் துரத்த, துரத்த காற்றில் அறுபட்ட நூல் போல் ஆனேன், மனம் கண்ணீர் விட்டு வெம்பி அழுதது..!
ஆறுதல் அற்ற அனாதையாக ஆகி போனேனோ, என்றெண்ணும் போது உன் மடி எனக்கு ஆறுதலாக வந்து என் முகம் பார்த்து புன்னகை பூத்தது.. அந்த புன்னகை எனக்கான வாழ்க்கை பாடம். என் அப்பா எனக்களித்த வாழ்க்கை பாடம்...!
தாய் முகம் காண துடிக்கும் குழந்தை போல.. என் தந்தை முகம் காண்கின்றேன்..!
நெற்றியில் முத்தமிட்டு , கை கோர்கின்றாய்..!
என் முதலும் நீ, முடிவும் நீயே அப்பா..!
எத்தனை தூரங்கள் கடந்தாலும் என் நம்பிக்கையாக உடன் வர நீ வேண்டும்..!
வாழ்க்கை பாடம் |
|
Dear Barbie Doll.
Am really proud of you.I still remember your first poem.Now you seems to be an expert.Keep rocking.Write more and more...
பெண்ணழகு
வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெல்லாம் வியக்கும்..!
காண்போரை கவர்ந்திழுக்கும் காந்தமாக மயக்கும்..!
சிற்பமே உயிர் வந்ததோ?
அவளை காதல் கொள்ள?
இசையே இசைந்து கொண்டதோ? அவளை வர்ணிக்க?
காங்கையின்(heat) வேட்கையிலே கண்டெடுத்த சாயலே..!
அம்பு தொடுத்து களவாட மன்மதன் வருவான்..!
கவனமாக இருப்பாயா கலையான அழகியலே..!
தேனாக இனிக்கிறதே நின் பேச்சு.!
மனம் கவர்ந்த மணவாளன் யாரவனோ?
மந்திரமாய் சிவக்க வைத்தானா கன்னத்தினை..!
போலியில்லா போதையேற்றும் சிரிப்பழகி..!
சிக்கிடாத சில் வண்டும் சிக்குமடி.!
ஐயமின்றி அளவளாவி காதல் பேசடி..!
இசை பிரியா பாடலாக ஏக்கம் என்னிலே.!
சுற்றம் நீக்கி சுதந்திரமாய் எனை சூழ்ந்து கொள்ளடி.!
நிலா நிலா ஓடி வா
நிலா சோறூட்டா குழந்தை இங்கில்லை.!
சமாதான மலரவள்!
சத்தமில்லா வெண்மையவள்!
எட்டா உயரத்திலே உறங்க வைப்பவள்!
வானுயர்ந்த உச்சியில் வாழ்கின்ற வசந்தமவள்!
நிலாப்பாட்டு எழுதா உவமை இங்கில்லை?
பசிக்கிறதா என்றுனை கேட்பவரிங்கில்லை?
பசியாற்ற நீ கலங்கி நிற்பதுவுமில்லை?
நிலா பாட்டி நீ சுகமா?
ஒற்றை மனுசிக்கு உச்சாணியில் இடமா?
காலை நேரத்தில் காணாமல் போகிறாய்?
காலார நானும் நடந்து வரவா?
வட்டமான சித்திரமே!
உள்ளம் கவரும் வெள்ளை அழகியே!
மின்சாரமில்லா ஒற்றை விளக்கே!
ஜடா முடியில் பிறையாகி பெருமை பெற்றவளே!
வான்மகளே உன்னில் வசிக்க இடம் தருவாயா?
பெண்ணழகு |
பெண் பெருமை
பெண்ணை வர்ணிக்கா இலக்கியமா?
ஆளுமைமிக்க அவந்தியோ..!
அன்னம் போன்ற நடையழகில்..! மெச்சுகின்ற உடையினிலே..!
கடமையில் கண்ணாய் இருப்பதாலா?
சலனமில்லா முற்ப்போக்காள்..!
பனிக்கட்டியாய் உருகினாள் சோகங்களில்..!
புகழ்ச்சியை புறந்தள்ளி ஓடுகின்றாள்..!
அனுபவங்களில் ஆயிரம் கதை கூறி குழந்தை தனை வளர்த்திடுவாள்..!
இறைப் பண்பில் எல்லை மீறி எல்லோரையும் தாங்கிடுவாள்..!
அமைதியில் ஆராவாரமற்று முடிவெடுப்பாள்..!
தாய்மை என்பதே தவ வாழ்க்கை..!
தரணியில் அதனால் பெரும்பேறு ..!
பெண்களில்லா அவனியிலே..! ஆண்கள் தேவை இருப்பதில்லை..!
ஆணும் காதலிக்கா கயல் மங்கையா?
சிலாகித்து வியந்தேன் பெண் பெருமை கண்டே..!
தோற்றுப் போன உறவுகள்
சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத் தன்மை எதிர்பார்க்கும் உறவுகள்!
உன் கருத்து, என் கருத்து என்றில்லாமல், ஒருவர் கருத்தியலுடன் ஒன்றிப் போகும் உறவுகள்!
வேண்டுமென்றே வலிய சிரிக்கும், வழக்கமான பாராட்டுக்கள், கிடைக்கப் பெறாத உறவுகள்!
அளப்பரிய வாழ்வின் ருசி மறந்து, அற்புதங்கள் நடக்குமா என எதிர்நோக்கும் உறவுகள் !
பொறுமையற்று, விருப்பங்கள் தேடப்படாமல், இன்னொருவரை எதிர்ப்பார்க்கும் உறவுகள்!
மனதின் குறுகலான எண்ணங்களுக்கு வழிவிட்டு, முடிவில் முட்டிக் கொள்ளும் உறவுகள்!
ஆழ்கடலின் எங்கோ ஓரிடத்தில், தேங்கிக் கிடக்கும் பூஞ்சைப் போன்று, அன்பை தேங்க விடும் உறவுகள்!
இவைதான் வாழ்வின் தடை செய்யப்பட்ட பக்கங்களை கொண்ட தோற்றுப் போன உறவுகள்!
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை |
|
RoJa அக்கா பிறந்தநாள் கவிதைawee ammuu en life la kedacha periya gift ne lob u ammuu 💙💙💙
சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!
மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!
பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!
ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!
உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!
இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!
அன்புடன்
அம்மூ
ty my sis ❤
RoJa அக்கா பிறந்தநாள் கவிதை
சிதறிய வார்த்தைகளின், அத்தனை வரிகளிலும் நீயே என் முதல் வரி!
வஞ்சியவள், கொஞ்சி கொஞ்சி பேசும் அன்பின் அகராதி!
மழலை மொழியில் பேசி, மனதை கவரும் குறும்புக்காரி!
மழை நேர குடையாக, மனமிறங்கி உடன் நிற்பவள்!
பாசமாக பேசி பேசி, பரவசப் படுத்துபவள்!
பூவிதழினுள் புதைந்திருக்கும் மகரந்தம் போல், என் மனதினுள்ளே புகுந்து கொண்ட, பாசப் பிணைப்பு!
ஆயிரம் ஆயிரம் கவலைகள் ஆழ்மனதில் இருந்தாலும், அன்போடு சிரிக்க வைக்கும் அவள் பாங்கு!
உற்ற சகோதரியின், உள்ளூர ஊறிப் போன வார்த்தை, 'அம்மூ' எனும் அழகிய வார்த்தை!
நித்தம் பேசும் நினைவுகள் எத்தனை,
நீ இல்லா நாட்கள் எனக்கோ, பெரும் வேதனை!
இப்பிறவியில் என்றும், எவ் விநாடியிலும், நான் மறவா ஓர் உறவு, என் 'அக்கா' எனும் அசைக்க முடியா அன்பின் உறவு.!
அன்புடன்
அம்மூ
SISS DOLL❣ Rombe Alagane Kavithai..Unge Rendu Perukum Ulle Urevu Neenge Kavithai Vaasikkum Pothu Na Nallaave Unarthen..Kavithaiyil Aalam Iruntathu Athai Vaasithe Unggal Kuralil Oru Aluttham Irunthathu"Inthe Aalamum Alutthamum Unggal Iruvarin Urevil Endrendrum Thodare Vendum EN VAALTUKKAL❣(https://i.postimg.cc/BLSQpD1x/20230325-183120.jpg) (https://postimg.cc/BLSQpD1x)
முகமூடி மனிதன்
கருமேகம் போல் அடர்ந்த தலை முடியும் மழை தருமோ?
சிவந்த கண்களும் சீற்றங் கொண்ட பார்வையும் சொல்ல விழைவது என்னவோ?
முகம் மறைப்பதா?
முகமூடி அணிவதா?
மங்கை மனதால் மையல் கொள்ள மயங்க வைக்கும் மான்விழியான்.
மறைமுகமாய் ஒலிக்கும் புன்னகையின் சத்தத்தினை ஒழித்து வைக்கும் ஓர வஞ்சனையான்.
முகத் திரையை விலக்கி முழுமதியை முகத்தில் காட்ட மறுப்பானா?
சுவாரசியமான பக்கத்தில் பத்திரமாய் ஒளிந்து கொண்ட காரணமற்ற வரிகளாவானா?
முழுவதுமாக காட்டி விடும் உணர்ச்சிகளை மூடி மறைக்க போட்டுக் கொண்ட முகமூடியோ?
களங்கமற்ற மனதினிலே காலம் கட்டமைத்த கழற்றி எறிய மறுத்த முகமூடியோ?
நல்ல பெயரை எடுக்க நாளும் அணியும் முகமூடி.
உண்மையற்ற மனிதனிடத்தில் உற்சாகமாய் ஏறிக் கொள்ளும் முகமூடி.
நகலற்று நீயாக நீ இருந்தால் சுதந்திரமற்று சுற்றலில் விடும் முகமூடி.
மூகமூடியற்று வாழ்ந்து விடும் மனிதனிங்கு எவனுமில்லை.
நிஜத்தின் சாயம் அங்கங்கே ஒட்டிக் கொள்ள கழற்ற நினைக்கும் முகத்திரையும் விலக மறுத்து தானே மூடிக் கொள்ளும் காலமிது.