GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Sivarudran on November 18, 2022, 03:14:15 pm

Title: Sivarudran Kavithaigal
Post by: Sivarudran on November 18, 2022, 03:14:15 pm

மானே தேனே பொன்மானே !
மரகதமே மயிலிறகே!
அன்னமே எந்தன் பொன் வண்ணமே !
மன்னவன் மாமன் உனக்கு
தாலாட்டு பாடுறேனே
தலை சாய்த்து தூங்கிடுவாயோ!
கட்டி வைரமே கனியமுதே
தேன் கிண்ணமே !
தென்னவன் நான் உனக்கு தெம்மாங்கு பாடுறேனே
தேம்பாதே நீ உறங்கு !
தந்தையாய் நான் இருப்பேன்
நீ தவிக்கயிலே தாயாவும் நான் இருப்பேன்.
காலமெலாம் காவக்காரன் உன் கூட இருப்பேன்
கண் முடி நீ உறங்கிடு .
Title: தனிமையே அவளாய்
Post by: Sivarudran on November 18, 2022, 03:20:16 pm
தனிமையின் காலடி சத்தமாய் அவளது கொலுசின் ஓசை.

தனிமையின் மொழியாய் ஆளற்ற அறையில் அவளின் உளறல்கள்.

தனிமையின் பிம்பமாய் திரும்பும் திசை எங்கும் அவளின் முகம்.

மொத்தத்தில் தனிமையே அவளாய்.
அது தருவதே சுகமாய்.
என் நாட்கள் கழிவதோ தனியாய்.
Title: Re: தனிமையே அவளாய்
Post by: RiJiA on November 20, 2022, 08:08:48 pm
Alagane kavithai....🙂
Title: Re: தாய்மாமன் தாலாட்டு
Post by: RiJiA on November 20, 2022, 08:10:32 pm
ல்,ள் madrum ழ் ilame yelutiya thaimaaman taladu..very nice👌
Title: Re: Sivarudran Kavithaigal
Post by: Sivarudran on December 28, 2022, 11:24:52 pm
என்ன கதை ?

என் கதை சொல்ல
எனக்கும் இங்கு ஆசை உண்டு.
என்னவென்று கேட்க
எனக்கு இங்கு யாரும் உண்டோ ?
என்னுள் வாழ்ந்த கதை சில உண்டு
நான் வீழ்ந்த கதை பல உண்டு .
எனக்கென எழுதி வைத்த கதை ஏதும் உண்டோ?
அதை எடுத்து சொல்ல எனக்கு ஆள் உண்டோ ?
என் எண்ணமெல்லாம்
வண்ணமாக இனியொரு கதை
எனக்கென உண்டோ ?

Title: Re: Sivarudran Kavithaigal
Post by: Sanjana on January 02, 2023, 04:33:31 am
VERY NICE MY DEAR FRIEND.....
Title: Re: Sivarudran Kavithaigal
Post by: Sivarudran on December 05, 2023, 10:47:53 am
காதல்


கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்க்கும் !
 கடிகார நேரத்தை நொடிக்கு நொடி
கண்கள் உத்துப் பார்க்கும் ! 
கை விரல் ஐந்தும் அடிக்கடி தலைமுடியைக் கோதிக் கொள்ளும்!
காரியமே இல்லாமல் காதலி வீட்டு முன்பு
கர்ணம் போட்டு வித்தை காட்டும்!
அவள் வெளியே
எட்டிப் பார்க்கும் நேரத்தில்
குட்டி இதயம் வெளியே எகிரி குதிக்கும் !
கண்கள் உருண்டு திரளும் !
கைகள் நடுங்கி பரபரக்கும் !
காரியமே இல்லாமல் கால்கள் அங்கும் இங்கும் நடை போடும் !
அவள் அழைப்பு ஏதுமின்றி 
அலைபேசி துவண்டு கிடக்கும் !
பாழாய் போன காதலால் படாத பாடுபடுதே 
பாதி ஆண்களின் வாழ்க்கை ‌.