GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: AzhaGi on June 15, 2026, 08:52:02 pm

Title: AzhaGi yin Kavithaigal
Post by: AzhaGi on June 15, 2026, 08:52:02 pm
(https://i.postimg.cc/rw6yHkNs/flamingtext-com-2246316292.png) (https://postimages.org/)
Title: Re: AzhaGi yin Kavithaigal
Post by: AzhaGi on June 15, 2026, 08:53:35 pm
அப்பா...

கைகளைப் பிடித்து நடக்கும் இந்த மூன்று நிழல்கள்,
ஒரு குடும்பத்தின் முழு உலகம்!
மகளுக்கு முதல் ஹீரோ அப்பா,
மகனுக்கு முதல் வழிகாட்டி அப்பா,
இருவரின் கனவுகளுக்கும் உயிர் கொடுப்பவர் அப்பா!
சூரியன் மறைந்தாலும் ஒளி குறையலாம்,
ஆனால் பிள்ளைகளுக்காக எரியும்
அப்பாவின் அன்பு ஒருபோதும் குறையாது.

ஒரு கையில் மகள்…மற்றொரு கையில் மகன்…
நடுவில் நடப்பது மனிதன் அல்ல,
தன் குடும்பத்தின் சொர்க்கத்தை சுமக்கும் ஒரு அப்பா! ❤️
“உலகம் முழுவதும் தேடினாலும்,
அப்பாவின் அன்புக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை!”
ஒரு கையில் என் தேவதை மகள்,
மற்றொரு கையில் என் வீரன் மகன்,
நடுவில் நான் நடப்பதல்ல…
என் இதயத்தின் இரண்டு துடிப்புகளை
அழைத்துச் செல்கிறேன்!

மகளின் சிரிப்பில் நிலவொளி இருக்கிறது,
மகனின் பார்வையில் எதிர்காலம் இருக்கிறது,
இருவரின் அன்பில் என் வாழ்நாளின்
முழு சந்தோஷமும் இருக்கிறது!
நான் சேர்த்து வைத்த சொத்து எதுவுமில்லை,
ஆனால் என்னை “அப்பா” என்று அழைக்கும்
இரண்டு உயிர்கள் இருக்கின்றன…
அதுவே இந்த உலகின் மிகப்பெரிய செல்வம்!

காலம் மாறலாம்…வயது கூடலாம்…
ஆனால் என் கைகளைப் பிடித்த இந்த இரண்டு கரங்கள்,
என் உயிர் இருக்கும் வரை
என் இதயத்தில் குழந்தைகளாகவே இருப்பார்கள்!
மகளின் அன்பும்…மகனின் பாசமும்…
கிடைத்தவன் தான் இந்த உலகின் உண்மையான ராஜா!” 👑

அந்தியிச் சிவப்பின் அமுத ஒளியில்
அப்பா கைபிடித்து நடக்கும்
என் அன்புச் செல்வங்களே!
கைகள் கோர்த்து, கவலை மறந்து,காலடி எடுத்து வைத்து,
எதிர்காலம் நோக்கிச் செல்லும்,என் இனிய இரு கண்கள்!
தந்தை என்னும் பெயர் தாங்கி
என் தோள் கொடுத்த பலம்,
உங்கள் உலகை அமைக்கும் ஒரு புதிய வழி.

சிறு கைகள் என் கையைப் பற்ற
நான் பெற்ற இன்பம்,
எந்த செல்வம் கொடுத்தாலும்
ஈடாகாது என் குழந்தைகளுக்கு.
இந்த மாலைப் பொழுதில்
நாம் நடக்கும் இந்தப் பயணம்,
நம் உறவின் இனிமையை
என்றென்றும் பாடும் கவிதை.....

அப்பாவைப் பற்றி கவிதை எழுதத் தெரிந்த எனக்கு,
அப்பாவின் அரவணைப்பு மட்டும் எழுத முடியவில்லை…

விவரம் தெரிந்த நாள் முதல்,
“அப்பா” என்ற வார்த்தையை விட,
“அம்மா” என்ற உயிரைத்தான் பார்த்து வளர்ந்தேன்.
அம்மாவே எனக்கு அப்பாவாகி,
அப்பாவே செய்ய வேண்டிய கடமைகளையும்
தன் கண்ணீரை மறைத்து செய்தார்.

கிடைக்காத ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்,
அதை குறையென்று நினைக்கவில்லை…
ஏனெனில், அம்மாவின் அன்பு
இரண்டு இதயங்களின் பாசமாக இருந்தது.

ஆனால் ஒரு ஆசை மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது…
எனக்குக் கிடைக்காத அன்பும்,
எனக்குக் கிடைக்காத அரவணைப்பும்,
என் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும்.
அவர்கள் வாழ்க்கையில்
“அப்பா இல்லை” என்ற வெற்றிடம் இருக்கக் கூடாது…
அவர்கள் சிரிப்பில் நான் சிரிக்க வேண்டும்,
அவர்கள் கனவில் நான் துணையாக இருக்க வேண்டும்,
நான் காணாத சொர்க்கத்தை
அவர்களின் வாழ்வில் தர வேண்டும்.

ஏனெனில்…
ஒரு குழந்தையின் முதல் ஹீரோ அப்பா,
முதல் உலகம் அம்மா.
என் குழந்தைகள் மட்டும்,
“எங்கள் அப்பா… எங்கள் பெருமை!”
என்று நெஞ்சு நிறைந்து சொல்லும் வாழ்க்கையை
அவர்களுக்கு பரிசாகத் தர வேண்டும்.

எனக்குக் கிடைக்காத வாழ்க்கையை நினைத்து அழுவதில்லை…
என் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாழ்க்கையை நினைத்தே இன்று நான் வாழ்கிறேன்… ❤️