GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Shaswath on June 25, 2025, 04:33:18 am

Title: Shasuvin Kavithaigal
Post by: Shaswath on June 25, 2025, 04:33:18 am
-
Title: Re: Shasuvin Kavithaigal
Post by: Shaswath on June 25, 2025, 05:08:46 am
பரிதாபம்

கடிகாரத்தில் முப்பது நிமிட அளவில்…
இக்கரைக்கு அக்கறை இருண்ட அணை

அளவை கடந்ததும்…
இக்கறைக்கு இக்கறை தான் துணை

அக்கறை வேதனையின் ஒளி சட்டென்று தோன்றியதோ?
இல்லையெனில் இக்கறையின் சோகம் தான் குறுகிய நேரம் மறைந்திறந்ததோ?

இல்லை!

அக்கறையின் நரகத்தின் ஒளி துகள்கள் பரவலாக சுற்றி கொண்டு தான் இருக்கிறது,
இக்கறையின் விழிகளில் விழத்தான் எங்கிருந்தோ முளைக்கும் இந்த முப்பது நிமிடங்களின் தேவை

முப்பது நிமிடம் முழுதும் அரங்கேறும் ஊழல்!

தீமை என்று தெரிந்தும் அரங்கேறுவது பணம்,
அறியாமலே அரங்கேறுவது பரிதாபம்

😊








Title: Re: Shasuvin Kavithaigal
Post by: Shaswath on June 26, 2025, 04:15:12 am
இரவினில் ஆட்டம்


நிலவின் ஒளி மிஞ்சும்,
அறைகளில் அடைந்து வாழும் விலக்குகளை!

உயிரும் இரங்கி கெஞ்சும்,
இவைகளின் விடுதலை எண்ணி!

சுய ஓய்வை பற்றின கவலை இன்றி,
இவைகளின் உறக்கம் சார்ந்து கவலையா?

விரிந்த காதுகள்,
இசையருவியை அனுமதிக்கும் கதவுகள்

வீடெங்கும் உழாவும் சாந்தம்,
தனக்கென்று விளையாடும் பாடலின் ஆனந்தம்

பகல் முழுதும் மற்றவர் சார்ந்த ஆட்டம்!

குறுகிய நேரம் ஒன்று,
எனக்குரியதாய் அமைந்திருக்க,
உறக்கம் எனும் பாரத்தை நான் மறுக்க இயலாதா நிலவே?

🌙 🎶