உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-050
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
(https://i.postimg.cc/MZ13JtjT/20241202-190155.jpg) (https://postimages.org/)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
எதிரில் நின்று துடிப்பதல்லவா காதல்!
ஆறாக் காயங்களின்
ஆழம் பார்க்க மேலும் இறங்குகிறன அம்புகள்
மீளாத்துயரிலும்
தாழா மனமென அம்புகளை ஏற்கிறது என் காதல்
எவ்வளவு தான் தாங்கி விடும் என் மனம்
எள்ளளவும் கோபமில்லை உன்னிடம்
அன்பை மட்டுமே பிரித்தறிய சக்தி இருந்திருந்தால்
அம்புகள் துளைக்க நான் இடம் கொடுக்காதிருந்தால்
இதயம் இன்னும் இலேசாக இருந்திருக்கும்.
வெளியறியா வடுக்களும்
வழியறியா பாதைகளுமாய்
சிக்கி நிற்கும் என் பயணம்
என்றோ ஒரு மாற்றம் வரும் என
ஏங்கி நின்றிருக்காது.
காதலின் மேல் கொள்ளை ஆசை எனக்கு
எனக்கென ஒரு இதயம்
எதிரில் நின்று துடிப்பதல்லவா காதல்
எதிரில் நின்று நீ நாண் ஏற்ற
ஏதிலியாய் நான் இருக்க
எங்கோ என் காதல் எனை நின்று காக்கிறது.
நீ போய் விடு,
என் காதல் அதற்கேற்றவளை சீக்கிரம்
தேடிக்கொள்ளும்.