உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-047
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
(https://i.postimg.cc/MHzTYmrW/20240909-155632.jpg) (https://postimages.org/)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
என் அம்மாவுக்கு என் முதல் கவிதை
அம்மா
என் பேரில் நீ கவிதையை வைத்தாலும்
எனக்கு என்னவோ கவிதையே வரவில்லையே அம்மா
என்னைக் கண்டு அது மிக தூரத்தில் அல்லவா நிற்கிறது
இருந்தும் உனக்காக ஒரு சிறு கவிதை - இது கவிதை என்றால்
.
அம்மா
நீ என்னிடம் அடிக்கடி சொல்வது
நீ ஆணாகப் பிறக்க வேண்டியவள்...
பெண்ணாக பிறந்து விட்டாய் என்று
நான் பெண்ணாகப் பிறந்தாலும்
உனக்கு நான் பெண் உருவத்தில் இருக்கும் மகன் தான் அம்மா
உண்மையான அன்புக்காக மட்டுமே
உன் தலை குனிய வேண்டும் என்று சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தவள் நீ
காலில் கூட விழு
தவறு ஒன்றும் இல்லை
ஆனால் அது உண்மையான அன்பாய் இருக்க வேண்டும் என்று சொல்வாய்
இன்று வரை நான் அதைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் அம்மா
உன்னைப் பாதுகாத்துக் கொள்வேன் என் அன்பில்
ஆண் மகன் உருவத்தில் இருக்கும் கவசமாய் நான் உன் அருகில்
அந்தக் கதிரவன் கூட உன்னைத் தொடாமல் பார்த்துக் கொள்வேன் நான்
நீ வீட்டுப் பணிகளைச் செய்யும்போது
நானும் உதவி பண்ணவா அம்மா
? என்று கேட்டால்
வேண்டாம் ஐயா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு
மௌனமாய் சிரிப்பாய்
அந்தச் சிரிப்பின் அர்த்தம் எனக்குப் புரிந்தது அம்மா
சிறுவன் இவன்
இவனால் என்ன முடியும் என்று நீ உன் மனதில் நினைக்கிறது எனக்குக் கேட்கிறது
என்னைச் சிறுவன் என்று எண்ணாதே அம்மா
நான் சிறுவன் ஆனாலும்
.
உன் மீது நான் கொண்ட அன்பு மிகப் பெரியது..
அது அளவில்லாதது
இந்தப் பிரபஞ்சத்தை விட மிகச் சிறந்தது.
உன் சுமையைக் குறைக்க என்னால் இயன்ற அனைத்தும் செய்வேன் அம்மா..
உன்னைப் பாதுகாக்க எனக்கு உடல் வலிமை இல்லாமல் இருக்கலாம்... ஆனால் எனது அன்பினால் உன்னை எந்தத் தீங்கிலிருந்தும் காப்பாற்றுவதற்கு நிச்சயமாக நான் வல்லவனாய் திகழ்வேன்.
இந்தக் கவிதையின் தொடக்கத்தில் கவிதைக்கும் எனக்கும் கடலளவு இடைவெளி இருந்ததாய் உணர்ந்தேன்
ஆனால் முடிக்கும் இத்தருணத்தில் கொஞ்சம் என்னருகில் வந்ததாய் உணர்கிறேன்
இது தான் அம்மாவின் மகிமை
அவள் இருந்தாலும் இறந்தாலும்
அவள் நினைப்பு கூட நம்மைச் சாதிக்க வைக்கும்
நீ அங்கிருந்து என் கவிதையைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில்
இதோ என் முதல் கவிதை
நான் உனக்காகச் சமர்ப்பிக்கிறேன் அம்மா
என்றும் உன் ஆண் மகள் நான்
I love you Maa
.
Mothers hold their childrens hands for a short while, but their hearts forever. Unknown
Thanks a lot to RiJiA dear for this amazing picture. This image somehow has inspired me (with my limited knowledge in Tamil language) to come up with this piece of writing. I would like to thank my colleague as well for helping me with the Tamil font for my Tanglish.