1
கவிதையும் கானமும் / Re: கவிதையும் கானமும்-042
« on: May 12, 2024, 08:49:55 pm »
பௌர்ணமி வெளிச்சம் பகல் போல் வீச
பாவி மனம் உன்னை கண்டதும் பரவசமாகுதடி !
அழகுக்கே அழகு சேர்க்கும் அழகின் மகள் நீ எனத் தெரிந்தும்
உன்னை எட்டிப் பார்க்கும் வான் நிலவோ
உனதழகில் வெட்கி தலை குனிகிறதடி !
உன் விரல் பிடித்து நடந்திடும் வரம் எனக்கு கிடைத்திடவே
என் பிறப்பு மறுஜென்மம் எடுக்கிறதடி !
பொங்கி வரும் கடல் நுரைகள்
பூரிப்பு கொள்ளுதடி பொன்மகள் உந்தன் அழகு கண்டு !
ஆர்ப்பரிக்கும் அலை கடலும்
கலைமகள் உந்தன் கண்கள் கண்டு ஆனந்தம் கொள்ளுதடி !
வீசும் காற்றுக்கும் வேர்த்துக்கொட்டுதடி
வெண்மகள் உந்தன் மூச்சுக்காற்றால்.
உன் வாழைப்பூ விரல் தன்னை வாடாமல் இருக பற்றியே
வழியெல்லாம் நான் செல்லவே
வானம் பட்டொளி வீசியதடி !
காற்றோடு கதை பேசும்
கன்னி உந்தன் வாய் கீதம் வண்ணக் கடல் அலையாய் வானளவு உயருதடி !
எண்ணமெல்லாம் வண்ணமாக
எந்தன் நெஞ்சமெல்லாம்
நிலவின் மகள் உந்தன் தஞ்சமாக
நித்தமும் ஆவி துடிக்குதடி !
வளவிப்போட்ட வான் கிளியே
உன்னை வளைச்சு போட்ட ஆண்கிளி நான் தானே !
வாழ்நாள் எல்லாம் வசந்தம் பாட
வாடி கிளியே பறந்து போவோம்
வெண்ணிலவை நோக்கியே !
பாவி மனம் உன்னை கண்டதும் பரவசமாகுதடி !
அழகுக்கே அழகு சேர்க்கும் அழகின் மகள் நீ எனத் தெரிந்தும்
உன்னை எட்டிப் பார்க்கும் வான் நிலவோ
உனதழகில் வெட்கி தலை குனிகிறதடி !
உன் விரல் பிடித்து நடந்திடும் வரம் எனக்கு கிடைத்திடவே
என் பிறப்பு மறுஜென்மம் எடுக்கிறதடி !
பொங்கி வரும் கடல் நுரைகள்
பூரிப்பு கொள்ளுதடி பொன்மகள் உந்தன் அழகு கண்டு !
ஆர்ப்பரிக்கும் அலை கடலும்
கலைமகள் உந்தன் கண்கள் கண்டு ஆனந்தம் கொள்ளுதடி !
வீசும் காற்றுக்கும் வேர்த்துக்கொட்டுதடி
வெண்மகள் உந்தன் மூச்சுக்காற்றால்.
உன் வாழைப்பூ விரல் தன்னை வாடாமல் இருக பற்றியே
வழியெல்லாம் நான் செல்லவே
வானம் பட்டொளி வீசியதடி !
காற்றோடு கதை பேசும்
கன்னி உந்தன் வாய் கீதம் வண்ணக் கடல் அலையாய் வானளவு உயருதடி !
எண்ணமெல்லாம் வண்ணமாக
எந்தன் நெஞ்சமெல்லாம்
நிலவின் மகள் உந்தன் தஞ்சமாக
நித்தமும் ஆவி துடிக்குதடி !
வளவிப்போட்ட வான் கிளியே
உன்னை வளைச்சு போட்ட ஆண்கிளி நான் தானே !
வாழ்நாள் எல்லாம் வசந்தம் பாட
வாடி கிளியே பறந்து போவோம்
வெண்ணிலவை நோக்கியே !