Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-037 💕💕💕காதலின் சின்னம் கைகளில் 💕💕💕

வானின் தூரம்போல, காற்று படர்ந்திருப்பதைப் போல
கடலின் ஆழம்போல, சூரியனின் வெப்பத்தை போல
காதலும் உள்ளது இந்த உலகத்தில்.

நீ கையால் காதலின் சின்னம் காட்டுகிறாய்
ஆனால் உனது முகத்தை மறைத்துக் கொண்டு

சிந்தேன் ஏன் என்று என்னையே கேட்டுக்கொண்ட தருணம்

உனது வெட்க்கம் கண்டு சூரியன் உறைந்து போய்விடும்  என்றா?
இல்லை காற்று தன் பாதையை மாற்றி உன்னையே சுற்றும் என்றா?

நீ வெட்க்கப்பட்டு ஒளிந்தது  பட்டுப்போன மரம், என்ன ஒரு மாயம்
துளிர் விடுகிறது பெண்ணே!!!

என்ன ஒரு அதிசயம் இயற்கையின் இன்னிசை நிகழ்ச்சி நீ வெட்க்கபட்டதால் அரங்கேரியது
காற்று இன்னிசை அமைக்க மரங்கள் அனைத்தும் ஆனந்தத்தோடு ஆடுகின்றதே  பெண்ணே !!!

உன்னைப் பூவோடு ஒப்பிடமாட்டேன் ஒருநாள் பூ உதிர்ந்துவிடும்
உன்னை நிலவென்று சொல்லமாட்டேன் ஒரு நாள் முழுவதும் இருக்கமாட்டாய்
உன்னை எனது நிழல் என்று சொல்லமாட்டேன் ஒளி இல்லையென்றால் பிரிந்துவிடுவாய்
பெண்ணே நீ எனது இதயத்தின் ஓசை நான்  இரு(ற)க்கும் வரை என்னோடு இருப்பாய் !!!

உனது இதயத்தைக் கைகளில் காட்டி எனது இதயத்தை உன்னோடு  சேர்த்தாயே பெண்ணே
கத்தியின்றி இரத்தமின்றி பரிமாறப்பட்ட இதயம் காதல் எனும் அறுவைசிகிசையில் !!!

மீண்டும் பிறந்தோம் காதளர் என்னும் குழந்தையாக உனக்கு நான் எனக்கு நீ என்று !!!

ஒளிந்து கொண்டது போதும் பெண்ணே இயற்கை ரசித்த உனது வெட்கத்தை
நானும் ருசிக்க ஆசைப்படுகிறேன்!!!

இன்றுமட்டும் அல்ல வாழ்நாள்முழுவதும் ❤❤❤



என்றும் காதலுடன்

💙💙💙நீல வானம் 💙💙💙


January 23, 2024, 11:02:52 am
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#053 பூவே வாய்
பேசும்போது காற்றே
ஓடாதே நில்லு

From 12B

Most lovable Lines

உன் சுவாச
பாதையில் நான் சுற்றி
திருகுவேன்

நேசத்தினால்
என்னை கொன்றிவிடு
உன் நெஞ்சுக்குள்ளே
என்னை புதைத்துவிடு


Thnaks

Neelavaanam

January 29, 2024, 12:42:26 pm
1
Re: கவிதையும் கானமும்-038

மௌனம் எனும் மொழியால்

மழையின் அரவணைப்பில் ஆனால்  இருவரும் தூரத்தில் !!

நனைந்தது தேகம் மட்டும் அல்ல
 மனமும், தான் சோகத்தில்!!!

மழையின் சத்தத்தில் மௌனம் எனும் மொழியில் இருவர் !!

 வலி தோன்றுவது கண்ணில் நீர்த்துளியாக ..
அடை  மழையோ அதை போக்கிவிட்டது !!!

உன்னிடம் பேசத்தான் நினைக்கிறேன் பெண்ணே
எனது கைகள்கூட தடுக்கிறது  காத்திரு என்று !!!

நம்மை சுற்றி  தண்ணிர்  சூழ்ந்திருந்தாலும்
உன்னை அரவணைக்கவே நான்  காத்திருக்கிறேன் !!!


என்னவளை. எனது சோகத்தினால் காயப்படுத்த வேண்டாம் என்று
என்னை நனைத்து  மனதின்   சோகத்தை  மாற்றினாயே !!

பெண்ணே நீ என்னை விட்டு விலகி விலகி சென்றாலும் அந்த
குடைபோல உன்னோடு நான் இருப்பேன் !!

எங்கும் உள்ள காற்றைப்போல  உனது மூச்சுக்காற்றில் வசிப்பேன்
நீ என்னை வெளியேற்றினாலும் சுவாசிக்கும்போது உனக்குள் புகுவேன்  !!

எத்தனை   காயங்கள்  எற்படுத்தினாலும்
நான் உன்மீது வைத்திருக்கும் அன்பு அனைத்தையும் உடைத்தெறியும் பெண்ணே !!

உன்மேல் வைத்த அன்புக்கு
 அந்த வானம் சாட்சி
அந்த காற்றும்  சாட்சி
 நான் போகும் வரை அந்த நிலம் கூட சாட்சி !!

எனது மூளை கூட  சொல்கிறது உன்மீது சினத்தை காட்ட ..
கர்வம் தலைக்கேராதவரை காதலும் கை பிள்ளைதான் !

கண்மணியே நீயே எனது முதல் பிள்ளை உன்னை
காலமெல்லாம் காப்பேனடி பெண்ணே கண்ணுக்குள் கருவிழியாக !!

பெண்ணே வீண் பிடிவாதம் எதற்கு! மழையில் கலைந்தது
உனது முகச்சாயம் மட்டும் அல்ல

உனது மனதில் நீ என்மீது வைத்திருந்த காதலும்தான்

என்றும் காதலுடன்


💜💜💜நீலவானம் 💜💜💜


February 07, 2024, 09:45:50 am
1
Re: கவிதையும் கானமும்-039 அம்பை  தாங்கும் அன்னை


தனது உயிரை கொண்டு பிள்ளைகளை காப்பது அன்னையின் அன்புமட்டுமே .....

இந்த உலகத்தில் வாழ்வதற்கு இன்றியமையாதது பணம்

பாசத்தை பணம்கொடுத்து வாங்கும் உலகில் நாம் வாழ்த்து கொண்டிருக்கிறோம்

சுயநலத்தின் பிடியில் பூமிக்கு அடியில் செல்வோம் என்று தெரிந்தும்  மற்றவரிடம் நடந்து கொள்கிறோம்...

விலைமதிக்க முடியாத கரந்த பாலினை  போல சற்றும் சுயநலம் கிடையாதா அன்பு
தாயின் அன்பு மட்டுமே இந்த உலகத்தில் ....

இதை அன்னையோடு இருந்து உணராதவர் பலர்  அன்னையை இழந்து உணர்ந்தவர்கள் சிலர்...

சராசரி அன்னையின் ஆதங்கம் பிள்ளையின் எதிர்கால வாழ்கை அவனது அல்லது அவளது
பெயருக்கு பின் படிப்பின் அடையாளம் ...

எத்தனை இன்னல்கள் இந்த உலகில் ஒருவனுக்கு  கல்வி கற்க

எத்துணை இன்னல்கள் இருந்தாலும் அத்தனை அம்புகளையும் தனக்குள் வாங்கி
பிள்ளைகளை கரைசேர்ப்பது அன்னை மட்டுமே ....

பணத்தினால் வரும் அம்பு தனது சொந்தத்தினால் வரும் அம்பு  ஆசிரியரினால் வரும் அம்பு கணவர்முலமாகவரும் அம்பு  அனைத்தையும் தங்கினால் குழந்தைக்காக....

படிப்பின் அருமை தெரியாதவர் பலர் , வேலைசெய்யும் இடத்தில் கூட
படித்தவரின் நிலை ஒருபடி உயர்ந்ததும் , படிக்காதவர் வேலை  தெரிந்தும் கீழே உள்ளார் தொழிலாளியாக...

அன்னையின் கனவு மகனோ மகளோ நல்ல நிலைக்கு வரவென்றும் என்று
அதற்காக எதையும் தங்குவாள்  அன்னை

கர்ப்பத்தின் வழியை தாங்கியவளுக்கு, ஒரு பிறவியில் இரண்டாம் ஜென்மம் எடுப்பவளுக்கு ,
இந்த வலியெல்லாம் தூசிக்கு சமம் ...

மனிதனை படைத்த கடவுள் ஓய்வு பெறவே அன்னையர்களை படைத்துவிடான் போல
கடவுளின் வேளை அன்னையிடம்... படைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு பிள்ளை பிறப்பது ...

படத்தை குழந்தையினை பேணி காத்து .. பராமரித்து ..பாலூட்டி ...சீராட்டி ...தனது எல்லையற்ற அன்பினை
கொடுத்து ... படிக்க வைத்து நேரம் தவறாமல் சமைத்து புடித்த உணவு கொடுத்து... திருமணம் ஆகும் வரை
அணைத்து அம்புககளையும் சுமப்பவள் அன்னை...

எத்தனை பாசம் காட்டினாலும் வளந்த பிறகு காதல் எனும் இன்பத்தால் அன்னையை விட்டு சென்று
அவளது முதுகில் குத்துகிறார் ...

வேலைகிடைத்ததும் ஆணவம்  கொண்டு அன்னையை மதிக்காமல் அவளது முதுகில் குத்துகிறார்

திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் சென்று பாலூட்டிய அன்னையை முதுகில் குத்துகிறார்

வயதான தாயை பார்க்கமுடியாமல் அவருக்கு உபசரிக்க நேரம் தராமுடியாமல்  முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு  அன்னையின் இதயத்தில் குத்துகிறார்



நாம் எத்துனை கஷ்டம் வேதனை இன்னல்கள் அன்னைக்கு கொடுத்தாலும்
நம்மை பார்க்கும் பொது கேட்கும் ஒரே வார்த்தை சாப்டியா  பா !!! என்றுதான்


தன்னை பெற்ற அன்னைக்கே இந்த நிலையென்றால் மற்றவருக்கு கேள்விக்குறிதான் ??


வாழும் தெய்வத்தை காப்போம் மற்றும் மனிதநேயத்தை வளர்ப்போம் நமக்காக அம்பை சுமத்தவளை
வாழ்நாளெல்லாம் சுமப்போம் அதுவும் ஒரு சுகம் தன தோழா




என்றும் உணர்ச்சிமிக்க (சென்சிடிவ் )

நீலவானம்
[/size]


March 08, 2024, 03:23:07 pm
3
Re: கவிதையும் கானமும்-040 விலைமதிமற்ற அன்பு

நீளவானத்தை விட நீண்டந்து  அன்பு எங்கள் அன்பு ...

பறந்துகிடக்கும் கடலின் ஆழத்தைவிட ஆழமானது எங்கள் அன்பு ....

அரைக்கால் சட்டை போடு ஊர் சுற்றுவோம் காற்றைப்போல ...

சட்டைகளில் ஆயிரம் கரை இருக்கலாம் ஆனால் எங்கள் உள்ளங்கள்
தூய்மைக்கு மறுபெயர் …

நாம் உயிர்வாழும் காற்றில் கூட  கலப்படம் உள்ளது, 
கலப்படம் அற்றது எங்கள்  அன்பு

சந்தோஷத்தில் நாங்கள் துள்ளிக்குதித்து ஆடும்போது
பூக்கள் கூட பூத்துக்குலுங்கும் இன்பத்தில்

எங்கள் துக்கங்களை எங்களோடு  கண்ணீராக பகிர்ந்துகொள்ளும் மழைகள் ...

இயற்கையின் வரப்பிரசாதங்கள் அனைத்தும் எங்கள் அன்பிற்கு  கிடைத்த பரிசு ...


ஆம் , ஒரு அண்ணனின் அன்பை பற்றிய கவிதைதான் இது ....

வாடாத மலரைப்போல் என்னை வாடாமல் பார்ப்பவன்

என்னக்கு ஒன்று என்றல் இதயத்தில் இருந்து துடிப்பவன்

தனக்காக எதையும் எண்ணாதவன்

தன்  கரங்களில் என்னை சுமப்பவன்

கடவுள்கூட தம்பியாக இருக்க ஆசைப்படுவார்  இவனிடம் ….

எத்தனை அன்பு காட்டுகிறாய் என்னிடம் …

அண்ணா என்று கூப்பிடுவதைவிட அம்மா என்று கூப்பிடுவது பிடித்தது எனக்கு

இப்படிபோல ஒரு அம்மா ஆனா அண்ணா உண்ட உனக்கு ??




நீலவானம்

April 01, 2024, 02:00:31 pm
1