GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Empty Dappa on April 07, 2023, 08:45:50 am

Title: ரணம்
Post by: Empty Dappa on April 07, 2023, 08:45:50 am
மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.
Title: Re: ரணம்
Post by: Sanjana on April 12, 2023, 12:17:41 pm
RANAM...sema ....
Title: Re: ரணம்
Post by: Barbie Doll on June 13, 2023, 01:39:07 pm
மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.

அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும். Lines wow ☘️👏