46
Own Poems - சொந்த கவிதைகள் / நேசித்தே இரு...
« on: July 20, 2022, 11:55:54 pm »
மறுதலித்து திரும்பையிலும்,
கன்னங்களில் வழிந்திடும்
அனுமதியின்றி
விழிகள் விழுங்கிட்ட
உன் கண்ணீர் துளிகள்
மனக்கதுப்புகளில் வழிந்திருந்தை
அறிந்திருக்கிறேன்
காயங்களுக்கே பழக்கப்பட்ட
மனமொன்றை
நிலுவையில் நீ வைத்திருப்பதை
பரஸ்பரம் அறிந்தே இருக்கிறோம்
வேண்டல்களை புறந்தள்ளி
நீ கடக்குகையிலும்
உனைத் தாங்கிட காத்திருக்கும்
இரு கரங்கள் குறித்து ஒருபோதும்
உனக்கு மாற்றுக் கருத்தேதும் இருப்பதில்லை
நேசம் தவிர்த்த உன் வார்த்தைகளில்
நிஜங்களிருக்கும் சாத்தியக்கூறுகள்
அறவே இருந்ததில்லை என்பதையும்
உறுதிசெய்யப்பட்ட சோதனையொன்றின் முடிவாய்
என்னில் எங்கோ பதித்து வைத்திருக்கிறது
இந்நேசம்
கண்கள் உலர அழுது தீர்த்தும்
குருதி உறைய காயம் செய்தும்
தீர்ந்திடாத ஈரமாகவே
சுரந்து கசிகிறது காதல்
ததும்ப ததும்ப நேசித்துருகும்
உன்னை நான் கடிந்தோதுவது
எப்படிச் சாத்தியம்
நேசத்தின் போதாமைகளில்
குறைசொல்லும் அவகாசங்கள் தான் நமக்கேது
என்னை நேசித்திருப்பதை
தவிர்த்து உனக்கும் வழியேதுமில்லை
கண்மணி
இப்பிறவி தீர்ந்தும் என்னை நேசித்தே இரு...
கன்னங்களில் வழிந்திடும்
அனுமதியின்றி
விழிகள் விழுங்கிட்ட
உன் கண்ணீர் துளிகள்
மனக்கதுப்புகளில் வழிந்திருந்தை
அறிந்திருக்கிறேன்
காயங்களுக்கே பழக்கப்பட்ட
மனமொன்றை
நிலுவையில் நீ வைத்திருப்பதை
பரஸ்பரம் அறிந்தே இருக்கிறோம்
வேண்டல்களை புறந்தள்ளி
நீ கடக்குகையிலும்
உனைத் தாங்கிட காத்திருக்கும்
இரு கரங்கள் குறித்து ஒருபோதும்
உனக்கு மாற்றுக் கருத்தேதும் இருப்பதில்லை
நேசம் தவிர்த்த உன் வார்த்தைகளில்
நிஜங்களிருக்கும் சாத்தியக்கூறுகள்
அறவே இருந்ததில்லை என்பதையும்
உறுதிசெய்யப்பட்ட சோதனையொன்றின் முடிவாய்
என்னில் எங்கோ பதித்து வைத்திருக்கிறது
இந்நேசம்
கண்கள் உலர அழுது தீர்த்தும்
குருதி உறைய காயம் செய்தும்
தீர்ந்திடாத ஈரமாகவே
சுரந்து கசிகிறது காதல்
ததும்ப ததும்ப நேசித்துருகும்
உன்னை நான் கடிந்தோதுவது
எப்படிச் சாத்தியம்
நேசத்தின் போதாமைகளில்
குறைசொல்லும் அவகாசங்கள் தான் நமக்கேது
என்னை நேசித்திருப்பதை
தவிர்த்து உனக்கும் வழியேதுமில்லை
கண்மணி
இப்பிறவி தீர்ந்தும் என்னை நேசித்தே இரு...